Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தவளை தன்வாயால் கெடும்-இது இலங்கை அரசுக்கும் பொருந்தும்

Featured Replies

சரியாக இரண்டு வருடங்களுக்கு முன்னர் முள்ளிவாய்க்காலில் முடிவுக்கு வந்த போரின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்களும், போர்க் குற்றங்களும் இப்போது இலங்கைத் தீவையே ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கின்றன. இலங்கை அரசும், விடுதலைப் புலிகளும் போர்க் குற்றங்களில் ஈடுபட்டதாகக்

கூறும் ஐ.நா நிபுணர்குழுவின் அறிக்கை வெளியான பின்னர், உண்மையில் என்ன செய்வதென்றெ தெரியாத ஒரு நிலைக்குள் இலங்கை அரசு சிக்கிப் போயுள்ளது.

இதன் காரணமாகவே பல குழப்பகரமான முடிவுகள் எடுக்கப்பட்டன. அரசுக்குப் பாதகம் ஏற்படுத்தும் வகையிலான போராட்டங்களை அரசாங்கமே முன்னெடுத்தது.

இப்போதும் கூட அரசாங்கம் சரி அமைச்சர்களும் சரி என்ன செய்கிறார்கள் என்றே சரியாகப் புரிந்து கொள்ள முடியாத நிலைதான் உள்ளது.கடந்தவாரம் அமைச்சர் மேர்வின் சில்வா மேற்குலகிடம் இருந்து ஜனாதிபதியைப் பாதுகாக்க தற்கொலைப்படை ஒன்றுக்குப் பயிற்சி அளித்து தயார்படுத்தியுள்ளதாகக் கூறியிருந்தார்.

தற்கொலை என்பது ஒரு குற்றச்செயல் என்கிறது சட்டம். தற்கொலை செய்ய முனைந்து தோற்றுப் போனவர்கள் நீதிமன்றத்தில் தண்டனைக்கு உள்ளாக்கப்படுவதுண்டு.

ஆனால் ஒரு அரசின் பொறுப்பு வாய்ந்த அமைச்சர், தான் தற்கொலைப்படை ஒன்றுக்குப் பயிற்சி அளித்து தயார்படுத்தியுள்ளதாகக் சர்வசாதாரணமாகக் கூறுகிறார். அதுவும் ஜனாதிபதிக்காக தற்கொலை செய்து கொள்ளப் போவதாக அவர் கூறியுள்ளார்.

இது ஜனாதிபதி மீதான ஆழமான பற்றை மட்டும் காண்பிக்கவில்லை.இலங்கை அரசு எந்தளவுக்கு தீவிரமான எதிர் மனோநிலையில் இருக்கிறது என்பதைப் புடம் போட்டுக் காண்பித்துள்ளது.

போர்க்குற்ற அறிக்கை வெளியான பின்னர், புலிகள் தற்கொலைப் படைகளை வைத்திருந்தார்கள் என்றும், அதனால் நாட்டுக்கு அச்சுறுத்தல் இருந்தது என்றும் கூறிய அரசாங்கத்தின் அமைச்சரே, தானும் ஒரு தற்கொலைப் படையை வைத்துள்ளதாகக் கூறியுள்ளார்.

ஐ.நா.வுக்கும், மேற்குலகிற்கும் எதிராக எதையும் செய்ய முடியாத நிலை ஒன்று வரும் போது, தற்கொலைப் படையினரை ஏவும் நிலைக்கு இலங்கையும் வந்துள்ளது. இதையே தான் புலிகளும் செய்தனர். ஆனால் அவர்கள் செய்தது போர்க்குற்றம் என்று கூறும் அரசாங்கம் இப்போது அதேவழியில் தற்கொலைப் படையினரைத் தயார்படுத்துகிறது.இதைக் கூட வெளியே சொல்லாமல் விட்டிருந்தால் பரவாயில்லை.

இதை வெளியே கொண்டு வரப்போய் இலங்கை மீதான வெறுப்பையும், காழ்ப்புணர்ச்சியையும் தான் அதிகரிக்கச் செய்துள்ளார் மேர்வின் சில்வா. அதுமட்டுமன்றி அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பிரதமர் உள்ளிட்ட அமைச்சர்கள் பலரும் ஐ.நா.வின் அறிக்கையை விமர்சிப்பதற்கான வரைமுறைகளை மீறத் தொடங்கி விட்டனர். இந்த அறிக்கையை ஆதப்பவர்களை வாய்க்கு வந்தவாறு விமர்சிக்கவும் தொடங்கியுள்ளனர்.

