Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலண்டனில் உலகத் தமிழர் பேரவையின் மாநாடு

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

http://globaltamilforum.org/gtf/

இலண்டனில் உலகத் தமிழர் பேரவையின் மாநாடு

[ திங்கட்கிழமை, 22 பெப்ரவரி 2010, 08:23.28 பி.ப | ஊடகப் பணிமனை ]

உலகத் தமிழர் பேரவை [Global Tamil Forum - GTF] நாளை மறுதினம் புதன்கிழமை [24-02-10] இலண்டனில் அதிகாரபூர்வமாக தொடக்கி வைக்கப்பட உள்ளது.

ஐந்து கண்டங்களிலும் உள்ள 15 நாடுகளில் செயற்பட்டுவரும் தமிழ் அமைப்புக்கள் ஒன்றிணைந்து இந்த உலகத் தமிழர் பேரவையை ஆரம்பித்துள்ளன.

இதன் உத்தியோகபூர்வ தொடக்க விழா இலண்டன், டொக்லான்சில் உள்ள பிரித்தானியா அனைத்துலக நட்சத்திர விடுதியில் நடைபெற ஏற்பாடாகி உள்ளது.

அன்றைய தினம் பிரித்தானிய அமைச்சர்கள், நிழல் அமைச்சர்கள், எதிர்க்கட்சி உறுப்பினர்கள், உலகத் தமிழர் பேரவை பிரதிநிதிகள், விருந்தினர்கள், வெளிநாட்டுப் பிரதிநிதிகள், அனைத்துலக ஊடகங்களின் ஊடகவியலாளர்கள் எனப் பலரும் இந்நிகழ்வில் பங்கேற்க உள்ளனர்.

2009ம் ஆண்டு வெற்றிகரமாக எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில் உலகத் தமிழர் பேரவை அந்த ஆண்டே ஓகஸ்ட் மாதத்தில் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் தொடக்கி வைக்கப்பட்டது.

- எந்தவித சட்டப் பிரதிநிதித்துவமும் இன்றித் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழர்களையும் ஆண்களையும் பெண்களையும் விடுவிப்பதற்கு உதவுவது.

- சிறிலங்காவில் மனிதாபிமானத்திற்கு எதிராகப் போர்க் குற்றங்களைப் புரிந்த குற்றவாளிகளையும் நபர்களையும் சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்த உதவுவது.

- சிறிலங்காவில் உள்ள தமிழர்கள் ஜனநாயக ரீதியாக வழங்கிய மக்களாணையின் அடிப்படையில் அங்கு இனப்பிரச்சினைக்கு தீர்வு ஒன்றைக் காணுவதற்கு உதவும் வகையில் அனைத்துலக அரசுகளையும் அரச சார்பற்ற நிறுவனங்களையும் ஒன்று திரட்டுவது.

ஆகிய, நிறுவனத்தின் மூன்று கொள்கைகளையும் நிறைவேற்றுவதற்காகத் தெரிந்தெடுக்கப்பட்ட இடங்களில் இருந்து உறுதியான, கட்டமைக்கப்பட்ட, உலகளாவிய பங்களிப்பை உடைய ஒருங்கிணைப்புக் குழு ஒன்றை உருவாக்குவதற்காக இதுவரை உலகத் தமிழர் பேரவை செயற்பட்டது.

தனது முதலாவது கொள்கையைச் செயற்படுத்தும் நோக்கத்தின் முதல் கட்டமாக, வன்னியில் அண்மையில் நடந்த போரால் பெற்றோரை இழந்த, சிறப்புத் தேவை உள்ள 1,000 தமிழ்ச் சிறுவர்களுக்கும் 450 ஆதரவற்ற குடும்பங்களுக்கும் உதவுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதில் 235 சிறுவர்களுக்கும் 90 குடும்பத்தினருக்கும் நிதி உதவி வழங்குவது ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளது.

இரண்டாவது கொள்கைக்கு ஏற்ப, போர்க் குற்றங்கள் மற்றும் மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றங்கள் குறித்த ஆதாரங்களையும் ஆலோசனைகளையும் திரட்டும் நடவடிக்கைகளில் மன்றம் ஈடுபட்டு வருகின்றது.

