Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வெளிநாட்டு பணம் எம் சமூகத்தில் ஏற்படுத்திக் கொண்டிருக்கின்ற பாதிப்புக்களை பல பக்கங்களில் எழுத முடியும் இப்போது ஒரு உதாரணம்.

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இலங்கையில் மனித நேயமிக்கவர்கள் மீண்டும் மக்கள் முன் வருக.

பம்பலபிட்டடியில் கடந்த மாத இறுதி பகுதியில் கொல்லப்பட்ட பாலரட்ணம் சிவகுமார் (வயது 26) தொடர்பாக இலங்கை வாழ் மக்களுக்கும் மனித உரிமை ஆர்வலர்களுக்கும் மிகுந்த அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. இவ்விடயத்தை மனித உரிமை மீறல் என்று பார்ப்பதா? இன அழிப்பு என்ற ரீதியில் பார்ப்பதா?

எப்படித்தான் பார்த்தாலும் எல்லாம் ஒன்றே. குறிக்கப்பட்ட கொலைச் சம்பவத்தை மக்கள் பலரும் நேரில் கண்டதுடன், வீடியோ பதிவு செய்து ஊடகங்கள் மூலம் பொது மக்கள் பார்வைக்கும் முன்வைக்கப்பட்டது. குறிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக மக்கள் (ஸ்ரீலங்காவில்) பலரும் தமது கருத்துக்களை முன்வைக்கையில் இது போன்ற மனித நாகரீகமற்ற சம்பவத்திற்காகா கவலைப்படுகின்றோம்,வெக்கமடைகின்றோம், சட்டம் நீதி ஒழுங்கு இல்லையா?, பொலிஸாரின் கடமை என்பது இதுதானா?, இரக்கமே இல்லையா? என பல்வேறான தமது கருத்துக்களை முன்வைத்தனர்.

இது போன்றொரு சம்பவம் 2005 நவம்பர் 16ம் திகதி யாழ்ப்பாணத்தில் இடம் பெற்றது திருட்டுச் சம்பவத்தில் அகப்பட்ட மைக்னேசி தினேஷ் (வயது 20) என்பவர் யாழ் இந்துக் கல்லுரி மைதானத்தில் கூடைப்பந்தாட்ட கம்பத்தில் கட்டப்பட்டு கூடிநின்றவர்களால் கும்பிட கும்பிட அடித்துக் கொல்லப்பட்டார்.

user posted image

இது போன்றொரு இன்னொரு யாழ் சண்டிலிப்பாயில் இடம் பெற்றது குறிப்பிட்ட நபர் ஒரு மனநலம் பாதிக்கப்ட்டவர் அவர் கொல்லப்பட்டதற்கான காரணம் இது வரை தெரியாது, குறிப்பிட்ட நபரை இரவு வேளை தூக்கிச் சென்ற சிலர் கடுமையாக தாக்கி கொன்றதன் பின்னர் தற்கொலை செய்தவர் போல சடலத்தை மரத்தில் கட்டி தொங்கவிட்டனர். இது போன்ற வேறு பல சம்பவங்களும் இடம் பெற்றிருக்கலாம்.

யுத்தத்தை காரணம் காட்டி மனித பண்புகள் குழிதோண்டி புதைக்ப்பட்டுள்ள இலங்கையில் இன்னும் எத்தனையே விடயங்கள் மண்ணோடு மண்ணாகிவிட்டன. யாழில் நடந்த தினேஷ்சின் கொலைச் சம்பவம் மக்களால் தண்டனை வழங்கப்படுவதாக கலாச்சாரம் பேணும் குழுவினால் பதாகையும் வைக்கப்பட்டது. அங்கு கூடியிருந்த பலரும் கிரிக்கட் விக்கட்டுகளாலும், பற்றினாலும், வேறு சிலர் செயின் மற்றும் தடியினாலும் அடித்துக் கொண்டனர்,

இதனை இன அழிப்பு என்ற பட்டியலில் சேர்ப்பதா? மனித உரிமை மீறல் பட்டியலில் சேர்ப்பதா?

