Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலகமும் தகவற்துறைகளும்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உலகமும் தகவற்துறைகளும்

இன்றைய உலகத்தில எந்த நாட்டிலும், அல்லது எந்த மூலையிலும் எடுத்துப்பார்த்தாலும் சரி தகவல் துறை என்பது மிகவும் நீதியற்ற மோசமானதாகவே உள்ளது. மக்களுக்கு தகவல்களை அன்றாடம் வழங்கும் இவர்கள் உண்மையான நடந்ததை அப்படியே கூறும் செய்திகள் ஏதும் கிடையாது.

தமக்கு வேண்டியவர்களை நன்றாக எழுதியும் சொல்லியும், அல்லது அவர்களின் நல்லதை மாத்திரம் சொல்லியும், வேண்டாதவர்கள் எனின் அவர்களின் கூடாததைச் எழுதியும் சொல்லியும் நல்லவற்றை மறைத்தும் அத்துடன் தங்களை நன்றாக எழுதுங்கள் என்று சொல்லி பணத்தை அள்ளி வீச அவர்களை நல்லபடியாக சமூகத்திற்கு எடுத்துக்காட்ட அவர்களை நல்லவர்கள் என்று நம்பி பொதுமக்கள் அவர்களை அரசியலில் கொண்டு வந்து நிறுத்தி பின்னர் அல்லல்படும் காட்சிகள் இன்று ஏராளம்.

இ;ன்றைய நீதி ஒழுங்குமுறைகள் கெட்டுப்போனதிற்கு முழுக்காரணம் தகவல் பரிமாற்றம் செய்யும் ஊடகங்கள்

தான் முதற்காரணம். சில நாடுகளில் பணத்தைக்கொடுத்து இவர்களை விலைக்கு வாங்கிவிடுகிறார்கள். சில நாடுகளில் மிரட்டல் மூலம் அடிபணிய வைத்துவிடுகிறார்கள். மொத்தத்தில் இரண்டும் ஒரு வகையான சமூகக்கொலைதான்.

சமூகத்தைக்கொலைசெய்து பிழைப்பு நடத்துகின்றவர்கள் ஒரு நாளும் ஊடகத்துறையில் இறங்கக்கூடாது. பேனாமுனை என்பது கொடிய ஆயுதங்களைவிடக் கூரிய ஆயுதம். இந்த ஆயுதத்தை கொடூரமானவர்களின் மிரட்டல்களுக்கும் பணம் படைத்தவனின் பணத்திற்காகவும் பாவிக்கக்கூடாது. நடுநிலைமை வேண்டும். இதனால் உலக ஒழுங்கையே ஒழுங்கான முறையில் மாற்றி அமைக்கலாம். தகவல் துறைகள் பக்கம் சார்ந்ததும் இன்றைய உலககத்தின் ஒழுக்கமற்ற போக்குக்கும் ஒரு காரணமாகும். உள்ளதைச் சொல்லி மக்களை அறிவப+ர்வமாக சிந்திக்க வைப்பதும் பொது அறிவை ஊட்டுவதும் தகவற்துறை பெரும் பங்காற்றவேண்டும். தகவற்றுறையில் தகவற்குறைகள் இருப்பதே உலகில் குழப்பநிலைக்குக்காரணமாகும்;;.

பெரும்பாலான ஆளும் கட்சிகள் தகவற்றுறைக்கு பணத்தை வழங்குகின்றன. அது லங:சம் என்று சொல்லப்படாதா வகையில் அமைகின்றது. நக்கினார் நாவிழந்தார் என்பது போல் பின்னர் அந்த ஊடகம் அவர்களைப்பற்றி குறைகள் எழுதுவதை நிறுத்திவிடும். இப்படி சூட்சுமமாக செயல்படுகின்றனர்.

பேனாவால் உலகைத்திருத்தமுடியும். உண்;மையை உண்மையாகச்சொன்னால் அல்லது எழுதினால் மக்கள் அதை உணர்ந்து கெட்டவர்களை ஒதுக்கி நல்லவர்களை ஆட்சியில் நிறுத்த உதவும்.

