Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அரசியலமைப்பை மாற்ற முயற்சிப்பவர்கள் தமிழர் பிரச்சனையை தீர்பார்களா-- பெ.முத்துலிங்கம்

Featured Replies

நிறைவேற்று அதிகாரத்தை தம்வசமாக்கிக் கொண்ட ஜனாதிபதி தற்போது நாடாளுமன்ற த்தில் தமக்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மையை எதிர்வரும் பொதுத் தேர்தலில் பெற்றுத்தரும்படி மக்களிடம் கோயுள்ளார். இப்பெரும்பான்மையைப் பெற்றுக்கொடுத்தால் இன்று பெரும்பான்மையோரால் நிராகக்கப்படும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட அரசியலமைப்பு முறையை நீக்கி நாட்டிற்கு உகந்த அரசியலமைப்பு ஒன்றினை உருவாக்குவதாக வாக்குறுதியளித்து வருகின்றார். தனியொரு மனிதனிடம் குவிந்துள்ள நாட்டின் அதிகாரத்தை பலரைக் கொண்ட மக்கள் பிரதி நிதிகளிடம் ஒப்படைப்பது இன்றியமையாத தேவையாகும். அவ்வகையில் புதிய அரசியலமைப்பொன்றினை உருவாக்குவது காலத்தின் தேவையாகும்.

ஆனால், இப் புதிய அரசியலமைப்பு நாட் டின் அனைத்து இன மக்களும் சமமாக உரிமைகளை அனுபவிக்கும் வகையிலான அரசியலமைப்பாக அமைய வேண்டியுள்ளதாக இருப்பினும், நாட்டின் அரசியலமைப்பினை மாற்றுவதற்கான ஆணையைக் கோரும் ஜனாதிபதி உள்ளிட்ட அவரது கட்சித் தலைவர்கள் இதனை எந்தளவு ஏற்கத் தலைப்படுகின்றனர் என்ற கேள்வி எழுகிறது.

சுமார் ஒரு இலட்சம் மக்களை பலிகொண்ட முப்பது வருட போராட்டத்திற்கு அடிப்படைக் காரணம் நாட்டின் சிறுபான்மை இனத்திற்கு சம உரிமையை வழங்காமையே காரணம் என்பதை ஜனாதிபதி உள்ளிட்ட நாட்டின் அனைத்து சிங்களத் தலைமைகளும் பகிரங்கமாக காலத்திற்கு காலம் கூறிவந்தனர், கூறிவருகின்றனர்.

இம்முக்கிய பிரச்சினைக்கு தீர்வாகவே இந் திய தலையீட்டுடன் 13 ஆவது திருத்தச் சட் டம் இன்றைய அரசியலமைப்பில் இணைக் கப்பட்டது. இத்திருத்தச் சட்டம் இணைக்கப்பட்ட பின்னர் இன்றைய ஜனாதிபதி உட்பட ஐந்து நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனா திபதிகள் நாட்டினை நிர்வகித்துள்ளனர். இவர்களில் ஒருவரேனும் இத்திருத்தச் சட்டம் மூலம் வழங்கப்பட வேண்டிய அதிகாரத்தை மாகாண சபைகளுக்கு முழுமையாக வழங்க வில்லை. விடுதலைப் புலிகளினால் மேற்கொள்ளப்பட்ட யுத்தம் இதற்கொரு காரணமாக அமைந்த போதிலும் பாதுகாப்பு, தவிர்ந்த ஏனைய அதிகாரங்களைக்கூட வழங்க முன் வரவில்லை. இன்று யுத்தம் முடிவிற்கு வந்த போதிலும் மாகாணசபைக்கு வழங்க வேண்டிய அதிகாரத்தை வழங்க எவ்வித முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை.

மறுபுறம் வடக்கு, கிழக்கு மாகாண சபைகளைத் தவிர்ந்த ஏனைய ஏழு மாகாணங்களிலுள்ள ஆளும் மற்றும் எதிர்தரப்பு மாகாண சபை உறுப்பினர், அரசியலமைப்பு மூலம் உறுதி செய்யப்பட்டுள்ள அதிகாரத்தை கோரும் முயற்சியில்கூட ஈடுபடவில்லை.

