Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தனக்குத் தனக்கு என்றால் சுளகு படக்குப் படக்கு என்று அடிக்குமாம்

Featured Replies

ஐ.நா. வின் போர்க்குற்ற அறிக்கையை நிராகக்கும் இலங்கை அரசின் அமைச்சர்கள், அதிகாரிகள் எல்லோருமே அரச படையினர் ஒழுக்கம் நிறைந்தவர்கள் என்றும், அவர்கள் ஒருபோதும் போர்க்குற்றங்களில் ஈடுபட்டிருக்கவில்லை என்றும் வாதிட்டு வருகின்றனர்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தொடக்கம், ஆளும்கட்சி சார்ந்த பிரதேச உறுப்பினர்கள் வரை இப்படித் தான் கூறுகின்றனர்.

அரச படையினர் ஒழுக்கம் நிறைந்தவர்களாக இருப்பதால் போர்க் குற்றங்கள் நிகழ்ந்திருக்க வாய்ப்பில்லை என்ற வகையில் அவர்களின் கருத்துகள் அமைந்துள்ளன.

ஆனால், உண்மையில் அரச படையினர் ஒழுக்கத்துடன் உள்ளனரா என்ற கேள்வியை எழுப்ப வைக்கும் சம்பவங்கள் அவ்வப்போது நடந்து வருகின்றன.

இப்போதெல்லாம் நடக்கின்ற பெரும்பாலான கொலைகள், கொள்ளைகள் போன்ற குற்றங்களில் கைதாகின்ற பெரும்பாலானவர்கள் அரச படையினராகத் தான் இருக்கின்றனர்.

அதுமட்டுன்றி கடந்தவாரம் மாத்தறை மாவட்ட நீதிபதியை ஒரு இராணுவ கோப்ரலும், சக படையினருமாகத் தாக்கியுள்ளனர்.இதில் 15 படையினர் வரை சம்பந்தப்பட்டுள்ளதாகக் கூறி அவர்களை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதன் பின்னர் மறுநாள் இராணுவத்தினரைக் கண்டித்து சட்டத்தரணிகள் பேரணி ஒன்றை நடத்தினர்.இதன்போது, நீதிபதியைப் படையினர் தாக்கிய சம்பவமானது படையினர் மீதான போர்க் குற்றச்சாட்டுகளை நிரூபிக்கும் வகையில் அமைந்துள்ளதாக ஒரு சட்டத்தரணி கூறியுள்ளார்.

இதற்கு முன்னர் ஹொரண பகுதியில் நடந்த மோதல் சம்பவம் ஒன்றில் விசேட அதிரடிப் படையினர், விமானப்படையினர் என்று 40 இற்கும் அதிகமான படையினரை நீதிமன்றம் கைது செய்ய உத்தரவிட்டது.

இந்த நிலையில் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அமைப்பாளர் சுஜீவ பண்டார, கடந்த வாரம் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் அரச படையினன் பாலியல் வெறிக்கு பல்கலைக்கழக மாணவர்கள் இரையாகலாம் என்று கூறியிருந்தார்.

படை முகாம்களில் இத்தகைய பாலியல் குற்றங்கள் நடப்பதாக செய்திகள் வருவதைச் சுட்டிக்காட்டி அதுபோன்ற நிலை மாணவர்களுக்கு ஏற்படலாம் என்றும் அச்சம் வெளியிட்டிருந்தார்.

இவையெல்லாம் அரச படையினன் ஒழுக்கம் பற்றிய கேள்விகளை எழுப்ப வைக்கின்ற நிகழ்வுகளாகும். ஒரு பக்கத்தில் அரசாங்கம் போல் படையினர் எந்தக் குற்றங்களையும் இழைக்கவில்லை என்று கூறி அவர்களைக் காப்பாற்ற முனைகிறது. இன்னொரு பக்கத்தில் அரச படையினன் ஒழுக்கத்தைப் பற்றிக் கேள்வி எழுப்ப வைக்கும் நிகழ்வுகள் நடந்தேறுகின்றன.

இவையெல்லாம் ஒன்றுக்கொன்று முரண்பாடானவை.

ஒரே மொழி பேசும் மக்கள் வாழும், தாம் சார்ந்து வாழும் பிரதேசத்திலேயே ஒழுக்கத்துடன் நடந்து கொள்ள முடியாத படையினரால், போர் முனையில் அதுவும், முற்றிலும் வேறுபட்ட மொழி, அரசியல் பின்னணி கொண்ட மக்கள் மத்தியில் எப்படி ஒழுக்கத்துடன் செயற்பட்டிருக்க முடியும்?

இது சாத்தியமானதா என்ற கேள்வி வலுவாக எழுகிறது. அரச படையினர் ஒழுக்கமற்றவர்கள் என்று இங்கு குற்றம்சாட்டுவது ஒன்றும் தமிழர் தரப்பு அல்ல.

அவர்களைப் போர்க் குற்றங்களில் இருந்து பாதுகாக்க முற்படுகின்றவர்கள் தான் இந்தப் போராட்டங்களை எதிர்க்குரலை எழுப்பியுள்ளனர். ஐ.நா.வின் போர்க் குற்ற அறிக்கைக்கு எதிராக 10 இலட்சம் கையெழுத்துகள் திரட்டப்பட்டுள்ளன.

அவை இந்தவாரம் ஐ.நா.விடம் ஒப்படைக்கப்படவுள்ள நிலையில், அதில் படையினருக்கு ஆதரவாக ஒப்பமிட்டவர்கள் கூட இந்த எதிர்ப்பு பேரணிகளில் பங்கேற்றனர்.

