Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாம் தமிழர் அமைப்பு சீருடையில்லாத ராணுவம்: சீமான் பேச்சு

Featured Replies

நாம் தமிழர் அமைப்பில் உள்ள இளைஞர்கள் சீருடை அணியாத ராணுவத்தினர் என தூத்துக்குடியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் இயக்குநர் சீமான் தெரிவித்தார்.

தூத்துக்குடியில் நாம் தமிழர் அமைப்பின் சார்பில் மாபெரும் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. பாலவிநாயகர் சாலையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்கு இயக்குநர் சீமான் தலைமை வகித்தார். தூத்துக்குடி மாவட்ட நாம் தமிழர் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் பிரபு வரவேற்றார்.

இக்கூட்டத்தில் சிறப்புரை ஆற்றிய இயக்குநர் சீமான், என்னை யாரும் தலைவர் என்று அழைக்க வேண்டாம். அப்படி அழைத்தால் திரும்பவும் படம் எடுக்கச் சென்றுவிடுவேன். நம்முடைய நோக்கத்திற்காக நாம் தமிழர் ஆக ஒன்றிணைந்து போராடுவோம். அரசியல் சாக்கடைகளைப் பற்றி நாம் பேசி நமது நேரங்களை வீணடிக்க வேண்டாம். நாம் தமிழர் இயக்கத்திற்கு நிறைய பணிகள் காத்துக் கொண்டிருக்கின்றன. எழுச்சிமிக்க இளைஞர் பாசறையாக இது செயல்படும். சீருடை இல்லாத ராணுவமாக நம் இயக்கம் செயல்படும்.

திராவிட இயக்கத்தின் பெயரைக் கூறி, இங்குள்ள அரசியல் வாதிகள் கட்சி நடத்தி வருகின்றனர். இங்கு யாரும் திராவிடன் அல்ல. இங்கு இருப்பது எல்லாமே தமிழன்தான். தமிழன் அல்லாதவர் கட்சித் துவங்கும்போது திராவிடம் தேவைப்படுகிறது. என்னை சிலர் கீழேக் கிடக்கும் காகிதம் என்று கூறுகின்றனர். அதே காகிதம் நாளை பட்டமாக பறக்கதத்தான் போகிறது. அரசியல்வாதிகளுக்கு வாக்களித்து வாக்களித்து வாய்க்கரிசி கூட இல்லாமல் நாம் இருக்கிறோம்.

என்மீது தேசிய பாதுகாப்புச் சட்டம் போடப்பட்டது. என்னுடைய வழக்கின்போது,தடை செய்யப்பட்ட அமைப்பின் படத்தையோ, அல்லது அதற்கு ஆதரவாக பேசுவதோ தவறல்ல என நீதிமன்றத்தில் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இறையான்மையைச் பற்றி பேசும் இந்தியப் பேரரசு, தமிழர் தேசியத்தின் உரிமையைப் பறிக்கிறது. அமெரிக்காவில் கூட தடை செய்யப்பட்ட இயக்கத்திற்கு ஆதரவாக போராட அனுமதி அளிக்கப்படுகிறது. ஆனால் இங்கு, சட்டம் போட்டுத் தடுக்கிறார்கள்.

இலங்கைப் பிரச்சனையில் ஒரே ஒரு தலைவன்தான் ஆதரவாகச் செயல்பட்டார். அதுதான் புரட்சித் தலைவர் எம்ஜிஆர். திருக்குறளை படிக்க பள்ளியில்லாத ஊரில் திருவள்ளுவருக்குச் சிலை தேவையா? சென்னையில் சர்வக்ஞர் சிலையை திறந்து வைத்து அரசியல்வாதிகள் நாடகம் ஆடுகின்றனர். தமிழ்நாட்டில் விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு ஆதரவு இருக்கா என்றும், தடை செய்யப்பட்டது சரிதானா? என்றும் வாக்கெடுப்பு நடத்தினால் 90%பேர் தமிழர்கள் ஆதரவாக வாக்களிப்பார்கள். அதை நடத்த இந்த அரசு தயாரா?

இலங்கைக்கு உதவிவரும் இந்திய பேரரசு தற்போது 1000 கோடி ரூபாய் வழங்கியுள்ளது.

