Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நிறைவேற்று அதிகார பிரதமர் பதவி ஜனாதிபதி – ரணில் இணக்கம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Jul 12, 2010 / பகுதி: முக்கியச் செய்தி / செம்பிறை

நிறைவேற்று அதிகார பிரதமர் பதவி ஜனாதிபதி – ரணில் இணக்கம்

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை நீக்கிவிட்டு நாடாளுமன்றத்திற்குப் பொறுப்புக்கூறும் வகையிலான நிறைவேற்று அதிகாரமுள்ள பிரதமர் பதவியை ஏற்படுத்துவற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவும் ஐ.தே.க. தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் கொள்கையளவில் இணக்கம் காணப்பட்டுள்ளது.

இவ்விருவரும் இன்று மாலை அலரி மாளிகையில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியபோதே மேற்படி இணக்கப்பாடு ஏற்பாட்டுள்ளது. இச்சந்திப்பின் பின்னர் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க செய்தியாளர் மாநாடொன்றை நடத்தினார்.

இரு தரப்பினரும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளதாகவும் செய்தியாளர் மாநாட்டில் ரணில் தெரிவித்தார்.

தேர்தல்முறை தொடர்பாகவும் இணக்கம் காண்பதற்கு முயற்சிக்கப்படும் எனக் கூறிய ரணில் விக்கிரமசிங்க, தற்போதைய விகிதாசார பிரதிநிதித்துவ முறையும் தொகுதிவாரி பிரதிநிதித்துவ முறையும் கலந்த புதிய தேர்தல் முறையை அறிமுகப்படுத்துவதற்கு இரு தரப்பினரும் முயற்சிப்பதாகவும் கூறினார்.

மக்களுக்கு நட்புறவான அரசியலமைப்பை அறிமுகப்படுத்த நாம் முயற்சிக்கிறோம். அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தும் அதேவேளை அத்தகைய அரசியலமைப்பையும் வாழ்க்கைச் செலவைக் குறைக்கவும் வலியுறுத்தி ஆர்ப்பாட்ட நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம் என ரணில் விக்கிரமசிங்க கூறினார்.

இதேவேளை, இத்தகைய அரசியலமைப்பு திருத்த யோசனைகள் தொடர்பாக ஊடகங்கள் பகிரங்க விவாதங்களை ஆரம்பிப்பதில் ஊடகங்கள் பங்காற்ற வேண்டும் என ரணில் கூறினார்.

ஊடகங்களுக்கு பொன்னான ஓர் வாய்ப்பு உள்ளது. ஊடகங்கள் இந்த வாய்ப்பை கைப்பற்றி பகிரங்க விவாதங்களை ஏற்படுத்த வேண்டும். இவ்விடயத்தில் எம்மை மாத்திரம் தனியாக விட்டுவிட வேண்டாம். எப்போதுமே ஊடக விவாதமொன்று நடைபெற்றால் புதிய யோசனைகள் பிறக்கும். அது எமக்கு உதவியாக இருக்கும். நாம் மக்களுக்காக எமது பணியை ஆற்றுவோம் என ரணில் தெரிவித்தார்.

இதேவேளை, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுத்த அறிக்கையொன்றில், தனிப்பட்ட நலன்களை அல்லாமல் நாட்டின் நலனைக் கருத்திற்கொண்ட அரசியலமைப்பை அறிமுகப்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளார். நாட்டின் தலைமை எப்போதும் நாடாளுமன்றத்திற்கு பொறுப்புக்கூறும் வகையிலானதாக இருக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

அரசாங்க – ஐ.தே.க. பேச்சுவார்த்தையில் அரசாங்கத்தரப்பில் ஜனாதிபதியுடன் அமைச்சர்கள் மைத்திரிபால சிறிசேன, சுசில் பிரேமஜயந்த, தினேஷ் குணவர்தன, டலஸ் அழகப்பெரும, பஸில் ராஜபக்ஷ, நிமல் சிறிபால டி சில்வா ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

ஐ.தே.க. தரப்பில் ரணில விக்கிரமசிங்கவுடன் கரு ஜயசூரிய, திஸ்ஸ அத்தநாயக்க, காமினி ஜயவிக்கிரம பெரேரா, ஜோஸப் மைக்கல் பெரேரா ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

pathivu

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.