Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாடு கடந்த தமிழ் ஈழத்துக்கு 5 நாடுகள் அனுமதி: இலங்கை அதிர்ச்சி?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நக்கீரன், நாளேடு 21/10/2009, 17:44

நாடு கடந்த தமிழ் ஈழத்துக்கு 5 நாடுகள் அனுமதி: இலங்கை அதிர்ச்சி?

இலங்கையில் போர் முடிந்த பிறகு சுமார் 3 லட்சம் ஈழத்தமிழர்களை அகதிகளாக முகாம்களுக்குள் அந்நாட்டு அரசு அடைத்து வைத்துள்ளது.

உலகம் முழுவதும் வாழும் ஈழத்தமிழர்களின் ஈழம் கனவை சிங்கள அரசால் ஒன்றும் செய்ய முடியாது என்று தனி ஈழம் நாட்டை உருவாக்கியே தீருவது என்ற முயற்சியில் ஈழத்தமிழர்கள் ஈடுபட்டுள்ளனர்.

முதல் கட்டமாக நாடு கடந்த தமிழ் ஈழத்தை உருவாக்கி உள்ளனர். உலகின் பல்வேறு நாடுகளில் வாழும் ஈழத்தை சேர்ந்த 59 தமிழர்கள் முன்நின்று நாடு கடந்த தமிழ் ஈழத்தின் நிர்வாகத்தை நடத்தி வருகிறார்கள்.

நாடு கடந்த தமிழ் ஈழத்துக்கு அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, தென் ஆப்பிரிக்கா, நார்வே ஆகிய 5 நாடுகள் அனுமதி வழங்கி உள்ளது. இது இலங்கையின் சிங்கள அரசுக்கு கடும் அதிர்ச்சியையும் அதிருப்தியையும் ஏற்படுத்தி உள்ளது.

நாடு கடந்த தமிழ் ஈழ அரசை நடத்தி வரும் 59 தமிழர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை கோரிக்கை விடுத்தது. ஆனால் ஈழத் தமிழர்கள் மீது நடவடிக்கை எடுக்க 5 நாடுகளும் மறுத்துவிட்டன.

நன்றி - நக்கீரன்

முதல் கட்டமாக நாடு கடந்த தமிழ் ஈழத்தை உருவாக்கி உள்ளனர். உலகின் பல்வேறு நாடுகளில் வாழும் ஈழத்தை சேர்ந்த 59 தமிழர்கள் முன்நின்று நாடு கடந்த தமிழ் ஈழத்தின் நிர்வாகத்தை நடத்தி வருகிறார்கள்.

நாடு கடந்த தமிழ் ஈழத்துக்கு அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, தென் ஆப்பிரிக்கா, நார்வே ஆகிய 5 நாடுகள் அனுமதி வழங்கி உள்ளது.

எங்கே அந்த நிர்வாகம் அமுல்படுத்தப் பட்டுள்ளது என்று நக்கீரன் இடத்தின் பெயரையும் தந்தால் நல்லது

அனுமதி என்பதும் அங்கீகாரம் என்பதும் வேறு வேறு. கூட்டம் நடத்தவும், ஒரு சமூகம் தமக்குள் சனநாயக ரீதியில் வாக்கெடுப்பு ஒன்றை நடாத்தவும் அனுமதி அளிக்க பல நாடுகள் சம்மதம் தெரிவிக்கும். ஏனெனில், அவை அவற்றின் சட்டதிட்டங்களுக்கு ஏற்றது. ஆனால், ஒரு நாடு கடந்த தேசம் என்பதை அங்கீகரிப்பதென்பது முற்றிலும் வேறானது.

மீண்டும் பம்மாத்துகள் ஆரம்பம்

இப்படிச் சொல்லி சொல்லி இருந்த கோவணமும் போய் விட்டது.

நாடு கடந்த தமிழீழ அரசு என்பது ஒரு திட்டம்.

எந்த வித முன்னெடுப்பும் இல்லாமல் முன்வைக்கப்பட்ட கவர்ச்சிகரமான கோசம்.

இந்தக் கோசம் புலம்பெயர் தேசத்தில் பல கருத்து முரண்பாடுகளை உருவாக்கி இருக்கின்றது.

தாயகவிடுதலைக்காக பல்வேறு பெயர்களில் பல்வேறு அமைப்புகள் செயற்பட்டு வந்ததை அறிவோம்.

இந்த அமைப்புகள் அரசியற் பணியைத் தொடர்ந்து செய்து இருக்கலாம்,

மனித உரிமை மீறல் பிரச்சனையை மையப்பிரச்சனையாய் முன்வைத்து மிகப்பெரிய போராட்டங்களை நிகழ்த்தியிருக்கலாம். ஆனால் புலம் பெயர்தேசத்து அமைப்பு அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான அழகான கோசம்தான்

நாடு கடந்த தமிழீழ அரசு. சிங்களம் இந்த வெற்றுக்கோசத்திற்குப் பயப்படுவதாகப் பாசாங்கு காட்டீ, புலம் பெயர்தேசத்தில் கருத்து முரண்பாடுகளை வளர்க்கின்றது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாடு கடந்த தமிழீழ அரசு என்பது ஒரு திட்டம்.

எந்த வித முன்னெடுப்பும் இல்லாமல் முன்வைக்கப்பட்ட கவர்ச்சிகரமான கோசம்.

இந்தக் கோசம் புலம்பெயர் தேசத்தில் பல கருத்து முரண்பாடுகளை உருவாக்கி இருக்கின்றது.

தாயகவிடுதலைக்காக பல்வேறு பெயர்களில் பல்வேறு அமைப்புகள் செயற்பட்டு வந்ததை அறிவோம்.

இந்த அமைப்புகள் அரசியற் பணியைத் தொடர்ந்து செய்து இருக்கலாம்,

மனித உரிமை மீறல் பிரச்சனையை மையப்பிரச்சனையாய் முன்வைத்து மிகப்பெரிய போராட்டங்களை நிகழ்த்தியிருக்கலாம். ஆனால் புலம் பெயர்தேசத்து அமைப்பு அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான அழகான கோசம்தான்

நாடு கடந்த தமிழீழ அரசு. சிங்களம் இந்த வெற்றுக்கோசத்திற்குப் பயப்படுவதாகப் பாசாங்கு காட்டீ, புலம் பெயர்தேசத்தில் கருத்து முரண்பாடுகளை வளர்க்கின்றது.

இந்தப் பதவிப்போட்டியாலதனே நாடுகடந்த அரசை முன்வைச்ச கே. பீயை போட்டுக்கொடுத்தனிங்கள் ?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.