Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பெரும்பான்மை இணைவுகளும் சிறுபான்மை சிதைவுகளும்-கிருஸ்ணா

Featured Replies

யுத்தம் முடிவடைந்து விட்டதாக சந்தோஷத்தில் ஆழ்ந்த சிங்கள தேசம் இன்று பல முட்டுக்கட்டைகளோடு ஜனாதிபதித் தேர்தல் ஒன்றினை சந்திக்க நேர்ந்திருக்கின்றது.

நாட்டு மக்களும் ஆளுந் தரப்பினரும் பொதுத் தேர்தல் ஒன்றினையே எதிர்பார்த்திருந்தனர். ஜனாதிபதிக்கு இன்னும் இரு வருட கால அவகாசம் இருந்தது. இதற்கிடையில் திடீரென தற்போதைய ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதித் தேர்தல் ஒன்றை நடத்துவதற்குத் தீர்மானித்தார். இந்தத் தேர்தல் குறித்து இராஜதந்திர ரீதியில் ஆராய வேண்டிய கட்டாயத்துக்கு தமிழ்த் தலைமைகள் நிர்ப்பந்திக்கப்பட்டனர்.

பொதுத்தேர்தல் ஒன்று முன்பதாக நடந்திருந்தால் தமது கட்சி வெற்றி பெற்றிருக்கும் என மஹிந்த ராஜபக்ஷ நன்கு அறிந்திருந்தார். எனினும், பொதுத் தேர்தல் ஒன்றுக்கான முன் முயற்சிகளின்போது மஹிந்த பல சங்கடங்களை தமது தரப்பிலிருந்தே சந்திக்க நேர்ந்தது. அதாவது ஆளுங்கட்சியில் உள்ளவர்கள் எல்லாம் அமைச்சர்கள் என்ற நிலையில் தற்போதைய அமைச்சரவையில் உள்ள கணிசமானோர் ஏனைய அணிகளிலிருந்து குறிப்பாக ஐக்கிய தேசியக் கட்சிப் பட்டியலில் போட்டியிட்டு வெற்றி பெற்றோராவர்.

இதனால் பொதுத் தேர்தல் ஒன்றை நடத்துவதற்கு எத்தனித்த சமயத்தில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்குள் உட்பூசல்கள் அதிகத்தன. இதற்கான காரணங்கள் இரண்டு. ஒன்று தற்போதைய சுதந்திரக் கட்சியின் பிரதான அமைப்பாளர்களுக்கு ஆசனம் பகிர்ந்தளிப்பதில் உள்ள சிக்கல்.

ஒரே தொகுதியில் முன்பு எதிரணியில் இருந்தவருக்கும் ஆசனம் பகிரப்பட வேண்டும். அத்தோடு தொடர்ந்து நடைபெற்று வந்த மாகாண சபைத் தேர்தல்களில் அதி கூடிய வாக்குகளைப் பெற்றவர்களும் நாடாளுமன்ற ஆசனத்திற்கு போட்டியிடுவார். அடுத்த பிரதமருக்கான போட்டி கட்சிக்குள்ளும் குடும்பத்துக்குள்ளும் பாய சிக்கல்களைத் தோற்றுவித்திருந்தன.

இதேவேளை ஜி.எஸ்.பி. வரிச் சலுகை, அந்நிய கடன்களின் இடை நிறுத்தம், இடம்பெயர்ந்தோரை மீளக் குடியமர்த்துவது தொடர்பிலும் சர்வதேசத்தின் நிலைப்பாடு என்பன ஜனாதிபதியின் முன்னாலிருந்த நெருக்கடிகளாக இருந்தன.

மூன்று தசாப்த கால யுத்தம் வெறும் மூன்று வருடங்களில் முடிந்துவிட்டதாகக் கூறிய ஜனாதிபதி, அதனை வைத்து ஆட்சியதிகாரத்தை நீடிப்பதற்கு விரும்பினார். ஆனால், நடந்ததோ வேறு.

தென்னிலங்கை மக்கள் சில நாட்கள் பால் சோற்றுடன் வெற்றி விழா கொண்டாடி வெற்றியை பின்னர் மறக்கத் தொடங்கினர்.

பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி பலம் குன்றியுள்ள தருணத்தில் தனது பதவியை தக்க வைத்துக் கொண்டால் ஜனாதிபதி பதவியும் காப்பாற்றப்படும், அதே நேரம் தான் விரும்பியவாறு அமைச்சரவையை அமைக்கலாம். அல்லது எதிர்வரும் பொதுத் தேர்தலில் எதிரணி வெற்றி பெற்றாலும் ஈரணி பந்தய அரசியலை முன்னெடுக்கலாம் என மஹிந்த கணக்கு போட்டிருந்தார்.

இதற்கிடையில் "சரத்' என்ற பெயர் அரசியலில் பிரபலமானது. சரத் பொன்சேகா ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிடப் போவது ஊர்ஜிதமானதும் மக்கள் விடுதலை முன்னணி மற்றும் பௌத்த பிக்குகள் முன்னணி என்பன அவன் புகழாரம் பாடத் தொடங்கின. 2000 ஆண்டுகள் வரை சிறுபான்மை கட்சிகளே மூன்றாவது அணியாக இருந்த நிலை மாறி அவ்விடத்தை ஏற்கனவே மக்கள் விடுதலை ன்னணி கைப்பற்றிக் கொண்டது.

இலங்கையின் ஜனாதிபதித் தேர்தல் வரலாற்றில் (1994 ஆம் ஆண்டு தேர்தலைத் தவிர) சொற்ப வாக்கு வித்தியாசத்திலேயே வெற்றி தீர்மானிக்கப்பட்டு வந்துள்ளது. இம்முறை அதை மக்கள் விடுதலை முன்னணியின் ஆதரவே தீர்மானிக்கக் கூடும் என திட்டமிட்ட ரணில் விக்கிரமசிங்க, தனது நீண்ட கால கனவை பணயம் வைத்து சரத் பொன்சேகாவுக்கு பூரண ஆதரவு வழங்க ன்வந்துள்ளார்.

இதனால் ஐ.தே.கட்சிக்குள் பல பேதங்கள் உருவானமை உண்மை. எதிர்கால ஜனாதிபதியாக விரும்புவதாக தெவித்திருந்த எஸ்.பி. திஸாநாயக்கவுக்கு அதிர்ச்சி மட்டுமே மிஞ்சியது. இலங்கைத் தேர்தலில் என்றுமில்லாதவாறு "யானைச் சின்னம்' இல்லாத வாக்குச் சீட்டு இம் றை ஜனாதிபதித் தேர்தலுக்காக தயாக்கப்பட்டு வருகின்றது. இதில்தான் தேசிய ரீதியான காய் நகர்த்தல்களை ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐ.தே.க. செய்கின்றது.

வளர்முக நாடுகளில் நன்கு வளர்ச்சியடைந்த அரசியல் கலாசாரம் இல்லை எனக் கூறப்பட்டாலும் இலங்கையைப் பொறுத்தவரை தேர்தல் காலத்தில் "சின்னம்' குறித்து போதிய அறிவுள்ளவர்களாகவே உள்ளனர்.

உதாரணமாக, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தனது தலைமையிலான அணியின் சின்னத்தை பல தடவைகள் மாற்றி இரண்டிலும் வெற்றி பெற்றிருக்கின்றது. ஆகவே, அன்ன சின்னத்தை வெற்றி பெறச் செய்து அதனூடாக அடுத்த நாடாளுமன்றத்துக்கான காய் நகர்த்தல்கள் எதிர்க்கட்சிளால் முன்னெடுக்கப்படுகின்றன.

அதேவேளை, இதுவரை ஒன்றாக பேச்சுவார்த்தைக்குக் கூட ஐ.தே.க.வுடன் இணங்காத மக்கள் விடுதலை முன்னணி, இம்றை ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளரை வெற்றிபெறச் செய்வதற்கு ஐ.தே.கவுடன் ஓரணியில் ஸ்திரமாக நிற்கின்றது.

ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பது போல இரண்டு அணிகளும் (ஐ.தே. கூட்டணி சுதந்திரக் கூட்டமைப்பு) தேர்தல் பிரசார வாண வேடிக்கையை ஆரம்பித்து விட்டுள்ளன.

ஆனால், தமிழ், ஸ்லிம் மக்கள் இந் நாட்டில் கூத்தாடிகளாக மாறிப் போயுள்ளனர்.