யாழில் புதிதாய் திருடப் பழகியவர்களும் உண்டு, ஒரு தடவை திருட்டு சம்பவம் ஒன்றில் சந்தேகிக்கப்டும் ஒருவர் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார், அவரிடம் கேட்டேன் ‘ஏன் திருடினீர்கள் உழைத்து தின்னலாம் தானே” என்று. அதற்கு கூறினார் உழைப்பில்லை கையில் காசு ஒன்றும் இல்லை, சாமான்கள் நினைச்சுப் பார்க்க முடியாத விலை, நான் நகை திருடவில்லை அரிசியைத்தான் எடுத்தேன் என்றார்.

இவ் உண்மைச் சம்பவத்தை கூறி திருடர்களை ஊக்குவிக்கவில்லை மாறாக நாம் கற்றுக் கொள்வதற்கும் கையாள்வதற்கும் நிறையவே உள்ளது என்பதை முன்வைக்கின்றேன்.

வடக்கு கிழக்கில் வெறுமனே திருட்டு மட்டுமன்றி பல உயிர்பறிப்பு மற்றும் மானபங்க சம்பவங்களும் நிறைவேறியதை மறுக்கவுமில்லை. பம்பலப்பிட்டியில் கொல்லப்பட்டவர் தமிழ் பெயரை உடையவராக இருந்தாலும் அவர் பேசுவது சிங்கள மொழியே.

குறிப்பிட்ட நபரை தமிழன் என்று தெரிந்து தான் கொன்றார்கள் என்று அர்த்தப்படுத்துவது எவ்வளவு தூரம் சரியானது என்பதை சிந்திக்க வேண்டும். எது எப்படியிருப்பினும் விலங்கிலும் கேவலமான ஜாதி இலங்கையில் உருவாகி இருப்பதை இச் சம்பவம் வெளிப்படுத்தியுள்ளது. இச் சம்பவம் மக்கள் முன் பார்வைக்கு வைக்ப்பட்டதினால் தான் அதற்கு பல்வேறு எதிர்ப்புக்களை மக்கள் வெளியிட்டுள்ளனர்.

இதே போன்று தான் வன்னியில் கரு முதற்கொண்டு முதியவர் வரை தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டனர் என்பதை இலங்கை வாழ் மக்கள் அறிந்திருந்தால் ஜனாபதி மகிந்த ராஜபக்ஷவிற்கும், சரத்பொன்சேகாவிற்கும், கோட்டபாயவிற்கும் எதிராக குரல் கொடுத்திருப்பர். ஊடக அடக்கு முறையை இன்று வரை கையாள்வதால் தம்மைச் சுற்றி என்ன நிகழ்கின்றது என்பதை அறியாத மக்களாக உள்ளதுடன், கேட்டவைகளை மட்டும் நம்பிக்கொண்டு தம்மை அறியாமலே வன்முறையாளர்களுக்கு பால்வார்க்கின்றனர்.

நேர்மையான ஊடகம் இலங்கை மக்களுக்கு கிடைத்திருந்தால் இறுதியாக நிகழ்ந்ததாக கூறப்பட்ட யுத்தத்திற்கு பொரும்பான்மையான மக்கள் ஒத்துழைப்பு வழங்கியிழுக்க மாட்டார்கள், அத்துடன் ஏற்கனவே காணாமல் போன அல்லது கடத்டதப்பட்டவர்களுக்கான பதிலை கூறுமாறு நிர்ப்பதந்தித்திருப்பர். சிவகுமாரின் கொலைச் சம்பவம் மக்களுக்கு முன்வைக்கப்பட்டதன் மூலம் மக்கள் வன்முறையை ஆதரிக்கவில்லை என்பதை தெளிவாக வெளிப்படுத்டதியுள்ளனர். இலங்கையின் மருத்துவ மனைகளிலோ அல்லது பள்ளிகளிலோ கிடைக்காத மனித நேயம் எவ்வாறு இராணுவத்துக்குள்ளும் பொலிஸிக்குள்ளும் இருக்கும் என்பதை எதிர்பார்ப்பது.

