Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வெலிஓயா சிங்களக் குடியேற்றம் நாயாறு நோக்கி விரிவடைகிறது

Featured Replies

வெலிஓயா சிங்களக் குடியேற்றம் நாயாறு நோக்கி விரிவடைகிறது

மகாவலி 'எல்' வலயத்தை முல்லைத்தீவு மாவட்டத்தின் நாயாறுப் பகுதி வரைக்கும் விரிவாக்கம் செய்யும் முயற்சியில் சிறிலங்கா அரசாங்கம் இறங்கியுள்ளது.

முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களின், தமிழர்களின் பாரம்பரிய வாழ்விடமான மணலாறு பகுதியில் சிங்களக் குடியேற்றங்களை நிறுவிய சிறிலங்கா அரசாங்கம் அந்தப் பகுதியை மகாவலி 'எல்' வலயமாகப் பிரகடனம் செய்தது.

அத்துடன் நிர்வாக ரீதியாக இந்தப் பிரதேசத்தை அனுராதபுர மாவட்டத்துடனும் இணைத்துள்ளது.

இந்தநிலையில் தற்போது சிறிலங்கா அரசாங்கம் மகாவலி 'எல்' வலயத்தை நாயாறு வரைக்கும் வரிவாக்கம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது.

நீர்ப்பாசன, நீரியல் வளங்கள் முகாமைத்துவ பிரதி அமைச்சர் சந்திரசேன இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.

“மொறகஹகந்த திட்டத்தின் இரண்டாவது கட்டத்தின் கீழ் ஒரு கால்வாய் அமைக்கப்படவுள்ளது.

இது இரணைமடுக் குளம் வரை அமைக்கப்படவுள்ள இந்தக் கால்வாய்க்கு ‘என்சிபி’ கால்வாய் என்று பெயரிடப்பட்டுள்ளது.

வடக்கு, கிழக்கு பகுதியில் உள்ள குளங்கள் நீர்த்தேக்கங்களைப் புனரமைக்கும் வேலைகள் தற்போது இடம்பெற்று வருகின்றன.

மகாவலி 'எல்' வலயம் நாயாறு வரைக்கும் வரிவாக்கப்படவுள்ளதுடன் வெலிஓயா பகுதியல் உள்ள 60 குளங்கள் புனரமைக்கப்படவுள்ளன.

வடக்கு, கிழக்கில் குளங்கள், நீர்த்தேக்கங்கள் சார்ந்த சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்யும் முயற்சியில் நீர்ப்பாசன, நீரியல் வளங்கள் முகாமைத்துவ அமைச்சு கவனம் செலுத்தி வருகிறது.

இது தொடர்பாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவுடன் பேச்சு நடத்தப்பட்டுள்ளது.

நாயாறு கடலேரியைச் சுற்றிய பகுதியில் சுற்றுலாத் தொழிலை விருத்தி செய்வதற்கான திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

யான் ஓயா திட்டம் பதவியா வரைக்கும் விரிவாக்கப்படவுள்ளது.

வாகல்கட மற்றும் பதவியா பகுதி விவசாயிகளின் நலன் கருதி யான் ஒயாவுக்குக் குறுக்கே வாகல்கடவில் ஒரு அணைக்கட்டு அமைக்கப்படவுள்ளது.

இந்த நீர் ஜெயந்திவௌ குளத்தில் சேமிக்கப்படும்” என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா அரசாங்கம் வடக்கில் சிங்களக் குடியேற்றங்களை விரிவுபடுத்தும் முயற்சியாகவும், தற்போதுள்ள சிங்களக் குடியேற்றவாசிகளுக்கு அதிக வசதிகளைச் செய்து கொடுக்கும் நோக்கிலுமேயே இந்தப் பகுதியில் புதிய நீர்ப்பாசனத் திட்டங்களை நடைமுறைப்படுத்த ஆரம்பித்துள்ளது.

நாயாறு வரைக்கும் மகாவலி 'எல்' வலயத்தை விரிவுபடுத்துவது, முல்லைத்தீவு மாவட்டத்தின் மேலும் பல பகுதிகளை அனுராதபுர மாவட்டத்துடன் இணைப்பதற்கான முன் முயற்சியாகக் கருதப்படுகிறது.

அதேவேளை மாத்தளை மற்றும் அனுராதபுர மாவட்டங்களை உள்ளடக்கிய- கலாவௌ குளத்தின் சுற்றுப்புறத்தில் அமைந்துள்ள மகாவலி 'எச்' வலயத்தில் குடியேற்றப்பட்டவர்களின் மூன்றாவது தலைமுறையினருக்கு விநியோகிப்பதற்கு நிலம் போதாமல் உள்ளதால், அவர்களை வவுனியா வடக்கில் குடியேற்றவுள்ளதாக அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா அண்மையில் கூறியிருந்தார்.

வவுனியா வடக்கில் நெடுங்கேணி பகுதியில் ஏற்கனவே சிங்களக் குடியேற்றங்கள் நிறுவப்பட்டுள்ள நிலையில் அங்கு புதிய சிங்களக் குடியேற்றங்களை நிறுவும் முயற்சி இடம்பெறவுள்ளதாகவும் தெரியவருகிறது.

இதற்கென இந்தப் பகுதியில் பயிர்ச்செய்கைக்கு உட்படுத்தப்படாத பண்ணைகளை மீளப்பெறுவதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதனிடையே, மணலாறு பகுதியை அண்டி முல்லைத்தீவு மாவட்டத்தில் சிங்களக் குடியேற்றங்களை நிறுவுவதற்கு வசதியாக முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபராக முன்னாள் இராணுவ அதிகாரி ஒருவரை நியமிக்கும் முயற்சியில் சிறிலங்கா அரசாங்கம் இறங்கியிருக்கிறது.

தமிழ்மக்களின் பாரம்பரிய வாழ்விடமான முல்லைத்தீவு மாவட்டத்தின் அரசஅதிபராக ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரியான மேஜர் ஜெனரல் சீ.ஆர்.டி.சில்வா நியமிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தற்போது முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபராக உள்ள இமெல்டா சுகுமார் வட மாகாணசபையின் பிரதம செயலர் பதவிக்கு நியமிக்கப்படவுள்ளார்.

http://www.puthinappalakai.com/view.php?20100607101262

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.