Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஆட்சியுரிமை அதிகாரம் உள்ளவரை பதவியிலிருக்கும் ஒரு ஜனாதிபதியை தோற்கடிக்க முடியாது.

Featured Replies

ஆட்சியுரிமை அதிகாரம் உள்ளவரை பதவியிலிருக்கும் ஒரு ஜனாதிபதியை தோற்கடிக்க முடியாது. - ஆக்கம் : பேராசிரியர். றோகான் சமரஜீவ (transcurrents.com)

எதிர்க்கட்சியினர் மேற்குறித்த கேள்விக்கு ஒரு சாதாரண பதிலைக் கூறமுடியாது தோற்றுப்போய், நிறைவேற்று அதிகாரமுள்ள பிரதமரா, ஜனாதிபதியா என்கிற வார்த்தை விளையாட்டைத் தேடுகின்றனர். அரசாங்கப் பேச்சாளர் பதவிக் காலம் எத்தனை தடவைகள் என்கிற கட்டுப்பாட்டின் அதிகாரம் மக்களின் கைகளிலேயே உள்ளது, ஏனெனில் அவர்கள்தான் தங்களுக்கு வேண்டியவர்களைத் தெரிவு செய்கிறார்கள், என்கிற இலகுவான ஆனால் தவறான விடையைச் சொல்கிறார். அதிகாரம் படைத்த பிரபுத்துவ மனப்போக்கு கொண்டவர்களால் அளிக்கப் படுவது ஏற்கனவே தீர்மானிக்கப் பட்ட விடயம் போலத் தெரிகிறது.

இது காலம் கடந்துவிட்ட விடயம். பதிவுகளுக்காக வேண்டி நான் இதற்கான பதிலைத் தருகிறேன்.மூன்றாவது பதவிக் காலத்துக்காக வேண்டித் தடைகளை நீக்குவது தவறு. ஏனெனில் அதிகாரத்தை கையில் வைத்திருப்பவர் அரச இயந்திரங்களை தேர்தலின்போது தவறான முறைகளில் பயன்படுத்துவது பகிரங்கமாகவே தெரிகிறது, இதனால் பதவியில் இருப்பவர்களைத் தோற்கடிக்க முடியாது. இத்திருத்தம் 12 வருடங்களுக்கு ஒருமுறையாவது அதிகாரத்தினை மாற்றமுடியும் என்கிற அவசியமான அழுத்தத்தைத் தளர்த்தும் பொறிமுறையினை நீக்குகிறது. இது நிறைவேறினால் அதிகாரத்தினை மாற்ற விரும்புபவர்களுக்கு எந்த மாற்றீடும் கிட்டாது மாறாக அரசைக் கவிழ்க்கச் சதி முயற்சிகளும், மக்கள் கிளர்ச்சிகளும் உருவாகலாம். அரசியல் சட்டத் திருத்தங்களால் பயனடைபவர்கள் உட்பட அனைவருக்கும்; இது தீமையளிக்கும்.

இதற்கான ஆதாரங்களை அறிய விரும்புபவர்களுக்கு: 1989 ல் நடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஆர்வத்துடன் போட்டியிட்ட ஜனாதிபதி பிரேமதாச அவர்கள் மிகச் சிறிய பெரும்பான்மையுடனேயே வெற்றி பெற்றார். அவரிருந்த கட்சி ஆட்சியில் இருந்த போதும் அவர் அப்போது ஜனாதிபதி பதவியில் இருக்கவில்லை.1994 ல் நடந்த ஜனாதிபதித் தேர்தலில் எதிர்கட்சி வேட்பாளர் வெற்றி பெற்றார்,அது எதனால் என்றால் ஆட்சியில் இருந்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவில்லை. 2005ல் ஜனாதிபதி ராஜபக்ஸ 1989 ஐ விடக் குறைவான பெரும்பான்மையுடனேயே வெற்றி பெற்றார், அப்போதும் ஆட்சியில் இருந்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவில்லை.