இந்த பணத்தில்தான் ராணுவத்திற்கு சம்பளம் அளிக்கப்பட்டுள்ளது. போர் முடிந்து 3மாதகாலம் ஆகியும், முள்வேலிக்குள் சிக்கிக் கிடக்கும் தமிழர்களின் நிலை பற்றி, தமிழக அரசியல்வாதிகள் மவுனமாக இருக்கின்றனர். மத்திய அரசும் மெளனம் சாதிக்கிறது. போர் முடிந்ததும் அதிகாரப்பகிர்வு அளிக்கப்படும் என்ற பேச்சு, தற்போது எழவில்லை. இந்திய பேரரசு ஒருநாள் இதற்காக கவலைப்படும் காலம் வரும்.

சிங்களன் ஒருநாளும் திருந்தமாட்டான்.

ஏனென்றால் சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகளுடன் கூட்டணி வைத்துக் கொண்டு இந்தியாவை சீண்டிப் பார்ப்பான். உலகத்திலேயே மிகப்பெரிய ராணுவத்தை தனியொரு மனிதனாக பிரபாகரன் உருவாக்கி வைத்திருந்தார்.விடுதலைப் புலிகளின் இயக்கத் தலைவர் பிரபாகரன் விரைவில் வருவார். அதுவரை அமைதியாக இருங்கள் என்று அவர் பேசினார்.

அவ்வப்போது, அரசியல் கட்சிகளை கடுமையாகத் தாக்கி பேசினார். அடுத்த ஆண்டு மே 17ம் தேதி நாம் தமிழர் இயக்கம் அரசியல் அமைப்பாக மாறும் என்று தெரிவித்தார். முன்னதாக, பொதுக்கூட்ட மேடையில் உயிர்நீத்த ஈழத் தமிழர்களுக்காக மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது. சென்னையில் உயிர்நீத்த முத்தக்குமரனின் தந்தை பொன்னாடை போர்த்தி கெளரவிக்கப்பட்டார். அவருக்கு வெள்ளி வீர வாளும் வழங்கப்பட்டது.

மேடையின் முன்புறம், முள்வேலி போன்று அமைக்கப்பட்டிருந்தது. கண்ணுக்கெட்டிய தூரம் வரை பொதுமக்களின் கூட்டம் காணப்பட்டது. நாம் தமிழர் அமைப்பின் இணையதள முகவரி வெளியிடப்பட்டது. முன்னதாக இலங்கை ராணுவத்தினால் கொல்லப்படும் தமிழர்களின் நிலையை நாடக வடிவில் மேடையில் நடித்துக் காட்டினர்..

http://appaa.com/index.php?option=com_cont...6&Itemid=59

சீமான் இந்த பாழாப் போன தமிழக அரசியல்வாதிகளாலும், இந்திய அரசினாலுமேதான் தமிழன் இவ்வளவு கேவலமாய் கைவிடப்பட வேண்டிய நிலை உருவானது. மிக முக்கியமாக தமிழருக்கு தமிழக தமிழருக்கு ஈழத்தில் நடைபெற்ற சம்பவங்களை எடுத்துக் கூறும் வேளையில் தடைசெய்தது. நம் தமிழக தமிழரும் இன்னும் தமிழன் என்ற எண்ண உணர்வு இல்லாமல் இலஞ்சம் வாங்கி ஓட்டு போட்டது மிக கேவலம். இந்த நிலை மாறவேண்டுமெனில் நீங்கள் ஈழநிலை, தமிழ்நாட்டின் தண்ணீர் அவலநிலை, சிறிலங்காவின் தமிழக மீனவர் கொலை, கிராமங்களின் குறைகள் என இவற்றை பரப்புரைஆயுதமாக்குங்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அந்த இணையதள முகவரியை தெரியப்படுத்துங்கள்

.

விடுதலைப் புலிகளின் இயக்கத் தலைவர் பிரபாகரன் விரைவில் வருவார். அதுவரை அமைதியாக இருங்கள் என்று அவர் பேசினார்.

என்ன இப்ப மக்கள் கொந்தளிக்கினமோ? இப்பவும் அமைதியாகத்தானே இருக்கினம் .பிறகு ஏன் நீங்கள் சவுண்ட் விடுகிறீங்கள்.

தலைவர் பிரபாகரன் மீண்டும் வருவதற்கு தமிழ்நாட்டு அரசியல்வாதியல்ல .போராளி .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

http://www.meenagam.org/?p=9129

naamtamilar29082009001.jpg

naamtamilar29082009002.jpg

naamtamilar29082009003.jpg

முத்துக்குமரனின் தந்தைக்கு வீரவாள் பரிசு

naamtamilar29082009009.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.