Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜனாதிபதி - சம்பந்தன் சந்திப்பில் சாதகமான சமிக்ஞை எதுவுமில்லை

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

» ஜனாதிபதி - சம்பந்தன் சந்திப்பில் சாதகமான சமிக்ஞை எதுவுமில்லை

2009-12-04 05:57:50

கூட்டமைப்பு வட்டாரங்கள் பெரும் அதிருப்தி

தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தனை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்றுமுன்தினம் அலரி மாளிகைக்கு அழைப்பித்து, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை ஒட்டிய விடயங்கள் குறித்து அவருடன் பேச்சு நடத்தினார் என அறியவந்துள்ளது. எனினும், இந்தப் பேச்சுகளின் பெறுபேறு குறித்து கூட்டமைப்பின் உயர் வட்டாரங்கள் அதிருப்தியே தெரிவித்தன. ஜனாதிபதி தரப்பிலிருந்து காட்டப்பட்ட சமிக்ஞைகள் தமிழர் தரப்பின் குறைந்த பட்ச எதிர்பார்ப்பைக் கூட நிறைவு செய்வனவாக அமையவில்லை என்று அவை குறிப்பிட்டன.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்க் கூட்டமைப்பின் ஆதரவைத் தமக்குப் பெறுவதற்காகவே சம்பந்தரை ஜனாதிபதி தனியாக அழைத்துப் பேசினார் என்று கூறப்படுகின்றது.

வடக்கு கிழக்கைப் பிரித்த அரசு

இந்தப் பேச்சுகளின்போது, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியின் கீழ் தமிழர்களுக்கு நேர்ந்த அவலங்கள், விபரீதங்களை சம்பந்தர் எம்.பி., எடுத்துக்காட்டினார் எனக் கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்தச் சந்திப்பில் இடம்பெற்றவை எனத் தெரிவித்து கூட்டமைப்பு வட்டாரங்கள் மேலும் கூறிய தகவல்கள் வருமாறு:

"உங்கள் ஆட்சியின் கீழ்தான் வடக்கு கிழக்கு பிரிக்கப்பட்டது. ஒரு சட்டத்தின் மூலம் வடக்கு கிழக்கு மீண்டும் இணைக்கப்பட முடியும் என உயர்நீதிமன்றம் சுட்டிக்காட்டியது. அத்தகைய சட்டம் கொண்டுவரப்பட்டால் அதை ஆதரிக்க ஐ.தே.கட்சி தயாராகவும் இருந்தது. ஆனால் நீங்கள் அப்படிச் செய்ய மறுத்துவிட்டீர்கள். ஆகவே வடக்கு கிழக்கைப் பிரித்தது உங்கள் அரசுதான்'' என சம்பந்தர் சுட்டிக்காட்டினார். இப்பிரச்சினைக்குத் தமிழர்களின் எதிர்பார்ப்பை நிறைவு செய்யக்கூடிய பதிலோ, உறுதிமொழியோ ஜனாதிபதி தரப்பிலிருந்து கோடி காட்டப்படவில்லை.

"இனப்பிரச்சினைத் தீர்வுக்கென அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழு என்ற ஒன்றை நீங்களே உருவாக்கினீர்கள். அதன் சார்பில் நிபுணர் குழுவின் பெரும்பான்மை உறுப்பினர்கள் அதிகாரப் பரவலாக்கலுடன் கூடிய ஒரு திட்டத்தைக் கொண்டு வந்தனர். அதை ஏற்க மறுத்துக் கிடப்பில் போட்டீர்கள். அதன் பின்னர் அனைத்துக் கட்சிக் குழு பயனற்றுப் போயிற்று.'' என்று சம்பந்தர் குறிப்பிட்டார்.

அப்போது குறுக்கிட்ட ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, "நீங்கள்தான் அந்த அனைத்துக் கட்சிக் கூட்டங்களிலேயே பங்கேற்கவில்லையே. அது உங்கள் தவறு அல்லவா?'' என்று கேட்டார்.

அதை மறுத்துரைத்தார் சம்பந்தர்."கூட்டமைப்புக்கு அந்தக் கூட்டங்களில் பங்குபற்றுவதற்கு எப்போதுமே அழைப்பு விடுக்கப்படவில்லை. தென்னிலங்கையின் இணக்கப்பாட்டைக் காணவே இந்த அனைத்துக்கட்சி நிறுவப்பட்டது என்பதால் அதன் கூட்டங்களுக்கு தமிழ்க்கூட்டமைப்பை அழைக்கத் தேவையேயில்லை என்று கூறிய ஜனாதிபதியே இங்கு இருக்கிறார். அதனை அவரிடம் உறுதிப்படுத்தலாம்.'' என ஜனாதிபதியின் செயலாளருக்குத் தகுந்த பதிலடி தந்தார் சம்பந்தர்.