வேறு விதமாகக் கூறுவதானால் எதிர்கட்சி வேட்பாளர்களுக்கு 1982, 1999, 2010 தேர்தல்களில் வெற்றியீட்டச் சந்தர்ப்பம் கிட்டவில்லை, ஏனெனில் பதவியிலிருந்த ஜனாதிபதி ஒருவர் தேர்தலில் போட்டியிட்ட காரணத்தால். 2010 ல் நடந்த ஜனாதிபதி தேர்தலில் சகல அரச இயந்திரங்களும் குறிப்பாக ஜனாதிபதியின் உத்தியோக பூர்வ வதிவிடம், மத்திய வங்கி, தொலைத்தொடர்பு கட்டுப்பாட்டு ஆணையகம், அரச பேரூந்துகள், ஊடகங்கள் என எல்லாமே எதிர்கட்சியை அரைத்து நொருக்கி அடிபணிய வைக்கப் பயன்பட்டன. 1982 ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட எதிர்கட்சி வேட்பாளர் வாக்களிக்கச் சென்றபோது அவரது வாக்கு ஏற்கனவே செலுத்தப் பட்டிருந்த சம்பவத்திற்கு இது சற்றும் குறைவானதல்ல.

பங்களாதேஷில் தேர்தல் நடைபெறும் சமயங்களில் ஆட்சியிலுள்ள அரசாங்கம் தேர்தலுக்கு முன் பதவியிறக்கப் பட்டு ஒரு இடைக்கால அரசாங்கம் தேர்தல் பரப்புரைகளின்போதும் தேர்தலின்போதும் பதவி வகிக்கிறது. ஏனென்றால் முழு அரச இயந்திரங்களும் ஒருவரால் நிர்வகிக்கப் படும்போது நீதியான தேர்தல் ஒன்றை நடத்துவது கடினம் என்பதை அவர்கள் உணர்ந்திருக்கிறார்கள். ஸ்ரீலங்கா இதிலிருந்து இரண்டு விதங்களில் வேறுபடுகிறது. முதலாவது பிரச்சினை மிகவும் மோசமானது, என்னவென்றால் எமது ஜனாதிபதிமுறை பங்களாதேஷ் பாராளுமன்ற முறையைப் போலில்லாது ஆட்சி நடத்தும் வேட்பாளருக்கு அதிகப்படியான அதிகாரங்களை வழங்கி வலுப்படுத்துகிறது.இரண்டாவது நீதியான தேர்தல்கள் நடப்பதாக எண்ணி நம்மை நாமே கூட்டாக ஏமாற்றிக் கொள்கிறோம்.

நீதியான தேர்தல்கள் நடைபெறுவதற்கு இந்தியாவிலுள்ளதைப் போல சகல அதிகாரமும் கொண்ட ஒரு தேர்தல் ஆணையர் தேவை. உதாரணத்துக்கு, இந்தியாவில் தேர்தலின்போது ஆட்சியிலுள்ள பிரதமர் அரச வானூர்திகளையோ, வாகனங்களையோ பயன்படுத்தும் போது தேர்தல் அதிகாரி அவர் அதற்கான கட்டணங்களைச் செலுத்துவதை உறுதி செய்கிறார்.ஸ்ரீலங்காவில் தேர்தல் ஆணையர் அரச ஒலி,ஒளி பரப்பும் நிலையங்கள் பக்கச் சார்பாக பிரச்சாரம் செய்வதைக் கூட தடுக்கும் அதிகாரம் அற்றவராக உள்ளார். நீதியான தேர்தல்கள் நடைபெறுவதற்கு எதிர்கட்சிகளுக்கு எதிரான தேர்தல் வன்முறைகளைக் கட்டுப்படுத்தப் போதிய அதிகாரம் கொண்ட காவல் படையைக் கொண்ட ஒரு காவல்துறை ஆணையகம் தேவை,ஆனால் ஸ்ரீலங்காவில் பக்கச் சார்பாக நடக்கும் முறையே உள்ளது.

இது போன்ற காரணிகளே அரசியலமைப்பின் 17வது சட்டத்திருத்தத்திற்கு சகல கட்சிகளும் ஆதரவு வழங்கிடக் காரணமாக இருந்தன. ஆனால் ஜனாதிபதி குமாரதுங்காவினாலும், ராஜபக்ஸவினாலும் நீதித்துறையின் உதவியுடனும், அடிமைத்தனமான சட்டத்தொழிலாளிகளின் கண்காணிப்பினாலும் அநியாயமாக கொல்லப்பட்டது. ஒரே ஒரு பாதுகாப்பாக இருந்தது,இந்த பதவிக்கால எல்லை மட்டுமே அதுவும் இப்போது நீக்கப் படுகிறது.

