Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இந்தியாவின் கள்ள மெளனத்தை கலைப்பதே இனப்பிரச்சனைத் தீர்வுக்கு ஒரே வழி

Featured Replies

இலங்கை இனப்பிரச்சினை விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடும் அணுகுறைகளும் எப்போதுமே மர்ம முடிச்சுகளைக் கொண்டதாகவே இருந்து வந்துள்ளன.

தமிழர் பிரச்சினைக்கு எத்தகைய தீர்வை இந்தியா விரும்புகிறது என்பது பற்றிய தெளிவான கருத்து இந்திய அரசிடம் அப்போதும் இருக்கவில்லை. இப்போதும் இருப்பதாகத் தெயவில்லை. 1980களின் தொடக்கத்தில் அமெக்கா பக்கம் இலங்கை அரசு சாய்ந்தபோது, அப்போதைய இந்தியப் பிரதமர் இந்திராகாந்தி தமிழ் இயக்கங்களை ஆதத்தார்.

அவரது அணுகுமுறைகள் தனிநாடு கோரிய இயக்கங்களுக்கு ஆதரவானதாக இருந்தாலும், அதை வெளிப்படையாகக் கூற முன்வரவில்லை.

இந்திராகாந்திக்குப் பின்னர் அமைந்த அரசாங்கங்கள் அனைத்துமே இலங்கை விவகாரத்தை இந்திய நலனுக்கு ஏற்ப கையாண்டனவே தவிர, தமிழர் நலன் நோக்கியதாக இருக்கவில்லை.

இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண்பது பற்றிய பார்வையில் இருந்து அவை விலகியே நின்றன.

ராஜீவ்காந்தி தொடக்கம் மன்மோகன்சிங் வரையிலான எட்டுப் பிரதமர்களின் அணுகுறைகளும் அத்தகையதாகவே இருந்துள்ளன.

இந்திராகாந்தி காலத்தில் தமிழ் இயக்கங்கள் மீது அனுதாபம் மற்றும் ஆதரவுப்போக்கு காணப்பட்டது.

அவரது காலத்தில் இடம்பெற்றதை விடவும் மோசமான இனப்படுகொலைகள், அவருக்குப் பிற்பட்ட காலத்தில் இடம்பெற்ற போதும் இந்தியா பெரிதாகத் தலையிடவோ தடுத்து நிறுத்துவோ இல்லை.

இலங்கைப் பிரச்சினையை ஒன்றில் ஓரமாக ஒதுங்கி நின்று வேடிக்கை பார்த்தது அல்லது தமிழன் அபிலாஷைகளுக்கு விரோதமான தீர்வை திணிக்கும் முயற்சியில் இறங்கியது அல்லது தமிழர் தரப்பைப் பலவீனப்படுத்தும் முயற்சியில் இறங்கியது.

இவை யாவும் இந்தியாவின் நலன்களைப் பேணிக் கொள்வதற்கான அணுகுறைகளாக இருந்தனவே தவிர, இனப்பிரச்சினைக்கான நிரந்தர அரசியல் தீர்வை நடைறைப்படுத் தும் எத்தனிப்பாக அமையவில்லை.

1987இல் இந்தியத் தலையீட்டின் போது நிரந்தர அரசியல் தீர்வுக்கான வழிகளைத் தேடியிருக்க டியும்.

ஆனால், இந்தியா புலிகளைப் பலவீனப்படுத்தி தனது ஆதிக்கத்தை விரிவுபடுத்துவதிலேயே குறியாக இருந்தது. கடந்த வாரம் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா ஒரு கருத்தை வெளியிட்டிருக்கிறார். செயற்திறனுள்ள வகையில் அதிகாரங்களை பகிர்ந்தளித்து, சகல சகங்களினதும் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யக் கூடிய தீர்வு ஒன்றை இலங்கை அரசிடம் இருந்து இந்தியா எதிர்பார்க்கிறது என அவர் கூறியிருக்கிறார்.

அதிகாரப்பகிர்வின் ஊடாகப் பிரச்சினையைத் தீர்க்க வேண்டும் என்ற தொனி அல்லது கருத்து இதன் மூலம் வெளிப்பட்டிருக்கிறது.

இந்தக் கருத்தைப் பலரும் தப்பும் தவறுமாகவே புரிந்து கொண்டிருப்பதாகத் தெரிகிறது.

