Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜனாதிபதித் தேர்தல் இறை (வன்) செயல்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதித் தேர்தல் இறை (வன்) செயல்.

[செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2009-12-26 11:13:39| யாழ்ப்பாணம்]

ஜனாதிபதித் தேர்தல் இவ்வளவு விரைவாக அறிவிக்கப்படும் என்ற நினைப்பு எவரிடமும் இருந்ததில்லை. இன்னமும் ஒன்றரை வருடங்கள் ஜனாதிபதித் தேர்தலுக்கு இருக்கின்ற போதிலும், அவசர அவசரமாக ஜனாதிபதித் தேர்தலுக்கான அறிவிப்பு விடப்பட்டது.

வன்னியுத்தம் முடிந்த கையோடு ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதன் மூலம் தனது வெற்றி பூரணமாக உறுதி செய்யபடும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்­ஷ எண்ணியிருந்தார்.ஒன்றரை வருடங்கள் தாமதித்து ஜனாதிபதித் தேர்தலை நடத்தும் போது அந்தக் கால இடைவெளியில் ஏற்படக் கூடிய அரசியல் மாற்றங்கள் தனது வெற்றிக்கு சாதகமாக அமையாது போகலாம்.

எனவே யுத்த வெற்றி அடையப் பெற்ற கையோடு ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதன் மூலம் தனது வெற் றியை உறுதி செய்வது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்­ஷவின் முடிவாக இருந்தது.

அதே சமயம் ஒன்றரை வருடங்கள் முன்னதாக ஜனாதிபதித் தேர்தலை நடத்தினாலும் தேர்தலில் தனது வெற்றி உறுதியானதும், முன்னைய ஒன்றரை வருடங்கள் முடிந்த பின்னர் இரண்டாவது தடவைக்கான ஜனாதிபதி பதவிக்கான சத்தியப்பிரமாணத்தை செய்து பதவியை ஏற்றுக்கொள்வதே திட்டமாக இருந்தது. இது போன்றதொரு கட்டம் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்காவின் காலத்திலும் ஏற்பட்டது.

இரண்டாவது தடவையாக அவர் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்ற போது சத்தியப்பிரமாணம் சட்டச்சிக் கலை ஏற்படுத்தியது.

முன்னைய சத்தியப்பிரமாணத்துடன் இரண்டாவது தடவையில் பெற்ற பதவியைத் தொடர்ந்து வகிப்பது அரசியல் ஒழுங்கிற்கு முரணானது என்ற கருத்துப் பரவலாகக் கூறப்பட்டது.

ஜனாதிபதித்தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் "சத்தியப்பிரமாணம்" செய்வதா? இல்லையா? என்ற பிரச்சினைக்கான தீர்வை முன்வைக்கும் பொறுப்பு அப்போது பிரதம நீதியரசராக இருந்த சரத் என். சில்வா விடம் ஒப்படைக்கப்பட்டது.

பிரதம நீதியரசருக்கு முன்பாகவே ஜனாதிபதி ஒருவர் சத்தியப்பிரமாணம் செய்யவேண்டும் என்பதால் பிரதம நீதியரசரிடம் அந்த முடிபு விடப்பட்டது நியாயமானதாயினும் பிரதம நீதியரசர், சத்தியப்பிர மாணத்திற்கும் ஜனாதிபதி பதவிக்கான காலத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை எனக் கூறியதுடன் ஒவ்வொரு நாளும் சத்தியப்பிரமாணம் எடுத்த பின்னர் கடமையைச் செய்யலாம் எனக்கூற சந்திரிகா குமாரதுங்கா இரண்டாவது தடவை ஜனாதிபதியாக சத்தியப்பிரமாணம் எடுத்துக்கொண்டார்.

இதன் விளைவாக முதற்தடவையின் மீதிக்காலத்தையும் சேர்த்து ஜனாதிபதியாக இருக்கும் சந்தர்ப்பத்தை அவர் இழந்தார்.

