Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறிலங்காவின் வடக்கு - கிழக்கில் இருந்து இளம் ஊடவியலாளர்களை உருவாக்க அமெரிக்கா திட்டம்?

Featured Replies

சிறிலங்காவில் உள்ள இளைஞர்களுக்கு ஊடகவியலில் பயிற்சியளிக்கும் புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ் சிறிலங்கா ஊடகவியல் கல்லூரியில் படிக்க வைக்கும் திட்டத்தை விரிவுபடுத்த அனைத்துலக மேம்பாடுகளுக்கான அமெரிக்க நிறுவனம் [The United States Agency for International Development - USAID] திட்டமிட்டுள்ளது.

இந்த தகவலை சிறிலங்கா ஊடக நிறுவனத்தின் பட்டப் படிப்பு சான்றிதழ் அளிக்கும் விழாவில் பங்கேற்றபோது கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் துணை தலைவர் வலேரி பௌலர் [Ms. Valerie Fowler] அறிவித்ததாக தூதரகத்தின் சார்பில் அண்மையில் விடுக்கப்பட்ட செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்த வருடம் 26 மாணவர்களுக்கு அதாவது 12 கிழக்கு பகுதி மற்றும் 14 வடக்கு பகுதியை சார்ந்த தமிழ், முஸ்லிம், சிங்கள மாணவர்களுக்கு ஒரு வருட புலமைப்பரிசில் அளிக்கப்படும் என்று அந்த செய்தி குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனநாயக உரிமைகளையும், மதிப்பையும் பாதுகாக்கும் முக்கிய கடமை ஊடகவியலாளர்களுக்கு இருப்பதாக பட்டப் படிப்பு சான்றிதழ் அளிக்கும் விழாவில் பங்கேற்றபோது பௌலர் கூறினார்.

இது குறித்து அந்த விழாவில் அவர் மேலும் பேசுகையில்,

இந்த நவீன யுகத்தில் ஜனநாயகத்தை பாதுகாக்கும் முக்கிய தூண்களில் ஒன்றாக ஊடகத்துறை விளங்கி வருவதாகவும் ஜனநாயகத்தின் மூன்று பாரம்பரிய தூண்களான சட்டம், நீதி மற்றும் ஆட்சித்துறை போல நான்காவது முக்கிய தூணாக ஊடகத்துறை விளங்குகிறது என்று குறிப்பிட்டார்.

சமூக நலத்துடனும் உண்மையாகவும் ஜனநாயக உரிமைகளையும், மதிப்பையும் பாதுகாப்பதோடு அரசுகளின் உண்மைத்தன்மையை மக்களுக்கு தெரிவிக்கும் முக்கிய சேவையை ஊடகத்துறையினர் மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.

ஆட்சிதுறைகளில் உள்ள தலைவர்கள் உண்மையாகவும் வெளிப்படையாகவும் நடக்கின்றனரா என ஊடகத்துறை கண்காணிப்பதோடு மட்டுமில்லாமல் அவ்வாறு நடக்காத பட்சத்தில் ஜனநாயகத்தை காப்பாற்றும் பொருட்டு அதை மக்களுக்கு தெரிவிக்க வேண்டிய முக்கிய கடமை ஊடகத் துறையை சார்ந்தது என்றும் இதை பின்பற்றும் நாடுகளே சிறந்த ஜனநாயக நாடாக விளங்க முடியும் என்றும் தெரிவித்தார்.

இந்த பட்டபடிப்பில் வானொலி, தொலைகாட்சி மற்றும் அச்சு ஊடகங்கள் அனைத்தும் சிங்கள, தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் கற்றுக் கொடுக்கப்படும் என்றும் அனைத்து மாணவர்களுக்கும் ஆங்கில மொழிப் பயிற்சியும் அளிக்கப்படும் என்ற தகவலையும் தெரிவித்தார்.

பயிற்சிகாலம் முடிந்தவுடன் அவரவர் பகுதிகளில் உள்ள ஊடகங்களில் பணியாற்ற வேண்டுமென்பதே இந்த புலமைப்பரிசில் பட்டப் படிப்பின் முக்கிய விதிமுறையாக இருக்கும் இன்றும் கூறினார்.

2009 ஆம் ஆண்டில் 14 கிழக்கு பகுதி மாணவர்களுக்கும் 2 மொனராகல மாவட்டத்தை சேர்ந்த மாணவர்களுக்கும் புலமைப்பரிசிலுடன் கூடிய பயிற்சியை அனைத்துலக மேம்பாடுகளுக்கான அமெரிக்க நிறுவனம் அளித்துள்ளதாக அவர் மேலும் கூறினார்.

http://www.puthinappalakai.com/view.php?20100306100624

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.