Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எல்லா நாட்டு விடுதலையையும் ஆதரிக்கும் என் இந்திய தேசம் ஏன் என் தாயக தமிழீழ விடுதலையை மட்டும் வெறுக்கிறது – திலீபன் நினைவு நாளில் இயக்குநர் சீமான்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எல்லா நாட்டு விடுதலையையும் ஆதரிக்கும் என் இந்திய தேசம் ஏன் என் தாயக தமிழீழ விடுதலையை மட்டும் வெறுக்கிறது – திலீபன் நினைவு நாளில் இயக்குநர் சீமான்

பட்டுக்கோட்டை அழகிரி சிலை அருகில் இன்று இரவு 7 மணிக்கு நாம் தமிழர் இயக்கத்தின் சார்பாக தியாக தீபம் திலீபனின் 22 ஆம் ஆண்டு நினைவு நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. நிகழ்வுக்கு இயக்குநர் சீமான் தலைமையேற்று சிறப்புரை நிகழ்த்தினார்.

மாநில ஒருங்கிணைப்பாளர் நல்லதுரை பட்டுக்கோட்டை பேருந்து நிலையத்தில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து பேரணியை தொடங்கிவைத்தார்.

பொதுக்கூட்டம் நடைபெறும் அழகிரி சிலை வரை பேரணி நடைபெற்றது. இப்பேரணியில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

’’முள்வேலியை அறுத்தெறிவோம் சிங்களர்களை சிறைப்படுத்துவோம்’’ என்று பேரணியினர் கோஷமிட்டனர்.

இந்நிகழ்வுக்கு தலைமையேற்ற நாம் தமிழர் இயக்க தலைவர் சீமான் ஆற்றிய சிறப்புரை:

‘’போராளி திலீபன் நினைவு தினமான இன்று நான் பிரான்ஸ்-ஜெர்மனி சென்று உரையாற்றவிருந்தேன். சில காரணங்களால் நான் அங்கே போக முடியவில்லை.

அதனால்தான் தமிழகத்திலேயே நினைவு தினத்தில் அஞ்சலி செலுத்த முடிவெடுத்தேன். புரட்சியாளர்கள் பிறந்த மண்ணில்(பட்டுக்கோட்டை) புரட்சியாளரை பற்றி பேச வந்தேன்.

இந்திய -இலங்கை ஒப்பந்தத்தை நிறைவேற்றக்கோரி திலீபன் உண்ணாவிரதம் இருந்தார். தொடர் உண்ணாவிரதத்தால் திலிபன் உடல் மிகவும் மோசமாவதை உணர்ந்தவர்கள் உண்ணாவிரதத்தை கைவிடச்சொல்லி கேட்டார்கள்.

திலீபன் கேட்கவில்லை. தலைவர் பிரபாகரன் வந்தால் திலீபன் கேட்பார் என்று முடிவெடுத்தார்கள். தலைவன் சொன்னால் கேட்டு ஆகவேண்டுமே என்று நினைத்த திலீபன் தலைவரை அழைத்து வராதீர்கள் என்று சொல்லியிருக்கிறார்.

ஆனால் தலைவர் வந்துவிட்டார். தலைவர் வந்ததுமே ‘எனக்கு ஒரு சத்தியம் செய்து தரவேண்டும் நீங்கள். அதாவது உண்ணாவிரதத்தை கைவிடச்சொல்லக்கூடாது என்பதுதான் அந்த சத்தியம்’’ என்று கேட்டிருக்கிறார் திலீபன்.

உண்ணாவிரதத்திலேயே திலீபன் உயிர் நீத்த பிறகு, என் அண்ணன் பிரபாகரன் சொல்கிறார்…பசி வந்தால் பத்தும் மறந்துபோகும் என்று. ஆனால் திலீபனுக்கு அது பொருத்தமல்ல. போராட்டம், போராளி என்ற எண்ணம் மறந்தே போகவில்லை என்று சொல்கிறார். இத்தனை ஆழமான போராட்டத்திற்கு முடிவு அமையும்’’என்று தெரிவித்தார்.

‘’போராளி திலீபன் உரையில் இருந்து ஒன்றை மட்டும் சொல்கிறேன். ‘’இந்தியப்பிரதமர் ராஜீவ்காந்தி இலங்கைக்கு வந்தபோது ஜெயமணி என்ற சிங்கள ராணுவ வீரன் ராணுவ அணிவகுப்பு நடந்தபோது துப்பாக்கியால் ராஜீவின் மண்டையில் அடித்தார்.

ஒரு நாட்டின் பிரதமரையே அப்படி அடித்த சிங்களவன் தமிழர்களை எப்படி அடித்திருப்பான் என்று நினைத்துப்பாருங்கள்’’என்று பேசியிருக்கிறார்.

இதற்கு என்ன பதில் சொல்ல முடியும் இந்திய அரசால்.

எல்லா நாட்டு விடுதலையையும் ஆதரிக்கும் என் இந்திய தேசம் ஏன் என் தாயக தமிழீழ விடுதலையை மட்டும் வெறுக்கிறது’’என்று என்று உரையாற்றினார்.

http://www.meenagam.org/?p=11603

Edited by விடியல்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

[படங்கள் இணைப்பு]

tn_seeman26092009005_m-500x281.jpg

tn_seeman26092009003_m-500x281.jpg

http://www.meenagam.org/?p=11603

சீமான் அண்ணே பகிடி விடுகிறார் போல கிடக்குது.

கஷ்மீர்

பஞ்சாப்

அசாம்

மிசோராம்

நாகலாந்து

மனிப்பூர்

இவர்களின் போராட்டம் பயங்கரவாதம் என்றால் ஈழப்போராட்டமும் பயங்கரவாதம்தான் உங்கள் இந்தியாவை பொருத்தவரை

ஈழப்போராட்டம் ஆபிரிக்கா, கண்டதில அல்லது அமேரிக்கா கண்டம்,,ஜரோப்ப கண்டத்தில நடந்து இருந்தால் இந்தியா ஆதரவளித்திருக்கும்

நடந்து இந்திய உபகண்டத்தில...ஆகவே பயங்கரவாதம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.