Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வெற்றியாளரை தீர்மானிப்பது வடக்கு கிழக்கு தமிழ் வாக்காளருடைய வாக்குகள்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வெற்றியாளரை தீர்மாணிப்பது வடக்கு கிழக்கு தமிழ் வாக்காளருடைய வாக்குகள்

இலங்கையில் 6வது சனாதிபதியை தெரிவு செய்வதற்குரிய தேர்தல் சனவரி 26ம் திகதி நடைபெவுள்ளது. இதற்குரிய சனாதிபதி தேர்தல் நியமனபத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 22 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் உள்ளனர். அதில் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கே சிவாஜிலிங்கமும் வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளார்.

இந்த நிலையில் வவுனியாவில் சனாதிபதி வேட்பாளர் மகிந்த ராஜபக்ஷவிற்குரிய தேர்தல் பிரச்சாரங்கள் சூடுபிடித்துள்ளது. பொதுசன ஐக்கிய முன்னணியின் சார்பில் இவர் வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளார்.

சனாதிபதி வேட்பாளர் மகிந்த ராஜபக்ஷவின் உருப்படங்கள் பொறிக்கப்பட்ட தேர்தல் பிரச்சார கட்டவுட்டுக்கள் வவுனியா நகர் எங்கும் காணப்படுகின்றது. ஏனைய வேட்பாளர்களுடைய படங்களை கூட காணமுடியவில்லை. மகிந்தராஜபக்ஷவின் வெற்றி உறுதி செய்யப்பட்டபோதிலும் தமிழ் மக்களுடைய பெரும்பான்மை வாக்குகளினால் அவரை வெற்றி பெறசெய்யவேண்டும் என சிறிரெலோவின் செயலாளர் நாயகம் உதயராசா தெரிவித்தார். சனாதிபதி தேர்தல் பிரச்சாரவேலைத்திட்டத்தில் கலந்து கொள்ள வவுனியா மன்னார் யாழ் மாவட்டங்களுக்கு சுற்றுபிரயாணம் செய்ய திட்டமிட்டுள்ளார்.

வவுனியாவில் புளொட், சிறிரெலோ, ஈரோஸ், அகில இலங்கை முஸ்லீம் காங்கிரஸ், சிறிலங்கா சுதந்திர கட்சி, வடக்கு மக்கள் முன்னணி ஆகியன சனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவாக பிரச்சார வேலைத்திட்டத்தில் இறங்கியுள்ளனர். இதனிடையே சனாதிபதி வேட்பாளர் மேஜர் ஜெனரல் சரத்பொன்சேகா சனவரி இரண்டாம் வாரத்தில் வவுனியாவிற்கும் மன்னாருக்கு தேர்தல் பிரச்சாரத்திற்கு வரவுள்ளார் என ஐதேக கட்சி வவுனியா பகுதி தமிழ் பிரதேச அமைப்பாளர் ஆர் பாக்கியநாதன் தெரிவித்தார்.

இரண்டு பிரதான வேட்பாளர்களாக சனாதிபதி ராஜபக்ஷவுக்கும் ஜெனரல் பொன்சேகாவிற்குமிடையிலேயே பலத்த போட்டியுள்ளது. 2005ம் ஆண்டு நடைபெற்ற 5வது சனாதிபதி தேர்தலில் மகிந்தராஜபக்ஷவுக்கு 48 இலட்சத்து 87 ஆயிரத்து152 வாக்குகளும் ரணில்விக்கிரசிங்காவுக்கு 47 இலட்சத்து ஆறாயிரத்து 366 வாக்குகளும் கிடைத்திருந்தது. இந்த சனாதிபதி தேர்தலில் வெற்றியாளரை தீர்மாணிப்பது வடக்கு கிழக்கு தமிழ் வாக்காளருடைய வாக்குகள் என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழரின் வாக்குகள் வெற்றியாளரை மட்டும் தீர்மானிக்கலாம். ஆனால் தமிழ் மக்களுக்கு எந்தவித உரிமையையும், நிம்மதியையும் தரப்போவதுமில்லை. 1948 இலிருந்து சிங்களவன் தமிழனின் முதுகில் ............ இது இந்த பாக்கிய நாதன் என்ன ஆனந்த சங்கரி .....(மேலும் பலரின் பெயர்கள்)..... டக்ளஸ், கருணா ஈறாகவும் புரியாமல் இல்லை. ஆனால் அவர்கள் நாக்கை .............ள்.

