Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வெலிக்கடை சிறையில் உண்ணாநிலைப்போராட்டம் மேற்கொள்ளும் அரசியல் கைதிகள் மீது தாக்குதல்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வெலிக்கடை சிறையில் உண்ணாநிலைப்போராட்டம் மேற்கொள்ளும் அரசியல் கைதிகள் மீது தாக்குதல்

வெலிக்கடை சிறையில் பட்டினிப் போராட்டத்தில் ஈடுபட்ட முப்பத்தாறு தமிழ் அரசியல் கைதிகள் சிறீலங்கா சிறைக்காவலர்களால் மிகவும் மூர்க்கத்தனமாக தாக்கப்பட்டுள்ளனர்.

எவ்விதமான நீதி விசாரணைகளும் இன்றி கடந்த பல ஆண்டுகளாக வெலிக்கடை சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளால் நேற்றுப் பட்டினிப் போராட்டம் தொடங்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து இன்று அதிகாலை வேளையில் சிறைக்கூடங்களில் இருந்து தமிழ் அரசியல் கைதிகளை இழுத்துச் சென்ற சிறீலங்கா சிறைக்காவலர்கள், அவர்களை கண்மூடித்தனமாகத் தாக்கியுள்ளனர்.

இதில் முப்பத்தாறு தமிழ் அரசியல் கைதிகள் காயங்களுக்கு உள்ளாகியிருப்பதாக நம்பகமான தகவல்கள் வெளியாகியுள்ளன.

http://www.meenagam.org/?p=10741

  • கருத்துக்கள உறவுகள்

விக்ரம், கொழும்பு 18/09/2009, 16:56

வெலிக்கடை சிறையில் சிறீலங்கா சிறைக்காவலர்கள் வெறியாட்டம்! 36 தமிழ் அரசியல் கைதிகள் காயம்!

வெலிக்கடை சிறையில் பட்டினிப் போராட்டத்தில் ஈடுபட்ட முப்பத்தாறு தமிழ் அரசியல் கைதிகள் சிறீலங்கா சிறைக்காவலர்களால் மிகவும் மூர்க்கத்தனமாக தாக்கப்பட்டுள்ளனர்.

எவ்விதமான நீதி விசாரணைகளும் இன்றி கடந்த பல ஆண்டுகளாக வெலிக்கடை சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளால் நேற்றுப் பட்டினிப் போராட்டம் தொடங்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து இன்று அதிகாலை வேளையில் சிறைக்கூடங்களில் இருந்து தமிழ் அரசியல் கைதிகளை இழுத்துச் சென்ற சிறீலங்கா சிறைக்காவலர்கள், அவர்களை கண்மூடித்தனமாகத் தாக்கியுள்ளனர்.

இதில் முப்பத்தாறு தமிழ் அரசியல் கைதிகள் காயங்களுக்கு உள்ளாகியிருப்பதாக நம்பகமான தகவல்கள் வெளியாகியுள்ளன.

pathivu

சிறிலங்காவில்கனடியர் உட்பட அரசியல் கைதிகள் உண்ணாநோன்பு

இரத்தினராசா துஷ்யந்தன் என்னும் 35 வயது கொண்ட கனடியர் சிறிலங்காவில் பயங்கரவாத தடுப்புச் சட்டத்துக்கமைய 5 மாதங்களாக எதுவித விசாரணையுமின்றி சிறை வைக்கப்பட்டுள்ளார். கொழும்பில் உலக வங்கியின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்படும் ஒரு திட்டத்துக்கு அவர் தகவல் தொழில்நுட்ப உசாவலராக கடமையாற்றி வந்தார்.

2009 ஏப்பிறில் 29ம் திகதி தமது அலுவலகத்துக்கு வெளியே நின்ற வேளையில் அவர் கைது செய்யப்பட்டார். துஷ்யந்தன் 1989ல் சிறிலங்காவிலிருந்து கனடாவுக்கு குடிபெயர்ந்தவர். National Post, Global TV, Jewish Tribune ஆகிய கனடிய ஊடகங்கள் துஷ்யந்தன் பற்றிய செய்திகளுக்கு முதன்மை கொடுத்துள்ளன.

“சிறிலங்காவில் கைதிகள் சித்திரவதை செய்யப்படுவது வழமை. துஷ்யந்தனையும் பிற கைதிகளையும் சிறிலங்கா ஆட்சியாளர் துன்புறுத்துவதைத் தடுப்பதற்கு கனடிய அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். துஷ்யந்தனுக்கு நீதி கிடைப்பதற்கு கனடிய அரசு பாடுபட வேண்டும். அல்லாவிட்டால் அவருடைய அலுவல் காலவரயறையின்றிக் கிடப்பில் போடப்பட்டுவிடும்” என்று கனடிய தமிழர் பேரவையின் மொழிவாளர் டேவிட் பூபாலபிள்ளை தெரிவித்தார். சிறிலங்காவில் பயங்கரவாத தடுப்புச் சட்டத்துக்கமைய 1600 அரசியல் கைதிகள் விசாரணையின்றி அடைத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்கள் ஏற்கெனவே பல தடைவைகள் நீதிவிசாரணை நாடி உண்ணா நோன்பிருந்தவர்கள். ஆட்சியாளரின் வாக்குறுதிகளை நம்பி உண்ணா நோன்பைக் கைவிட்டவர்கள். இன்று மீண்டும் அவர்கள் உண்ணா நோன்பில் குதித்துள்ளார்கள். “ஜோர்ஜ், தயா மாஸ்டர் போன்றவர்கள் வழமையான சட்ட திட்டத்தின்படி பிணையில் விடப்பட்டுள்ளார்கள். சட்டத்தின் முன் யாவரும் சமன். ஆகவே எங்களுக்கும் வழமையான சட்ட திட்டத்தின்படி நீதி வழங்கப்படவேண்டும்” என்று அவர்கள் ஆட்சியாளரிடம் கேட்டுள்ளார்கள்.

இதற்கிடையே சிறிலங்காவின் வதை முகாங்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள இன்னும் 4 கனடியர்களுக்கு உதவி புரிவதற்கு கனடிய வெளியுறவு அமைச்சு முயன்று வருகிறது. அவர்களுள் ஒருவர் பிறம்ரனைச் சேர்ந்த ஜோர்ஜ் யூலியஸ். இவர்கள் உட்பட வதை முகாங்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள 3 இலட்சம் தமிழ் மக்களின் விடுதலையையும், மறுவாழ்வையும் நாடும் கனடிய தமிழர் பேரவையின் நிலைப்பாட்டுக்கு கனடிய வரலாற்றில் முதல் தடவையாக கனடா யூத பாதுகாப்புக் கழகம் (Jewish Defence League of Canada), யூத மனித உரிமை அமைப்பு (B’nai Brith) இரண்டும் ஆதரவு தெரிவித்துள்ளன.

http://www.tamilcanadian.com/news/tamil/in...ews&id=4574

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.