இத்தகைய விமர்சனங்கள் பொது இடங்களில் பேசப்படும் நாகரீகமான சொற்களுக்கு அப்பாற்பட்டவையாகவும் அமைந்துள்ளன. தாம் பொறுப்பு வாய்ந்த அரசின் பிரதிநிதிகள் என்பதை மறந்து இவர்கள் வெளியிடும் தரக்குறைவான அறிக்கைகள் மற்றும் கருத்துகள் அரசாங்கத்தைக் காப்பாற்ற ஒருபோதும் உதவப் போவதில்லை.

அரசின் மீதான நன்மதிப்பைக் குறைக்கவே பயன்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் கூட அரச தரப்பினால் இவ்வாறே தரக்குறைவாக விமர்சிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி இந்த அறிக்கை தொடர்பான சுதந்திரமான கருத்தை வெளிப்படுத்த முடியாத நிலைக்கு தமிழ்மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

வேலைவாய்ப்பைக் காண்பித்தும், பதவி உயர்வைக் காண்பித்தும், சலுகைகளின் பேராலும் தமிழ் மக்களின் கருத்துரிமை விலை பேசப்படுகிறது. சொந்தக் கருத்து மறுக்கப்பட்டு அரசின் நலன்களுக்காக அவர்கள் மீது அழுத்தங்கள் திணிக்கப்படுகின்றன.

ஐ.நா. நிபுணர்குழுவின் அறிக்கைக்கு எதி ராக கையெழுத்திடும் போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. இதில் எத்தனை பேர் விருப்பத்துடன் உண்மையை அறிந்து கையெழுத்திட்டனர் என்பது முக்கியமான கேள்வி. அவ்வாறு விருப்பத்துடன் கையெழுத்திடுபவர்களில் எத்தனை பேர் அந்த அறிக்கையை முழுமையாக வாசித்தனர் என்பது அதைவிட முக்கியமான கேள்வி.வடக்கில் இதற்கு எதிரான பேரணிகளை நடத்தப் போவதாக அரசாங்கம் கூறியது.

ஆனால் பின்னர் சர்வதேச அழுத்தங்கள் அதிகத்ததால் அந்த முயற்சிகள் இப்போது கைவிடப் பட்டுள்ளதாகத் தெகிறது. இந்தநிலையில், வடக்கிலும் கையெழுத்து வேட்டை நடத்தப்பட்டுள்ளது.

அங்குள்ள மக்களின் கருத்து என்ன என்பதை அறிந்து கொள்ளாமல், அவர்கள் சுதந்திரமாக அதற்கு ஆதரவளிக்கிறார்களா என்பதைத் தெரிந்து கொள்ளாமல் ஆயுத முனையில் கையெழுத்துகள் பெறப்பட்டுள்ளன.

ஆயுதம் தாங்கிய படையினன் முன்னிலையில் கையெழுத்துப் போடுமாறு நீட்டப்படும் போது எவருமே அதற்கு மறுப்புத் தெவிக்க முடியாது. அப்படி மறுப்பு வெளியிட்டால் அதன் விளைவுகளுக்காக அஞ்சுகின்ற நிலையில் தான் தமிழர்கள் இன்றும் உள்ளனர். அரசாங்கம் திரட்டியுள்ள கையொப்பங் களில் இதுபோன்ற விருப்பமின்றி பெறப்பட்டவை எத்தனை என்பது தெரியாது.

ஆனால் அவையும் கணிசமான எண்ணிக்கையில் இருக்கும் என்பது மட்டும் உறுதி. போர்க்குற்ற அறிக்கையை நிராகத்தல் மற்றும் அதை எதிர்ப்பது என்ற விடயத்தில் அரசாங்கம் எதைச் செய்வதென்று தெரியாமல் குழம்பிப் போயுள்ளது. அதனால் தான் இதுபோன்ற இரு முனைக் கூராயுதங்களை அது கையாள்கிறது. அது தன்னையும் தாக்கும் என்பது அரசுக்குத் தெரியாமல் போய்விட்டது.

எதிர்ப்பை வெளிப்படுத்துவதற்கு மென் போக்கான வழிறைகள், கடும் போக்கான வழிறைகள் என இரண்டு முறைகள் உள்ளன. மென்போக்கான வழிறைகள் எதிர்ப்பை வெளிப்படுத்துவதுடன் நின்று விடும். ஆனால் கடும்போக்கு வழிறைகளைக் கையாள்வது கடும் எதிர்விளைவுகளையும் கொண்டு வந்து விடும்.

இலங்கை அரசு கையாள்வதெல்லாமே கடும்போக்கு வழிறைகள் தான். இந்தப் போர்க்குற்ற அறிக்கையையும், அதன் பின்னால் இருந்த மேற்குலகையும் எதிர்ப்பதில் இலங்கை அரசு கண்மண் தெரியாமல் நடந்து கொண்டுள்ளது.

