Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சென்னையில் தமிழினப் பாதுகாப்பு மாநாடு; ஐ.நா.விற்கு கோரிக்கைப் பேரணி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சென்னையில் தமிழினப் பாதுகாப்பு மாநாடு; ஐ.நா.விற்கு கோரிக்கைப் பேரணி

திங்கள், 12 அக்டோபர் 2009( 16:04 IST )

இலங்கையின் வன்னி முகாம்களில் வதைபடும் ஈழத்தமிழர்களை விடுவிக்கவும், தமிழீழ விடுதலை குறித்து பொது வாக்கெடுப்பு நடத்துவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் ஐ.நா.-வின் கவனத்தை ஈர்க்கும் வகையில் சென்னையில் இன்று காலை பிரமாண்ட பேரணி நடைபெற்றது.

chenai1.jpg

தமிழகம் முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கானோர் வந்து பங்கேற்ற இந்தப் பேரணி சென்னை அண்ணா சாலை மன்றோ சிலையில் இருந்து காலை 11 மணியளவில் புறப்பட்டது.

கோவை கு. இராமகிருட்டிணன் பேரணிக்குத் தலைமை தாங்கினார். ஹென்றி டிஃபேன், ஓவியர் புகழேந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரணியை ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி எம்.ஜி. தேவசகாயம் தொடங்கி வைத்தார்.

இந்தப் பேரணி சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை எதிரே முடிவடைந்தது. பேரணியில் பங்கேற்றவர்கள் தமிழ் இனங்காக்கும் எழுச்சி முழக்கங்களை எழுப்பியபடியே அணிவகுத்து வந்தனர்.

பேரணியின் முடிவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

chenai2.jpg

இலங்கையில் வன்னிப் பகுதியில் சிறிலங்க இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள இடைத்தங்கல் முகாம்களில் போதுமான அடிப்படை வசதிகளின்றி பன்னாட்டுச் சட்டங்களுக்குப் புறம்பாக கடந்த 5 மாதங்களாக அடைத்து வைக்கப்பட்டுள்ள 3 இலட்சம் ஈழத் தமிழர்களை உடனடியாக விடுவிக்க, அனைத்து முயற்சிகளையும் ஐக்கிய நாடுகள் சபையும், அதன் பொதுச் செயலர் பான் கீ மூன் அவர்களும் அவசர உணர்வுடன் மேற்கொள்ள வேண்டு்ம் என்று இப்பேரணி கேட்டுக்கொள்கிறது.

தென்மேற்குப் பருவமழையால் ஏற்கெனவே கடும் அவதிக்கு உள்ளான முகாம் மக்களை வடகிழக்குப் பருவமழை தொடங்குவதற்குள் முகாம்களில் இருந்து வெளியேற சிறிலங்க அரசு அனுமதிக்குமாறு வலியுறுத்த வேண்டும். முகாம்களில் உள்ளோரை வெளியேற அனுமதிக்கவில்லையெனில், சிறிலங்க அரசின் மீது பொருளாதாரத் தடை விதிப்பது மட்டுமின்றி, அந்நாட்டிற்கு பன்னாட்டு நிதியம் அளிக்க முன்வந்துள்ள கடனின் அடுத்தத் தவணையை நிறுத்தச் சொல்ல வேண்டும்.

இதனை அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளுடன் இணைந்து ஐ.நா. மேற்கொள்ள வேண்டும் என இப்பேரணி வலியுறுத்துகிறது.

வன்னி வதை முகாம்களிலும் தமிழீழத்தின் ஏனைய பகுதிகளிலும் இனப் படுகொலையின் பாதிப்பிற்குள்ளாகி சொல்லொணாத் துயரம் அனுபவித்து வரும் தமிழீழ மக்களின் துயரைத் துடைப்பதற்கான முழுப் பொறுப்பையும் சர்வதேச சமூக்கத்தின் சார்பில் ஐ.நா.வே மேற்கொள்ள வேண்டும் என்று இப்பேரணி கோருகிறது.