இவர்களால் தான் தமிழர்களுக்கு இந்த நிலமை.( கண்ணியமாக சொல்ல வேண்டியது நமது கடமையாம்)

Edited by Mullaimainthan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழரின் வாக்குகள் வெற்றியாளரை மட்டும் தீர்மானிக்கலாம். ஆனால் தமிழ் மக்களுக்கு எந்தவித உரிமையையும், நிம்மதியையும் தரப்போவதுமில்லை. 1948 இலிருந்து சிங்களவன் தமிழனின் முதுகில் ............ இது இந்த பாக்கிய நாதன் என்ன ஆனந்த சங்கரி , டக்ளஸ், கருணா ஈறாகவும் புரியாமல் இல்லை. ஆனால் அவர்கள் நாக்கை .............ள்.

இவர்களால் தான் தமிழர்களுக்கு இந்த நிலமை.( கண்ணியமாக சொல்ல வேண்டியது நமது கடமையாம்)

உங்களுக்கு தெரியுமா பாக்கியநாதன் யாரென்று?தெரிந்தால் சொல்லுங்கோவன் பார்ப்பம்

வவுனியாவில் புளொட், சிறிரெலோ, ஈரோஸ், அகில இலங்கை முஸ்லீம் காங்கிரஸ், சிறிலங்கா சுதந்திர கட்சி, வடக்கு மக்கள் முன்னணி ஆகியன சனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவாக பிரச்சார வேலைத்திட்டத்தில் இறங்கியுள்ளனர்

இதைப்பற்றி என்ன சொல்லுறியள்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்களுக்கு தெரியுமா பாக்கியநாதன் யாரென்று?தெரிந்தால் சொல்லுங்கோவன் பார்ப்பம்

வவுனியாவில் புளொட், சிறிரெலோ, ஈரோஸ், அகில இலங்கை முஸ்லீம் காங்கிரஸ், சிறிலங்கா சுதந்திர கட்சி, வடக்கு மக்கள் முன்னணி ஆகியன சனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவாக பிரச்சார வேலைத்திட்டத்தில் இறங்கியுள்ளனர்

இதைப்பற்றி என்ன சொல்லுறியள்?

இல்லை இல்லை அவர்களும் சேர்ந்துதான்.

இங்கு தமிழன் என்பதுதான் முக்கியமே தவிர சிங்கள இனவாதக் கட்சிகள் அல்ல. சிலர் நல்லது செய்திருக்கலாம் ஆனால் இப்படி .....

முக்கியம் இங்கு தமிழர்கள் போட்டியிடுகிறார்கள். அவர்களுக்கு நமது வாக்கை போடாமல் சிங்கள இனவாதக்கட்ட்சிகளுக்கு வாக்கு கேட்கிறீர்களே? அதை என்ன என்று சொல்வது.

வேண்டாம் இறுதியாக 2002 இல் கைச்சாத்தான ஒப்பந்ததில் எவற்றை ஐ தே க அரசாங்கம் செய்ய முன் வந்தது.

அல்லது இப்போதாவது தமிழர்கள் பற்றி ஒரு சொல்லு வெளிப்படையாக சொல்லுவார்களா?

அதற்காக மகிந்த கட்சியை ஆதரிப்பதாக இல்லை. அவர்கள் செய்த அட்டூழியம் தாங்கள் அறியாதது அல்லவே.

இரு இனவாதக் கட்சிகளும் நச்சு பாம்புகளே தமிழர்களை பொறுத்தவரை. அவர்களுக்கு ஆதரவு தரும் எவரும் இளம் தமிழ் பச்சகுழந்தைக்கு நல்லது செய்பர்களாக நீங்கள் நினைத்தால் அது தப்புக்கணக்கே.