இது தமிழர் தரப்புகளுக்கு ஒருவகையில் சாதகமானதாகவே உள்ளது. குறிப்பாக பின்லேடன் விவகாரத்தில் இலங்கை அரசின் பெரும்பாலான அமைச்சர்களின் கருத்து, அவரை ஒரு உலகப் பயங்கரவாதி என்ற தோற்றப்பாட்டுக்குள் கொண்டு செல்வதாக இருக்கவில்லை. இவரை விடப் பெரிய பயங்கரவாதியை அழித்துள்ளோம் என்று மார்தட்டுவதற்காகவும், பின்லேடனைக் கொன்ற அமெக்கா வைத் தரக்குறைவாக கருத வைப்பதற்காகவும் பின்லேடனைத் தூக்கிப் பிடிக்கும் காரியத்தில் சில அமைச்சர்கள் இறங்கினர்.

ஜனாதிபதி கூட பின்லேடன் பற்றிய கேள்விக்குப் பதிலளித்த போது ““அவர் இறந்து விட்டார், அவ்வளவு தான்““ என்று மொட்டையாகக் கூறியுள்ளார்.

இது, பின்லேடனின் இறப்பை அவர் விரும்பவில்லையா என்ற தோற்றப்பாட்டை மேற் குலகிடம் ஏற்படுத்தக் கூடியது. ஐ.நா.வைப் பகைக்கும் முயற்சிகள் இப்போது இலங்கையை அந்தரத்தில் கொண்டு போய் நிறுத்தியுள்ளது. அதற்கடுத்து அமெக்கா உள்ளிட்ட மேற் குலக நாடுகளுடனான மோதல் போக்கு அரசை எங்கு கொண்டு போய் நிறுத்தப் போகிறதோ தெயவில்லை.

ஆனால் ஒன்று மட்டும் உண்மை. தவளை தன்வாயால் கெடும் என்பார்கள் .

அதுபோலவே தான் இலங்கை அரசுக்கும் எதிரிகள் வெளியே இல்லை. அதன் வாயும், செயற்பாடுகளும் தான் முக்கியமான எதிரிகளாக மாறியுள்ளன.இந்த உள்ளக எதிகளை அடக்கத் தவறினால் உலகளாவிய எதிர்ப்பையும், சவால்களையும் சந்திக்கும் நிலைக்கு இலங்கையைக் கொண்டு சென்று விடும் என்பதில் சந்தேகம் இல்லை.

http://akkinikkunchu.com/new/index.php?option=com_content&view=article&id=1795:2011-05-15-17-11-57&catid=1:latest-news&Itemid=18

நல்ல கட்டுரை.

நாம் தொடர்ந்தும் செய்ய வேண்டிய வேலைகள் நிறைய உண்டு, தென் சூடானில் மக்கள் போல நாமும் எமது தலைவிதியை நிர்ணயிக்க கூடிய ஒரு மக்கள் கணக்கெடுப்பு வரும்வரை.

அந்த எமது நலனுடன், அமெரிக்க - இந்திய நலன்களை ஒன்றுபட வைக்க வேண்டும்.

  • தொடங்கியவர்

அகொதா நான் தீர்வு கிடைகும் வரை தாமாதிக்க வில்லை..இப்போதே தாயகத்தில் உள்ள மக்களின் பொருளாதார அபிவிருத்திக்கான வேலைகளை தொடங்கி விட்ட்டேன்...

இன்று தாயகத்தில் சிங்களத்தின் அனுமதி இல்லாமல், மக்களுக்கு பயன்தரும் எந்த உண்மையான பொருளாதார நடவடிக்கைகளையும் செய்யும் நிலை என்றே நான் எண்ணுகிறேன். சிங்களம், தமிழர்களின் புலம்பெயர் பணத்து அபகரிக்கவும், அவர்களை யாரையாவது நம்பி வாழும் ஒரு நிலைக்குள் வைத்திருக்க விரும்புகின்றது.

இந்த அமைப்பை போன்று, http://www.fetna.org/index.php?view=details&id=65%3ATop+Ten+Tamil+Entrepreneur&option=com_eventlist&Itemid=34 , புலம்பெயர் தேசங்களில் எமது மக்களை, இளையோரை சொந்த வியாபாரங்கள் செய்ய ஊக்குவிப்பதும் நல்லம்.

தாயகத்தில் நிலைமைகள் மாறி அங்குள்ளவர்கள் தாமே தமது காணி, பொருளாதார அபிவிருத்தி உரிமைகளை பெறும்காலம் வரும்போது இவர்கள் உதவக்கூடும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.