Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் மக்களுக்கு இன்று தேவை அரசியல் ஞானி (Statesman)

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ் மக்களுக்கு இன்று தேவை அரசியல் ஞானி (Statesman)

தமிழ் மக்களிடையே அரசியல்வாதிகள் நிறையவே இருந்துள்ளனர். தற்போதும் இருந்து வருகின்றனர். ஆனால் Statesman என்று அதாவது அரசியல் ஞானி அல்லது அரசியல் இராஜதந்திரியை தமிழினம் கொண்டிருக்கவில்லை. அதாவது தூர நோக்கில் சிந்தித்து தமிழினத்தை வழிநடத்தக் கூடிய அரசியல் ஞானியை தமிழினம் கொண்டிருக்கவில்லை.

இதன் காரணமாகத் தமிழினத்தைக் காலத்துக்குக் காலம் வழி நடத்தியவர்கள் தாம் விட்ட தவறுகளை உணர்ந்த போது ஒன்றில் அவர்களால் அந்தத் தவறினைத் திருத்திக் கொண்டு தமிழினத்தை வழி நடத்த முடியவில்லை. அல்லது கால அவகாசம் போதாத நிலையில் இருந்துள்ளனர். அல்லது இடிந்து போய் உட்கார்ந்துள்ளனர். அல்லது வயது மூப்பினால் அமைதியாகி விட்டுள்ளனர்.

இவ்வாறானவர்களுக்குப் பிறகு தமிழர் அரசியலைக் கையிலெடுத்தவர்களும் கடந்த காலத் தவறுகளைத் திருத்திக் கொண்டதாக இல்லை. தோல்வி பற்றி ஆராய்ந்ததாகவும் இல்லை. தமது இஷ்டப்படி அரசியலை முன்னெடுக்கத் தொடங்கி வருகின்றனர்.

தமிழர் அரசியலில் இது காலங் காலமாக நடைபெறும் சம்பவங்களாகி விட்டன. சேர். பொன் இராமநாதன், சேர். பொன் அருணாசலம் போன்றோர் சிங்கள அரசியல் தலைமைத்துவங்களுடன் முன்னெடுத்த இணக்கப்பாட்டு அரசியல் தோல்வி கண்டது.

தந்தை செல்வா போன்றோர்களால் முன்னெடுக்கப்பட்ட அஹிம்சை வழிப் போராட்டமும் தோல்வி கண்டது.

ஆயுதப் போராட்டம் தலைதூக்கியது. முள்ளிவாய்க்கால் போருடன் அதுவும் முடிவுக்கு வந்தது.

இன்று தமிழ் மக்கள் மௌனித்து நிற்கின்றனர். கண்முன்னே ஏதேதோ நடைபெறுகின்றது.

கடந்த 60 வருட காலத் தமிழர் அரசியலில் தோல்வியே வரலாறாக இருந்த போதும் தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷை சாகடிக்கப்படவில்லை என்பதை இந்த வரலாறு உணர்த்தி நிற்கின்றது. தோல்வியில் துவண்டு போய் உள்ள தமிழினத்துக்கு ஒரு Statesman ஆக இன்று ஒரு குரல் ஒலிக்கின்றது.”"இலங்கைத் தமிழர் வசம் இருக்கும் அவர்களுக்குச் சார்பான சான்றுகள், சான்றாவணங்கள் யாவற்றையும் இல்லாதொழித்து விட்டு பத்தாம் நூற்றாண்டில் சோழர் காலத்தில் இங்கு வந்தவர்கள்தான் இலங்கைத் தமிழர்கள் என்று கூறுவதற்குச் சில சக்திகள் வழி வகுத்துக் கொண்டிருக்கின்றன” என்று உச்ச நீதிமன்ற முன்னாள் நீதியரசர் சி. வி. விக்னேஸ்வரன் கவலை வெளியிட்டுள்ளார்.

