Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மகா கொழும்பு கட்டமைப்பு மாற்றங்கள் குறித்து மக்களுக்கு அரசு தெளிவுபடுத்த வேண்டியது அவசியம் மனோகணேசன் கூறுகிறார்

Featured Replies

கொழும்பு மாவட்டத்திலுள்ள கொழும்பு மாநகரசபை தெஹிவளை,கல்கிஸை மாநகரசபை,ஸ்ரீஜயவர்த்தனபுர கோட்டை மாநகரசபை,கொலன்னாவை நகரசபை,கொட்டிகாவத்தை முல்லேரியா பிரதேச சபை ஆகிய ஐந்து உள்ளூராட்சி சபைகள் ஒரே கட்டமைப்பில் கொண்டுவரப்பட்டு மகா கொழும்பு கூட்டுத்தாபனமாக மாற்றப்படவிருப்பதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.இந்த முயற்சிகளுக்கு பின்னால் கொழும்பு தெஹிவளை,கல்கிஸை மாநகரசபைகள்,கொலன்னாவை நகரசபை,கொட்டிகாவத்தை முல்லேரியா பிரதேச சபை பகுதிகளிலே வாழ்ந்து கொண்டிருக்கக்கூடிய தமிழ்,முஸ்லிம் மக்களை குறிவைத்து பாதிக்கும் இரகசிய நோக்கங்கள் இருக்கின்றனவா என்பது தொடர்பில் அரசாங்கம் பதில் அளிக்கவேண்டும்.

கொழும்பு மாவட்டத்திலே வாழும் தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட மிக அதிகமான பிரதிநிதிகளைக் கொண்டுள்ள கட்சியான ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் என்ற முறையில் இதை உறுதிப்படுத்திக்கொள்ள விரும்புவதாகவும் தமிழ் ஊடகங்களும் இது தொடர்பில் அரசாங்கத்தின் தெளிவுபடுத்தலைப் பெற்று தமிழ் மக்களுக்கு அறிவிக்க வேண்டுமென ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோகணேசன் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் மேற்படி அறிவித்தல் தொடர்பில் மனோகணேசன் மேலும் கூறியுள்ளதாவது;

கொழும்பு மாநகரத்தை அண்டியுள்ள உள்ளூராட்சி மன்றங்களை ஒன்றிணைத்து புதிய கட்டமைப்பை உருவாக்குவது என்ற கருத்து புதியது அல்ல.2001 இல் இருந்து இரண்டுவருடம் செயற்பட்ட ரணில் விக்ரமசிங்க அரசாங்க காலத்தில் இத்தகைய ஒரு திட்டம் விவாதிக்கப்பட்டது.அச்சந்தர்ப்பத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் அலரிமாளிகை அலுவலகத்தில் இது தொடர்பில் நடைபெற்ற கலந்துரையாடல்களில் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் நான் கலந்து கொண்டிருந்தேன்.

இந்நிலையில் அரசாங்கம் இன்று கொண்டுவரும் திட்டத்திலே இருக்கக்கூடிய புதிய மாற்றங்கள் எவை என்பதை அறிந்துகொள்வதில் நாங்கள் மிகுந்த அக்கறை கொண்டுள்ளோம்.இது தொடர்பிலே அரசாங்கத்திலே இடம்பெற்றிருக்கும் தமிழ்,முஸ்லிம் அந்தஸ்துள்ள அமைச்சரவை அமைச்சர்களும் இடதுசாரி அமைச்சர்களும் கூடிய கவனம் செலுத்த வேண்டும்.அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கின்றோம் என்ற காரணத்திற்காக தமிழ் பேசும் மக்கள் பாதிக்கப்படுவதை தடுக்காமல் இருப்பது கண்களை விலைபேசி விற்று சித்திரம் வாங்குவதற்கு சமனாகும் என்பதை அரசாங்கத்தில் உள்ள தமிழ்,முஸ்லிம் அமைச்சர்கள் ஏற்றுக்கொள்வார்கள் என நம்புகின்றேன்.

உட்கட்டமைப்பு வசதிகளை மாநகர பகுதியில் அபிவிருத்தி செய்வதையும் மகா கொழும்பு பிரதேசம் மக்கள் வாழ்வதற்கு உகந்த பிரதேசமாக மாற்றப்படுவதையும் நாங்கள் வரவேற்போம்.ஆனால்,இதை ஒரு சாட்டாக வைத்துக்கொண்டு உள்ளூராட்சி மன்றங்களுக்கு நமது பிரதிநிதிகளைத் தெரிவு செய்யும் மக்களின் வாக்குரிமைகளை அரசாங்கம் பறிப்பதற்கு நாம் ஒருபோதும் இடமளிக்க முடியாது.அப்படியான ஒரு முயற்சியை அரசாங்கம் முன்னெடுக்குமானால் அதற்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளுடன் இணைந்து ஜனநாயக மக்கள் முன்னணி அரசியல் ரீதியான போராட்டங்களை முன்னெடுக்கும் என்பதை உறுதிபடக்கூறிவைக்க விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

http://www.thinakkural.com/

மனோ கணேசன் போன்ற அரசியலுக்கு அப்பால் சிந்திக்கத் தெரியாத அரசியல்வாதிகளின் கத்தல் இப்படித் தான் இருக்கும்.

காலநிலை மாற்றம் தொடர்பான சர்வதேச முடிவுகளின்படி சிங்களவன் முக்கிய அரச ராணுவ கட்டமைப்புக்களை கடற்கரைகளிருந்து 4 - 5 km தூரத்திற்கு நகர்த்தி வருகிறான். சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொழும்பில் முதலீடு செய்யத் துடிக்கும் வர்த்தக கம்பனிகளுக்கு கடற்கரை பகுதிகளை பெரும்தொகை பணத்துக்கு விற்றும் வருகிறான்.

கொழும்புத் தமிழர்கள் ஏமாளிகளாக கடற்கரைப் பகுதிகளில் தொடர்ந்தும் வீடுகளை வாங்கி வருகின்றனர்.

கொழும்புத் தமிழர்கள் ஒன்றிணைந்து மலிவாக காணி கிடைக்கக் கூடிய உட்பகுதியில் ஏக்கர் கணக்கில் காணிகளை வாங்கி, வெள்ளவத்தை போன்ற பலமான தமிழர் பகுதியை அமைத்துக் கொள்ளவது நல்லது.

அதுபோல யாழ்ப்பாண, திருமலை தமிழரும் தமது பணபலத்தை பயன்படுத்தி தமது இரண்டாவது வீட்டை, கிளிநொச்சி, மாங்குளம், மல்லாவி, புதுக்குடியிருப்பு, நெடுங்கேணி கந்தளாய், தம்பலகாமம் போன்ற பகுதிகளில் காணிகளை குறைந்த விலைகளில் வாங்கி தமிழினத்தின் உறுதியான இருப்பை பலப்படுத்திக் கொள்ளலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.