Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அனைத்து தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக அடிப்படை மனித உரிமைகள் வழக்கு தாக்கல் செய்யப்பட உள்ளது.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அனைத்து தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக அடிப்படை மனித உரிமைகள் வழக்கு தாக்கல் செய்யப்பட உள்ளது.

07 மே 2011

புதிய மகசீன் சிறையில் இருந்து கைதி ஒருவர் பேசுகிறார்:-

இலங்கையின் சகல சிறைச்சாலைகளிலுமுள்ள (புதிய மகசின், கொழும்பு விளக்கமறியல் சாலை, நீர்கொழும்பு, அனுராதபுரம், வவுனியா, யாழ்ப்பாணம், திருகோணமலை, மட்டக்களப்பு, கண்டி போகம்பரை, ரஜவீரிய, பதுளை) கைதிகளின் விடுதலை தொடர்பாகவும் அவர்களின் நலன்கள் சம்பந்தமாகவும் உடன் நடவடிக்கைகள்அ எடுக்க தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு இணக்கம் வெளியிட்டுள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான சட்டத்தரணி சுமந்திரன், சுரேஸ் பிறேமச்சந்திரன், பொன் செல்வராசா, சிறீதரன், சரவணபவன் பா.அரியநேத்திரன், சீ.யோகேஸ்வரன், மற்றும் சிவசக்தி ஆனந்தன் ஆகியோர் நேற்றுக் காலை புதிய மகசின் சிறைச்சாலைக்கு விஜயம் செய்து கைதிகளுடன் கலந்துரையாடினர்.

அதன்போது அரசியல் கைதிகளினால் முக்கிய கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

குறிப்பாக அரசியல் கைதிகளை காரணமின்றி தடுத்து வைத்திருப்பது தொடர்பாக அடிப்படை மனித உரிமை மீறல் வழக்கொன்றை தாக்கல் செய்வதற்கு சடடத்தரணி சுமந்திரன்; உதவி செய்தல் வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டபோது - இதற்கு வேண்டிய உதவியை தான் செய்வதாகவும் சட்டத்தரணி சுமந்திரன் கைதிகளிடம் உறுதியளித்தார்.

அத்துடன் சகல சிறைச்சாலைகளிலுமுள்ள அரசியல் கைதிகளினதும் அவர்களின் குடும்பங்களினதும் நலன்புரி நடவடிக்கைகளை மேற்கொள்ள ஒரு நலன்புரி சங்கத்தை உருவாக்குவதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு உதவி புரிய வேண்டும் என கேட்டுக்கொண்ட போது - ஏனைய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுடனும் ஆராய்ந்த பிற்பாடு இதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என கூட்டமைப்பால் பதிலளிக்கப்பட்டது.

இதேவேளை சகல அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாகவும் தமிழ் தேசிய கூட்டமைப்பு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்கப்பட்டதற்கு - அரசுடனான அரசியல் தீர்வு விடயமாகப் பேச்சை ஆரம்பித்த அன்றே தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக பேசியதாகவும் தொடர்ந்து அரசுக்கு அழுத்தம் கொடுக்கப்படும் எனவும் பதிலளித்தனர்.

gtn

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.