Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சிஎன்என்- ஐபிஎன் தொலைக்காட்சிக்கு கே.பி வழ்ங்கிய பேட்டி-காணொளி இணைப்பு

Featured Replies

இந்திய தொலைக்காட்சி ஒன்றிற்கு( சிஎன்என்- ஐபிஎன் )முதல் தடவையாக தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேச விவகாரப் பொறுப்பாளர் குமரன் பத்மநாதன் வழங்கிய செவ்வி ஒன்றை வழங்கியுள்ளார் அதன் முக்கிய விபரங்கள்

தமிழ் சிங்கள இனங்களுக்கு இடையில் உறவுகளை வலுப்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும், கடந்த கால அனுபவங்களில் பாடங்களை கற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜே.வி.பி, தமிழீழ விடுதலைப் புலிகள் என இந்த சிறிய தீவில் பல்வேறு போராட்டங்கள் இடம்பெற்றுள்ளதாகவும், இவ்வாறான போராட்டங்கள் நிறுத்தப்பட வேண்டியது அவசியமானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.இவ் இரு குழுக்களும் சுதந்திர போராட்டம் நடத்தி அந்தப் போராட்டம் தோல்வியடைந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழகத்தின் முன்னாள் ஆட்சியாளர்களான திராவிட முன்னேற்றக் கழகத்துடன் தமிழீழ விடுதலைப் புலிகள் நெருங்கிய தொடர்புகளைப் பேணியதாக தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேச விவகாரப் பொறுப்பாளர் குமரன் பத்மநாதன் தெரிவித்துள்ளார்.

இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னர் உலக நாடுகளின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டதாகவும், நாடுகள் பிளவடைவதனை சர்வதேச சமூகம் விரும்பவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் ஒத்துழைப்பின்றி யுத்தத்தை முன்னெடுக்க முடியாது எனவும், இந்தியா அரசாங்கத்துடன் புலிகள் முறுகலை ஏற்படுத்திக் கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சேதங்கள் அதிகரிக்க அதிகரிக்க மக்கள் விரக்தி அடைந்ததாகவும், இதனால் மக்களின் ஆதரவு குறைவடைந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

உலக நாடுகளின் நிலைப்பாடு, இந்திய எதிர்ப்பு மற்றும் மக்களின் ஆதரவின்மை ஆகிய காரணிகளே யுத்தத்தில் புலிகள் தோல்வியைத் தழுவ ஏதுவாக அமைந்ததென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

2006ம் ஆண்டில் சுதந்திர போராட்டத்தை ஏற்றுக் கொள்ளுமாறு உலக நாடுகளிடம் பிரபாகரன் கோரிய போதிலும், தனியொரு நாடேனும் இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொள்ளவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சமரச தீர்வுகளை நோக்கி நகருமாறு உலக நாடுகள் வலியுறுத்தி வந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறெனினும், தமிழீழ விடுதலைப் புலிகள் நெகிழ்வுத் தன்மையுடன் செயற்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நிபுணர் குழு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதனைப் போன்று இரண்டு தரப்பினரும் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாகவும், கடந்தவை கடந்தவையாகவே இருக்கட்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்

இந்த அறிக்கையின் மூலம் எவரும் நன்மை அடையப் போவதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

உலகில் நல்ல யுத்தம் கெட்ட யுத்தம் என்றில்லை எனவும், யுத்தத்தின் போது உயிர்கள் பலியாவது வழமையானதே எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

புலம்பெயர் தமிழ் மக்கள் இலங்கை தமிழ் மக்களுக்காக உதவிகளை வழங்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

தற்போது வன்னியில் வாழும் மக்களிடம் 13ம் திருத்தச் சட்டம் மற்றும் அதிகாரப் பகிர்வு பற்றி பேசுவதில் அர்த்தமில்லை. அவர்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்ய முயற்சி எடுக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

