Jump to content

கூட்டமைப்பின் 'தீர்வுப் பொதி': அரசைத் திருப்திப்படுத்தவா?


Recommended Posts

இனப்பிரச்சினைக்கு நிரந்தரமான அரசியல் தீர்வைக் காண்பதற்கான தமது யோசனைகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைக்கப்போகின்றது. இம்மாத இறுதியில் அரசுடன் இடம்பெறும் பேச்சுக்களின் போது கூட்டமைப்பின் யோசனைகள் அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கப்படும். கூட்டமைப்பின் யோசனைகள் தமிழ் மக்களுடைய அபிலாஷைகளைப் பிரதிபலிப்பதாக அமைந்திருக்குமா அல்லது அரசாங்கத்தினால் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய ஒரு திட்டமாக அமைந்திருக்குமா என்ற சந்தேகம் அரசியல் வட்டாரங்களில் எழுப்பப்பட்டுள்ளது.

கூட்டமைப்பின் தலைவர்கள் மாறிமாறி தெரிவித்துவரும் கருத்துக்களும், எச்சரிக்கைவிடும் பாணியில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ வெளியிட்டிருக்கும் அறிவிப்பும்தான் இந்தக் கேள்வியை எழுப்பியிருக்கின்றது. இவை இரண்டுக்கும் இடையேயுள்ள இந்தியா வெறுமனே பார்வையாளராக இருக்கப்போகின்றதா அல்லது கூட்டமைப்புக்கு மேலதிக பலத்தைக் கொடுப்பதற்கான நகர்வுகளை முன்னெடுக்குமா என்ற கேள்யும் எழுப்பப்படுகின்றது.

போர் முடிவுக்கு வந்து இரண்டு வருடங்கள் கடந்துள்ள பின்னணியில் இடம்பெயர்ந்த மக்களுடைய அன்றாடப் பிரச்சினைகள் எதற்கும் தீர்வுகாணப்படாது அவர்களுடைய அவலங்கள் தொடர, அரசும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அரசியல் தீர்வின்பால் தமது கவனத்தைச் செலுத்தியுள்ளன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான பேச்சுக்களை அரசாங்கம் உண்மையில் முழுமையான விருப்பத்துடன் நடத்தவில்லை. தமிழர் தரப்புடன் பேச்சுக்களை நடத்துவதோ, தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் அன்றாடப் பிரச்சினைகள் மற்றும் அரசியல் பிரச்சினைக்குத் தீர்வொன்றைக் காண்பதோ அரசாங்கத்தின் நிகழ்ச்சிநிரலில் உள்ள ஒரு விடயமல்ல. இதற்கான ஆணையை அரசாங்கம் சிங்கள மக்களிடம் பெற்றுக்கொள்ளவும் இல்லை. அதனால்தான் கூட்டமைப்புடனான பேச்சுக்களை அரசாங்கம் வேண்டா வெறுப்புடன் முன்னெடுக்கன்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான பேச்சுக்களை அரசாங்கம் ஆரம்பித்த போதே, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இதனைத் தெளிவாகக் கூறியிருந்தார். கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் கருத்தொன்றுக்குப் பதிலளித்த ஜனாதிபதி, "மக்கள் எனக்கு வழங்கியுள்ள ஆணையை நீங்கள் கவனத்திற்கொள்ள வேண்டும்" எனச் சுட்டிக்காட்டினார். இதில் 'மக்கள்' என ஜனாதிபதி ராஜபக்ஷ குறிப்பிட்டது சிங்கள மக்களைத்தான் என்பது புரிந்துகொள்ளக்கூடிய ஒன்றுதான்.

சிங்களக் கடும்போக்காளர்களின் ஆதரவுடன் கடந்த ஜனவரியில் ஜனாதிபதித் தேர்தலையும், ஏப்ரலில் பொதுத் தேர்தலையும் சந்தித்து பெரும் வெற்றியைப் பெற்றுக்கொண்ட ஜனாதிபதி, கடந்த மாதம் இடம்பெற்ற உள்ளுராட்சிமன்றத் தேர்தகளிலும் வெற்றி பெற்றிருக்கின்றார். மேலும் சில உள்ளுராட்சிமன்ங்களுக்கான தேர்தல்கள் மே மாதத்தில் நடைபெறவிருக்கின்றன. இந்த நிலையில் தமிழத் தேசியக் கூட்டமைப்புடனான பேச்சுக்களில் அவரது இறுக்கம் தளரும் என்பது எதிர்பார்க்கக்கூடியதல்ல.