தங்கள் பொன்னான வாக்கை தாங்கள் நினைத்தவருக்கு போட தங்களுக்கு நிறையவே உரிமையுண்டு.

ஆனால் அவை தங்கள் மனைவி , பெண்பிள்ளைகளை நாசப்படுத்திய சிங்கள இனவாத உங்கள் நல்ல மனிதர்களுக்கு போடுவது தங்களுக்கு நியாயமாக படலாம்.

பாருங்கள் இளம் யுவதி கொழும்பில் கடத்தபட்டாராம். ஆகையால் எமது வாக்கு இந்த சிங்களவனுக்கே போட வெண்டும் இல்லையா?

நான் சொல்வது நீங்கள் தமிழன் என்று நிரூபியுங்கள்

http://www.yarl.com/forum3/index.php?showtopic=67004

பாக்கியனாதன் என்ன சங்கரி, டக்ளஸ்.......எவர் வந்தாலும் அந்த பெண்ணின் நிலமையை அறியமுடியாது.( ரணில் , .....)

இதுதான் தமிழரின் இன்றைய நிலை

Edited by Mullaimainthan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இல்லை இல்லை அவர்களும் சேர்ந்துதான்.

இங்கு தமிழன் என்பதுதான் முக்கியமே தவிர சிங்கள இனவாதக் கட்சிகள் அல்ல. சிலர் நல்லது செய்திருக்கலாம் ஆனால் இப்படி .....

முக்கியம் இங்கு தமிழர்கள் போட்டியிடுகிறார்கள். அவர்களுக்கு நமது வாக்கை போடாமல் சிங்கள இனவாதக்கட்ட்சிகளுக்கு வாக்கு கேட்கிறீர்களே? அதை என்ன என்று சொல்வது.

வேண்டாம் இறுதியாக 2002 இல் கைச்சாத்தான ஒப்பந்ததில் எவற்றை ஐ தே க அரசாங்கம் செய்ய முன் வந்தது.

அல்லது இப்போதாவது தமிழர்கள் பற்றி ஒரு சொல்லு வெளிப்படையாக சொல்லுவார்களா?

அதற்காக மகிந்த கட்சியை ஆதரிப்பதாக இல்லை. அவர்கள் செய்த அட்டூழியம் தாங்கள் அறியாதது அல்லவே.

இரு இனவாதக் கட்சிகளும் நச்சு பாம்புகளே தமிழர்களை பொறுத்தவரை. அவர்களுக்கு ஆதரவு தரும் எவரும் இளம் தமிழ் பச்சகுழந்தைக்கு நல்லது செய்பர்களாக நீங்கள் நினைத்தால் அது தப்புக்கணக்கே.

தங்கள் பொன்னான வாக்கை தாங்கள் நினைத்தவருக்கு போட தங்களுக்கு நிறையவே உரிமையுண்டு.

ஆனால் அவை தங்கள் மனைவி , பெண்பிள்ளைகளை நாசப்படுத்திய சிங்கள இனவாத உங்கள் நல்ல மனிதர்களுக்கு போடுவது தங்களுக்கு நியாயமாக படலாம்.

பாருங்கள் இளம் யுவதி கொழும்பில் கடத்தபட்டாராம். ஆகையால் எமது வாக்கு இந்த சிங்களவனுக்கே போட வெண்டும் இல்லையா?

நான் சொல்வது நீங்கள் தமிழன் என்று நிரூபியுங்கள்

http://www.yarl.com/forum3/index.php?showtopic=67004

பாக்கியனாதன் என்ன சங்கரி, டக்ளஸ்.......எவர் வந்தாலும் அந்த பெண்ணின் நிலமையை அறியமுடியாது.( ரணில் , .....)

இதுதான் தமிழரின் இன்றைய நிலை

இது புலத்திலிருந்தான நிலம் நோக்கிய உங்களுடைய என்னுடைய ஒரு பக்க பார்வை.நிலத்தின் நிலமை அப்படியாக இல்லையே......

சாப்பிட கேட்பவனிடம் வாழ வழி கேட்பவனிடம் தமிழீழம் கேட்பது தவறு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.