இந்தியா பெயரளவிலான அதிகாரப்பகிர்வை வலியுறுத்துகிறது என்று கற்பனைக் கோட்டை கட்டத் தொடங்கியுள்ளவர்கள் ஏராளம்.

ஆனால் இந்தியா அதிகாரப்பகிர்வை வலியுறுத்தியிருக்கிறதே தவிர, அது எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும் என்று கூறவில்லை.

இதுதான் முக்கியமானது.

தமிழர் பிரச்சினைக்கு இந்தியா கொடுத்த அதிகபட்சத் தீர்வு 13 ஆவது திருத்தம் தான்.

இதை நடைறைப்படுத்துவதாக இந்தியாவிடம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வாக்குறுதி கொடுத்திருக்கிறார் என்பதை உறுதி செய்திருக்கிறார் வெளியுறவுச் செயலாளராக பதவி வகித்த கலாநிதி பாலித கொஹன்ன.

13ஆவது திருத்தத்தை நடைறைப்படுத்துமாறு தான் இந்தியா இதுவரை கோரி வந்ததே தவிர அதிகாரப்பகிர்வு பற்றியெல்லாம் எந்தக் கருத்தையும் வெளியிடவோ, இலங்கைக்கு அழுத்தம் கொடுக்கவோ இல்லை.

இலங்கை அரசாங்கம் இந்தியாவின் கருத்தை மதிப்பது போன்று அவ்வப்போது வாக்குறுதிகளைக் கொடுத்து வந்திருந்தாலும் அவற்றை நடைறைப்படுத்துவதில் அக்கறை காட்டவில்லை.

இந்தியாவைக் கைக்குள் போட்டுக் கொள்வதற்கு வசதியாக 13 ஆவது திருத்தத்தை நடைறைப்படுத்துவதே இலங்கை அரசாங்கத்தின் திட்டம்.

இனப்பிரச்சினையை அரசியல் ரீதியாகத் தீர்க்க வேண்டும் என்ற நிலைப்பாடே இலங்கை அரசாங்கத்திடம் இல்லை.

அண்மையில் வெளியுறவுச் செயலாளர் பாலித கொஹன்ன ஆங்கிலப் பத்திகை ஒன்றுக்கு வழங்கிய பேட்டியில், அரசியல் தீர்வு எதற்கு என்றே விளங்கவில்லை என்று கூறியிருந்தார்.

தூங்குபவனை எழுப்பலாம். தூங்குவது போல பாசாங்கு செய்பவனை எழுப்ப டியாது என்பது போல்தான் இதுவும். அரசியல் தீர்வு எதற்கு, இனப்பிரச்சினையே கிடையாது என்று கூறும் அரசாங்கத்திடம் இருந்து நிரந்தர அரசியல்தீர்வை எதிர்பார்ப்பது ஒருவகையில் முட்டாள்தனம் தான்.

இப்படிப்பட்டதொரு நிலைப்பாட்டில்தான். அரசாங்கம், 13 ஆவது திருத்தத்துக்குள்ளேயே சுற்றிச்சுற்றி வந்து கொண்டிருக்கிறது.

அதேவேளை, 13 ஆவது திருத்தம் பற்றி அரசாங்கம் என்னதான் பேசினாலும், அதை நடைறைப்படுத்தும் எண்ணம் இன்னம் வந்துவிடவில்லை.

அண்மையில் அமைச்சர் ராஜித சேனாரத்ன ஒரு கருத்தை வெளியிட்டிருந்தார்.

13ஆவது திருத்தம் பற்றி மக்களுக்கு விளங்கப்படுத்திய பின்னரே அதை நடைறைப்படுத்த வேண்டுமாம்.

13ஆவது திருத்தம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு 21 வருடங்களாகி விட்டது. இனிமேல் தான் அதை மக்களுக்கு விளங்கப்படுத்தப் போவதாக அரசாங்கம் சொல்கிறதென்றால் இதைப் போன்றதொரு நிலை வேறெந்த நாட்டிலும் இருந்திருக்கவே முடியாது.

இலங்கை அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் தமிழர் பிரச்சினைக்கு சயான தீர்வை வழங்குவதற்குத் தயாராகவும் இல்லை.

அதை வெளிப்படையாகக் கூறடியாத நிலையிலும் இருக்கிறது. கிட்டத்தட்ட அதே நிலையில் தான் இந்தியாவும் இருக்கிறது.