சர்வதேச ரீதியாக உருவாகியிருக்கும் போர்க் குற்றங்கள் தொடர்பிலான நெருக்கடிகள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுக்களை நடத்துமாறு இந்தியா மறைமுகமாகக் கொடுத்துவரும் நெருக்கடிகள் என்பனதான் இந்தப் பேச்சுக்களுக்கு அரசாங்கத்தை நிர்ப்பந்தித்தன. போரினால் இடம்பெயர்ந்தவர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வைக் காண்பதிலும், இனநெருக்கடிக்கு அரசியல் தீர்வைக் காண்பதிலும் தாம் பற்றுறுதியுடன் செயற்படுவதாகக் காட்டிக்கொண்டால், போர்க் குற்றங்கள் தொடர்பிலான அழுத்தங்கள் சற்றுக் குறையும் எனவும் மகிந்த அரசு எதிர்பார்க்கின்றது.

இந்த வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான பேச்சுக்கள் இரண்டு கட்டங்களாக இடம்பெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. முதலாவது கட்டமாக உடனடிப் பிரச்சினைகளுக்குத் தீர்வைக் காண்பது. இரண்டாவது இனநெருக்கடிக்கான நீடித்து நிலைக்கக்கூடிய அரசியல் தீர்வைக்காண்பது. பேச்சுக்களில் காணப்படும் இழுபறி நிலை அரசாங்கத்தின் வேண்டா வெறுப்பான போக்கை வெளிப்படுத்தப்போதுமானது. இதனைவிட கடந்த 3 கட்டப் பேச்சுக்களின் போது இணக்கம் காணப்பட்ட விடயங்கள் எதுவும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. குறிப்பாக தடுப்புக் காவலில் உள்ளவர்களின் பெயர் விபரங்கள் வெளியிடப்படும் எனக் கூறப்பட்டபோதிலும், அது கூட வெளியிடப்படவில்லை.

இந்திய அரசின் ஆதரவுடன் இடம்பெயர்ந்த மக்களுக்காக 50,000 வீடுகள் கட்டப்படும் எனத் தெரிவிக்கப்பட்டபோதிலும், ஐந்து மாதங்களுக்கு முன்னர் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா போட்ட அத்திபாரம் அப்படியே இருக்கின்றது. அந்த அத்திபாரத்துக்கு மேலாக ஒரு கல்கூட வைக்கப்படாததது இடம்பெயர்ந்த மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் இலங்கை, இந்திய அரசுகள் எந்தளவுக்கு அக்கறை கொண்டுள்ளன என்பதற்கான எடுத்துக்காட்டாக உள்ளது.

எதிர்ப்பு அரசியலைக் கைவிட்டு இணக்க அரசியலையே தாம் இனிமேல் கையாளப்போவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தத்துவம்பேசி தமது அணுகுமுறையில் மாற்றங்களைச் செய்துகொண்டுள்ள பின்னரும் எதுவும் நடைபெறவில்லை. மகிந்தவின் மாற்றான்தாய் அணுகுமுறையில் மாற்றத்தை ஏற்படுத்த முடியவில்லை. பதிலாக சிங்கள மக்கள் தமக்கு வழங்கியுள்ள 'ஆணை' பற்றியே அவர் இப்போதும் பேசிக்கொண்டிருக்கின்றார்.

இந்தப் பின்னணியில்தான் அரசியல் தீர்வு யோசனைகளைச் சமர்ப்பிக்கப்போவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இப்போது அறிவித்திருக்கின்றது. கடந்த வாரம் இலங்கையின் பத்திரிகை ஆசிரியர்களைச் சந்தித்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தன்னுடைய அரசியல் தீர்வு யோசனைகளைச் சமர்ப்பிக்காமலிருப்பதுதான் பேச்சுக்களுக்குத் தடையாக இருப்பதாகத் தெரிவித்தார். ஆனால், அரசாங்கம் அரசியல் தீர்வு யோசனைகள் எதனையும் முன்வைக்கவில்லை. ஆனால், கூட்டமைப்பின் மீது இதற்கான குற்றச்சாட்டை ஜனாதிபதி போட்டிருந்தார்.

