Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர்களுடன் சமரசமாக வாழவேண்டும் என்ற எண்ணம் இல்லை! சிங்களவர்கள் மிடுக்குடன் நடந்துகொள்கிறார்கள்:-

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களுடன் சமரசமாக வாழவேண்டும் என்ற எண்ணம் இல்லை! சிங்களவர்கள் மிடுக்குடன் நடந்துகொள்கிறார்கள்:- பிரித்தானிய சஞ்சிகையான த எக்கொனமிஸ்ட் விமர்சனம்.

[sunday, 2010-11-21 05:52:25]

தங்களது இலக்கினை அடைவதற்காக கடுமையான போராட்டம் நடத்திய புலிகளமைப்பு இல்லாதொழிக்கப்பட்டு விட்ட நிலையில், சிறுபான்மைத் தமிழர்களுடன் சமரசத்துடன் வாழவேண்டும் என்ற எந்த எண்ணமும் இல்லாது இலங்கையில் பெரும்பான்மைச் சிங்களவர்கள் மிடுக்குடன் நடந்துகொள்கிறார்கள். என பிரித்தானிய 'The Economist ' சஞ்சிகை விமர்சித்துள்ளது.

பிரித்தானியாவில் இருந்து வெளிவரும் 'The Economist ' சஞ்சிகையில் மகிந்தவின் இரண்டாவது பதவியேற்பு குறித்து வெளிவந்த செய்தி விமர்சனத்தின் ஒரு பகுதி இங்கே தரப்படுகிறது:

தங்களது இலக்கினை அடைவதற்காக கடுமையான வழிமுறைகளைக்கூடக் கைக்கொண்ட புலிகளமைப்பு இல்லாதொழிக்கப்பட்டு விட்ட நிலையில், சிறுபான்மைத் தமிழர்களுடன் சமரசத்துடன் வாழவேண்டும் என்ற எந்த எண்ணமும் இல்லாது நாட்டினது பெரும்பான்மைச் சிங்களவர்கள் மிடுக்குடன் நடந்துகொள்கிறார்கள்.

தமிழர்கள் பெரும்பான்மையாக வாழுகின்ற பகுதிகளுக்கு அதிகாரங்கள் பரிந்தளிக்கப்படவேண்டும் என்ற நிலைப்பாட்டினைக் கொண்டிருந்த அரசாங்கம் தற்போது தனது மனநிலையினை முற்றிலும் மாற்றிவிட்டது.

தமிழர் தாயகப் பிரதேசங்களில் இராணுவத்தினரின் துணையுடன் சிங்களப் பெரும்பான்மையினரைக் குடியமர்த்தும் முனைப்புக்களில் அது முனைப்புடன் ஈடுபட்டுவருகிறது.

இந்த அராஜகத்தை எதிர்த்து நிற்பதற்குத் திராணியற்றவர்களாக அல்லது அஞ்சுபவர்களாகவே தமிழர்கள் காணப்படுகிறார்கள்.

போரின் இறுதிநாட்களில் ஆயிரக் கணக்கான பொதுமக்களை இராணுவத்தினர் கொன்று குவித்தனர் என எழும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பான சுதந்திரமான விசாரணைகளை மேற்கொள்ளுவதற்குத் தேவையான அழுத்தத்தினை நாட்டினது தமிழர்களோ அன்றி ஐக்கிய நாடுகள் சபையினரோ பிரயோகிக்கும் நிலையில் இல்லை.

இவ்வாறாக பொதுமக்களும் புலிகளின் உறுப்பினர்களும் படுகொலை செய்யப்பட்டதை உறுதிப்படுத்தும் காணொலி ஆதாரங்களை அண்மையில் 'அல்ஜசீரா' தொலைக்காட்சி ஒளிபரப்பியிருந்தது.

வழமை போலவே இந்த ஆதாரங்கள் உண்மைக்குப் புறம்பானவை எனக் கூறி சிறிலங்கா அரசாங்கம் நிராகரித்துவிட்டது.

seithy

ஆதரவு கொடுத்த உலகத்திற்கு இது தெரியாத வரலாறா?

யார் புலிகள்? புலிகள் மக்களிலிருந்து வேறானவர்களா? மக்கள் திரும்பவும் தெளிவடைந்துவிட்டார்கள். அவர்கள் காத்திருக்கின்றார்கள் யாழ்மக்களை அரசாங்கம் மாற்றிக்கொண்டிருக்கின்றது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.