Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அரசிடம் உண்மையான அதிகாரம் இல்லை என்பது தற்போது அம்பலம்

Featured Replies

தனியார் ஓய்வூதியச் சட்டமூலத்தினை அரசாங்கம் வாபஸ் பெற்றமை தொழிலாளர்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும். அரசாங்கத்திடம் உண்மையான அதிகாரம் இல்லை என்பது இதிலிருந்து தற்போது அம்பலமாகிவிட்டது.

அரசாங்கத்தின் அதிகாரத்துக்கு அப்பால் பலமான சக்தி, அதிகாரம் மக்களிடத்தில் இருக்கின்றது என்பது தெளிவாகின்றது என்று ஜே.வி.பி.யின் செயலாளர் ரில்வின் சில்வா தெவித்தார். பாரியளவான நிதி பிரச்சினைக்கு முகம் கொடுத்து கொண்டிருக்கின்ற அரசாங்கம் தனியார் வங்கிகளில் வைப்பிலிடப்பட்டிருக்கும் நம்பிக்கை நிதியில் 40 வீதத்தினை அரச வங்கிகளுக்கோ அல்லது திறை சேரி பிணை முறிகளுக்கோ மாற்றிக்கொள்வதற்கு முயற்சிக்கின்றது. அதற்காக தனியார் ஊழியர்களுக்கான ஓய்வூதிய திட்டத்கை வேறு வழியில் முன்னெடுக்க முயற்சிக்கிறது.

இத்தகைய நடவடிக்கைக்கு முயல வேண்டாமென எச்சரிக்கை விடுக்கின்றோம் என்றும் அவர் கூறினார். கட்டுநாயக்க சம்பவத்தில் பலியான இளைஞனுக்கு பலரும் அனுதாபம் தெரிவித்தனர். நாம் அனுதாபம் தெரிவித்து சுவரொட்டிகளை ஒட்டினோம். எனினும் சுவரொட்டிகளை ஒட்டிக்கொண்டிருந்த முன்னணியை சேர்ந்தோர் கைது செய்யப் பட்டனர்.

இவ்வாறான நிலையில் இந்த அரசாங்கம் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு மட்டுமன்றி சுவரொட்டிகளுக்கும் அஞ்சுகின்றது. சுவரொட்டிகளை கண்டால் அரசாங்கத்தின் கால்கள் நடுங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

மக்கள் விடுதலை ன்னணியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற விஷேட ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெவித்தார்.அங்கு அவர் தொடர்ந்து தெவிக்கையில், ஊழியர் ஓய்வூதிய நன்மைகள் நிதியச் சட்டமூலத்தினை அரசாங்கம் வாபஸ் பெற்றுக் கொண்டுள்ளது. உண்மையில் அது ஓய்வூதிய சட்ட மூலம் அல்ல சர்வதேச நாணய நிதியத்தின் ஆலோசனையின் பிரகாரம் அரசாங்கத்தின் நிதி பிரச்சினைக்கு பதிலாகவே இச் சட்ட மூலத்தை கொண்டுவருவதற்கு அரசு முயற்சித்தது.

சட்ட மூலம் தொடர்பில் தொழிலாளர்கள் மத்தியில் மக்கள் விடுதலை முன்னணி மிகவும் பலமான மற்றும் தர்க்கிக்கும் வகையிலான எண்ணத்தை கொண்டுசென்றது.

சட்டமூலத்தில் இருக்கின்ற அபாயகரமான தவறுகள் என்ன? தனியார்துறை ஊழியர்களை அது எவ்வாறு தாக்கத்திற்கு உட்படுத்தும் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் விவாதிக்கும் சிந்தனைகளை கொண்டு சென்றோம்.