இலங்கையில் மனித நேயம் படைத்தவர்கள் மீது சாயம் பூசி ஒதுக்கப்ட்டுள்ளனர். அவர்களை மீண்டும் மக்கள் முன்னிலையில் கொண்டுவருவதற்கு சர்வதேசம் தொடர் அழுத்தங்களை ஸ்ரீலங்காவிற்கு வழங்க வேண்டும். இவ்வாறான சம்பவங்களை வெறுமனே ‘தமிழ் சிங்களம்” என பிரித்துப் பார்க்கக் கூடாது இது எமது நாட்டில் தொடர்கதையான கேவலமான பண்புகள்.

சாதாரணமாக பேரூந்தில் பச்சப்பாலகருடன் பயணிக்கும் தாய்மாருக்கு கூட இருக்கை கொடுக்க மறுக்கும் தமிழ் மனிதபிறவிகள் பலபோருடன் தர்க்கித்ததுண்டு. ஒவ்வொரு சிறுவிடயத்திலிருந்தும் பிறக்கும் மனிதப் பண்புகள் எம்மிடம் அழிவடைந்து கொண்டிருக்கின்றது. ஆகவே இன்னும் பல சம்பவங்களுக்கு வெளிநாட்டு பணம் காரணம் என்பதை பல இடங்களிலும் உறுதிப்படுத்திக் கொண்டேன்.

வெளிநாட்டு பணம் எம் சமூகத்தில் ஏற்படுத்திக் கொண்டிருக்கின்ற பாதிப்புக்களை பல பக்கங்களில் எழுத முடியும் இப்போது ஒரு உதாரணம்.

*

அண்மையில் முகாம்களில் எம்மக்கள் பலரும் துன்பங்களை அனுபவித்து வந்தனர், எனினும் ஒரு சிலர் பல லட்சங்களை அள்ளிக்கொடுத்து தம் உறவுகளை முகாமிலிருந்து மீட்டனர், பணம் இல்லாதவன் என்ன செய்வது? எமது மக்கள் அவலத்திலிருந்து நிதந்தரமாக விடுபட வேண்டும் என்பதே எமது விருப்பம். அதற்காகத்தானே இவ்வளவு தியாகங்களையும்(பணத்தையும்) செய்து வந்தீர்கள்.

ஒட்டுமொத்த மக்களும் விடுபடவேண்டும் அதற்கு நாம் ஒன்றுபடுவோம் என ஏன் எம் இனத்துக்கு சிந்திக்க முடியாதுள்ளது? இங்கே நாம் செய்வது இன அழிப்பு இல்லையா? இவ்வாறு தான் ஒவ்வொரு விடயத்திலும். எனவே அரசு தரப்பு செய்யும் தவறுகள் அல்லது பேரினவாதிகள் செய்யும் தவறுகளுடன் எம் தவறுகளையும் எதிர்த்து போராட வேண்டும்.

தற்போது இலங்கையில் நிகழும் ஒவ்வொரு சம்பவங்களையும் ஆழமாகவும் நீண்டநோக்கிலும் பார்த்து விவேகமான செயற்பாட்டில் ஈடுபடுவது ஒவ்வருதமிழனுக்கும் உள்ள பாரிய கடமையாகும். வேதனையை அனுபவித்த இனம் தான் அதன் வலியை உணரமுடியும் என்ற அடிப்படையில் மனித நேயம் எங்கெல்லாம் மாசுறுகின்றதோ அப்போதெல்லாம் குரல் கொடுக்கும் இனமான தமிழ் இனம் சர்வதேசத்தில் தென்பட வேண்டும். அப்போது தான் எம்மினத்தின் துயர் நீங்கும்.

வின்சென் ஜெயம்

http://www.infotamil.ch/ta/view.php?202mOEEda3dJdAm34d0ESoC3a02Q6Acb4dc4So0420eWQMEgbe2c4Yl74cceCgYy2e

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கப்பல் வரும் இருங்கோவெண்டு சொன்னதுகூட வெளிநாட்டார்தான்....... உங்கள பலிகுடுத்து படங்காட்டி சம்பாதிச்சதும் வெளிநாட்டார்தான்... இன்னும் தாறம் போராடுங்கோ எண்டும் உசுப்பேத்துவினம், ஒருத்தரும் உங்க வராயினம்..... பாத்து................... :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.