கூட்டமைப்பு தன்னுடைய தீர்வு யோசனைகளைச் தயாரித்து சமர்ப்பிப்பதற்குத் தயாராகிக்கொண்டுள்ள நிலையில், ஜனாதிபதி வெளியிட்டிருக்கும் இந்தக் கருத்து, கூட்டமைப்புக்கான அழுத்தங்களை மேலும் அதிகரித்திருக்கின்றது. பொலிஸ், காணி அதிகாரங்களை உள்ளடக்கியதான மாகாண சபைத் திட்டம் ஒன்றையே தாம் தயாரித்திருப்பதாக கூட்டமைப்பு தெரிவிக்க, பொலிஸ் அதிகாரங்களை வழங்க முடியாது எனவும், புலிகள் கேட்டதை இனி யாரும் கேட்க முடியாது எனவும் ஜனாதிபதி கடும் தொனியில் பதிலளித்திருக்கின்றார்.

கூட்டமைப்பின் 'பொதி' எவ்வாறான உள்ளடக்கத்தைக் கொண்டதாக இருக்கப்போகின்றது என்பது தொடர்பான ஆர்வத்தை இது அதிகரித்திருக்கின்றது. அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்த்துக்கும் அதிகமாகச் செல்லுமாறு இந்தியா தமக்கு ஆலோசனை வழங்கியதாக கூட்டமைப்பு உறுப்பினர் ஒருவர் தெரிவித்திருப்பது ஜனாதிபதியை எந்தவகையிலும் கட்டுப்படுத்தப்போவதில்லை. இந்தியாவும் இவ்விடயத்தில் கூட்டமைப்புக்கு சில அறிவுறுத்தல்களை வழங்குவதற்கு அப்பால் எதனையும் செய்யப்போவதில்லை என்பதும் உண்மை.

ஜனாதிபதியைப் பொறுத்தவரையில் இந்தியத் தலைவர்களுடனான பேச்சுக்களின் போது 13 வது திருத்தத்துக்கும் அதிகமாகச் செல்வதற்கு தான் தயாராக இருப்பதாகத் தெரிவித்துவந்தாலும், யதார்த்த நிலை அவ்வாறதாக இல்லை. குறிப்பாக 13 ஆவது திருத்தத்தின் முக்கிய அம்சங்களான வடக்கு - கிழக்கு இணைப்பு இப்போது இல்லை. மாகாண சபைகளுக்கு பிரதானமாக இருக்க வேண்டிய பொலிஸ், காணி அதிகாரங்கள் இல்லை. கிழக்கு மாகாண சபை எவ்வித அதிகாரங்களும் இல்லாத ஒன்றாகத்தான் இருக்கின்றது. காணி, பொலிஸ் அதிகாரங்கள் இல்லாத மாகாண சபையைப் பெற்றுக்கொள்வது என்பது தமிழர்களைப் பொறுத்தவரையில் கண்களை விற்று சித்திரம் வாங்குவது போன்றது.

அரசுடன் "இணக்க" அரசியலுக்கும் போயிருக்கும் கூட்டமைப்பு பல இடங்களில் விட்டுக்கொடுப்புக்களை செய்துகொண்டிருக்கின்றது. கூட்டமைப்புத் தரப்பிலிருந்து வெளிவரும் தகவல்களின்படி ஏற்கனவே தமிழர்களால் நிராகரிக்கப்பட்ட 'மாகாண சபை' என்பதைத்தான் பேச்சுக்களுக்கான அடிப்படையாக அது ஏற்றிருக்கின்றது. மாகாண சபை என்பது மக்களால் நிராகரிக்கப்பட்டது என்பதுடன், இனப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வைக் கொண்டுவருவதற்குத் தவறிய ஒரு திட்டமுமாகும்.

