Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பாலகுமாரை படையினர் தனியாக அழைத்துச் சென்றதை நேரில் கண்டேன்! - ஐ.நா.வுக்கு எழுத்து மூல சாட்சியம்!!

Featured Replies

நீங்களும் பாதிக்கப்படிருந்தால், உங்கள் உறவினர் பாதிக்கப்படிருந்தால் அவர்கள் சார்பில் ஒரு வாக்கு மூலத்தை இன்றே காலம் தாழ்த்தாமல் பதிவு செய்யுங்கள்

===========================================================================

வன்னியில் கடந்த வருடம் இடம்பெற்ற இறுதிக் கட்டப் போரின் போது தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினரும், அரசியல் பிரமுகருமான க.வே.பாலகுமாரன் மற்றும் அவரது மகனான சூரியதீபனும் அரச கட்டுப்பாட்டுப் பகுதியில் வைத்து சிறிலங்கா படைத்தரப்பினரால் தனியாக அழைத்துச் செல்லப்பட்டதை தான் நேரில் கண்டதாக ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர்கள் குழுவுக்கு எழுத்து மூல சாட்சியம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த எழுத்து மூல சாட்சியம் வழங்கியவரின் பெயரை அவரது பாதுகாப்புக் கருதி நாம் வெளியிடவில்லை.

விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினரும், அரசியல் பிரமுகருமான பாலகுமாரன், அவரது மகனான சூரியதீபன் மற்றும் பாலகுமாரின் வாகன ஓட்டுநர் ஐங்கரன் (புனைபெயர்) ஆகிய மூவரையும் கடந்த வருடம் மே மாதம் 17ஆம் திகதி காலை 7 மணிக்கும், 7.30 க்கும் இடைப்பட்ட நேரத்தில் முள்ளிவாய்க்கால், ரெட்டைவாய்க்கால் பகுதியில் வைத்து சிறிலங்கா படைத்தரப்பின் 57வது படைப் பிரிவைச் சேர்ந்த படையினர் தனியாக அழைத்துச் சென்றதை தான் நேரில் கண்டதாக இச் சாட்சியத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவரது சாட்சியத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

'சிறிலங்கா படைத்தரப்பினரின் எறிகணை வீச்சில் பாலகுமாரின் மகள் காயமடைந்திருந்த நிலையில் அவரை செஞ்சிலுவைச் சங்கத்தின் கப்பல் மூலமாக சிகிச்சைகளுக்கான புல்மோட்டைக்கு அவரது தாயர் கடந்த வருடம் ஏப்ரல் மாதம் 24ஆம் திகதி அழைத்துச் சென்றிருந்தார்.

அப்போது திரு. வேலுப்பிள்ளை பாலகுமாரன், பாலகுமாரன் சூரியதீபன் மற்றும் பாலகுமாரின் வாகன ஓட்டுநர் ஐங்கரன் (புனைபெயர்) ஆகிய மூவரும் நான் இருந்த இடத்திலேயே தங்கியிருந்தனர்.

இந் நிலையில், கடந்த வருடம் மே மாதம் 17ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பெருந்திரளான மக்களுடன் நாம் எல்லோரும் காலை 7 மணிக்கும், 7.30 க்கும் இடைப்பட்ட நேரத்தில் முள்ளிவாய்க்கால், ரெட்டைவாய்க்கால் பகுதியால் சென்ற போது 57வது படைப் பிரிவைச் சேர்ந்த படையினரால் தனியாக அழைத்துச் செல்லப்பட்டனர்.

எம்மையும், எம்மோடு வந்த ஏனைய மக்களையும் சிறிலங்காப் படையினர் இரு பேருந்துகளில் ஏற்றி வவுனியா ஓமந்தைக்கு அனுப்பி வைக்கப்பட்டோம். நாம் ஓமந்தையில் தங்கியிருந்த இராணுவ உயர் அதிகாரிகளிடம் இவர்கள் மூவரும் படையினரால் தனியாக அழைத்துச் செல்லப்பட்டமை தொடர்பில் தெரியப்படுத்தினேன்.

நாங்கள் வலயம் 4 இல் கொண்டு வந்து விடப்பட்ட பின்னர் இம் மூவரும் படைத்தரப்பினரால் தனியாக அழைத்துச் செல்லப்பட்டமை தொடர்பில் வெளிநாடுகளில் இருந்த உறவினர்களிடம் தெரியப்படுத்தினோம்.

உடையார்கட்டுப் பகுதியில் சிறிலங்காப் படையினரின் எறிகளை வீச்சில் பலத்த காயமடைந்திருந்த வேலுப்பிள்ளை பாலகுமாரன் கையில் மருந்து கட்டப்பட்டிருந்த நிலையிலேயே சிறிலங்கா படைத்தரப்பினரிடம் சரணடைந்தார்.

இவரது மகன் சூரியதீபன் தனது படிப்பும், கணணியுமாகவே எந்த நேரமும் இருப்பார். இவர்கள் எங்களுடன் இருந்த காலப்பகுதியில் எவ்வித போர் நடவடிக்கைகளிலும் நேரடியாக ஈடுபடவில்லை.

இச் சம்பவங்கள் தொடர்பில் பலர் சாட்சியமாக இருக்கின்றார்கள். எமக்கும், எமது உறவுகளுக்கும் பாதுகாப்பு வழங்கப்படும் பட்சத்தில் சிறிலங்கா அரசாங்கத்தால் வன்னயில் நிகழ்த்தப்பட்ட படுகொலை நடவடிக்கைகளை சான்றாதாரங்களுடன் எடுத்துக் கூற தயாராக இருக்கின்றோம்.

அத்துடன், புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் இடம்பெற்ற எறிகணைத் தாக்குதலில் காயமடைந்த பலர் மீண்டும் கொல்லப்பட்டவதை நான் நேரில் கண்டேன்' என இந்த எழுத்து மூல சாட்சியத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

http://www.ponguthamil.net/news/contentnews.asp?sectionid=1&contentid={68D9CDB0-C760-401B-9794-C7DBA90B173B}

Edited by akootha

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.