மூன்றாவது கொள்கைக்கு ஏற்ப, சிறிலங்காவில் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நாடுகளிலும் உள்ள மூத்த அரசியல்வாதிகள், அரச ஊழியர்கள், அரச சார்பற்ற அமைப்புக்கள் மற்றும் நிறுவனங்களின் உறுப்பினர்கள் ஆகியோருடன் பல்வேறு நாடுகளில் உள்ள நிறுவனங்கள் ஊடாக கருத்தாடல்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

புலம்பெயர் தமிழ்ச் சமூகம் ஜனநாயகப் பாதையில் அடியெடுத்து வைப்பதில் தனக்குள்ள விருப்பத்தையும் பற்றுறுதியையும் வெளிப்படுத்தும் ஒரு வரலாற்று நிகழ்வாக உலகத் தமிழர் பேரவை தொடக்க மாநாடு அமைய உள்ளது.

அத்துடன் சிறிலங்காவில் உள்ள தமிழர்களின் துன்பங்களுக்குத் தீர்வு ஒன்றைக் கண்டறிவதற்கான அனைத்துலக சமூகத்துடன் சேர்ந்து முயற்சிகளை எடுக்கும் நடவடிக்கையாகவும் இது நோக்கப்படுகிறது.

புலம் பெயர் தமிழர்கள் என்னதான் தமது குரல்களை ஓங்கி ஒலித்த போதும், சிறிலங்காவில் நடைபெற்ற கடைசிப் போரின் போது அவர்களின் இரத்த உறவுகள் சொல்லொணாத் துன்பங்களை அனுபவித்தார்கள்.

அதைத் தடுத்து நிறுத்துவதற்கான பொதுமக்கள் கருத்தை எம்மால் எட்ட முடியவில்லை.

எமது சமூகம் சந்தித்த நினைத்துப் பார்க்க முடியாத இந்த இழப்புக்களில் இருந்து நாம் நல்ல பாடங்களைக் கற்றுக் கொண்டிருக்கிறோம். நாம் வாழும் நாடுகளில் உள்ள முடிவுகளை எடுக்கும் அதிகாரம் உள்ளவர்களுக்கு நாம் இவற்றை எடுத்துச் சொல்ல வேண்டிய பணி காத்திருக்கின்றது.

முடிவுகளை எடுப்பவர்களை எட்டக்கூடிய வகையிலான ஒருமித்த குரலைக் கட்டி எழுப்புவதன் மூலமே நாம் எமது இலக்குகளை அடைய முடியும்.

அப்போதுதான், சிறிலங்காவில் உள்ள எமது உறவுகள்படும் வேதனைகளை முடிவுக்குக் கொண்டு வரும்படி கதறும் எமது கோரிக்கைகளை அனைத்துலக ஊடகங்கள் காது கொடுத்துக் கேட்கும்.

தொடக்கமான முதல் மாநாட்டில் தேசிய (பிரித்தானிய) மற்றும் அனைத்துலக அரசியல் பிரதிநிதிகள், அரசியல் சார்பற்ற பிரதிநிதிகள் கலந்து கொள்வது உலகத் தமிழர் பேரவை புலம்பெயர் சமூகத்தின் ஒருங்கிணைந்த ஒரு அமைப்பாக அவர்கள் அங்கீகரிப்பதன் வெளிப்பாடாகும்.

மக்களின் இலக்குகளை அடைவதற்கான முயற்சிகளில் ஒருங்கிணைந்து செயற்படும் ஆர்வத்தை அனைத்துலக பிரதிநிதிகள் வெளிப்படுத்துவதாகவும் இதனைக் கொள்ள முடியும்.

இந்த நிகழ்வில் உலகத் தமிழ்ப் பெண்கள் பேரவை தொடங்கப்பட உள்ளது. புலம் பெயர் நாடுகளிலும் சிறிலங்காவிலும் உள்ள தமிழ்ப் பெண்கள் மத்தியில் ஒருமித்த பிரதிநிதித்துவத்தை உருவாக்குவதும் அவர்களைப் பலப்படுத்துவதுமே இந்த அமைப்பின் தூர நோக்காகும்.

எதிர்காலத் திட்டங்களைத் தீட்டுவதற்கும் உலகத் தமிழர் பேரவையின் தொடக்க மாநாடு பயன்பட உள்ளது.

அமெரிக்கா மற்றும் கனடாவில் புறக்கணிப்புப் போராட்டங்களை வேகப்படுத்துவதும், போர் குற்றங்களையும் மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றங்களையும் மேற்கொண்டவர்களுக்கு எதிராகக் குற்றச்சாட்டுக்களை முன்வைப்பது என்பனவும் எதிர்காலத் திட்டங்களுக்குள் அடங்கும்.

Edited by Queen

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.