உள்ளுராட்சிமன்றத் தேர்தலின் முடிவுகள் சமஷ்டிக்குத் தமிழர்கள் வழங்கிய அங்கீகாரம் என கூட்டமைப்பின் எம்.பி. சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்திருந்தார்.

அப்படியானால் சமஷ்டியை கைவிட்டுவிட்டு எதற்காக இவர்கள் மாகாண சபைகளுக்கு இறங்கிவருகின்றார்கள் என்ற கேள்வியும் தமிழ் வட்டாரங்களில் எழுப்பப்படுகின்றது. சமஷ்டியில் ஆரம்பித்தால்தான் மாகாண சபையில் கொண்டுவந்து முடிக்கலாம் எனக் குறிப்பிடும் தமிழ்ப் புத்திஜீவி ஒருவர் தற்போதுள்ள மாகாண சபையில் தொடங்கினால் அது மாவட்ட சபையில்தான் வந்துமுடியும் எனவும் எச்சரிக்கின்றார்.

கூட்டமைப்பின் தற்போதைய இணக்க அரசியல் என்பது தமிழர்களின் அபிலாஷைகளை அடிப்படையாகக் கொண்ட அரசியல் தீர்வை நாடிச் செல்லாமல், மகிந்த ராஜபக்ஷ அரசாங்கம் ஏற்றுக்கொள்ளக் கொள்ளக்கூடிய அரசியல் தீர்வு ஒன்றை முன்வைப்பதை இலக்காகக் கொண்டதா என்ற கேள்வி எழுவது தவிர்க்க முடியாததாகவே உள்ளது!