எந்த முகத்துடன் வாக்குக் கேட்பது?

"விடுதலைப் புலிகளை அழித்தல் என்ற பெயரில் அப்பாவித் தமிழர்கள் பல்லாயிரம் பேர் உங்கள் ஆட்சியில் கொல்லப்பட்டனர். சர்வதேசமும் நாங்களும் எவ்வளவு கெஞ்சியும் அதை நீங்கள் தடுத்து நிறுத்தவில்லை.மாறாக, அனுமதித்துப் பார்த்திருந்தீர்கள். அத்தகைய உங்களின் ஆட்சிக்கு வாக்களியுங்கள் என்று எந்த முகத்துடன் போய் நாம் எமது மக்களிடம் கேட்க முடியும்?'' என்று சம்பந்தர் ஜனாதிபதியிடம் கேட்டார்.

அகதிகளாக்கப்பட்ட மக்கள் இன்னும் மீள்குடியமர்த்தப்படவில்லை என்று சம்பந்தர் சுட்டிக்காட்டியபோது அனைவரும் விரைவில் மீள்குடியேற்றப்படுவர் என உறுதிமொழி தர விழைந்தார் ஜனாதிபதி.

இராணுவ முகாம் அமைக்கப்பட்ட பின்னர் மீளக்குடியமர்வு

கண்டி வீதிக்கு கிழக்கே மீள் குடியேற்றம் நடைபெறவேயில்லை என்று சம்பந்தர் சுட்டிக்காட்டியபோது அங்கும் மீள்குடியேற்றம் விரைவில் நடக்கும் என்றார் ஜனாதிபதி.

""இல்லை. கண்டி வீதிக்குக் கிழக்கே பல இடங்களில் இராணுவமே நிலைகொண்டுள்ளது. மக்கள் மீளக் குடியமர அனுமதிக்கப்படவில்லை.'' என்றார் சம்பந்தர்.

"ஆம். சில இடங்களில் இராணுவ முகாம்கள் அமைக்கப்படவேண்டியுள்ளன. அப்பணி முடிந்ததும் எஞ்சிய இடங்களில் மீள்குடியமர்வு இடம்பெறும்.'' என ஜனாதிபதி பதில் தந்தார்.

நாம் தமிழர் தாயகத்தில் இராணுவ நிலை நீக்கத்தை வலியுறுத்த, ஜனாதிபதியோ இராணுவத்தை நிரந்தரமாக நிலைநிறுத்துவது பற்றிப் பிரஸ்தாபிக்கின்றார் என சம்பந்தர் தமது கூட்டமைப்பு சகாக்களிடம் பின்னர் விசனத்துடன் சுட்டிக்காட்டினார்.

"யாழ் குடாநாட்டில் அதியுயர் பாதுகாப்பு வலயம் என்ற பெயரில் இருபது வருடங்களுக்கு மேலாக மக்களின் மண் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இப்போது யுத்த பீதி நீங்கியுள்ளதால் இந்தப் பிரதேசம் அந்த மக்களிடம் விடுவிக்கப்பட வேண்டும்'' என சம்பந்தர் வலியுறுத்திய போது, "இவ்விடயத்தில் அவசரப்பட வேண்டாம், அவசரப்படக்கூடாது. பொறுத்துக் கொள்ளுங்கள். ஆறுதலாகப் பார்க்கலாம்'' என்ற பாணியில் ஜனாதிபதியின் பதில் அமைந்திருந்தது.

இனப்பிரச்சினைக்குத் தீர்வாக 13 ஆம் திருத்தம் மற்றும் "பிளஸ் பிளஸ்" என்று ஜனாதிபதி கோடி காட்டினார். ஆனால் வடக்கு, கிழக்கு இணைப்புக்கான எந்த சமிஞ்ஞையையும் ஜனாதிபதி காட்டவேயில்லை.

அரசமைப்பின் 13 ஆவது திருத்தத்தின் கீழான பொலிஸ் அதிகாரம் பரவலாக்கப்பட மாட்டாது என்பதே தமது நிலைப்பாடு என்பதை ஜனாதிபதி வெளிப்படுத்தினார். அத்தகைய பொலிஸ் அதிகாரத்தை மாகாணங்களுக்குப் பரவலாக்கும் அளவுக்கு நாட்டு மக்கள் பக்குவப்படவில்லை என்றார் ஜனாதிபதி. வடக்கு, கிழக்கு இணைப்பையும் மறுத்து,பதின்மூன்றாவது திருத்தத்தில் உள்ள பொலிஸ் அதிகாரங்களை மாகாணங்களுக்குப் பரவலாக்கும் சட்ட ஏற்பாட்டையும் மறுக்கும் ஜனாதிபதி, அத்தகைய தமது திட்டத்தைப் பதின்மூன்றாவது திருத்தத்துக்கு அப்பால் செல்லும் உத்தேசம் என்று கூறுவது வேடிக்கையானது எனக் கூட்டமைப்புக் கருதுகிறது.