ஆனால் தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்­ஷ அப்படியயல்லாம் அவசரப்பட்டு சத்தியப்பிரமாணம் எடுக்கமாட்டார் என்பதும்த அவர் முதல் தடவையில் பாக்கியாகவுள்ள ஒன்றரை வருடங்களையும் சேர்த்தே ஜனாதிபதி பதவியை வகிப்பார் என்பதும் தெளிவு.

எதிர்பார்க்கவில்லை

பதவிக்காலம் முடிவுறுவதற்கு ஒன்றரை வருடங்கள் இருக்கும் போது ஜனாதிபதித் தேர்தலை நடத்துவது என்ற முடிவை எடுப்பதற்குக் காரணம் என்ன? இந்தக் கேள்வி தேர்தல் களத்தில் முதன்மை பெற்றுள்ளது. ஒன்றரை வருடங்களுக்கு முன்னதாக தேர்தல் அறிவிப்பை விடுத்ததன் காரணமாகவே இப்படி நிலை என்று கூறுவோரும் இருக்கவே செய்கின்றனர்.

ஜனாதிபதித்தேர்தல் அறிவிக்கப்பட்டால் ஐக்கிய தேசியக்கட்சியின் சார்பில் ரணில் விக்கிரமசிங்கவே போட்டியிடுவார்.

விடுதலைப்புலிகளை வெற்றி கொண்ட புகழ்தன்னைச் சுற்றியிருக்கும் போது ரணிலுக்கு வெற்றி கிடைப்பது என்பது எவ்வகையிலும் சாத்தியமாகாது.

ஆக, எக்காலத்திலும் இல்லாத அதிகப் பெரும்பான்மை வாக்குப்பலத்துடன் ஜனாபதிபதியாக பதவி ஏற்க முடியும் என்பது மஹிந்த ராஜபக்­ஷவின் நினைப்பு.இங்கு தான் விதி விளையாடியது.

யார் தன்னை எதிர்த்துப் போட்டியிடுவார் என மஹிந்த ராஜபக்­ஷ கற்பனையிலும் நினைக்கவில்லையோ அவரே எதிர்த்துப் போட்டியிட வந்து விட்டார். என்ன செய்வது, யுத்தத்தில் - யுத்தத்தை நியாயப்படுத்தும் பிரசாரத்தில் - யுத்த வெற்றியை அறிவிப்பதில்-அந்த அறிவிப்பை ஏற்றுக்கொள்வதில் என போர் வெற்றியில் பங்கு கொண்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபகஷவும் இராணுவத்தளபதி ஜெனரல் சரத்பொன்சேகாவும் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஒருவரையயாருவர் எதிர்த்துப் போட்டியிடுகின்றனர்.

இம்முறை நடைபெறும் ஜனாதிபதித் தேர்தலில் யுத்த வெற்றியே முதன்மை பிரசாரமாக இருக்கும் போது யுத்த வெற்றியில் ஐம்பதுக்கு ஐம்பது என்ற பங்கிடல் மேலோங்கும்.

பயங்கரமான சூழல் வன்னியில் நடந்த யுத்தம் பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்றே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்­ஷவினாலும் இராணுவத் தளபதியாக இருந்த ஜெனரல் சரத்பொன்சேகாவாலும் கூறப்பட்டது.

பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்தில் வெற்றியடைந்த பின்னர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்­ஷவும் ஜெனரல் சரத்பொன்சேகாவும் இவ்வளவு துரிதமாக ஒருவரையயாருவர் எதிர்ப்பர் என எவரும் எதிர்பார்க்கவில்லை. ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் ஜெனரல் சரத்பொன் சேகா என்ன சொல்கிறார். "ஜனநாயகத்தை மீட்டெடுப்பதற்காகவே ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுகின்றேன்" அப்படியானால் சரத் பொன்சோகவின் கருத்து நாட்டில் தற்போது ஜனநாயகம் இல்லை என்பதேயாகும்.

பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் நடத்தி யவர்களில் ஒருவர் ஜனநாயகத்தை மீட்ப தற்காகவே தேர்தலில் குதிக்கின்றேன் எனக் கூறுவாராயின் நாட்டில் இன்னமும் பயங்கரவாதம் ஒழியவில்லை என்றே பொருள்கொள்ள வேண்டும். அதாவது பிரிவினைவாத பயங்கரவாதம் முறியடிக்கப்பட்டு விட்டது. எனினும் அரச பயங்கரவாதம் இருக்கிறது. எனவே அரச பயங்கரவாதத்தை இல்லாதொழிப்பதன் மூலமே நாட்டில் ஜனநாயகம் ஏற்படும் என்ற முடிபு ஜெனரல் சரத்பொன்சேகாவினுடையது. இந்தப் பிரசாரத்தை முன்வைத்தே அவர் வாக்குக் கேட்கப்போகிறார்.

இதற்கு எதிர்வியூகம் அமைத்து மக்களின் வாக்குகளைத் தமதாக்குவதால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்­ஷவும் முனைப்புடன் ஈடுபடு வார் என்பதில் ஐயமில்லை.

ரணிலின்சமயோசிதம்

ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாகப் பதவி பெற்றிருப்பதாக இருந்தால் அது 2005ஆம் ஆண்டில் நடந்த தேர்தலிலேயே சாத்தியமாகியிருக்கவேண்டும்.

எனினும் ரணிலின் பலன் விடவில்லை. தமிழ் மக்கள் அப்போது ஜனாதி பதித்தேர் தலை பகிஷ்கரித்தனர். இதனால் மஹிந்த ராஜபக்­ஷ ஜனாதிபதியானார்.தமிழ் மக்கள் அன்று வாக்களித்திருந்தால் ரணில் விக்கிரமசிங்கவே ஜனாதிபதி என்ற முடிபு கிடைத்திருக்கும். இவை எதுவும் இல்லாத போது இரண்டாவது தடவையாக ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டிருக்கலாம். அவ்வாறு போட்டியிட்டிருந்தால் வடக்கு கிழக்குத் தமிழ் மக்களின் வாக்கு ரணில் விக்கிரமசிங்காவிற்கென்பதில் இரு வேறு கருத்திற்கிடமில்லை.

ஆனால், ரணில் விக்கிரமசிங்கவிற்கு தமிழ் மக்களின் வாக்குகள் மட்டுமே மொத்த வாக்குகளின் எண்ணிக்கையாக இருந்திருக்கும்.

போரில் வெற்றி கண்ட மஹிந்த ராஜபக்­ஷவிற்கே சிங்கள மக்கள் வாக்களித்திருப்பர். அன்று தமிழ் மக்கள் வாக்களித்திருந்தால் ரணில் ஜனாதிபதி, இன்று சிங்கள மக்கள் வாக்களித்தால்தான் ரணில் ஜனாதிபதி என்ற பரிதாப நிலை உள்ளது. இப் பரிதாப நிலையில் இருந்து ரணில் விக்கிர மசிங்க சாதுரியமாக விலகிக் கொண்டார்.

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடாமல் விலகிக் கொண்டது மட்டும் ரணில் விக்கிரம சிங்கவின் சாதுரியம் அல்ல.

மாறாக ஜனாதிபதித்தேர்தலில் ஜெனரல் சரத்பொன்சேகாவிற்கு ரணில் விட்டுக்கொடுத்ததும் அவரின் உச்சமான சாதுரியம் எனலாம். எதுவாயினும் இறுதிக் கணத்திலும் நிலைமை மாறக்கூடிய தேர்தல் கலாசாரத்தின் முடிபை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

- விதுரன் -

நன்றி - வலம்புரி இணையம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.