- கொழும்பிலிருந்து

பூராயத்துக்காக சத்தியன்

http://pooraayam.com/mukiaya/1461-2011-04-04-03-43-59.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பாரிய கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிட எதிர்பார்க்கிறோம்; சமன் ரத்னப்பிரிய! 27 SEP, 2024 | 05:07 PM (எம்.ஆர்.எம்.வசீம்) வரலாற்றிலேயே  மிகப்பெரிய கூட்டணி அமைத்து பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட எதிர்பார்க்கிறோம். ஐக்கிய மக்கள் சக்தியுடனான கலந்துரையாடலும் சாதகமான நிலைக்கு வந்துள்ளது என ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சமன் ரத்னப்பிரிய தெரிவித்தார். எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கு ஐக்கிய தேசிய கட்சி எடுத்துவரும் நடவடிக்கை தொடர்பில் குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.   இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,  பாராளுமன்ற தேர்தலுக்கு தற்போது அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் எதிர்க்கட்சியில் இருக்கும் அனைத்து கட்சிகளையும் இணைத்துக்கொண்டு தேர்தலுக்கு முகம்கொடுப்பதற்கே எதிர்பார்க்கிறோம்.   நாட்டு மக்களின் எதிர்பார்ப்பும் அவ்வாறு இருப்பதாகவே எமக்கு தோன்றுகிறது. அவ்வாறான பரந்துபட்ட கூட்டணியை அமைக்குமாறே அனைவரும் வற்புறுத்தி வருகின்றனர்.   அதனால் இந்த கூட்டணியை அமைப்பதற்காக தற்போது ஐக்கிய மக்கள் சக்தியுடனான கலந்துரையாடலை ஆரம்பித்திருக்கிறோம்.    அதேபோன்று மொட்டு கட்சியின் பெரும்பான்மை பிரிவினர், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்களுடனும் கலந்துரையாடல் இடம்பெற்று வருகிறது.    ஓரிரு தினங்களில் இந்த கலந்துரையாடல்களை முடிவுக்கு கொண்டுவர முடியுமாகும். அதனால் வரலாற்றில் பெரிய கூட்டணி அமைத்து இந்த பாராளுமன்ற தேர்தலில் பாேட்டியிட முடியுமாகும் என எதிர்பார்க்கிறோம். பல்வேறு தரப்பினர்கள் கட்சிகளுடன் கலந்துரையாடிய விடயங்களை ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுடனும் நாங்கள் கலந்துரையாடினோம்.    ரணில் விக்ரமசிங்கவின் ஆலாேசனையின் பிரகாரம் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இரண்டு தினங்களுக்கு முன்னர் கலந்துரையாடினோம். நேற்றும் கலந்துரையாடினோம்.    அந்த கலந்துரையாடல் சாதகமாக அமைந்துள்ளது. ஆரம்பத்தில் ஐக்கிய மக்கள் சக்தி இந்த பேச்சுவார்த்தைக்கு பின்வாங்கியபோதும் தற்போது அவர்கள் கலந்துரையாடல்களுக்கு இணக்கம் தெரிவித்து, ஆராேக்கியமான பல கருத்துக்களை தெரிவித்திருக்கிறார்கள்.    அதனால் தொடர்ந்தும் அனைத்து தரப்பினருடனும் கலந்துரையாடி எப்படியாவது பாராளுமன்ற தேர்தலில் கூட்டணியாக போட்டியிடவே நாங்கள் எதிர்பார்க்கிறோம்.   கூட்டணி அமைத்து போட்டியிடுவதன் மூலமே எமக்கு தேர்தலில் எதிர்பார்ப்பொன்றை ஏற்படுத்திக்கொள்ள முடியும். எமது ஆதரவாளர்களின் எதிர்பார்ப்பும் அதுவாகும் என்றார். https://www.virakesari.lk/article/194920
    • நிலாமதியவர்களே, படித்துப் பாராட்டியமைக்கு நன்றி. கிறுக்க முயற்சிக்கிறேன்.  நாம்தானே ஓடிவந்துவிட்டோம். எங்கோ ஒதுங்கி ஓடிய காலங்களைத் திரும்பிப்பார்க்கும் போது வெறுமையாய் தெரிகிறது.    நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி சுவியவர்களே, படித்துப் பாராட்டியமைக்கு நன்றி. நீங்களே ஒரு சிறந்த படைப்புகளைப் தருபவர். உங்கள் வரிகள் உற்சாகம் தருவனவாக உள்ளன.  நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி ஈழப்பிரியனவர்களே, படித்துப் பாராட்டியமைக்கு நன்றி. உண்மைதான். ஆனால், சிங்களத்தின் சிந்தனையல்லவா எம்மை ஆக்கிரமித்துள்ளது.  நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