வன்னி மக்கள் உணவு, உறையுள் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை பிரச்சினைகளை எதிர்நோக்கி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

புலம்பெயர் தமிழ் மக்கள் சொகுசான வாழ்க்கையை வாழ்ந்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் மீளவும் யுத்தம் ஏற்படுவதற்கு இடமளிக்க முடியாது அவ்வாறு யுத்தத்தை மேற்கொள்ள நான் இடமளிக்க மாட்டேன், யுத்தம் மேற்கொள்ள வேண்டுமாயின் என்னை கொல்ல வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டை விட்டு வெளியேறினால் புலி உறுப்பினர்களை பாதுகாப்பாக அழைத்துச் செல்லத் தயார் என ஐ.நாவும், வெளிநாட்டு அரசாங்மொன்றும் இறுதிக் கட்ட யுத்தத்தின் போது தெரிவித்திருந்தன.

கப்பல் மூலமாக சிரேஸ்ட விடுதலைப் புலித தலைவர்களை காப்பாற்ற முனைப்பு காட்டப்பட்டது, எனினும் அது காலம் கடந்த முயற்சியாகும்.

இராணுவ ரீதியில் பலப்படுத்திக் கொள்ளும் நோக்கில் சமாதான பேச்சுவார்த்தைகளை புலிகள் மேற்கொண்டனர் என அவர் தெரிவித்துள்ளார்.

இந்திரா காந்தி ஆட்சி நடத்திய காலத்தில் இலங்கை அமெரிக்காவுடன் நெருங்கிச் செயற்பட்டதாகவும், இதனால் இந்தியா இலங்கையில் குழப்பங்களை ஏற்படுத்த ஆர்வம் காட்டியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ராஜீவ் காந்தியை படுகொலை செய்யும் திட்டத்தை பிரபாகரனும், பொட்டு அம்மானுமே தீட்டினர் எனவும், புலிகளினால் மேற்கொள்ளப்பட்ட தவறுக்கு காந்தி குடும்பத்திடம் தாம் மன்னிப்பு கோருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசியல்வாதிகளும், மக்களும் இலங்கை மக்களுக்கு உதவி வழங்க விரும்பினால் ஒரு வாரத்திற்குள் அபிவிருத்தியை ஏற்படுத்த முடியும், எனினும், தமிழக அரசியல்வாதிகள் அரசியல் நோக்கங்களுக்காக இலங்கைப் பிரச்சினையைப் பயன்படுத்திக் கொண்டனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக அரசியல்வாதிகள் பிரபாகரனை பிழையாக வழிநடத்தியதாகவும் இதனால் பிரபாகரன் ராஜீவ் காந்தியை படுகொலை செய்ய துரித தீர்மானம் எடுத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ராஜிவ்காந்தி படுகொலை விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் தவறு என்றும் அவர் கூறியுள்ளார். இது பிரபாகரனும் பொட்டுஅம்மானும் மிகவும் நன்றாகத் திட்டமிட்டு நடத்தியதென்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை தான் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“இந்திய மக்களுக்கு- குறிப்பாக ராஜிவ்காந்தி குடும்பத்தினருக்கு நான் சொல்ல விரும்புவது, பிரபாகரனின் தவறுக்காக நான் மன்னிப்புக் கோருகிறேன்.

தயவுசெய்து எங்களை மன்னித்து விடுங்கள். உங்களை நாம் வேண்டிக் கொள்கிறோம். இதற்காக எல்லோரும் மன்னியுங்கள்.

ராஜிவ்காந்தியின் மகன்- மகளின் உணர்வுகளை நாம் புரிந்து கொள்கிறோம். சிறிலங்காவில் உள்ள தமிழர்கள் ஏற்கனவே அதிக விலை கொடுத்து விட்டார்கள். இனிமேல் எதையும் இழக்கக் கூடாது. தமிழர்களுக்கு உதவ வேண்டும்“ என்றும் பத்மநாதன் மேலும் கூறியுள்ளார்.

