Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போர் குற்றவாளி ராஜபக்ஷேவை சர்வதேச நீதிமன்றில் விசாரிக்கவேண்டும் – வைகோ ஆவேசம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

போர் குற்றவாளி ராஜபக்ஷேவை சர்வதேச நீதிமன்றில் விசாரிக்கவேண்டும் – வைகோ ஆவேசம்!

Posted by uknews On April 20th, 2011 at 4:57 am /

குருவிகுளம் அருகே சீகம்பட்டி கிராமத்தில் இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட கிருஷ்ணமூர்த்தியின் படத்துக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

குருவிகுளம் ஒன்றியம், சீகப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ராமசுப்பு மகன் கிருஷ்ணமூர்த்தி. பொறியியல் பட்டதாரியான இவர் ராஜஸ்தானில் மின்னணு பொறியாளராக வேலை பார்த்து வந்தார். கடந்த வாரம் ஊருக்கு வந்த இவர் இலங்கையில் நடந்த தமிழர் படுகொலை குறித்து மனவருத்தத்தோடு இருந்துள்ளார்.

நேற்று முன்தினம் 2 லிட்டர் பெட்ரோல் ஊற்றி உடம்பில் தீ வைத்துக் கொண்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இறந்த கிருஷ்ணமூர்த்தியின் திருவுருவ படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

மகனை இழந்து வாடும் பெற்றோருக்கு நேரில் ஆறுதல் கூறினார். தொடர்ந்து வைகோ செய்தியாளர்களிடம் பேசும்போது,

“ராஜஸ்தானில் இருந்தபோதே கிருஷ்ணமூர்த்தி இலங்கையில் நடக்கும் படுகொலைகளால் மன வருத்தத்தில் இருந்துள்ளார். ஊருக்கு வந்த அவர் ராஜபக்ஷே இப்படி தமிழர்களைக் கொன்று குவிக்கிறாரே என பலரிடம் வருத்தப்பட்டுள்ளார்.நேற்று முன்தினம் உடலில் பெட்ரோல் ஊற்றி தீவைத்து உயிரைத் தியாகம் செய்தார். அவரது மரண வாக்குமூலத்தைக் காவல்துறை பதிவு செய்ய முன்வரவில்லை. அவரது சாவை தற்கொலை என காவல்துறையினர் முடித்துள்ளனர்.

கிருஷ்ணமூர்த்தி எந்தக் கட்சியையும் சேராதவர். இலங்கைத் தமிழர்களுக்காக தன்னைத்தானே தியாகம் செய்துகொண்டவர். வாழவேண்டிய அந்த வாலிபர் தன் உயிரை இலங்கைத் தமிழர்களுக்காக தியாகம் செய்துவிட்டார்.

இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான ராணுவ படுகொலைகள் சொல்லி மாளாது. மருத்துவமனைகள் மீது கூட குண்டுகள் வீசப்பட்டன. செஞ்சிலுவை சங்கம் உதவி செய்ய வந்தபோது அதை இலங்கை அரசு தடுத்தது. முள்ளிவாய்க்காலில் நடந்த படுகொலைக்குப் பின்னர் தமிழ் பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டனர்.

ராஜபக்ஷே ஒரு போர்க் குற்றவாளியாவார். அவரைச் சர்வதேச நீதிமன்றத்தில் வைத்து விசாரிக்க வேண்டும். அதுவரை எங்கள் போராட்டம் ஓயாது. இந்திய அரசும் ராஜபக்ஷேவுக்கு உதவிகரமாக இருந்தது வெட்கக்கேடானது. தங்கச்சிமடத்தில் சமீபத்தில் 4 மீனவர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இந்தியா கிரிக்கெட்டில் இலங்கையை ஜெயித்த நாள் அன்று இந்தச் சம்பவம் நடந்துள்ளது. என்னுடைய பொது வாழ்வில் இதுவரை நான் வெற்றிபெற்றே வந்துள்ளேன்.

இந்தத் தருணத்தில் கூட மதிமுக மீது அனைவரும் நல்ல மதிப்பீடு வைத்துள்ளனர். இன்று (நேற்று) காலை 10 மணிக்கு தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் நீரி நிறுவனம் நடத்தும் ஆய்வுக்காக செல்ல உள்ளேன். இன்று தொடங்கும் ஆய்வு வரும் 23ம் தேதி வரை நடக்கிறது.

ஸ்டெர்லைட் தொடர்ந்து நடத்தப்பட்டு வரும் ஒரு நாசகார தொழிற்சாலையாகும். அப்பகுதியில் வாழும் பொதுமக்களையும், மீனவர்களின் நலனையும் ஸ்டெர்லைட் ஆபத்திலிருந்து பாதுகாக்க தொடர்ந்து பாடுபடுவேன்.”

இவ்வாறு அவர் கூறினார்.நிகழ்ச்சியில் மதிமுக மாவட்ட செயலாளர்கள் நெல்லை மாநகர் பெருமாள், புறநகர் சரவணன், அரசியல் ஆலோசனைக்குழு உறுப்பினர் நிஜாம், வக்கீல் சுப்புரத்தினம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

saritham.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.