Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மட்டக்களப்பு நாவலடிக் கிராமம் கடல் அரிப்பால் அழிந்துபோகும் அபாயம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மட்டக்களப்பு நாவலடிக் கிராமம் கடல் அரிப்பால் அழிந்துபோகும் அபாயம்!

Thursday, January 20, 2011, 14:35

அண்மையில் மட்டக்களப்பில் பெய்த கனமழையின் காரணமாக ஏற்பட்ட வெள்ள நீரை வெளியேற்றுவதற்காக கிழக்கு மாகாண முதலமைச்சரினால் வெட்டப்பட்ட முகத்துவாரத்தினாலேயே இந்த விபரீதம் ஏற்பட்டுள்ளது.

கடந்த 2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி பேரலையினால் நாவலடிக் கிராமம் முற்றாக பாதிக்கப்பட்டிருந்தாலும் இவ்வாறான ஒரு பாரிய சேதம் இந்த நாவலடிக்குச் செல்லும் பாதைக்கு ஏற்பட்டிருக்கவில்லை அத்துடன் இந்த வெட்டப்பட்ட இடத்தில் கடல் நீர் நிலத்தை பாரியளவு அரித்து நிலத்தை உள்வாங்கி உள்ளதைக் காணக்கூடியதாக உள்ளது.

கடல் அரிப்பை தடுக்க நாடு பூராகவம் ஏன் உலகம் முழுவதும் பாரிய நடைமுறைகளும் சட்டதிட்டங்களும் இருக்கும்போது எந்தவிதமான ஆய்வுகளையும் மேற்கொள்ளாது எடுத்த எடுப்பில் வெள்ளநீரை வெளியேற்றுவதற்காக நிலத்தை வெட்டியது நமக்கு நாமே அழிவை உண்டுபண்ணியதற்கு சமம் ஆகும்.

வழமையான இடத்தில் நாவலடி முடிவில் முகத்துவாரம் ஒன்று இருக்கின்றது இந்த இடத்தினால் வெள்ளநீர் வடிந்துகொண்டுதான் இருந்தது ஆனால் நீர் வடிவதற்கு ஓரிரு நாள் மேலதிகமாக எடுத்திருக்குமே தவிர முற்றாக நீர்வடியாமல் போய் இருக்காது.

எனவே இவ்வாறான அரசியல் லாபம்தேடும் செயற்பாடானது எந்த வகையிலும் மக்களுக்கு நன்மையை பெற்றுத்தராது என்பதில் ஐயமில்லை. அத்துடன் இந்த பாதையை சீர் செய்வதற்கு பல கோடி ரூபாய்கள் தேவைப்படும் இதை யார் செய்வது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கே முடியாமல் உள்ள இந்த அரசு இவாவாறான பாரிய செலவிலான பாதையை அமைக்குமா? அத்துடன் கடல் நிலத்தினை அரித்து உட்புகுந்துள்ளது இதை யார் சரிசெய்வது.

காலப்போக்கில் இந்த நாவலடிக் கிராமமே இல்லாமல் போகும் அபாயம் ஏற்பட்டுள்ளதைக் காணக்கூடியதாக உள்ளது நாளாந்தம் கடல் அரித்தரித்து உள்வருவதை தற்போது அவதானிக்க முடிகின்றது இதை முதலமைச்சரால் தடுக்கமுடியுமா? இதற்கான பதில் எங்கே ஏங்குகிறார்கள் இப்பகுதி மக்கள்.

tamilthai.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.