திராவிடக் கொள்கைகளின்அடிப்படையில் பிராமணர்களுக்கு எதிராக செயற்பட பிரபாகரன் உந்தப்பட்டதாகவும், இதனால் பிரபாகரன் ராஜீவ் காந்தியை கொலை செய்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் உறுப்பினர்களுடன் புலிகள் நெருங்கிய தொடர்பினைப் பேணியதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா படித்த புத்திசாலியான ஆட்சியாளர் என குமரன் பத்மநாதன் புகழ்ந்துள்ளார் ஜெயலலிதாவினால் வன்னி மக்களுக்கு உதவிகளை வழங்க முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

வன்னி அநாதரவான சிறுவர் சிறுமியருடன் காலத்தை கழிப்பதற்கு தாம் விரும்புவதாகவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை வழங்க விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

காணொஈயை பர்க்க.....

http://akkinikkunchu.com/new/index.php?option=com_content&view=article&id=1846:2011-05-24-02-14-43&catid=1:latest-news&Itemid=18

முதலமைச்சர் ஜெயலலிதா, "இலங்கையின் போற்குற்றங்களை விசாரிக்கும் முயற்சிகளை முன்னெடுப்பேன்", என்று வாயளவிலாவது வெளிப்படையாக சொன்ன நிலையில் அதை முறியடிக்க இலங்கை இந்திய அரசுகளுக்கு இருக்கும் சிறந்த வழி இது தான்: " புலி உள்ளது, அது தான் இராஜீவை கொன்றது" என்று கூறுவதன் மூலமே இந்த நாடுகள், சோனியாவின் இந்தியா - மகிந்தரின் சிங்களம், பிழைக்க முடியும்.

அதே நேரம் புலம் பெயர் மக்களின் இடையே குழப்பத்தை ஏற்படுத்தி அவர்கள் சிங்கள அரசுக்கு எதிராக எடுக்கும் போர்க்குற்ற முயற்சிகளை பலவீனமாக்குவதே அடுத்த நோக்கம்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழக அரசியல்வாதிகளும், மக்களும் இலங்கை மக்களுக்கு உதவி வழங்க விரும்பினால் ஒரு வாரத்திற்குள் அபிவிருத்தியை ஏற்படுத்த முடியும், எனினும், தமிழக அரசியல்வாதிகள் அரசியல் நோக்கங்களுக்காக இலங்கைப் பிரச்சினையைப் பயன்படுத்திக் கொண்டனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக அரசியல்வாதிகள் பிரபாகரனை பிழையாக வழிநடத்தியதாகவும் இதனால் பிரபாகரன் ராஜீவ் காந்தியை படுகொலை செய்ய துரித தீர்மானம் எடுத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

திராவிடக் கொள்கைகளின்அடிப்படையில் பிராமணர்களுக்கு எதிராக செயற்பட பிரபாகரன் உந்தப்பட்டதாகவும், இதனால் பிரபாகரன் ராஜீவ் காந்தியை கொலை செய்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் உறுப்பினர்களுடன் புலிகள் நெருங்கிய தொடர்பினைப் பேணியதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா படித்த புத்திசாலியான ஆட்சியாளர் என குமரன் பத்மநாதன் புகழ்ந்துள்ளார்

சிறிலங்கா அரசின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் ஒருவர் இந்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் தொலைக்காட்சிக்கு செவ்வி வழங்குகிறார். பிராமண சமுகத்தினைச் சேர்ந்த ஜெயலலிதா தற்பொழுது தமிழகத்து முதல் அமைச்சர்.

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் பிராமணருக்கு எதிராகச் செயற்பட்டார். திமுக உறுப்பினர்கள் விடுதலைப்புலிகளுடன் நெருங்கிய தொடர்பு உடையவர் என்ற கருத்துக்கள் இங்கே விதைக்கப்பட்டிருக்கின்றன.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.