தமிழர்களின் வரலாற்றுச் சான்றாதாரங்களை மறைப்பது ஒன்றும் புதிதில்லை. இவை காலங் காலமாக நடைபெறுகின்றது.

யாழ். பல்கலைக்கழக வரலாற்றுத் துறையில் பணியாற்றிய கலாநிதி பொன்னம்பலம் இரகுபதியின் தலைமையில் ஆனைக்

கோட்டையில் 1980 ஆம் ஆண்டு இடம்பெற்ற அகழ்வாராய்ச்சிக் குழுவில் இடம்பெற்றவர்களில் நானும் ஒருவன்.

அந்த அகழ்வாராய்ச்சியின் போது கட்டுரையாளரால் எடுக்கப்பட்ட முத்திரை இது. இது கி. மு. 3 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததென உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.இந்த முத்திரையில் பொறிக்கப்பட்டுள்ள எழுத்து கோ வே த (KO VE TA) எனப் பேராசிரியர் கா.இந்திரபால,கலாநிதி பி.ரகுபதி ஆகியோரால் வாசிக்கப்பட்டுள்ளது.

இதன் அர்த்தமாக (KO VENTHANUDAIYA) கோ வேந்தனுடையா என வாசிக்கப்பட்டுள்ளது. இந்த முத்திரை சிந்துவெளி நாகரீகத்தில் கண்டெடுக்கப்பட்டவைகளை ஒத்தது.எனவே, தமிழர்கள் வந்தேறு குடிகள் அல்லர்.கி.மு.3 ஆம் நூற்றாண்டிற்கே தமிழர்களின் வரலாறு இலங்கையில் பின்நோக்கிச் செல்கின்றது. இதற்குமப்பால் திஸ்ஸமஹராமவில் கண்டெடுக்கப்பட்ட தமிழுக்கேயுரிய “பிராமி’ எழுத்து கி.மு.2 ஆம் நூற்றாண்டுக்கு செல்லும் என ஜேர்மன் ஆய்வாளர் குறிப்பிட்டுள்ளதையும் இங்கு குறிப்பிடுவது பொருந்தும்.

இங்கு அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட கறுப்புச் சிவப்பு வகையிலான பானை ஓட்டில் அமைந்துள்ள தமிழ் பிராமி எழுத்தானது 2200 வருடங்களுக்கு பின்நோக்கிய தமிழர் வரலாற்றை உறுதிப்படுத்தியுள்ளதையும் இங்கு குறிப்பிடுவது பொருந்தும்.

முன்னாள் நீதியரசரின் கவலை நியாயமானது. “”தமிழர்களின் வரலாற்றாதாரங்கள், சான்றுகள் காப்பாற்றப்பட்டாக வேண்டும். 1981 ஆம் ஆண்டில் யாழ். நூலகம் எரிக்கப்பட்டது. எரிந்த இடிபாடுகளுக்குள் இருந்து, சாம்பலில் இருந்து உயிர்த்தெழுந்திருக்கும் அதே வாசிகசாலையினுள் இன்றும் காடையரா?

எங்கள் அறிவைக் குறி வைக்கும் ஒரு சதி சிலருக்குப் புரிகின்றது. சிலருக்கு இவை வெறும் மரங்களா? வனமா என்று புரிய மாட்டேன் என்கிறது. இப்பேர்ப்பட்ட சூழலில் எமது அறிவுப் பொக்கிஷங்கள் ஆவணப்படுத்தப்படவேண் டும். கிடைத்ததற்கரிய 95 ஆயிரம் நூல்களுடன் அக்கினி பகவானுக்கு ஆகுதி ஆகி விட்டன”. மீண்டும் ஒரு முறை அக்கினிக்குக் கொடுத்து விடக் கூடாது என்ற முன்னெச்சரிக்கையாக முன்னாள் நீதியரசர் கூறுகின்றார். அதுமட்டுமல்ல போரின் முடிவுடன் தமிழினம் இடிந்து போன மனநிலையில் உள்ளது.

