Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மகர ஜோதிக்காக உயிர் காணிக்கை - அலட்சியத்தால் பலியான உயிர்கள் - எட்டிகூட பார்க்காத தமிழக அமைச்சர்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

106 பக்தர்கள் நெரிசலில் சிக்கி இறந்த இந்த கோர விபத்தை ஆந்திர, கர்நாடக ஊடகங்கள் அதிக முக்கியத்துவம் தந்து வெளியிட்டன. தமிழக தொலைக்காட்சிகள் பொங்கல் சிறப்பு நிகழ்ச்சிகளில் கவனம் செலுத்தி, விபத்தை இருட்டடிப்புச் செய்ய, பலியானவர்களின் உறவினர்களுக்கே இந்தச் செய்தி தாமதமாகத்தான் தெரிந்திருக்கிறது.

இந்தச் செய்தியை ஒளிபரப்புச் செய்த கேரள ஊடகங்கள், "விபத்தில் நூற்றுக்கும் அதிகமான கர்நாடக, ஆந்திர, தமிழக பக்தர்கள் பலி. நல்லவேளையாக மலையாளிகள் யாரும் மரணமடைந்திருக்கவில்லை" என திரும்பத் திரும்ப ஒளிபரப்பி, பிறமாநில் பக்தர்களின் எரிச்சலை அதிகப்படுத்தின.

இறந்தவர்களில் 24 பேர் ஆந்திராவையும், 28 பேர் கர்நாடகாவையும் 32 பேர் தமிழ்நாட்டையும் சேர்ந்தவர்கள்

சபரிமலை பக்தர்களுக்கு ஏற்படும் மூன்றாவது பெரிய துயரம் இது. 1952-ல் ஏற்பட்ட வெடிவிபத்தில் 66 பேர் இறக்க, 1999-ல் மகரஜோதி தரிசனம் கண்டு திரும்பிய பக்தர்கள்,பம்பையில் நெரிசலில் சிக்கி 52 பேர் இறந்தனர். இப்போது 106 பேர். இந்த எல்லா விபத்துகளும் சனவரி 14-ம் தேதி நடந்தது குறிப்பிடத்தக்கது.

விபத்தில் இறந்தவர்களைப் பார்க்க குமுளி மருத்துவமனைக்கு வந்த கேரள முதல்வர் அச்சுதானந்தன் விபத்தின் காரணம் குறித்து நிறுபர்கள் அவரிடம் கேட்க, "நீதி விசாரணை நடத்தினால்தான் காரணத்தைத் தெரிந்துகொள்ளமுடியும். உங்கள் பத்திரிக்கை அலுவலக சீனியர்களை திருப்திப்படுத்துவதற்காக கண்டதையும் எழுதாதீர்கள். எங்களுக்கு ஆதரவாக இருங்கள்" என்று பேச அதுவும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.

கேரளாவே பதறிக்கொண்டிருந்த நேரத்தில், ஆலப்புழா படகுவீட்டில் ராகுல் உல்லாசமாக ஓய்வெடுக்க அவரும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

குமுளி மருத்துவமனைக்கு வந்த கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் சி.கே. சந்திரப்பன் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கையைப் பார்த்து அங்கேயே மயங்கி விழுந்தார். பிறகு அவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

விபத்தில் கர்நாடக பக்தர்கள் பலியானதை அறிந்து உடனடியாக கேரளா வந்தார்கள் அம்மாநில விவசாயத்துறை அமைச்சர் உமேஷ்கட்டி, மின்துறை அமைச்சர் சோபா கரந்தலஜெ ஆகியோர். கேரள அரசின் பாதுகாப்புக் குளறுபடிகளை கடுமையாக விமர்சித்த அவர்கள், மருத்துவ உதவி தேவைப்படுபவர்களை கர்நாடகம் அழைத்துச் செல்லவும் தயங்கவில்லை.

கர்நாடக ரூரல் டி.எஸ்.பி. பி.ஜே. பண்டாரி தனி டீமுடன் ஹெலிகாப்டரில் கேரளா வந்து மரணமடைந்த உடல்களை, கொச்சி வழியாக எடுத்துச் சென்றார். ஆந்திர போலீசாரும் உடனடியாக வந்து தங்கள் மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு உதவி செய்தனர்.

தமிழக பக்தர்கள் அதிகம் பேர் பலியான போதும், தமிழக அரசு அதைப் பெரிதாக கண்டுகொள்ளவில்லை. தேனி கலெக்டர் முத்துவீரன் மட்டுமே குமுளி சென்றார்.