ஏன் ஒருவர் கூட ஹியூகோ சாவேஸின் போராட்டம் பற்றிப் பேசுவதில்லை? அவரும் இதேபோல் ஜனாதிபதி பதவிக்கால எல்லையை நீட்டித்து தனதாட்சியை விஸ்தரிக்க விரும்பினார். ஆனால் அவருக்கு ஒரு சர்வசன வாக்கெடுப்பு தேவைப்பட்டது. முதல் தடவை அவர் அதில் தோற்றாலும் இரண்டாவது முறை பலத்த பிரயத்தனத்தின் பின் வெற்றி பெற்றார். வெனசுவெலா தான் நமது உதாரணமாக இருக்கப்போகிறதா?

ஆபிரிக்காவின் ஏழு ஜனாதிபதிகள் தமது மூன்றாவது பதவிக்காலத்தை அனுபவிப்பதற்காக அரசியல் அமைப்புச் சட்டத் திருத்தங்களை பலவந்தமாகத் திணித்தார்கள். ஏழு பேரும் மறு தேர்தலில் வெற்றி பெற்றார்கள். அவர்கள், புர்கினோ பாஸோ நாட்டைச் சேர்ந்த பிளேயிஸ் கொம்பாரோ,சாட் நாட்டு இதிரிஸ் டெபி, கபேன் நாட்டு ஒமார் பொங்கோ, கினியா நாட்டு லசானா கொன்ட, நமிபியா நாட்டு சாம் நியுஜோமா, ரூகோ நாட்டு கணசிங்பி யெடெமா, உகண்டா நாட்டு யுவெரி மசவேனி ஆகியோரே. இவர்கள்தான் ஸ்ரீலங்காவின் உதாரண புருசர்களா?

1978ல் அரசியல் அமைப்புச் சட்டம் ஜனாதிபதிக்கு வழங்கிய அரசியல் அதிகாரங்களைப் பற்றி இன்னும் அதிக குறுக்கிடு கட்டுப்பாடுகள் தேவையாக இருக்கின்றபோது அதைவிடுத்து இருக்கின்ற அற்ப சொற்ப பாதுகாப்பினையும் அகற்ற முயற்சிக்கிறார்கள். சிலவேளை இதுதான் நமக்கு அருகதைப் பட்டது போலும். எமது நாட்டுக்கு உதாரகுணமுள்ள ஒரு சர்வாதிகாரிதான் தேவை என்று வணக்கத்துக்குரிய இனமாலுவ ஸ்ரீ சுமங்கள தேரர் கூறியதாகச் சொல்லப் படுகிறது.இது ஒரு சிறுபகுதியினரது பார்வையல்ல,அதனை நாம் முழு அளவில் ஏற்றுக் கொண்டாக வேண்டும்.அதைவிடுத்து எமக்குத் தேவையான ஒருசிறு பகுதியை அல்ல.

எல்லா சர்வாதிகாரிகளும் உதாரகுணமுள்ளவர்களாக இருப்பார்கள் என்பதற்கு எதுவித உத்தரவாதமுமில்லை ஆனால் சர்வாதிகாரிகள் உதாரகுணமுள்ளவர்களாக மாறும்போது அவர்களின் இயல்புகளையும் மாற்றிக்கொள்வார்கள். அனால் தேர்தல்களின்போது ஒருவர் சர்வாதிகாரத்தை கைவிடுவதில்லை என்பத வரையறை.அரசியல் சதி முயற்சிகளும் மக்கள் எழுச்சியும் உதாரகுணமுள்ள சர்வாதிகாரி ஆட்சியில் முக்கியமான மூலகங்களாகும்.இந்த ஜனநாயக விரோத அரசியல் அமைப்புச் சட்டத் திருத்தத்தை கைகளைக் கட்டிக் கொண்டு பார்த்திருப்பவர்கள் குறைந்தது தாங்கள் எதில் கையெழுத்து இடுகிறோம் என்பதையாவது தெரிந்து கொள்ள வேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.