Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர் படுகொலை காணொலி: 'சனல் - 4' நிறுவனத்திற்கு எதிராக லண்டனில் சிறு குழு சிங்களவர்கள் ஆர்ப்பாட்டம்

Featured Replies

சிங்களப் படையினரால் தமிழர்கள் படுகொலை செய்யப்படும் காட்சிகள் அடங்கிய காணொலியை பிரித்தானியாவின் 'சனல் - 4' தொலைக்காட்சி வெளியிட்டதை ஏற்றுக்கொள்ள முடியாத சிறு குழுவினரான சிங்களவர்கள் அந்த நிறுவனத்தின் அலுவலகத்திற்கு எதிராக லண்டனில் இன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

'சனல் - 4' நிறுவனம் ஒரு பொய் செய்திச் சேவை என்று அவர்கள் குற்றம் சாட்டினர்.

தொலைக்காட்சி நிறுவனத்திற்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளையும் அவர்கள் தாங்கி இருந்தனர். "'சனல் - 4' நிறுவனம் மன்னிப்பு கோர வேண்டும்", "மில்லர் என்றால் திரிபுபடுத்தப்பட்ட செய்திகள் என்று அர்த்தம்", "'சனல் - 4' ஒளிபரப்பு வெட்கக்கேடான பொய்", "இனிமேல் நாம் எப்படி 'சனல் - 4' செய்திகளை நம்புவது", "'சனல் - 4' இன் பிந்திய செய்திகள் கோமாளி நாடகம்" போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை அவர்கள் தாங்கியிருந்தனர்.

'சனல் - 4' நிறுவனம் அண்மையில் வெளியிட்ட காணொலியில், விசாரணைகள் இன்றி மரண தண்டனை விதிக்கப்படும் பாணியில் சிங்களச் சிப்பாய்களால் தமிழர்கள் படுகொலை செய்யப்படும் காட்சிகள் அப்பட்டமாகப் பதிவாகி இருந்தன. இந்தக் காணொலியை சிறிலங்காவின் ஜனநாயகத்திற்கான ஊடகவியலாளர்கள் அமைப்பு வெளியிட்டிருந்ததாக 'சனல் - 4' நிறுவனம் தெரிவித்திருந்தது.

கண்களும் கைகளும் கட்டப்பட்ட நிலையில் ஆடைகள் களையப்பட்ட 10 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட காட்சிகள் அந்தக் காணொலியில் பதிவாகி இருந்தன. முக்கிய அனைத்துலக ஊடகங்கள் அனைத்திலும் அந்தக் காணொலி ஒளிபரப்பாகியது.

இந்தக் காணொலி குறித்து அனைத்துலக விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என பல்வேறு மட்டங்களிலும் இருந்து அழுத்தங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

ஆனால், சிறிலங்கா அரசு இந்தக் காணொலியை முற்றாக மறுத்துள்ளதுடன் அவை பொய்யானவை, சோடிக்கப்பட்டவை என்றும் கூறிவருகின்றது.

இந்நிலையிலேயே 'சனல் - 4' நிறுவனத்திற்கு எதிராக சுமார் 150 சிங்களவர்கள் லண்டனில் இன்று ஞாயிற்றுக்கிழமை ஆர்பாட்டம் நடத்தினர்.

அந்தக் காணொலி சிறிலங்கா தரைப்படையைச் சேர்ந்த ஒருவரால் கடந்த ஜனவரி மாதத்தில் செல்லிடப்பேசியால் எடுக்கப்பட்டது என 'சனல் - 4' நிறுவனம் தெரிவித்திருந்தது.

ஆனால், அது மிகச் சிறந்த கமெராவால் நாடக பாணியில் காட்சியாக்கப்பட்டு பின்னர் பின்னணிக் குரலும் சேர்க்கப்பட்டது என்றும் அதன் பின்னர் அது செல்லிடப்பேசிக்கு ஏற்ற வகையில் மாற்றப்பட்டது என்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கூறினர்.

'சனல் - 4' நிறுவனம் அந்தக் காணொலியை வெளியிடுவதற்கு முன்னர் அதன் நம்பகத் தன்மை பற்றி உறுதிப்படுத்திய பின்னரே அதனை தனது பார்வையாளர்களுக்கு வெளியிட்டிருக்க வேண்டும் எனவும் அவர்கள் கருத்துத் தெரிவித்தனர்.

இதேவேளை, இந்தக் காணொலி உண்மையானது என நம்பும் தமிழர்கள், இவ்வாறான சம்பவங்கள் சிங்களப் படையினரால் நிகழ்த்தப்படுவது இது ஒன்றும் முதல் முறையல்ல என்று குறிப்பிட்டுக் காட்டுகின்றனர். அத்துடன், காணொலி அனைத்துலக ரீதியில் ஏற்படுத்திய அதிர்ச்சியைத் திசை திருப்பும் நோக்குடனேயே இத்தகைய ஆர்ப்பாட்டங்கள் லண்டனில் உள்ள சிறிலங்கா தூதரகத்தால் நடத்தப்படுகின்றன என்றும் தமிழர் அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.

இத்தகைய போலியான செய்திகளுக்கு எதிராக வீரியமான பரப்புரையை தமிழ் அமைப்புக்களும் புலம்பெயர் தமிழர்களும் மேற்கொள்ள வேண்டும் எனவும் அந்த வட்டாரங்கள் எதிர்பார்ப்பு வெளியிட்டன.

புதினம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.