இந்த நாட்டுக்கு தமிழர் ஒருவர் ஜனாதிபதியாக முடியுமோ இல்லையோ, ஜனாதிபதியாக வருபவரை தீர்மானிக்கக் கூடிய சக்தியாக இருந்து ஜனநாயக பூர்வமாக தமிழர் கோக்கையை வென்றெடுக்க வேண்டிய கட்டாயம் இன்று ஏற்பட்டுள்ளது.

இது நாட்டில் உள்ள அனைத்து தமிழ் மக்களுக்கும் தெரிந்துள்ளது. ஆனால், எமது தமிழ்த் தலைமைகளுக்கு இது தெரியாமை ஆச்சயமே! தமிழர்களைப் பொறுத்தவரை இம்முறை நெறிப்படுத்த சரியான தலைமை இல்லை என்பதை அனைவரும் ஒப்புக் கொண்டே ஆக வேண்டும்.

தலைவர் அஷ்ரபின் பின் இலங்கை வாழ் முஸ்லிம் மக்களுக்கு சரியான தலைமை உருவாகவில்லை. அஷ்ரபுக்குப் பின் அவன் கட்சியில் ஏற்பட்ட பிளவுகளும் குரோதங்களும் ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தின் ஆணி வேரையே அத்துக் கொண்டிருப்பதனை இன்று முஸ்லிம் தலைவர்கள் எனக் கூறிக் கொள்பவர்களில் பலர் அறியவில்லை. அவர்கள் அதனை அறியும்போது முஸ்லிம் சமூகம் பாரிய பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்துக் கொண்டிருக்கவும் கூடும்.

சில மலையகத் தலைமைகளைப் பொறுத்தவரை ஆதரவு என்பது பேச்சளவில். யார் ஆட்சிக்கு வந்தாலும் அமைச்சுப் பதவி கிட்டும் என்ற நம்பிக்கையில் மட்டுமே அரசியல் செய்து அப்பாவி தோட்டத் தொழிலாளர்களை ஆண்டாண்டு காலமாக ஏமாற்றி வருகின்றனர். இவர்களுக்கு எதிராகக் குரல் கொடுத்து வளர எத்தனிக்கும் மாற்று சக்திகளை அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி மட்டம் தட்டி வருகின்றனர்.

இதனைத் தாண்டி சிதறிக் கிடக்கும் தமிழர்களின் பாடு கடும் திண்டாட்டமே. தமிழர்கள் செறிந்து வாழும் பிரதேசங்களில் தேர்தல் வாய் சண்டைகளில் ஈடுபடும் தமிழ்த் தலைவர்கள் ஏனைய பகுதிகளிலுள்ள தமிழர்கள் குறித்து எவ்வித அக்கறையும் அற்றிருக்கின்றமை வேதனைக்குயது.

இவ்வாறு பெரும்பான்மையின சமூகம் இரு முகாம்களில் அணி திரண்டு தமது நிலையில் உறுதியாக உள்ளதைப் போல் சிறுபான்மை சமூகம் ஓரணியில் இல்லாவிடினும் இரு பிரதான அணிகளிலாவது கூட்டுப் பொறுப்புடன் செயற்படுகின் றனவா என்றால் இல்லை என்பதே பதில்.

இந்நிலை அடுத்த நாடாளுமன்றத் தேர்தலிலும் நீடிக்கும். அதன்போது இந் நாட்டு சிறுபான்மை சமூகங்கள் தமக்குய பிரதிநிதித்துவத்தை சவர பெற்றுக் கொள்ள முடியாத நிலை ஏற்படும். தற்போதைய ஜனாதிபதித் தேர்தலின் இலக்கு நாட்டின் அரசியலமைப்பை மாற்றுவது. அது நடக்கும் பட்சத்தில் சிறுபான்மைத் தலைமைகள் தமக்குள் சண்டை போட்டுக் கொண்டிருந்தால் நிலைமை படுமோசமாகி விடும்.

அவ்வாறாயின் சிறுபான்மை சமூகங்கள் தேசிய அரசியலில் தமது சமூக, அரசியல் மற்றும் அபிலாஷைகளை வென்றெடுக்க இன, மத பேதமன்றி தனிப்பட்ட குரோதங்கள் இன்றி இணைவார்களா? அல்லது அடிமைப்பட்ட சமூகமாக சேவகம் புரிந்து கெடுப்பார்களா?

http://thinamurasam.com/index.php?option=com_content&view=article&id=178:2010-01-17-02-57-59&catid=38:2009-12-21-04-39-08&Itemid=72

Edited by தராக்கி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.