    • ஸ்துமாரி (Stumari) ஸ்துமாரி (Stumari) என்கிற ஜார்ஜியா மொழி வார்த்தைக்கு விருந்தினர் என்ற பொருள்.  இன்றைக்கு இந்த வார்த்தையை நான் தெரிந்து கொள்ள காரணமாக இருந்தது இன்றைய சிறப்பு தினம்! ஆம் இன்றைக்கு உலக சுற்றுலா தினம் - 27 செப்டம்பர் - ஒவ்வொரு வருடமும் இந்த தினத்தினை உலக சுற்றுலா தினமாக, உலகம் முழுவதும் கொண்டாடுகிறார்கள்.  இந்தப் பழக்கம் ஆரம்பித்தது எப்போது தெரியுமா? 1980-ஆம் ஆண்டு. ஒவ்வொரு வருடமும் இந்த தினத்திற்கான நோக்கம் ஒன்று தான் - அது சுற்றுலா. தவிர ஒவ்வொரு வருடத்திற்கான Theme மட்டும் மாறுபடுகிறது.  இந்த வருடத்திற்கான உலக சுற்றுலா தினத்தின் Theme - Tourism and Peace! இந்த வருடம் உலக சுற்றுலா தினம் கொண்டாட தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கும் இடம் Georgia! அதனால் தான் எனக்கும் ஜார்ஜியா மொழியில் இருக்கும் ஸ்துமாரி (Stumari) என்கிற வார்த்தை தெரிந்தது.  அவர்கள் விருந்தினரை கடவுளின் அன்பளிப்பாக கருதுகிறார்கள் (Stumari is a gift of God!). ஸ்துமாரி குறித்த ஒரு காணொளியை பாருங்களேன். சுற்றுலா குறித்த எனது ஆர்வம் குறித்து எனது தொடர்பில் இருக்கும் பலரும் அறிந்திருப்பார்கள். நான் சென்ற சுற்றுலாக்கள் பொதுவாக சராசரியை விட அதிகம் என்றாலும் ஒரு சிலருடன் ஒப்பிடும்போது குறைவு தான் 🙂ஹாஹா…  எத்தனை பயணம் செய்தாலும் இன்னும் வேண்டும், இன்னும் இன்னும் பயணிக்க வேண்டும் என்ற ஆசை மட்டும் குறைவதே இல்லை.  பயணம் மீது ஒரு வெறுப்பு வருவதே இல்லை.  எப்போது பயணிக்க வேண்டும் என்று சொன்னாலும் உடனே மனதில் புத்துணர்வு வந்து விடுகிறது.  சூழல்கள் காரணமாக கடந்த சில மாதங்களாக எந்த வித சுற்றுலாவும் செல்லவில்லை என்றாலும் சுற்றுலா மீதான ஆர்வம் இன்னும் குறையவே இல்லை.  வாழ்க்கையில் இருக்கும் ஒரு ஆசை தொடர்ந்து சுற்றுலா செல்வதும், அந்தப் பயணங்கள் வழி பல விஷயங்களைத் தெரிந்து கொள்வதும் தான்.  வேறு பெரிய ஆசைகள் எதுவும் இல்லை. பார்த்தது கையளவு என்றால் பார்க்காதது உலகளவு.  உலகம் முழுதும் பார்க்க வேண்டும் என்று கூட இல்லை, பாரதம் முழுவதும் பயணித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பதே ஒரு ஆசையாக இருக்கிறது.  இந்த வருடத்தின் உலக சுற்றுலா தினம் குறித்த Concept Note UN தளத்தில் பார்க்கக் கிடைத்தது.  உங்களுக்கு விருப்பம் இருந்தால் அதனை இங்கே படிக்கலாம். இந்தக் குறிப்பின் படி, 2024-ஆம் ஆண்டின் உலக சுற்றுலா தினம், சுற்றுலா மற்றும் அமைதியை உருவாக்குவதற்கான தொடர்பினை சந்திப்பை ஆராய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.  பயணம், கலாச்சார பரிமாற்றம் மற்றும் நிலையான சுற்றுலா நடைமுறைகள், அமைதியை உலகம் முழுவதும் நிலைநிறுத்த எவ்வாறு பங்களிக்க முடியும் என்பதையும் நாடுகளுக்கு இடையேயான மோதல்களுக்கு தீர்வு, நாடுகளுக்கு இடையே நல்லிணக்கம் மற்றும் உலகளவில் அமைதியை மேம்படுத்துதல் ஆகியவற்றை பிரதான நோக்கமாக கொண்டு கொண்டாடப்படுகிறது.  எங்கு பார்த்தாலும் நாடுகளுக்கு இடையே சண்டைகள், அதனால் ஏற்படும் உயிரிழப்புகள் என்று ஒவ்வொரு நாளும் செய்திகளில் படிக்கையில் சுற்றுலா இந்த பிரச்சனைகளுக்கு ஒரு தீர்வாக இருக்க முடியும் என்றே தோன்றுகிறது.   நம் நாட்டில் மட்டுமே எத்தனை எத்தனை சுற்றுலா தலங்கள்? ஒரு பிறப்பில் இவை அனைத்தையும் பார்த்து விட முடியுமா என்ன?  அதனால் எப்போதெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ, அந்த வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டு விட வேண்டும்.  சுற்றுலா/பயணம் மூலம் பல இடங்களை பார்க்க முடியும் என்பதோடு விதம் விதமான மனிதர்களையும் சந்திக்க முடிகிறது.  பல வித அனுபவங்களையும் பயணங்கள் நமக்குத் தருகின்றன.  ஆதலினால் பயணம் செய்ய வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் அதனை பயன்படுத்திக் கொள்ளுங்கள்!  இந்த உலக சுற்றுலா தினத்தில் நமக்கு பயணம் செய்ய கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வோம் என்று தீர்மானம் செய்து கொள்வோம்.  தொடர்ந்து பயணிப்போம்.  பல அனுபவங்களைப் பெறுவோம். பயணம் நல்லது ஆதலினால் பயணம் செய்வீர்! https://venkatnagaraj.blogspot.com/2024/09/World-Tourism-Day-2024.html
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.