Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

”டக், டிக், டொஸ்' ராஜதந்திரம்

Featured Replies

சில மாதங்களாக எதிர்பார்க்கப்பட்ட இந்திய வெளி யுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவின் இலங்கை விஜயம் நடந்தேறியுள்ளது.

எதிர்பார்க்கப்பட்டது போன்று இந்திய அமைச்சர் யாழ்ப்பாணத்துக்கும் வந்து திரும்பியுள்ளார்; நேற்று அவர் இங்கு மூன்று நிகழ்வுகளில் பங்குபற்றினார். அவற்றில் இந்தியா வின் துணைத் தூதரகத்தைத் திறந்து வைத்துப் பேசு கையில் தமிழ் மக்கள் எதிர்பார்த்த முக்கிய அம்சம் ஒன் றையும் தொட்டுச் சென்றிருக்கிறார்.

போர் முடிவுற்றுவிட்டதால், இந்த நாட்டின் முக்கி யமான பிரச்சினைகளை புரிந்துணர்வுடனும் பரஸ்பர விட்டுக்கொடுப்புடனும் அணுகி உண்மையான நல்லிணைக்கத்தை நோக்கிய நகர்வுக்கு அரிய சந்தர்ப் பம் கிடைத்துள்ளது.

பதின்மூன்றாவது அரசமைப்புத் திருத்தத்தின் அடிப்படையில் கட்டி எழுப்பப்படும் அர்த்தமுள்ள அதிகாரப் பொதி ஒரு நிரந்தர அரசியல் தீர்வுக்கான சூழ்நிலையை ஏற்படுத்துமென நம்புகிறோம்.

அதற்கான பேச்சுவார்த்தைகள் வெவ்வேறு கருத் துக்களை உடைய எல்லாத் தரப்புகளினதும் பங்களிப் புடன் நடைபெறும் என்றும் நாம் நம்புகிறோம்

அந்தத் தீர்வுப் பொதி, நிரந்தர அரசியல் இணக் கத்துக்கான நிலையை உருவாக்கும் என்று நம்புகி றோம் என்றெல்லாம் அமைச்சர் கிருஷ்ணா கூறிச் சென்றுள்ளார்.

இங்கே நோக்கப்பட்டவேண்டியது என்னவெனில், 13 ஆவது அரசமைப்புத் திருத்தத்துக்கு மேலாக அல்லது கூடுதலாக ஓர் அரசியல்தீர்வுக்கு வர வழி கிடைக்கும் என்று அமைச்சர் கிருஷ்ணா நம்பிக்கை தெரிவிக்கவில்லை.

இந்த வருட முற்பகுதியில் புதுடில்லி சென்றிருந்த இலங்கையின் முக்கூட்டு உயர் அதிகாரிகளிடம் இனப்பிரச்சினைக்கான தீர்வு பதின்மூன்றாவது அரச மைப்புத் திருத்தத்துக்கு கூடுதலாக (13+) இருக்க வேண்டும் என்று இந்திய அரச சார்பில் யோசனை தெரிவிக்கப்பட்டதாகச் செய்திகள் வெளியாகி இருந் தன.

அதாவது பஸில் ராஜபக்ஷ, கோத்தபாய ராஜபக்ஷ, லலித் வீரக்கோன் ஆகியோரைக் கொண்ட, ஜனாதி பதிக்கு நெருக்கமான மூவர் குழுவிடம் இந்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்ட யோசனையை அது தணித்துக்கொண்டதா அல்லது சுருக்கிக்கொண்டதா என்ற ஐயம் ஏற்படவே செய்கிறது.

பதின்மூன்றாவது அரசமைப்புத் திருத்தத்தின் கீழ் வழங்கப்பட்ட அதிகாரங்கள் மிகக் குறிப்பாக மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களை வெட்டிக் கழித்து அவற்றை மத்திய அரசு கைவசப்படுத்தி உள்ள சூழ்நிலையில் பதின்மூன்றுக்கும் கூடுதலான (13+) அதிகாரப் பரவல் தீர்வு ஒன்றைக் கொண்டுவர, உருவாக்க மஹிந்த அரசு எப்படி ஒருப்படும் இணங்கும் என்ற கேள்வி இப்போது எழுந்திருக்கிறது.

பதின்மூன்றுக்குக் கூடுதலாக இலங்கை அரசு அரசியல் தீர்வு ஒன்றை வழங்கமாட்டாது என்பதனை தெரிந்து கொண்டுதான் புரிந்துகொண்டுதான் அமைச்சர் கிருஷ்ணா யாழ்ப்பாணத்தில் அடக்கி வாசித்தாரா இந்திய நிலைப்பாட்டை அமுக்கி வாசித் தாரா என்பது தெளிவில்லை.

இதேவேளை அர்த்தபுஷ்டியுடனான அதிகாரப் பரவல் தீர்வுப் பொதி இலங்கையில் இறுதியானதும் நிலையானது மான சமாதானத்தை உருவாக்க உதவும் என்று கொழும்பில் நேற்றுமுன்தினம் ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷவைச் சந்தித்த பின்னர் தெரிவித்த கிருஷ்ணா

யாழ்ப்பாணம் வந்தபோது

பதின்மூன்றாவது அரசமைப்புத் திருத்தத்தின் அடிப்படையில் கட்டி எழுப்பப்படும் என்று இரட் டைக் கருத்துப்படக் கூறியிருப்பது ஒரு வகைக் குழப் பத்தை உண்டாக்கி உள்ளது.

மஹிந்த ராஜபக்ஷ தமது இரண்டாவது பதவிக் காலத்தை ஏற்பதற்கு முன்னரே நிறைவேற்றிய பதினெட்டாவது அரமைப்புத் திருத்தம் நடைமுறைக்கு வந்திருக்கும்போது, தமிழ் மக்கள் விடயத்தில் இந் தியா எதனைத்தான் செய்யமுடியும் என்ற நிலை அதனிடம் தோன்றியுள்ளதை அவதானிக்க முடிகிறது.

ஆகையால், இந்தியாவின் உதவியுடன் அல்லது அனுசரணையுடனேயே இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும் என்ற ஈழதமிழ் மக்களின் நம்பிக்கை நசிந்துபோய்விடும் என்பதற்கான முன்னோட்டம் என்று கூட இதனைக் கருதலாம்.

இந்திய அமைச்சர் கிருஷ்ணா இலங்கையில் நிற்கும்போதே, பாகிஸ்தான் ஜனாதிபதி கொழும் புக்கு வந்திருக்கிறார். சீன அமைச்சர்கள் அதிகாரிகள் அடிக்கடி கொழும்பு வந்து செல்கிறார்கள். எல்லாமே ராஜிக விஜயங்கள்தான். மொத்தத்தில் இந்தியா, சீனா, பாகிஸ்தான் ஆகிய காய்களை வைத்து"டக், டிக், டொஸ்"ராஜதந்திர விளையாட்டை ஆடி வரும் ஜனாதிபதி மஹிந்தவின் அரசியல் சாணக்கி யத்தை குறைத்து மதிப்பிடவே முடியாது.

http://www.uthayan.innovay.net/pages/editorial_pages.php

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.