Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரீ.எம்.வீ.பி. உறுப்பினர் இனிய பாரதி சிறுவர்களை படையில் இணைத்துக் கொள்வதாக ஐ.நா குற்றச்சாட்டு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் சிறுவர்ளை தொடர்ந்தும் படையில் இணைத்து வருவதாக ஐக்கிய நாடுகள் அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.

சிறுவர் மற்றும் ஆயுத போராட்டம் தொடர்பான ஐக்கிய நாடுகளின் விசேட பிரதிநிதி மேஜர் ஜெனரல் பெற்றிக் கெமார்ட் இலங்கை விஜயத்தின் பின்னர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிட்டுள்ளது.

இரண்டு மாதங்களுக்கு முன்னர் பெற்றிக் இலங்கைக்கு விஜயம் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமது இலங்கை விஜயம் தொடர்பான அறிக்கையை, ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புப் பேரவை உபகுழுவிடம் பெற்றிக் ஒப்படைத்துள்ளார்.

அமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன் என்றழைக்கப்படும் கருணாவின் ஆதரவாளரான இனிய பாரதி என்ற நபரினால் இவ்வாறு சிறுவர்கள் படையில் அமர்த்தப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இன்னர் சிட்டி பிரஸ் நியூஸ் இணையத்தை மேற்கோள்காட்டி இலங்கையின் ஆங்கில ஊடகமொன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

மட்டக்களப்பில் தாங்கியிருந்த போது அம்பாறை பிரதேசத்தில் இவ்வாறு சிறுவர்கள் படையில் இணைத்துக் கொள்ளும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தமக்கு தகவல்கள் கிடைக்கப் பெற்றதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பில் கருணாவிடம் வினவிய போது, தமக்கு இவ்வாறான ஓர் தகவல் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும், சிறுவர்களை படையில் சேர்க்கும் நடவடிக்கையை உடனடியாக நிறுத்துமாறு தாம் இனியபாரதிக்கு உத்தரவிட்டதாகவும் கருணா தம்மிடம் தெரிவித்துள்ளதாக பெற்றிக் குறிப்பிட்டுள்ளார்.

இனிய பாரதியின் நடவடிக்கைகள் தொடர்பில் கருணா அதிருப்தியுடன் காணப்படுவதாகவும், தொடர்ந்தும் இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபட்டால் காவல்துறையினர் நடவடிக்கை எடுப்பார்கள் என இனிய பாரதிக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

globaltamilnews

அம்பாறையில் இனியபாரதி சிறுவர்களை ஆயுதக்குழுவில் சேர்ப்பதாக ஐ.நா. அதிகாரி பாதுகாப்பு சபை குழுவுக்கு அறிக்கை ..அம்பாறையில் கருணா குழுவின் முக்கிய தளபதி இனியபாரதி சிறுவர்களை தனது ஆயுதக்குழுவில் சேர்த்துவருவதாக ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர் விவகார அதிகாரி பாதுகாப்பு சபையின் உபகுழுவுக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளார். சிறிலங்கா அரசு இது தொடர்பாக நடவடிக்கை எடுப்பதை உறுதி செய்துகொள்ளுமாறும் அவர் பாதுகாப்பு சபையின் உபகுழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர் மற்றும் ஆயுதப்பிணக்கு தொடர்பாக விவகாரங்களுக்கு பொறுப்பான அதிகாரி மேஜர் ஜெனரல் பற்றிக் இரண்டு மாதங்களுக்கு முன்னர் சிறிலங்காவுக்கு விஜயம் செய்து நாடு முழுவதும் பயணம் மேற்கொண்டு முழுமையான அறிக்கை ஒன்றை தயார் செய்து ஐ.நா. பாதுகாப்பு சபையின் உபகுழுவிடம் சமர்ப்பித்திருந்தார்.

இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்ததாவது:-

மட்டக்களப்பில் நான் தங்கியிருந்த காலப்பகுதியில் அம்பாறை பிரதேசத்தில் கருணா குழுவினரின் தளபதியான இனியபாரதி என்பவர் சிறுவர்களுக்கு ஆட்சேர்ப்பதாக கேள்விப்பட்டேன். அவ்வாறு அவரது ஆயுதக்குழுவில் சேர்க்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டு, உளநல மற்றும் புனர்வாழ்வு பயிற்சியளிக்கப்பட்டுவரும் பல சிறுவர்கள், மீண்டும் தாம் அம்பாறைக்கு சென்றால் தாங்கள் இனியபாரதியால் மீண்டும் ஆயுதக்குழுவில் இணைத்துக்கொள்ளப்படலாம் என்று என்னிடம் அச்சம் தெரிவித்தனர்.

இது தொடர்பாக அரசாங்கத்தில் அமைச்சராக உள்ள கருணாவை கொழும்பில் சந்தித்தபோது கேட்டேன். தனது தளபதி இனியபாரதி சிறுவர்களை ஆயுதக்குழுவில் இணைத்துக்கொள்வது தனக்கு தெரியும் என்றும் அதனை நிறுத்தும்படி இனியபாரதிக்கு தான் கடுமையாக உத்தரவிட்டுள்ளதாகவும் கருணா என்னிடம் கூறினார்.

இது தொடர்பாக சிறிலங்காவின் நீதி அமைச்சரை சந்திக்கும்போது பேசினேன். இனியபாரதி உடனடியாக சிறுவர்களை ஆயுதக்குழுவுக்கு இணைத்துக்கொள்ளும் நடவடிக்கையை நிறுத்தாவிடின், அது சிறிலங்கா தொடர்பான ஐ.நாவின் பொறுமையற்ற போக்குக்கு வழிவகுக்கும் என்று அவரிடம் கூறினேன். சிறுவர்களை ஆயுதக்குழுவுக்கு இணைத்துக்கொள்ளும் இந்த நடவடிக்கை நிறுத்தப்படுவது கண்காணிக்கப்படவேண்டும் - என்று அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

நன்றி

ஈழநேசன்

அம்பாறையில் இனியபாரதி சிறுவர்களை ஆயுதக்குழுவில் சேர்ப்பதாக ஐ.நா. அதிகாரி பாதுகாப்பு சபை குழுவுக்கு அறிக்கை ..

........

ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர் மற்றும் ஆயுதப்பிணக்கு தொடர்பாக விவகாரங்களுக்கு பொறுப்பான அதிகாரி மேஜர் ஜெனரல் பற்றிக் இரண்டு மாதங்களுக்கு முன்னர் சிறிலங்காவுக்கு விஜயம் செய்து நாடு முழுவதும் பயணம் மேற்கொண்டு முழுமையான அறிக்கை ஒன்றை தயார் செய்து ஐ.நா. பாதுகாப்பு சபையின் உபகுழுவிடம் சமர்ப்பித்திருந்தார்.

இனிய? பாரதி, கட்சியில் ஜனநாயக சுதந்திரம் இல்லையென்று பிரிந்து செல்வரோ?

சிங்கள ஆயுதப்படையிலும் பல சிறுவர்கள் உள்ளார்கள், இப்ப வீதிகளிலும் அவர்களை காணலாம் - அது ஐ.நா. காரருக்கு தெரியாமல் போனது ஆச்சரியம் தான்!

இவனிங்க தொல்லை தாங்க முடியாது..விதியால் செல்லும்போது இந்த கொலைகார சிறுவர் போராளிகள் சிறு துண்டுகளை வினியோகிப்பார்கள்(அவர்கள் புகள்பாடும் அறிக்கைகள்) எனக்கு தெரிந்த ஒருவன் அதை வாங்கி கிளித்துவிட்டான் அதை கண்ட இந்த கொலைகார சிறுவர் போராளிகள் அவனை அடித்த அடி இங்கே எப்படி எழுதுவதென்ன தெரிய வில்லை.

மற்றும் வீதியால் செல்லும் மக்களிடம் செல்போன் காட் வாங்கிவரச்சொல்லி மிரட்டுவார்கள்.

இந்த குஞ்சி குரால்ர கையிலெல்லாம் பிஸ்டல் துப்பாக்கிகள் ஐயோ கடவுளே.....அவர்களின்...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.