யார் எதிர்ப்பு தெவித்தாலும் சட்ட மூலத்தை நிறைவேற்றிக்கொள்வோம் என்று மே தினத்தன்று ஜனாதிபதி கூறியிருந்தார். எனினும் அந்த சட்ட மூலத்தை அரசாங்கம் வாபஸ் பெற்றுக்கொண்டது. இதுவே தொழிலாளர்கள் பெற்றுக்கொண்ட பெரிய வெற்றியாகும். அரசாங்கத்திற்கு உண்மையான அதிகாரம் இல்லை என்பது இதிலிருந்து அம்பலமாகிவிட்டது. தேர்தலில் கிடைத்த அதிகாரம் உண்மையானது அல்ல பொய்கூறி பெற்றுக்கொண்ட அதிகாரம். அதேபோல இலஞ்சம் கொடுத்து பாராளுமன்றத்திற்குள் ஏற்படுத்தி கொள்ளப்பட்ட மூன்றிலிரண்டு பெரும்பான்மையாகும். இவையெல்லாம் உண்மையான அதிகாரம் இல்லை.

அதற்கு அப்பால் பலமான சக்தி, அதிகாரம் மக்களிடத்தில் இருக்கின்றது. என்பது தெளிவாகிவிட்டது. எந்தவிதமான முறைக் கேடான தீர்ப்பையும் தோல்வியடை செய்வதற்கு மக்களால் அமைப்பாக திரள முடியும் என்ற செய்தி நாட்டிற்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்த போராட்டத்தில் பல்வேறு தரப்பை சேர்ந்த நபர்கள் மற்றும் குழுக்கள், பல் வேறு அமைப்புகள் மத்தியிலும் அரசாங்கத்திற்கு சார்பாக செயற்படுகின்ற ஊடகங்களை தவிர ஏனைய ஊடகங்களும் இந்த போராட்டத்தின் பக்கம் செயற்ப்பட்டன.

அவ்வாறானவர்களின் அர்ப்பணிப்பினால் தான் தொழிலாளர்களால் வெற்றியை பெற்றுக்கொள்ள முடிந்தது.

சட்டமூலத்தை வாபஸ் பெற்றுக் கொண்டமை மக்கள் பெற்ற விசாலமான வெற்றி என்பதுடன் அரசாங்கத்தின் படுதோல்வியாகும். அரசாங்கத்தின் தோல்வி ஆரம்பமாகிவிட்டது என்பதனையே நாம் இதிலிருந்து காண்கின்றோம். இந்த தோல்வியின் வலியை மற்றும் வெட்கத்தை மூடி மறைப்பதற்கு அரசாங்கம் மிகவும் அபாயகரமான சட்டவிரோத நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

சாதாரண பண்பாட்டிற்கு புறம்பான செயற்பாடுகளுக்குள் தலையிட்டுள்ளது. இந்த போராட்டத்தில் சுதந்திர வர்த்தக வலயத்தை சேர்ந்த இளைஞர் பலியானார். அது தொடர்பில் சகலரும் கவலைகொண்டனர். எனினும் அரசாங்கம் அந்த இளைஞனை பலியெடுத்தது மட்டுமன்றி அவன் இறுதிக் கிரியையை சுதந்திரமாக செய்வதற்கு அவரது குடும்பத் தினருக்கு இடமளிக்கவில்லை. இராணுவத்தை பயன்படுத்தி மிகப்பெய பலத்காரத்தை பயன்படுத்தி வரலாற்றின் எந்தவொரு தினத்திலும் இடம்பெறாத பண்பாட்டிற்கு எதிரான தலையீட்டை மேற்கொண்டது.

அரசாங்கம் பொய் கூறுவது வெளிப்பட்டுதுள்ளது. இன்னும் பொய்களை கூறிக்கொண்டேதான் இருக்கின்றது. பொலிஸ் மா அதிபர் இச்சம்பவத்திற்கான பொறுப்பை ஏற்றுக்கொண்டு ராஜிநாமா செய்துள்ளார் என்று அரசாங்கம் கூறியிருந்த போதிலும் அது பொய்யானது என்பது தெளிவாகியுள்ளது.

அவர் ஓய்வு பெறுவதற்கான கடிதத்தினையே கையளித்துள்ளார் ராஜிநாமா செய்துக்கொள்ளவில்லை என்று அமைச்சரவையின் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல ஏற்றுக்கொண்டுள்ளார். இந்த விடயத்தில் பாதுகாப்பு அமைச்சும் தலையிட்டு பாரியளவான பொய்யை நிர்மாணித்து நாட்டை ஏமாற்றுவதற்கு முயற்சிக்கின்றது.

