Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரபாகரனை தூக்கில் போட சொன்ன ஜெயலலிதாவை நான் ஆதரிக்கவில்லை: சீமான்

Featured Replies

இலங்கையில் ஈழத்தமிழர்களுக்கு எதிராக போர் நடந்த போது ஈழத்தமிழர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க கோரி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட முத்துக்குமாருக்கு வீரவணக்கம் செலுத்தும் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் ஆகியவை நாம் தமிழர் கட்சி சார்பில் நாகையில் நடந்தது.

பொதுக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி தலைவரும், திரைப்பட இயக்குனருமான சீமான் பேசுகையில்,

இலங்கையில் நடந்த ஈழத்தமிழர்களுக்கு எதிரான போரில் 1.75 லட்சம் தமிழ்ச்சொந்தங்களை சிங்களவர்கள் கொன்றனர். 538 தமிழக மீனவர்களை தாக்கி படுகொலை செய்துள்ளனர். போராடியே வாழ வேண்டிய நிர்பந்தத்திற்கு தமிழ் இனம் தள்ளப்பட்டுள்ளது. அடக்குமுறைகளால் இங்குள்ள ஆட்சியாளர்கள் நம்மை அடக்கிவிட முயற்சிக்கின்றனர்.

அடக்குமுறை அதன் வாசலை பெரிதாக்குமே தவிர அடைத்து விடாது. எல்லா துன்ப பூட்டுகளுக்குமான திறவுகோல் ஆட்சி அதிகாரம் என்று அத்பேத்கார் கூறியுள்ளார். அந்த ஆட்சி அதிகாரத்தை நாம் கைப்பற்றுவது தவிர நம் இன விடுதலைக்கு வேறு வாய்ப்பு இல்லை. ஈழச்சொந்தங்கள் மாண்டு மடிந்த போது இங்குள்ளவர்கள் யாராவது கண்ணீர் வடித்ததுண்டா? இந்தியா விரும்பிய போரைத்தான் இலங்கை நடத்தி முடித்திருக்கிறது என்று இலங்கை அதிபர் ராஜபக்சே கூறுகிறார்.

இதற்கு இங்கு மறுமொழி ஏதாவது உண்டா? தமிழ் இனத்திற்கு சீமான் உண்மையாக இருக்கிறான் என்பதால் என் எதிரிகள் என்னை கொல்ல துடிக்கின்றனர். நான் இருந்தால் ஒரு சீமான், செத்தால் இந்த மண்ணில் ஒரு லட்சம் சீமான் உருவாகுவார்கள் என்பதை என் எதிரிகள் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஈழத்தில் நம் தமிழ்ச்சொந்தங்களும், இங்கே மீனவமக்களும் சிந்திய கண்ணீருக்கும், ரத்தத்திற்கும் சிங்களர்கள் பதில் சொல்லும் காலம் நெருங்கி கொண்டிருக்கிறது. சீமான் என்னென்ன வித்தைகள் காட்ட போகிறேன் என்பதை ஐந்து வருடம் பொருத்திருந்து பாருங்கள். எந்த லட்சியத்திற்காக முத்துக்குமார் தன் உடலில் நெருப்பை பற்ற வைத்துக்கொண்டானோ அந்த லட்சியத்தை நிறைவேற்றும் வரை நான் ஓயப்போவதில்லை.

அ.தி.மு.க.வை சீமான் ஆதரிப்பதாக பதறி துடிக்கிறார்கள். அ.தி.மு.க.வை ஆதரிப்பாக நான் சொல்லவில்லை. ஈழத்தமிழர் விடுதலைக்காக போராடிய பிரபாகரனை தூக்கில் போட சொன்ன ஜெயலலிதாவை நான் ஆதரிக்கவில்லை. என் இனத்தை கொன்று குவிக்க காரணமாக அமைந்த காங்கிரஸ் கட்சியை தான் எதிர்க்கிறேன். தந்தை பெரியார், அம்பேத்கார், முத்துராமலிங்க தேவர் உள்ளிட்டவர்கள் எந்த காங்கிரஸ் கட்சியை ஒழிக்க நினைத்தார்களோ, என் தமிழ் இனத்தின் விடுதலையை வீழ்த்திய அந்த காங்கிரசை ஒழிப்பது தான் என் ரத்தத்தில் ஊறிய யுத்தமும், நாம் தமிழர் கட்சியின் கொள்கை முடிவும் ஆகும்.

ஆந்திராவில் தனி தெலுங்கானா கோரி போராடும் சந்திரசேகரராவ் போல் தமிழகத்தில் தன்மான தமிழர்கள் அப்போது இருந்திருந்தால் நம்மிடம் இருந்து கச்சத்தீவு பறிபோயிருக்காது. கச்சத்தீவை இலங்கையிடமிருந்து மீட்பது மட்டுமே நம் மீனவ சொந்தங்களை பாதுகாப்பதற்கான வழி. இதற்காக தமிழர்கள் ஒன்று திரண்டு போராட வேண்டும். நாம் அளிக்கும் வாக்கு நம்மை ஆளவா?, நம்மை நாமே ஆளவா? என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும். சட்டமன்ற தேர்தல் மக்களின் அறிவாயுதம், வாக்கு அதற்கான கருவி. எனவே தேர்தலின் போது விழிப்போடு இருக்க வேண்டும். 2011 லிருந்து 2016 வரை நாம் தமிழர் கட்சி பதுங்கும் புலியாக இருக்கும்.

இடையில் இடைத்தேர்தல் நடைபெறும் சூழல் உண்டாகும் பட்சத்தில் நாம் தமிழர் கட்சி அப்போது களம் காணும். அதுவரை பொறுத்திருக்கும். 2016 ல் தி.மு.க., அ.தி.மு.க.விற்கு மாற்றுச்சக்தியாக நாம் தமிழர் கட்சி தமிழகத்தில் அசைக்க முடியாத அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று சீமான் பேசினார்.

nakheeran.in

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.