Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மகனை மேற்படிப்பிற்காக அமெரிக்கா அனுப்புகிற ஜனாதிபதி, எமது பிள்ளைகள் படிக்கும் பாடசாலைகளை மூடுகின்றார் - அநுரகுமார

Featured Replies

நாடு எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடியினால் கிராமத்திலுள்ள ஏழை மக்களே துன்பப்படுகின்றார்கள். இதனால் ஜனாதிபதி, அவரது குடும்பம், உறவினர்கள், அரசாங்கத்திலுள்ள அமைச்சர்கள் ஆகியோருக்கு எவ்விதப் பாதிப்பும் ஏற்படவில்லை. அவர்கள் சுகபோகமாக வாழ்க்கையைத் தான் அனுபவிக்கின்றார்கள். புதல்வரின் மேற்படிப்பிற்காக ஜனாதிபதி அவரை அமெரிக்காவிற்கு அனுப்புகிறார். எனினும், கிராமத்தில் எமது பிள்ளைகள் படிக்கும் பாடசாலையை ஜனாதிபதி மூடுகிறார். ஆட்சியாளர்களுக்கு பொருளாதார நெருக்கடி பாதிப்பை ஏற்படுத்தவில்லை. இதனால் அவர்களது சுகபோக வாழ்க்கை எவ்விதத்திலும் குறைவடையவும் இல்லை|| என ஜே.வி.பி.யின் நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

பெலவத்தையிலுள்ள ஜே.வி.பி.யின் தலைமையகத்தில் நேற்று (06) அழைக்கப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றும்போதே அநுரகுமார திஸாநாயக்க இவ்வாறு கூறினார்.

அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை அரசாங்கம் முன்வைக்கப் போவதில்லை. இதற்கான எதிர்வு கூறல்களை அமைச்சர்களும், அரசாங்கத்தின் அடிவருடிகளும் தெரிவித்து வருகின்றனர். அரசாங்க வருமானம் குறைந்துள்ளதோடு, நாட்டின் பொருளாதாரமும் வீழ்ச்சியடைந்துள்ளது. இதற்கான பரிகாரமெதுவும் அரசிடம் இல்லை.

இன்னும் இரண்டு வருடங்கள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்~வே ஆட்சியில் இருக்கப் போகின்றார். எனவே, அவரது அபிலாசைகளைப் ப+ர்த்திசெய்யும் விதத்திலேயே வரவு செலவுத் திட்டத்திற்குப் பதிலாக குறைநிரப்புப் பிரேரணை முன்வைக்கப்படவுள்ளது.

அத்துடன், சர்வதேச நாணய நிதியம் நிபந்தனைகளுடனேயே கடனை வழங்கவுள்ளது. இதில் வரவு செலவுத் திட்டத்தில் 5 வீத துண்டுவிழும் தொகையாக பேணுதல், கல்வி, சுகாதாரத்துறை, சமுர்த்தி உட்பட மக்களின் நலன்புரிகளைக் குறைக்க வேண்டும் என்ற நிபந்தனைகளே பிரதானமானவையாகும். எனவே, மக்களுக்கு வழங்கப்படும் நலன்புரிகளைக் குறைக்கும் நடவடிக்கைகளையே மேற்கொள்ள வேண்டிவரும்.

இவ்வாறு வரவு செலவுத் திட்டத்தில் மக்கள் நலன்புரித் திட்டங்களுக்கான நிதியில் அரசாங்கம் கைவைக்குமானால் அது தமது கழுத்தில் சுருக்கிட்டுத் தற்கொலை செய்வதற்கு ஒப்பானதாகிவிடும். ஏனெனில், எதிர்வரும் காலங்களில் பல தேர்தல்கள் நடத்தப்படவுள்ளன. அவ்வாறான தருணத்தில் மக்கள் நலன்புரித் திட்டங்களில் கைவைத்தால் தோல்வியைத் தழுவநேரிடும். எனவேதான், வரவு செலவுத் திட்டத்தை முன்வைக்காது குறைநிரப்புப் பிரரேரணையை முன்வைத்து மக்களை ஏமாற்ற அரசு முயல்கிறது.

எமது நாட்டின் பொருளாதார அபிவிருத்தியைக் கண்காணிப்பதற்காகவே சர்வதேச நாணய நிதியத்தின் அலுவலகம் எதிர்வரும் 10ம் திகதி கொழும்பில் திறக்கப்படவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இது முற்றுமுழுதான பொய்யாகும். நாணய நிதியத்தின் நிபந்தனைகளை அரசாங்கம் பின்பற்றுகின்றதா என்பதை நேரடியாக அவதானிப்பதற்காகவே அலுவலகம் இங்கு அமைக்கப்படவுள்ளது.

எனவே, மக்களின் நலன்புரிகளைக் குறைக்க வேண்டிய நிலைக்கு அரசாங்கம் தள்ளப்படுவதை எவராலும் நிறுத்தமுடியாது. 2008ம் ஆண்டைவிட அரச வருமானம் பாரியளவில் வீழ்ச்சி கண்டுள்ளது. நாட்டின் அனைத்துத் துறைகளிலும் மந்த நிலை ஏற்பட்டு, பொருளாதாரம் வீழ்ச்சி கண்டுள்ளதோடு கடன் சுமை அதிகரித்துள்ளது. ஆனால், ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கமோ இவை எதனையும் கண்டுகொள்ளாது. தமது சுகபோகங்களில் மட்டும் கவனம் செலுத்திவருகிறது. இவ்வாறான செயற்பாடுகளால் நாட்டு மக்களே எதிர்காலத்தில் நெருக்கடிகளைச் சந்திக்க நேரிடும்.

எமது நாட்டில் வயது முதிர்ந்த பெற்றோர்களை எப்படியெல்லாம் ஏமாற்ற முடியுமோ அதற்கான அனைத்து கைங்கரியங்களையும் ஜனாதிபதி மேற்கொண்டு வருகிறார். முக்கியமான பேச்சுவார்த்தைகளை நடத்த வெள்ளைக்காரன் இங்கு வந்தால் அவனுக்கு உறைப்புச் சம்பலையும், அப்பத்தையும் உணவாகக் கொடுக்கும் ஜனாதிபதி, அப்புகைப்படத்தை ஊடகங்களில் பிரசுரிக்கின்றார். இதனைப் பார்க்கும் எம்மக்கள் ஜனாதிபதியின் தேசப்பற்றைப் பார்த்தீர்களா என ஏமார்ந்துபோகிறார்கள்.

இவ்வாறு ஜனாதிபதி சிறந்த நடிகராகத் திகழ்கிறார். இவற்றையெல்லாம் கைவிட்டு, நாட்டினதும், மக்களினதும் நலன்கருதி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என அநுரகுமார திஸாநாயக்க மேலும் தெரிவித்தார்.

http://www.parantan.com/

Edited by paranthan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.