Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையில் காட்டுமிராண்டித்தனமான ஒரு ஆட்சி நடக்கிறது: இலங்கை எம்.பி., ஜெயலத் ஜெயவர்த்தனா

Featured Replies

இலங்கையில் காட்டுமிராண்டித்தனமான ஒரு ஆட்சி நடக்கிறது: இலங்கை எம்.பி., ஜெயலத் ஜெயவர்த்தனா

சென்னை வந்துள்ள இலங்கை ஐக்கிய தேசிய கட்சியின் உதவி செயலாளர் ஜெயலத் ஜெயவர்த்தனா செய்தியாளர்களிடம் பேசுகையில்,

இலங்கை அரசியல் வரலாற்றில் முதல்முறையாக ஐக்கிய தேசிய கட்சியும், ஜனதா விமுக்தி பிரமுனா கட்சியும் இணைந்து வேறு சில அமைப்புகளின் ஆதரவோடு இலங்கை அதிபர் தேர்தலில் பொது வேட்பாளராக சரத் பொன்சேகாவை நிறுத்தியுள்ளோம்.

இலங்கையில் 17 வது அரசியல் சட்டதிருத்தம் அமல்படுத்தப்படாததால் அங்கு சட்டம் ஒழுங்கு இல்லை. போலீஸ் கமிஷன், நீதித்துறை, தேர்வாணையம், தேர்தல் கமிஷன் ஆகியவை சுதந்திரமாக செயல்படவில்லை. ஒரு சட்டத்தின் ஆட்சி இல்லாமல், காட்டுமிராண்டித்தனமான ஒரு ஆட்சி நடக்கிறது. இலங்கையில் அந்நாட்டு மக்களே முகாம்களில் அடைக்கப்படுவது சட்டவிரோதமான செயல்.

அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளன. வேலையில்லா திண்டாட்டமும், மருந்து தட்டுப்பாடும் நிலவுகிறது. உலகிலேயே எங்கும் இல்லாத வகையில் 160 அமைச்சர்கள் உள்ளனர். ராஜபக்சே குடும்பத்தினர் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. பத்திரிகை சுதந்திரம் இல்லை.

இதையெல்லாம் எதிர்த்து தான் சரத்பொன்சேகா வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். அவர் வெற்றி பெற்றால் தான் அதன் பின்னர் ஒரு நியாயமான, சுதந்திரமான பொதுத்தேர்தலை அங்கு நடத்த முடியும். அப்போது தான் அங்கு அமையும் புதிய பாராளுமன்றத்தின் மூலம் ஜனநாயகத்தை மீண்டும் மலர செய்ய முடியும். அனைத்து தரப்பு மக்களின் ஆசைகளை பூர்த்தி செய்யும் வகையில் ஒரு புதிய அரசியல் சட்டத்தை உருவாக்க முடியும். அதற்கு இது ஒரு பொன்னான வாய்ப்பு.

பொன்சேகா சட்டத்தின் ஆட்சியை கொண்டுவருவேன் என்றும் மனித உரிமைகள் காப்பாற்றப்படும், தமிழ்நாட்டில் உள்ள இலங்கை அகதிகள் மீண்டும் தங்கள் தாயகத்திற்கு அழைக்கப்படுவார்கள் என்றும் கூறினார்.

http://parantan.com/pranthannews/srilankanews.htm

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.