Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழீழ தேசியத்தலைவரின் படத்தையும் தமிழக தலைவர் பெரியாரின் படத்தையும் அகற்றக்கோரி பெரியாரின் ரத்தவழி பேரன் மறியல்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழீழ தேசியத்தலைவரின் படத்தையும் தமிழக தலைவர் பெரியாரின் படத்தையும் அகற்றக்கோரி பெரியாரின் ரத்தவழி பேரன் மறியல்

[படம் இணைப்பு] தமிழக மக்களுக்காக போராடிய தந்தை பெரியார் அவர்களின் பிறந்தநாளான நேற்று தந்தை பெரியார் படத்துடன் தமிழீழ தேசியத்தலைவர் படம் இருப்பதைக்கண்ட பெரியாரின் பேரன் காங்கிரஸ் இளங்கோவன் அவர்கள் தேசியத்தலைவரின் படத்தை அகற்றக்கோரி போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளார்.

periyar_leader.jpg

ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா அருகே உள்ள பெரியார் சிலைக்கு மாலை போட இன்று காலை முன்னாள் மத்திய மந்திரி ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வந்தார். அவருடன் விடியல் சேகர் எம்.எல்.ஏ. மற்றும் காங்கிரஸ் தொண்டர்களும் வந்தனர்.

அப்போது பெரியார் சிலை அருகே பெரியார் திராவிடர் கழகம் மற்றும் தமிழர் தேசிய பொது உடமை கட்சி சார்பில் பெரியாருடன் விடுதலைப்புலி தலைவர் பிரபாகரன் சேர்ந்து இருப்பது போல் தட்டிப்போர்டு வைக்கப்பட்டிருந்தது.

இதைக்கண்டு இளங்கோவன் அதிர்ச்சியும் ஆவேசமும் அடைந்தார். இந்த தட்டி போர்டை உடனே அகற்ற வேண்டும் எனக்கோரி இளங்கோவன், விடியல்சேகர் எம்.எல்.ஏ. மற்றும் காங்கிரஸ் தொண்டர்களும் ரோட்டில் வந்து நின்று திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டன.

ஈரோட்டில் இளங்கோவன் நின்று கொண்டு, “அகற்று…அகற்று…பிரபாகரன் படத்தை அகற்று” தடை செய்யப்பட்ட இயக்க தலைவர் பிரபாகரன் படத்தை பெரியாருடன் ஒப்பிட்டு வைக்காதே… வைக்காதே” என்று கோஷமிட்டார்.

இளங்கோவனுடன் நடுரோட்டில் நின்றபடி தொண்டர்கள் மறியல் நடத்தியதால் அங்கு பரபரப்பும் பதட்டமும் ஏற்பட்டது.

இதுபற்றிய தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு ஈரோடு டவுண் போலீசார் விரைந்து வந்தனர்.

அவர்கள் இளங்கோவனிடம் சமரச பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது இளங்கோவன் “பிரபாகரன் படத்தை அகற்றும் வரை மறியலை கைவிட மாட்டேன்” என்று உறுதியாக கூறியபடி தொடர்ந்து கோஷமிட்டார்.

அவரது கோரிக்கையை ஏற்று போலீசார் பெரியாருடன் சேர்ந்து வைக்கப்பட்ட பிரபாகரன் தட்டி போர்டுகளை அகற்றி வேனில் ஏற்றிக்கொண்டு சென்றனர். சுமார் 30நிமிடம் இந்த மறியல் போராட்டம் நடந்தது.

மறியல் போராட்டத்தை கைவிட்ட பிறகு ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் நிருபர்களிடம் கூறியதாவது:-

தடை செய்யப்பட்ட இயக்க தலைவர் பிரபாகரன் படம் வைக்கப்பட்டது பெரிய தவறு. ஆனால் பல இடங்களில் பிரபாகரன் படம் வைக்கப்பட்டுள்ளது. இதை உடனே அகற்ற வேண்டும்.இங்கு பெரியாருடன் சேர்ந்து பிரபாகரன் படத்தை எப்படி அவர்கள் வைக்கலாம்.

காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராகுல்காந்தி தமிழக சுற்றுப்பயணத்தின் போது தேசிய நதிகளை இணைப்பதால் சுற்றுசூழல் பாதிக்கும் என கூறினார். இது அனைவராலும் ஏற்க கூடியது தான்.

அப்படி நதிகளை இணைக்கும் போது ஏராளமான மரங்கள் வெட்டப்படும். பாலங்கள், கிராமங்கள் பல காணாமல் போகும் நிலை ஏற்படும்.

சிங்கமாக பாய்ந்து புலியாக மாறி இப்போது பூனையாகி உள்ள ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ ராகுல்காந்தியை “கத்துக்குட்டி” என்று கூறி உள்ளார். ராகுலை பற்றி பேச வைகோவுக்கு எந்த அருகதையும் கிடையாது.

கல்லூரி விழாவில் ராகுல்காந்தி பேசியதை பற்றி பாரதீய ஜனதா குறை கூறி உள்ளது. இது அவர்களின் அரசியல் அனுபவம் இல்லாததை காட்டுகிறது.

இவ்வாறு ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறினார்.

http://www.meenagam.org/?p=10639

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.