தமிழ் பேசும் மக்களது நியாயமான கோரிக்கைகள் தொடர்பில் குரல் எழுப்புவதாகக் கூறி வரும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் இது தொடர்பில் தொடர் மௌனத்தைப் பேணி வருகின்றார். மறுபுறம் தமிழ் பேசும் கட்சிகளில் ஈ.பி.டி.பி, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளைத் தவிர, ஏனையக் கட்சி கள் 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமை யாக அல்படுத்தும்படி கோருவதில்லை.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் கள் 13ஆவது திருத்தச் சட்டம் போதாது என்று கூறிய பிரிவினர் சுதந்திரமாக தென்னிலங்கை அரசியல் செயல்நெறிகை தொடர்பில் மீள்வாசிப்பினை செய்து ஒரு மித்த கருத்திற்கு வரமுடியாதுள்ளனர். வடக்கு கிழக்கு தமிழ்க் கட்சிகள் இருவகையான கோரிக்கையை பெற வேண் டிய நிர்ப்பந்தத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.

ஏனெனில், அரசியலமைப்பை மாற்ற மக்களாணையைக் கோரும் ஜனாதிபதி 13ஆவது திரு த்தச்சட்டம் தொடர்பில் எவ்வாறான நிலைப் பாட்டினைக் கொண்டுள்ளார் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. விடுதலைப் புலிகளுக்கெதிரான வெற்றியில் இந்தியாவே இலங்கைக்கு பக்கபலமாக இருந்ததை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும், அவரது சகோதரரும் பாதுகாப்புச் செயலாளருமான கோத்தாபய ராஜபக்ஷவும் பலமுறை பகிரங்கமாகக் கூறியுள்ளனர்.

இதன்படி நோக்கினால் இந்தியா கோருவதை இலங்கை ஆட்சியாளர் உடனடியாக அமுல்படுத்துவர் என எண்ணத் தோன்றும். யுத்தம் நடைபெறும் வேளையில் இந்தியா பல றை 13ஆவது திருத்தச் சட்டத்தினை முழு மையாக அல்படுத்தும்படி இலங்கையைக் கோரியதுடன் பிரதமர் மன்மோகன் சிங் நேரடியாக பலறை இலங்கை ஜனாதிபதியிடம் 13 ஆவது திருத்தச் சட்டத்தை அல்படுத்தும் படி கோரியுள்ளார்.

யுத்தம் முடிவடைந்த பின்பும் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் இலங்கை ஜனாதிபதியிடம் மாகாண சபைக்கான அதிகாரங்களை பகிரும்படி கோரியதுடன் இந்திய வெளியுறவு அமைச்சர் தொடர்ச்சியாக இலங்கையிடம் இவ்வேண்டுகோளை விடுத்து வரு கின்றார்.

ஆனால், ஆரம்பத்தில் மாகாணசபைக்கு பூரண அதிகாரத்தையும் அதனை மீறிய அதிகாரப் பரவலாக்கத்தையும் வழங்குவேன் என பதிலளித்து வந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பல சந்தர்ப்பங்களில் அதிகாரப் பகிர்வு தொடர்பாக தமது உண்மையான நிலைப்பாட்டினை வெளிப்படுத்தியுள்ளார்.

மிக அண்மையில் இந்திய ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் எந்த நாட்டினதும் அதிகாரப்பகிர்வு முறையைப் பின்பற்றாது இலங்கைக்கே உரிய அதிகாரப் பகிர்வு முறையொன்றினை அறிகப்படுத்தப் போவதாகக் கூறியுள்ளார். இலங்கைக்கே உரித்தான அதிகாரப் பகிர்வு எது என்பதை அவர் சில சந்தர்ப்பங்களில் வெளிப்படுத்தியுள்ளார்.