தனக்குத் தனக்கு என்றால் சுளகு படக்குப் படக்கு என்று அடிக்குமாம் என்ற பழமொழி தான் இங்கு நினைவுக்கு வருகிறது.

போன் போது எந்தக் குற்றத்தையும் படையினர் செய்திருக்க மாட்டார்கள் என்று உறுதியாக நம்பும் மக்கள் தான், தமக்கு அவர்களால் பிரச்சினை வரும்போது அவர்களுக்கு எதிராகப் போராட்டம் நடத்துகிறார்கள் ஒழுக்கமற்றவர்கள் என்று விமர்சிக்கின்றார்கள். அதுவும் போர்க் குற்றங்களை நிராகத்தவர்களின் வாயாலேயே படையினர் ஒழுக்கமற்றவர்கள் என்று குறை கூறப்படுகிறது.

இங்கு தான் அரசியல் ரீதியான, இனரீதியான பார்வை வேறுபடுத்தப்படுகிறது. தமிழர் மீது இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று கூற முன்வராத தரப்பினர் கூட தமக்குப் படையினரால் இடையூறு வந்தவுடன் போராட்டங்களில் இறங்குகின்றனர்.

வன்னியில் நடந்த போரின் இறுதிக் கட்டங்களில் ஏராளம் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றன என்பது வெளிப்படை. இந்த நிலையில் இராணுவத் தளபதி லெப். ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய சொல்கிறார் தமக்கு எதிராக எந்தப் போர்க் குற்றத்தையும் ஐ.நா.வின் அறிக்கை சுமத்தவில்லை என்று. அப்படியானால் யார் போரை நடத்தியது யார் வன்னியைப் பிடித்தது என்ற கேள்விகள் வருகின்றன.

விமானத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதும், பீரங்கித் தாக்குதல் நடத்தப்பட்டதும் படையினரால் தான் என்பதை யாரும் மறுக்க முடியாது. இதைச் செய்யாமல் போரை நடத்தி வெற்றி பெற்றதாகக் கூறினால் யாருமே நம்பமாட்டார்கள்.

போரின் போது மனித உரிமைகள் மீறப்படுவது வழக்கமானது தான். ஆனால் அதற்காக அந்தக் குற்றங்களை யாரும் நியாயப்படுத்த முடியாது. அதையெல்லாம் யாரும் கேள்வி கேட்க டியாது என்று கூறவும் முடியாது. போரின் போது குற்றங்கள் ஏதும் நிகழவில்லை என்று வாதிடும் தரப்பினர் வெறுமனே அது சார்ந்து சிந்திக்கின்றனரே தவிர, அதனால் பாதிக்கப்பட்ட மக்களின் நிலையில் இருந்து சிந்திக்கவில்லை.

இத்தகைய நிலை தான் நல்லிணக்கத்துக்கு மிகப் பெரிய தடையாக அமைகிறது. போர் ஒன்றை நடத்தி இலட்சக்கணக்கான மக்களை நடுத்தெருவுக்கு கொண்டு வந்து, ஆயிரக்கணக்கானோன் மரணங்களுக்கு காரணமாக இருந்து விட்டு ஒன்றுமே நடக்கவில்லை என்றால் அதைச் சகிக்கின்ற அளவுக்கு தமிழர்களிடம் பொறுமை இருக்கும் என்று எதிர்பார்க்க முடியாது.

ஆனால் அத்தகையதொரு பிரதிபலிப்பையே தென்பகுதி மக்களும் சரி, அரசாங்கம் சரி எதிர்பார்க்கிறது. போரின் போது எந்தக் குற்றத்தையும் படையினர் இழைக்கவில்லை.

ஒருவரைக் கூட அவர்கள் கொல்லவில்லை என்று கூறுவதன் மூலம் நல்லிணக்கம் வந்து விடாது.

அத்துடன் படையினர் மீதான குற்றச்சாட்டுகளும் முடிவுக்கு வந்து விடாது. இந்தக் குற்றச்சாட்டுகளை முறியடிக்க நாடு நாடாக அலைய வேண்டியதில்லை.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கம் நியாயம் வழங்கினாலே போதும். நீதியை நிலைநாட்டும் வகையில் உண்மைகளை ஒப்புக்கொண்டாலே பெரிய பிரச்சினைகளைத் தவிர்த்துக் கொள்ளலாம். ஆனால் அதைச் செய்வதற்கு அரசாங்கம் தவறியுள்ளது. ஒவ்வொரு நாடுகளாகத் தூது அனுப்பி ஆதரவு தேடுகின்றது.

இலங்கை அரசுக்கு முன்னெப்போதையும் விட இப்போது தான் படையினன் ஒழுக்கம் அவசியம் என்ற உண்மை புரியத் தொடங்கியுள்ளது. அத்தனகலையில் கடற் பயிற்சி பெற்றவர்களின் அணிவகுப்பில் கடந்தவாரம் உரையாற்றிய அமைச்சர் பஷில் ராஜபக்ஷ, புதிய உலகின் சவால்களைச் சமாளிக்க ஒழுக்கம், தேர்ச்சியும் மிக்க படையினரே தேவைப்படுவதாகக் கூறியிருந்தார்.

அரச படையினர் ஒழுக்கத்துடன் இருந்ததால் தான் உலகின் சவால்களை முறியடிக்க முடிந்தது என்று அவரால் துணிந்து கூற முடியவில்லை.

உலகின் சவால்களை முறியடிக்க ஒழுக்கம் நிறைந்த படையினர் தேவை என்று தான் அவர் கூறியுள்ளார். இதிலிருந்து புரிந்து கொள்ளக் கூடியது அரச படைகளுக்குத் தேவைப்படுவது ஒழுக்கம் என்பதேயாகும்.

http://akkinikkunchu.com/new/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.