Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

2 அமைச்சர்கள் திடீர் ராஜினாமா: ஆந்திர அமைச்சரவையில் பரபரப்பு

Featured Replies

ஐதராபாத்: ஆந்திராவில் புதிய அமைச்சரவை பதவியேற்ற முதல் நாளே சிக்கல் ஆரம்பித்து விட்டது. இலாகா ஒதுக்கீட்டில் அதிருப்தி அடைந்த இரண்டு அமைச்சர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளனர். மேலும் 8 அமைச்சர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளதால் முதல்வர் கிரண்குமார் ரெட்டிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

ஆந்திர முதல்வராக இருந்த ரோசய்யா கடந்த வாரம் திடீரென ராஜினாமா செய்தார். உடல் நலம் சரியில்லாத காரணத்தால் பதவி விலகுவதாக ரோசய்யா வெளிப்படையாக தெரிவித்தாலும், ஜெகன்மோகன் ரெட்டி விவகாரத்தையும், தெலங்கானா விவகாரத்தையும் சரியாக கையாளவில்லை என மேலிடம் அதிருப்தி தெரிவித்த காரணத்தினால்தான் ராஜினாமா செய்ததாக ஐதராபாத் வட்டாரங்கள் தெரிவித்தன.

இதை தொடர்ந்து இந்த இரண்டு பிரச்னைகளையும் திறமையாக கையாள்வதற்காக ரெட்டி சமுகத்தைச் சேர்ந்த கிரண்குமார்ரெட்டி முதல்வராக நியமிக்கப்பட்டார். இவர் ஆந்திர சட்டசபையில் சபாநாயகராக இருந்தவர். இவர் பதவியேற்ற இரண்டு தினங்களில் ஜெகன்மோகன் தனது எம்பி பதவியையும், காங்கிரஸ் உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்தார். அவருக்கு 30 எம்எல்ஏக்கள் ஆதரவு இருப்பதாகவும், கட்சியில் பிளவு ஏற்படுவது உறுதி என்றும் ஐதராபாத் வட்டாரங்கள் தெரிவித்தன. அமைச்சரவை பதவியேற்றுக் கொண்ட பின் காங்கிரசில் பிளவு ஏற்படும் என அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்நிலையில் நேற்று காலை 39 அமைச்சர்கள் கொண்ட புதிய அமைச்சரவை பதவியேற்றுக் கொண்டது. ரோசய்யா அமைச்சரவையில் இருந்த 28 பேருக்கு மீண்டும் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. 11 பேர் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். ஜெகனின் ஆதரவாளர்கள் 5 பேர் நீக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் எந்நேரமும் காங்கிரசிலிருந்து விலகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் நேற்றிரவு அமைச்சர்கள் அனைவருக்கும் இலாகாக்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.

ரோசய்யா மந்திரி சபையில் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராக இருந்த வெங்கட் ரெட்டிக்கு இந்த முறை உள்கட்டமைப்பு துறை ஒதுக்கப்பட்டது. இதில் அதிருப்தி அடைந்த வெங்கட் ரெட்டி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். இவரை சமாதானப்படுத்த ரகுவீர ரெட்டியை தனது தூதராக முதல்வர் கிரண்குமார்ரெட்டி அனுப்பி வைத்தார். ஆனால் வெங்கட்ரெட்டி தனது நிலையிலிருந்து இறங்கிவர மறுத்துவிட்டார்.

இதே போல் சுற்றுலா துறையை ஒதுக்கீடு செய்தது பிடிக்காமல் அமைச்சர் வசந்த்குமாரும் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். காங்கிரஸ் கட்சியிலிருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார். இந்த இரண்டு அமைச்சர்கள் தவிர சத்யநாராயணா, தர்மன பிரசாத ராவ், கிருஷ்ணா ரெட்டி, தோட்டா நரசிம்மன் உள்பட 8 அமைச்சர்கள் இலாகா ஒதுக்கீட்டில் அதிருப்தி தெரிவித்து முதல்வருக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

அமைச்சரவை பதவியேற்ற முதல்நாளே முதல்வருக்கு சிக்கல் ஆரம்பித்திருப்பது, ஆந்திர அரசியல் குழப்பங்களுக்கு இப்போது விடிவுகாலம் இல்லை என்பதை உறுதி செய்திருப்பதாக அரசியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். டிசம்பர் 7ம் தேதி முதல் ஆந்திர தலைமைச் செயலக ஊழியர்கள் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்திருப்பதும் முதல்வருக்கு கூடுதல் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

http://www.dinakaran.com/bannerdetail.aspx?id=22185&id1=12

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.