தமிழர் பிரச்சினைக்கு தனிநாடா, 13ஆவது திருத்தமா, அதிகாரப் பகிர்வா, அல்லது சமஷ்டியா உகந்த தீர்வு என்று வெளிப்படையாகக் கூறக் கூடிய நிலையில் இந்தியா இல்லை.

இந்தியா இந்த விவகாரத்தில் இருந்து எப்படி நழுவலாம் என்று பார்க்கிறதே தவிர, எப்படி தனது பூகோள நலன்களை பாதுகாக்கலாம் என்று சிந்திக்கிறதே தவிர, தமிழர்களின் உமைகளை உறுதிப்படுத்தும் எண்ணம் அதற்கு இருப்பதாகவே தெயவில்லை.

இந்தியாவின் இந்த மெத்தனப் போக்குத் தான் இலங்கை இனப்பிரச்சினை புற்றுநோய் போன்று தீர்க்கப்படாமல் இருப்பதற்குக் காரணம்.

தீர்வு பற்றிய தனது கருத்தை இந்தியா வெளிப்படையாக ன்வைத்தால் அது சார்ந்த ஒரு தீர்வை நோக்கி இலங்கை அரசாங்கம் நகர வேண்டியதாக இருக்கும். ஆனால் இந்தியா அதைச் செய்யவில்லை.

அதிகாரப்பகிர்வு பற்றி இந்திய வெளியுறவு அமைச்சர் பேசியிருப்பினும், அதில் கூடத் தெளிவற்ற நிலையே காணப்படுகிறது.

அதிகாரங்களைப் பகிர்தல் என்பது 13 ஆவது திருத்தத்துக்கு அப்பாற்பட்டதாகவும் இருக்கலாம். அதற்கு உட்பட்டதாகவும் அமையலாம்.

13 ஆவது திருத்தம் தமிழன் அபிலாஷைகளை நிறைவேற்றத் தவறியதொன்றாக இருக்கும் போது அதற்குக் குறைவான தீர்வு சாத்தியப்பாடான ஒன்றாக இருக்க வாய்ப்பில்லை.

அதேவேளை, 13 ஆவது திருத்தத்துக்கே இந்தளவு தடுமாறும் இலங்கை அரசாங்கம் அதற்கு அப்பாற்பட்ட தீர்வுக்கு சம்மதிக்க வாய்ப்பில்லை.

இந்தக் கட்டத்தில் தமிழ்மக்களின் பிரச்சினைக்கு நிரந்தரத்தீர்வு காணவே டியாது. 13ஆவது திருத்தத்தின் அடிப்படையில் அரசு தீர்வு ஒன்றை ன்வைத்தாலும் அதை தமிழர்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்றில்லை.

அதேபோல 13 ஆவது திருத்தத்துக்கு மேற்பட்ட தீர்வை சிங்களவர்கள் ஏற்பார்கள் என்றும் நம்ப டியாது. இந்த நிலையில் இரண்டு தரப்புக்கும் மேலான சக்தியாக விளங்கும் இந்தியாவின் தலையீடு ஒன்றே நிரந்தரத் தீர்வைக் கொடுக்க டியும்.

ஆனால், இந்தியா இந்த விடயத்தில் கடைப்பிடிக்கும் மௌனம், அதன் வார்த்தை விளையாட்டும் இனப்பிரச்சினைக்கு நிரந்தரத்தீர்வு காணும் வாய்ப்புகளைப் பின்நோக்கித் தள்ளிச் செல்கிறது.

இலங்கை இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணற்படும் சக்திகள் முதலில் இந்தியாவின் மௌனத்தைக் கலைக்க முனைவதே பொருத்தமானது.

இனப்பிரச்சினைக்கு பொருத்தமான தீர்வு என்ன என்பதை இந்தியா பகிரங்கமாக வெளிப்படுத்தினால் அடுத்து நடப்பவை யாவும் நல்லதாகவே அமையும்.

கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும் என்று, இலங்கை அரசாங்கத்திடமிருந்து தீர்வு ஒன்றை எதிர்பார்த்திருப்பதை விட, இந்தியாவின் மௌனத்தைக் கலைக்க னைவதே இன்றைய தருணத்தில் பொருத்தமான இராஜதந்திரமாக இருக்கும்.

http://appaa.com/

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவின் கள்ள மெளனத்தை கலைப்பதே இனப்பிரச்சனைத் தீர்வுக்கு ஒரே வழி,

இது சாத்தியமா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.