இப்படிக் கூட்டமைப்பு வட்டாரங்கள் மேலும் இச்சந்திப்புத் தொடர்பில் தகவல் வெளியிட்டன.

http://www.uthayan.com/Welcome/full.php?id=2132&Uthayan1259904587

Edited by Mullaimainthan

  • கருத்துக்கள உறவுகள்

.

ஜனாதிபதி - சம்பந்தன் சந்திப்பில் சாதகமான சமிக்ஞை எதுவுமில்லை

அப்ப கூட்டமைப்பு ..... ரணிலோடை ஒரு டீல் விட்டுப் பாக்கிறது........

.

அப்ப கூட்டமைப்பு ..... ரணிலோடை ஒரு டீல் விட்டுப் பாக்கிறது........

அதுதானே ,றீல் விட்டு டில் பண்ணவேண்டியதுதானே

இந்திய ஆளும் வர்க்கம், மகிந்தா, தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கிடையே இணக்கப்பாட்டை ஏற்படுத்த முயற்சிக்கும். தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும் இந்தியாவின் நிழலில் தன்னைத் தக்கவைக்கவே விரும்பும்.

பிரித்தானியத் தமிழர் பேரவையின் இருப்பிற்கு, சர்மா, பட்டேல் போன்றவர்களின் பங்களிப்பு தவிர்க்கமுடியாதளவிற்கு இருக்கிறது.

புலத்து அமைப்புகளிலும் சர்வதேச சத்திகளின் ஊடுருவல், அமைப்புகளின் செயற்பாட்டுக்குக் கால அட்டவனை தயாரித்துத் கொடுத்துள்ளது.

மடுப் பிரசேம், இராணுவம் கைப்பற்றி, கிளிநொச்சிக்கு வரும் வரை புலத்து அமைப்புகள், புலத்து மக்களைத் தெருவில் இறங்கி போராடுவதற்கு வழி நடத்தவில்லை, தமிழகத்தில் தியாகி முத்துக்குமாரின் தியாfத்தின் பின் புலத்து இளையவர்களின் கட்டுக்கடங்கா போராட்டங்கள் எரிமலையாக வெடித்து மக்கள் தெருவில் இறங்கி, புலத்து அமைப்புகளின் இருப்பை மறுதலித்து போராட்டங்கள் வீச்சுப் பெற்றபின், புலத்து அமைப்புகள் தமது இருப்பை நிலை நிறுத்துவதற்காக நாள் குறித்த பேரணிகளை நிகழ்த்தினர், மக்கள் தேசியக்கொடியையும், தேசியத்தலைவரின் உருவப்படங்களையும் கையில் தாங்கி தெருவில் இறங்கிய போது, தடை செய்யப்பட்ட புலிக்கொடி, புலித்தலைவரின் படம் என்ற சர்ச்சையைக் கிளப்பியது முதற் கொண்டு பல விடயங்கள்??????ஃ

இன்று இந்த சக்திகள் ஊடகங்களின் துணையடன் தமிழ்த்தேசியசக்தி தம்மிடம் இருப்பதாக கனவுலகில் சஞ்சரித்து சிங்களத்துடன் பேரம் பேசுகின்றன!

Edited by kalaivani

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய ஆளும் வர்க்கம், மகிந்தா, தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கிடையே இணக்கப்பாட்டை ஏற்படுத்த முயற்சிக்கும். தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும் இந்தியாவின் நிழலில் தன்னைத் தக்கவைக்கவே விரும்பும்.

பிரித்தானியத் தமிழர் பேரவையின் இருப்பிற்கு, சர்மா, பட்டேல் போன்றவர்களின் பங்களிப்பு தவிர்க்கமுடியாதளவிற்கு இருக்கிறது.

இன்று இந்த சக்திகள் ஊடகங்களின் துணையடன் தமிழ்த்தேசியசக்தி தம்மிடம் இருப்பதாக கனவுலகில் சஞ்சரித்து சிங்களத்துடன் பேரம் பேசுகின்றன!

இந்த நிலையிலிருந்து அடுத்தகட்டத்துள் எப்படி எமது இலக்கினை அடைய முயற்சிகள் செய்யலாம் என்பதையும் எழுதுங்கள். மக்களை ஒன்றிணையுங்கள் வீதிக்கு இறக்குங்கள்.................!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.