தமிழீழ மக்களுக்கு எதிராக சிறிலங்க சிங்களப் பெளத்தப் பேரினவாத அரசின் அதிபர் ராஜபக்சயும், அவரது கூட்டாளிகளும் நிகழ்த்திய தமிழினப் படுகொலை மீது பன்னாட்டு விசாரணை நடத்த வேண்டும் என இப்பேரணி வலியுறுத்துகிறது. தமிழர்களுக்கு எதிரான இனப் படுகொலை குற்றம், மானுடத்திற்கு எதிரான குற்றங்கள், போர்க் குற்றங்கள் ஆகியவற்றிற்காக மகி்ந்த ராஜபக்ச உள்ளிட்ட சிங்கள ஆட்சியாளர்கள் மீதும், இந்தக் குற்றங்களுக்குத் துணை புரிந்த தெற்காசிய வல்லாதிக்க ஆட்சியாளர்க்ள் மீதும் பன்னாட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து விசாரித்து தண்டிக்க வேண்டும் என இப்பேரணி வலுயுறுத்துகிறது.

ஈழத் தமிழர்களின் சுய நிருணய உரிமைப் போராட்டத்தை ஒடுக்கும் சிறிலங்க சிங்களப் பெளத்தப் பேரினவாத அரசு, தெற்காசிய வல்லாதிக்க அரசுகளின் துணையுடன் இரண்டரை ஆண்டுகள் மேற்கொண்ட இன அழிப்பில் ஒன்றரை இலட்சம் ஈழத் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதை தடுக்கத் தவறிய ஐக்கிய நாடுகள் சபையை இப்பேரணி வன்மையாகக் கண்டிக்கிறது.

chenai3.jpg

இனப் படுகொலைப் போரின் இறுதிக் கட்டத்தில் பல பத்தாயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். ஐ.நா. உரிய நேரத்தில் தக்க நடவடிக்கை எடுத்திருக்குமானால் பல்லாயிரக்கணக்கான உயிர்களை காப்பாற்றியிருக்கலாம். ஆனால் அதனை செய்யத் தவறியது. அப்போது சிறிலஙகா வந்திருந்த ஐ.நா. பொதுச் செயலரின் தலைமை அலுவலர் விஜய் நம்பியார் அதற்கான முயற்சிகளை மேற்கொள்ளத் தவறி விட்டார் என்று குற்றம்சாற்றுவதோடு, அவரை அப்பொறுப்பிலிருந்து நீக்கி மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இப்பேரணி வலியுறுத்துகிறது.

ஈழத் தமிழர்கள் மீது சிறிலங்காவின் சிங்களப் பெளத்தப் பேரினவாத அரசு அரை நூற்றாண்டிற்கும் மேலாக இன ஒடுக்குமுறையும், இன அழிப்பும் மேற்கொண்டுவரும் பின்னணியில், தமிழீழ மக்களின் இறைமையை மீட்கவும், அவர்களின் சுய நிருணய உரிமையை நிலைநாட்டவும், இதுபோன்ற சூழல்களில் உலகின் பிற பகுதிகளில் மேற்கொண்ட வழிமுறையைப் பின்பற்றி பொது சன வாக்கெடுப்பு நடத்தி தமிழீழத் தேசிய இனத்தின் அரசியல் வருங்காலத்தை தீர்வு செய்ய ஐ.நா. முன்வர வேண்டுமென இப்பேரணி வலியுறுத்துகிறது.

இலங்கை காலனி ஆதிகத்திலிருந்து விடுபட்ட காலம் தொட்டு, அடுத்தடுத்து ஆட்சி புரிந்து வந்த சிறிலங்க ஆட்சிகள் தமிழ் மக்களுக்கு எதிராக மொழி, இனம், சமயம் என்று அனைத்து வகையிலும் இனப் பாகுபாட்டைக் கடைபிடித்து, அதன உச்சக்கட்டமாக இனப் படுகொலையை நிகழ்த்தி, இன்றளவும் அம்மக்களுக்கு அடிப்படை மனித உரிமைகளைக் கூட மறுத்து வரும் பின்னணியில் சிறிலங்காவை இனவெறி அரசாக ஐ.நா.வும் உலக நாடுகளும் பிரகடனப்படுத்த வேண்டும் என இப்பேரணி கேட்டுக்கொள்கிறது.

பேரணியைத் தொடர்ந்து, மாலை 5 மணியளவில் சென்னை தியாகராயநகர் முத்துரங்கம் சாலையில் தமிழினப் பாதுகாப்பு மாநாடு நடைபெற்றது.

http://tamil.webdunia.com/newsworld/news/t...091011017_1.htm

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.