Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழத்தமிழர் முகாம் குறித்த கனிமொழி கவலை, மத்திய அரசுக்கான எதிர்வினை?

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இடம் பெயர்ந்தோர் முகாம்கள் எதுவும் தமிழர்கள் வாழ முடியாத சூழலில் உள்ளன என்று திமுக ராஜ்யசபா எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார். இலங்கை சென்று திரும்பிய தமிழக எம்.பிக்கள் குழு , முகாம்களைப் பார்வையிட்ட பின், இலங்கை ஜனாதிபதி ராஜபக்ஷவிடம் முகாம் வசதிகள் திருப்தி தருவதாக இருக்கிறது எனத் தெரிவித்திருந்தனர்.

இலங்கையில் பத்திரிகையாளர்களிடம் முகாம் நிலைமைகள் குறித்துப் பேச மறுத்தனர். இக்குழு சென்னை திரும்மிபய பின் செய்தியாளர்களைச் சந்தித்த போது முகாம்களின் நிலை, ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டது போன்று மோசமான நிலையில் இல்லை என்றே தெரிவித்திருந்தது. அங்கு இடப்பட்டடுள்ள முட்கம்மிகள் கூட வெறும் பாதுகாப்புக்கானதே எனத் தெரிவித்தனர்.

இந்நிலையில், உதகம‌ண்டல‌த்‌தி‌ல் நடைபெற்ற பெண்களுக்கான அரசியல் பயிலரங்க நிறைவு விழாவில் கலந்து கொண்ட கனிமொழி எம்.பி, செய்தியாளர்களிடம் பேசுகை‌யி‌ல், இலங்கையில் முகாம்களில் உள்ள தமிழர்கள் இன்னமும் பிரச்சனைகளுக்கு மத்தியிலேயே உள்ளனர் எனத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையில் முகாம்களில் உள்ள இன்னமும் பிரச்னைகளுக்கு மத்தியிலேயே உள்ளனர். முதலில் இது சீர் செய்யப்பட வேண்டும். அவர்கள் அந்த முகாம்களில் வாழவே முடியாத சூழல் உள்ளது. அவர்கள் நாட்டிலேயே அகதிகளாகத்தான் வாழ்ந்து கொண்டுள்ளனர். இம் மக்களுக்கு ஏராளமான உதவிகள் தேவைப்படுகின்றன. ஆயினும் அவர்களுக்கு வேண்டிய உதவிகளை, இப்போது செய்வதிலும் பார்க்க, அவர்களை, அங்கிருந்து வெளியேற்றி வெளியில் குடியேற்றம் செய்த பின்னர் வழங்கலாம். குறிப்பாக விவசாயம் போன்றவற்றிற்கு அதிகளவில் உதவிகள் தேவைப்படுகின்றன.

மேலும் அவர்களது சொந்தப் பகுதிகளில் மருத்துவ வசதிகள், தொழில் வாய்ப்புகள் போன்றவற்றிற்கும் உதவ வேண்டும் எனத் தெரிவித்தார். இதே சமயம் , இந்தக் குழவில் இடம்பெற்றிருந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளன், தமிழகம் திரும்பிய பின், ராஜபக்சேவை மிகக் கடுமையாக சாடியும், முகாம்களில் தமிழர்களின் நிலை மிக கேவலமாக இருப்பதாகவும் பேட்டி அளித்திருந்தார். இதனால் ஏற்பட்ட அதிருப்பதினாயே, இக் குழு பிரதமரைச் சந்திக்கச் சென்றபோது, திருமாவளவன் அழைத்துச் செல்லப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இது இவ்வாறிருக்க திடீரென முகாம் தமிழர்கள் குறித்து கனிமொழி கவலை தெரிவித்திருப்பது ஆச்சரியப்பட வைத்துள்ளது. ஆயினும் திமுக வின் மத்திய அமைச்சர் ராஜா மீதான சிபிஜயின் ரெய்டுக்கான எதிர்வினையாக இது இருக்கலாம் எனவும் சில ஊகந்தெரிவிப்பதாகவும் அறியப்படுகிறது.

மேலும் செய்திகளுக்கு

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் தமிழர்கள் அடைக்கப்பட்டுள்ள முகாம்களில் வாழவே முடியாத சூழல் உள்ளதாகஇ திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி தெரிவித்தார்.

பெண்களுக்கான அரசியல் பயிலரங்க நிறைவு விழா உதகையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட கனிமொழிஇ செய்தியாளர்களிடம் கூறியது:

இலங்கையில் முகாம்களில் உள்ள தமிழர்கள் இன்னமும் பிரச்னைகளுக்கு மத்தியிலேயே உள்ளனர். இதை முதலில் சீர் செய்ய வேண்டும். அவர்கள் அந்த முகாம்களில் வாழவே முடியாத சூழல் உள்ளது. அவர்கள் நாட்டிலேயே அகதிகளாகத்தான் வாழ்ந்து கொண்டுள்ளனர்.

இம்மக்களுக்கு ஏராளமான உதவிகள் தேவைப்படுகின்றன. அவற்றை இப்போதே செய்வதைவிட அவர்களை அங்கிருந்து வெளியேற்றி வெளியில் குடியேற்றம் செய்த பின்னர் தேவையான உதவிகளை வழங்கலாம். குறிப்பாக விவசாயம் போன்றவற்றிற்கு அதிகளவில் உதவிகள் தேவைப்படுகின்றன.

இதுவரை 58 ஆயிரம் பேர் முகாம்களிலிருந்து வெளியேற்றப்பட்டு குடியமர்த்தப்பட்டுள்ளனர். எஞ்சியுள்ளோரையும் எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவில் டிசம்பர் மாதத்திற்குள

குடியேற்றம் செய்துவிட வேண்டும். அவர்களது சொந்தப் பகுதிகளில் மருத்துவ வசதிகள்இ தொழில் வாய்ப்புகள் போன்றவற்றிற்கும் உதவ வேண்டும்.

இந்திய எம்பிக்கள் குழுவினர் பார்வையிட்ட முகாம்களோடு அங்கு தமிழர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள எந்த முகாமும் சிறப்பாக இல்லை.

NewIndiaNews.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.