இறந்த தமிழக பக்தர்களின் உடல்களை அவரவர் ஊருக்கு அனுப்பிவைக்கவும், உறவினர்களுக்கு உதவவும் தேனி கலெக்டர் முத்துவீரன் தலைமையில் குழு அமைக்கப்பட்டிருந்தது. பெரியகுளம் ஆர்.டி.ஓ., இளங்கோவன் உட்பட வருவாய்த்துறை அலுவலர்கள் தனியாக உதவி மையம் திறந்து (போன்: 04554-235 254) உதவிகளை செய்தனர். இறந்தவர்களின் உடல்கள் ஆம்புலன்ஸ் மூலம் அவரவர் சொந்த ஊருக்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது. பாலகிருஷ்ணன் எஸ்.பி., மற்றும் அதிகாரிகள் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு உதவிகளை செய்தனர்.

பலியானவர்களில் கர்நாடகாவை சேர்ந்த 25 பேரின் உடல்களை, அம்மாநில அரசு ஹெலிகாப்டர் மூலம் கொச்சி எடுத்துச்சென்று, அங்கிருந்து விமானம் மூலம் பெங்களூரு கொண்டு சென்றது.

ஆந்திராவை சேர்ந்த பலியான 16 பேரின் உடல்களை கொச்சி வழியாக ஐதராபாத் எடுத்துச்செல்ல அம்மாநில அரசு ஏற்பாடு செய்திருந்தது.

இறந்த பக்தர்கள் விபரம்

தமிழகம்

1.ராஜ்குமார் (30), நீலகிரி.

2. கலைமணி (31), தர்மபுரி.

3. முருகேசன் (50),நீலகிரி.

4. ராமர் (58), திருவண்ணாமலை

5.குமரன் (40), தர்மபுரி.

6. கிருஷ்ணபிரசாந்த் (34), ராமலிங்கம் காலனி, சென்னை.

7. செல்வராஜ் (40) திருப்பூர்.

8.ராமலிங்கம் (40), கடலூர்

9.கோவிந்தராஜ் (45), மேட்டுப்பாளையம்.

10.சாந்தமூர்த்தி (23), மதிவாணன்பாளையம்.

11.ஸ்ரீகாந்த் (30), கர்னல்கோடு.

12.ராமகிருஷ்ணன் (55), கோயம்புத்தூர்.

13.அஜீத்குமார் (33) பொள்ளாச்சி.

14.சதீஷ் (34), குமாரசுவாமிபட்டி.

15.தாரணி (39), வியாசபுரம், திருவள்ளூர்

16.அன்பரசு (42), பல்லடம்.

17.பால்ராஜ் (40) தர்மாநகரம், திருநெல்வேலி

18.கேசவன் (49), சென்னை

19.சபரீசன் (27), சீறூர்பட்டி பாளையம்,கோவை

20.கனகராஜ் (50), சத்தியமங்கலம்

21.தர்மராஜ் (10),நாமக்கல்

22.ஐயப்பன் (30), மக்கனூர், தர்மபுரி

23.பழனிச்சாமி (50) செட்டிபாளையம், பேரூர்

24.சுப்பிரமணியன், சின்னகாஞ்சிபுரம்

25. தங்கம், தூத்துக்குடி.

26. ராஜரத்தினம், பொள்ளாச்சி.

27.தேவேந்திரராஜ்,மேட்டுப்பாளையம்

28.கிருஷ்ணன், தர்மபுரி.

29.ராமன், கடலூர்

30.கலைமணி, மதிவாணன்பாளையம், தர்மபுரி.

31.ரகு, மதிவாணன்பாளையம், தர்மபுரி.

32.நந்தினி (11), தொப்பம்பட்டி, கோவை.

33.கனகராஜ், எரியப்பபாளையம், சத்தியமங்கலம்.

34. தரணி, வியாசபுரம், திருவேற்காடு

35.பிரசாத், வாழப்பாடி, சேலம்.

கேரளா

36. உன்னிகிருஷ்ணன் (42),

37. கோர்குட்டி (60) மலப்புரம்,

38. பத்மநாபன், பாலக்காடு.

இலங்கை

39. உஷாகாந்த்(24)

* கர்நாடகாவை சேர்ந்த 25 பேர்,

* ஆந்திராவை சேர்ந்த 16 பேர்

மீதமுள்ளவர்கள் உடல்கள் அடையாளம் காணப்படவில்லை

http://www.tamilfrindz.com/news_detail.php?id=399&v=0

  • கருத்துக்கள உறவுகள்

இவர்களின் ஆத்மா சாந்தியடைய பிராத்தனைகள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.