அவரது கூற்றின்படி இந்தியாவில் உள்ளதுபோல் கிராம (பஞ்சாயத்து) சபைகளுக்கு சில அதிகாரங்களை பகிர்வதனூடாக மாவட்ட சபைகளை உருவாக்குவதாகும். இதனை இந்தியா நன்றாக புரிந்துக்கொண்டுள்ளது. அதன் விளைவே. 13ஆவது திருத்தச் சட்டத்தை பூரணமாக அமுல்படுத்தும்படி தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றது.

இப்பின்புலத்தில் தேர்தல் கோரிக்கையாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சம்பந்தன் அணியினர் ஒஸ்லோ பிரகடனத்தை அமுல்படுத்தும் கோரிக்கையை முன்வைக்க முனைந்துள்ளனர். ஒஸ்லோ பிரகடனம் தமிழ் மக்கள் ஏற்கக் கூடிய தீர்வு என்பது மறுப்பதற்கில்லை.

ஆனால், ஒஸ்லோ பிரகடனதீர்வினை வலியுறுத்தும் அதேவேளை கிடைத்ததை பாதுகாத்துக் கொள்ளும் தேவை தன்மையானதாக தலைதூக்கியுள்ளது.

13ஆவது திருத்தச் (மாகாணசபை) சட்டத்தை ஏற்றுக் கொண்ட அன்றைய ஜனாதிபதி ஜே.ஆர் தல் இன்றைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க உட்பட சிங்களத் தலைவர்கள் அனைவரும் அதனை அல்படுத்த தயாரில்லை என்பது வெள்ளிடைமலை.

அன்றைய ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தன இந்தியாவின் அச்சுறுத்தல் காரணமாகவே விருப்பின்றி மாகாணசபைத் தீர்வை ஏற்றுக் கொண்டார். அன்று இந்தியாவின் அழுத்தத்தையும் அச்சுறுத்தலையும் தவிர்க்க ஜே.ஆர் ஜயவர்தன அமெக்காவை நாடினார். அவரது அரசியல் நிலைப்பாட்டின் காரணமாக அன்று சீனாவை நாடவில்லை. சர்வதேச அரசியல் சமவலுவும் வேறுபட்டிருந்தது. அமெரிக்கா இந்தியாவை மீறி இலங்கைக்கு உதவ முன்வரத் தயாரில்லை எனக்கூறியது. பாகிஸ்தான் உதவத் தயாராக இருந்தாலும் இந்தியாவை அச்சுறுத்துவதற்கான பலத்தை அன்று கொண்டிருக்கவில்லை. மறுபுறம், இந்தியா அனைத்து போராளிக் குழுக்களுக்கும் இந்தியாவில் புகலிடம் அளித்திருந்தது. அதனால் இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தனவிற்கு வேறு உபாயம் கிடைக்கவில்லை.

ஆனால் இன்றைய ஜனாதிபதி தமது அரசியல் நிலைப்பாட்டின் காரணமாக இந்தியா விற்கு சவாலான சீனாவின் ஆதரவைப் பெற்றுள்ளதுடன் தற்போது புலிகளின் அச்சுறுத்த லையும் நீக்கிக்கொண்டுள்ளார். மறுபுறம் சர்வதேச சமவலு நிலையும் மாறியுள்ளது. இதனால் இந்தியாவினால் செயல் ரீதியான அழுத்தத்தை இலங்கை மீது திணிக்க முடியாதுள்ளது. மறுபுறம் 13ஆவது திருத்தச் சட்டத்திற்கு மேலதிகமான அதிகாரப் பகிர்வினை வழங்கக் கோரும் சக்தியை இழந்துள்ளது. 13ஆவது திருத்தச் சட்டத்தினை பூரணமாக அல்படுத்துவதையே கோர முடிந்துள்ளது.