ஒரு விடயத்தின் உண்மைநிலை அறிய 15 பத்திரிகைகள் படித்தால் தான் அதன் சாராம்சம் என்ன என்பதை ஓரளவாவது புரிந்து கொள்ளும் நிலை இன்று இருக்கின்றது.

இன்றைய ஸ்ரீலங்காவின் ஜனாதிபதித் தேர்தலை எடுத்துப்பார்த்தால் வேட்டைக்காரனான ராஜபக்ஸவும் வேட்டைநாயான சரத்தும் தேர்தல் களத்தில் ஏன் இறங்கினார்கள்.

உள்ளதெல்லாம் அள்ளிக்கொடுத்து புலிகளின் தமிழர் உரிமைப்போராட்டத்தை அழிக்க உதவிய சர்வதேசம்.

புலிகiளின் ஆயுதம் மௌனித்தபின் சிங்கள ஆட்சியாளர்கள் சீனாவின் கைகோர்த்து நடப்பது எரிச்சலைக் கிளப்பியுள்ளது.

இவர்களின் நாடகம் அரங்கேற கொஞ்சம் சிரமம் கொடுக்கின்றது. வேட்டைக்காரன் ராஜபக்ஸவிற்கு எதிரணியில் எவர் நின்றாலும் ராஜபக்ஸதான் வெல்லுவார் என்பது யதார்த்தம். சிந்தித்தார்கள்;. இவருக்கு இணையாக இப்போது இருக்கக்கூடியவர் வேட்டைநாயான சரத்தான். அழைத்து ஆசையுட்டி அனுப்பித் தேர்தலில் நிற்கவைத்தார்கள். சரத் ஆட்சிக்கு வந்தால் எங்கள் காரியங்களை ஸ்ரீலங்காவில் சுலபமாக அரங்கேற்றலாம் என்று எண்ணினர். நடக்கவில்லை. அதன முடிவுகள் தமிழீழம் எல்லையையும் சிங்கள தேசத்தின் எல்லையையும் தெளிவாகப் பிரித்துக்காட்டி நிற்கின்றது.

இனிமேல் குற்றப்பத்திரிகைகள் வேகமாக அரங்கேறலாம் அல்லது தேர்தல் இட்ட எல்லைக்கோடுகளை வைத்து புதிய அத்தியாயத்தைத் தொடங்கி மீண்டும் எஞ்சியுள்ள தமிழனை அழிக்கலாம் இந்த சர்வதேசம்.

இதில் எச்சில் சாப்பிடும் தமிழனும் அடங்கும். குற்றம் இல்லாவிட்டாலும் அதைக்குற்றமாக்கி அவர்களை அழிக்கும் சக்தி பெற்ற பயங்கரவாத வல்லரசுகள் இருக்கும்வரை உலகில் அமைதி கிடையாது.

வல்லரசுகள் வல்லரசுகளை எதிர்த்துக்கொள்வதில்லை. இன்று வல்லரசு கூட்டுத்தான் காணப்படுகின்றது.

புலிகள் (காட்டு மிருகம்) காட்டில் தனக்கென ஒரு வட்டத்தை பிடித்து வைத்திருக்குமாம். இந்தவட்டத்துள் வேறு புலிகள் நுழையமுடியாது. அதற்காக ஒரு உடலிலிருந்து மணத்தைப் பரப்பி அவ்வட்டத்துள் வரும் புலிகளுக்கு உணர்த்த அவை தங்களாகவே புரிந்துணர்வுடன் திரும்பிச்சென்றுவிடுமாம் இதுபோலத்தான் இன்றைய வல்லரசுகள். இது போல் பயங்கரவாதக் கூட்டமைப்பும் இருக்குமெனில் இவ்வுலகில் மனிதகுலம் வாழுமா? தாழுமா?

தகவற்றுறை சரியாகச் செயற்படுமாயின் உலகம் செம்மைப்படுத்தப்படும்.

அரசன் எவ்வழி குடிகள் அவ்வழி என்பதை சிங்களதேசம் உணர்த்தி நிற்கின்றது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.