எல்லாம் முடிந்து விட்டது என்ற மனோநிலையை நாங்கள் களைய வேண்டும். யானைக்கொரு காலம் என்றால் பூனைக்கொரு காலம் வரும் என்பதை மறந்து விடக் கூடாது.

அரசியல் யாப்பில் அன்று யானைக்குச் சார்பாகச் செய்யப்பட்டது. இன்று கை மாறியுள்ளது. ஆனாலும் நாங்கள் எங்கள் கடமைகளில் கண்ணாய் இருத்தல் அவசியம். நடப்பது எதுவாயினும் எங்கள் நடவடிக்கைகள் எப்படி அமைந்தாலும் எங்கள் குறிக்கோள்களை ஆணித்தரமாக மனதில் நாங்கள் வைத்திருக்க வேண்டும் என்றும் தமிழ் மக்களுக்கு நீதியரசர் வேண்டுகோள் விடுக்கின்றார்.

இன்று எல்லாமே முடிந்து விட்டது. அது புலிகளாலேயே முடிந்து விட்டது என்று பலர் புராணம் பாடத் தொடங்கி விட்டனர்.

புலிகள் இருக்கும் வரை இவ்வாறானவர்களும் தென்னிலங்கையும் புலிகளை வைத்தே அரசியல் நடத்தினர். புலிகள் முடிந்து விட்டனர், தோற்கடிக்கப்பட்டு விட்டனர் என்று இவர்கள் கூறினாலும் புலிகளை விடுவதாக இல்லை. ஏனென்று தெரியவில்லை.

ஆனால் மக்கள் அடுத்த கட்டத்தைப் பற்றி அதாவது நாளை பற்றி சிந்திக்க வேண்டிய நிலையில் உள்ளனர்.

அந்த வகையில் 60 வருட கால அரசியல் தோல்வியிலிருந்து தமிழினத்தை மீட்டு தூர சிந்தனையுடன் வழிநடத்தி உறுதியானன எதிர்காலத்தைக் கட்டியெழுப்பக்கூடிய Statesman னே தமிழினத்துக்கு இன்று தேவை.

— வி.தேவராஜ்

http://meenakam.com/2010/12/12/16002.html

இந்த பதினெட்டு மாத காலத்தில், கூட்டமைப்பும் அதன் தலைவரும் பலராலும் ஒரு statesman ஆக பார்க்கப்பட்டது. ஆனால், அவர்கள் தொடர்ந்தும் இந்தியாவை தமது statesman ஆக பார்த்தார்கள்.

இன்றைய போர்க்குற்றங்கள் அதன் ஆதாரங்கள், அவற்றுள் இந்தியாவின் பங்கு உலகத்தமிழருக்கு வெறுப்பை தந்ததோடு அரசியல் தீர்வு பற்றி இந்தியா ஒரு நெகிழ்வான போக்கை கடைப்பிடிக்கின்றது. அண்மைய கிருஷ்ணாவின் வரவும் ஏமாற்றத்தை தந்தன. இவர்களுடன் சார்ந்து இருக்கும் முதல்வர் கருணாநிதியும் தமிழரால் ஒரு statesmanஆக பார்க்கப்பட முடியாதவராக உள்ளார்.

இதனால் இன்றைய statesman ஆக, தமிழீழத்திலும் தமிழகத்திலும் ஒருவரும் இல்லாத நிலையே உள்ளது.

மறு பக்கத்தில் சிங்களத்திற்கு இன்று கிடைத்துள்ள statesman இன்று:

-- ஒரு போர்க்குற்றவாளியாக தமிழராலும்,

-- தம்மை ஏமாற்றி விட்டு கூடுதலாக சீனாவுடன் சேர்ந்து வருவதாக இந்தியாவாலும்,

-- இவர் ஒரு சர்வாதியாக மாறி வருவதாக பல சிங்கள மக்களாலும்,

பார்க்கப்படுகின்றார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.