இந்தியாவின் இக்கோரலுக்கு தமிழ் கட்சிகளின் ஆதரவு இல்லாவிடின் நாளடைவில் இலங்கை தமிழ் மக்களுக்கு 13 ஆவது திருத்தச் (மாகாணசபை) சட்டத்தில் விருப்பில்லை எனவும் ஆகையால் இந்தியா அதனை வலியுறுத்துவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் எனக் கூறும் நிலைக்கு இலங்கை தள்ளப்படலாம்.

அவ்வாறான நிலையேற்படின் இந்தியாவின் கோரிக்கை பின் தள்ளப்படலாம்.

எனவே இவ் இக்கட்டான நிலையை தமிழ் கட்சிகள் புரிந்துகொள்வது அவசியமாகின்றது. இத்தேர்தலில் சிங்களத் தலைமைகளின் உபாயம் யாதெனில் மூன்றிலிரண்டு பெரும் பான்மையைப் பெற்று, அரசியலமைப்பு மாற்றத்தைக் கொண்டு வருவதனூடாக மாகாண சபையெனும் பாரிய தடையை அகற்றிக்கொள்வதாகும். இவ் அரசியலமைப்பு இருக்கும் வரை இந்தியா மாகாணசபை விடயத்தை வலியுறுத்திக்கொண்டே இருக்கும். இவ் அழுத்தத்தை நீக்குவதற்கு அரசியலமைப்பு மாற்றம் அவசியமாகும்.

சிங்களத் தலைமைகளை பொறுத்தவரை, மாகாணசபையை நீக்குவது தன்மைத் தேவையாகும். எனவே மாகாண சபையை பாதுகாத்துக் கொள்வது தமிழ் மக்களின் தேவையாகியுள்ளது. மாகாண சபையைப் பாதுகாத்துக் கொள்வதன் ஊடாகவே ஒஸ்லோ பிரகடனத்தை வென்றடைய முடியும்.

எனவே தமிழ்க் கட்சிகள் தமது உயர்ந்த பட்ச கோரிக்கை என்ன? குறைந்த பட்ச கோரிக்கை என்ன என்பதனை தெளிவுபடுத்திக் கொண்டு அதனை அடைவதற்கான முயற்சிகளில் ஈடுபட வேண்டும். அவ்வகையில் ஒஸ்லோ பிரகடனம் உயர்ந்தபட்ச கோக்கையாகவும், குறைந்தபட்ச கோக்கையாக 13 ஆவது திருத்தச்சட்டத்தின் பூரண அமுலாக்கலாகவும் இருக்கலாம்.

சிலவேளை ஆளும் கட்சியினர் நடை பெறவுள்ள தேர்தலில் மூன்றிலிரண்டு பெரும் பான்மையைப் பெற்று அரசியலமைப்பை மாற்றுவதற்கான முயற்சியில் ஈடுபடலாம். அவ்வேளை கிடைத்த மாகாண சபையை விட குறைந்த அதிகாரத்தை புதிய அரசியலமைப்பு விதந்துரைக்கலாம். அவ்வாறான சந்தர்ப்பத்தில் இந்தியாவின் தலையீட்டை மட்டுமே தமிழ் மக்களால் கோரமுடியும். அச்சந்தர்ப்பத் தில் இந்தியாவின் தலையீடு வெற்றி பெற வேண்டுமாயின் தமிழ் கட்சிகள் குறைந்தபட்ச கோக்கையான 13ஆவது திருத்தச் சட்டத்தின் பூரண அலாக்கத்திற்கான ஆணையை நடைபெறும் தேர்தலில் பெற்றிருத்தல் வேண் டும்.

அவ்வாறு பெற்றிருப்பின் இந்தியா சிறு பலத்துடன் தலையீடு செய்ய வாய்ப்புள்ளது.

எனவே தமிழ் பேசும் மக்களைப் பொறுத்த வரை இப்பொதுத்தேர்தல் தீர்க்கமான தேர்தலாகும்.

http://www.thinamurasam.com/

வட இந்திய பயங்கரவாதிகளின் கையாலகத்தனத்தை காப்பாற்ற முத்துலிங்கம் வழமைபோல் முயன்றுள்ளார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.