Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐ. நா பாதுகாப்புச் சபையில் இலங்கை மீது மனித உரிமை மீறல் தொடர்பான குற்றச்சாட்டுக்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஐ. நா பாதுகாப்புச் சபையில் இலங்கை மீது மனித உரிமை மீறல் தொடர்பான குற்றச்சாட்டுக்கள்

12 மே 11 01:51 (GMT)

முன்வைக்கப்பட்டன :

ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் நேற்று இலங்கை மீது மனித உரிமை மீறல் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. 'பொதுமக்களின் பாதுகாப்பு' என்ற தொனிப்பொருளில் நடைபெற்ற கருத்தமர்வில், ஐ.நாவின் அதிகாரிகள் பலரும் இந்தக் குற்றச்சாட்டுகளைச் சுமத்தினர். மனித உரிமை மீறல்களுக்குப் பொறுப்புச் சொல்ல வேண்டிய நிலையில் கொழும்பு அரசு இருக் கின்றது என ஐ.நா. மனித உரிமைகள் சபையின் தலைவர் நவிபிள்ளை தெரிவித்துள்ளார்.

அதிகாரிகள் குற்றச்சாட்டுக்களை அடுக்கியதை அடுத்துக் கோபமடைந்த ஐ.நாவுக்கான இலங்கையின் வதிவிடப் பிரதிநிதி பாலித ஹோகன்ன, பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் இருந்து வெளி நடப்புச்செய்தார். இலங்கை, லிபியா, சிரியா, யேமன், பஹ்ரெய்ன், ஐவரிகோஸ்ட் போன்ற நாடுகளில், பொதுமக்கள் தாக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகவும் இதற்கு இந்த நாடுகளின் அரசுகளே பொறுப்பு என்றும் ஐ.நா. அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பாதுகாப்புச் சபையின் இந்த அமர்வில் கருத்து வெளியிட்ட ஐ.நாவின் மனித உரிமைகள் சபைத் தலைவர் நவிபிள்ளை, சிரியா, இலங்கை, லிபியாவில் உள்ள அரசுகள் மனிதஉரிமை மீறல்களுக்குப் பொறுப்புக் கூற வேண்டிய நிலையில் இருப்பதாகக் கூறினார். இந்த மூன்று நாடுகளிலும் ஐ.நா. அமைதிகாப்புப் படையின் நடவடிக்கைகள் இல்லை என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

இங்கு உரையாற்றிய ஐ.நாவின் அவசர நிவாரணப் பணிகளுக்கான இணைப்பாளர் வலேரி ஆமோஸ், ஐ.நாவின் போர்க்குற்ற அறிக்கையில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளைச் சுட்டிக்காட்டி, இலங்கை அரசு ஐ.நாவுடன் ஒத்துழைக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

பாதுகாப்புச்சபையின் இந்த அமர்வில் ஐ.நாவுக்கான இலங்கை வதிவிடப் பிரதிநிதி பாலித கோஹன்னவும் உரையாற்றினார். தமது சொந்த மக்களைப் பாதுகாப்பதற்கான அடிப்படைப் பொறுப்பைக் கொண்டுள்ள நாடுகளின் அரசுகளின் பங்கை ஐ.நாவும் மனிதாபிமான நிறுவனங்களும் மதித்து நடக்க வேண்டும் என தெரிவித்தார்.

'தமது மக்களைப் பாதுகாக்கும் நடவடிக்கையே நாடுகளின் அடிப்படையான பொறுப்பு. அரசுகளின் இந்தப் பங்கை மதிக்க வேண்டும். ஏனென்றால் பொதுமக்களைப் பாதுகாக்கக் வேண்டியது அவற்றின் அடிப்படைப் பொறுப்பு. ஐ.நாவும் மனிதாபிமான நிறுவனங்களும் அதற்கு உதவ வேண்டும், அதனை மதித்து நடக்க வேண்டும். அந்த நாடுகளின் இறைமைக்கு மதிப்பளிக்க வேண்டும்.

உலகின் பல பாகங்களிலும் உள்ள நாடுகளில் தீவிரவாதம் சவாலாக உள்ளது. இந்த நிலையில் இராணுவ நடவடிக்கைகள் தொடர்பான சட்டங்களை ஒருமுறை மீள் மதிப்பீடு செய்ய வேண்டியது இன்றியமையாதது.

இந்தச் சட்டங்கள் பலவும் அனுமானத்தின் அடிப்படையில் மோதல்களில் சம்பந்தப்படும் அரசுகளின் மரபுவழிப் படைகளையே பொறுப்புள்ளதாக்குகின்றன. ஆனால் அந்தச் சட்டங்களை தீவிரவாதிகள் ஏற்றுக் கொள்வதில்லை. இந்தப் போர்முறை சமச்சீரற்றுள்ளது.

போரின்போது, தீவிரவாதிகளையும் பொதுமக்களையும் சரியான முறையில் கண்டறிவதற்கு இலங்கை கடும் முயற்சிகளை மேற்கொண்டது'' என ஹோகன்ன தனது உரையில் தெரிவித்துள்ளார். அவர் இவ்வாறு உரையாற்றிய போதும், ஐ.நா. அதிகாரிகள் தொடர்ந்தும் இலங்கை அரசு மீது மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களைச் சுமத்தியதால் பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் இருந்து வெளிநடப்புச் செய்தார். எனினும் அவர் வெளிநடப்பு செய்ததற்கான காரணம் குறித்து உத்தியோகபூர்வத் தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.

gtn

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.