இந்த தாக்குதலுக்கான பொறுப்பை ஜே.வி.பி.யின் மீது சுமத்துவதற்காக அரசாங்கம் பல்வேறு வகைகளிலும் சேறுபூசும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகின்றது.

ஜே.வி.பி. தாக்குதல் பிரிவொன்றை வெளியிலிருந்து அழைத்துவந்ததாக கூறுவதற்கு முயற்சிக்கின்றது. இந்த போராட்டத்தில் சுதந்திர வர்த்தக வலயத்தை சேர்ந்தவர்களை தவிர வெளியார் எவரும் பங்கேற்கவில்லை அரசாங்கமே வெளியிலிருந்து குழுக்களை அழைத்து வந்தது. களுத்துறை,குருநாகல் போன்ற இடங்களிலிருந்து பொலிஸாரை அழைத்திருந்தது.

மோதல் நடுவீதியில் இடம்பெறவில்லை பொலிஸார் வேலைத்தளங்களின் வாயில்களை உடைத்துக்கொண்டு உள்நுழைத்து சென்றதன் பின்னரே மோதல்கள் ஏற்பட்டுள்ளன. வாயிலை உடைத்துக்கொண்டு தொழிற்சாலைகளுக்குள் சென்று தாக்கியமையினால் தான் தங்களுடைய நிறுவனத்திற்கு ஏற்பட்ட பாதிப்பு தொடர்பில் ஜேர்மன் தூதுவர் எச்சரிக்கை செய்துள்ளார்.

அரசாங்கமே குண்டர்கள் குழுவை பகிரங்கமாக பயன்படுத்துகின்றது. கொழும்பு லிப்டன் சுற்றுவட்டாரத்தில் நாம் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை நடத்தினோம். பொலிஸாருக்கு அறிவித்துவிட்டு மிகவும் அமைதியான முறையிலேயே அதனை முன்னெடுத்தோம். அச்சந்தர்ப்பத்தில் அந்த பிரதேசத்தை சுற்றி குண்டாந்தடிகளுடன் குண்டர்கள் இருந்தனர். குண்டாந்தடிகளை எங்கே எடுத்து செல்கின்றனர் என்று பொலிஸாருக்கு தெரியாது.

சாதாரண பொதுமக்களுக்கு பொலிஸாரே பாதுகாப்பளிக்கவேண்டும் எனினும் இன்று குண்டர்களையே பொலிஸார் பாதுகாக்கின்றனர். பாதுகாப்பு அமைச்சின் கண்காணிப்பில் ஈடுபடும் பாராளுமன்ற உறுப்பினர். அவர் எம்.பி.யாவதற்கு முன்பிருந்தே குண்டர் கூட்டத்தை வைத்திருந்தார். அதுமட்டுமன்றி பெண்துஷ்பிரயோக குற்றச்சாட்டுக்கு முகம்கொடுத்தவரே இந்த குண்டர்களை அழைத்துவந்துள்ளார்.

யார் எதனை கூறினாலும் மக்கள் விடுதலை முன்னணி ஆட்டம் காணாது. முன்னணி முடிந்துவிட்டது என்று இரண்டு மூன்று மாதங்களுக்கு முன்பிருந்தே அரசாங்கம் கூறியது. அரசாங்கத்திற்கு வாக்குகளின் மூலமாக கிடைத்த அதிகாரத்தை விட கூடுதலான அதிகாரம் ,பலம் மற்றும் மக்களின் நம்பிக்கை ஜே.வி.பி.க்கு இருக்கின் றது.

சம்பவத்தில் பலியான இளைஞருக்கு அனுதாபம் தெவித்து எம்மால் ஒட்டப்பட்ட சுவரொட்டிகள் அகற்றப்பட்டதுடன் ஒட்டியவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவ்வாறு கைது செய்ய முடியாது அது சட்டவிரோதமான நடவடிக்கையாகும்.

அதுதொடர்பில் பதில் பொலிஸ் மா அதிபரிடம் முறையிட்டு ஒருமணி நேரத்திற்குள் விடுவித்தோம்.

எவ்வாறிருப்பினும் அரசாங்கம் பெரும் நிதிப்பிரச்சினையில் இருக்கின்றது. நிதி பிரச்சினையை தீர்ப்பதற்கு அரசாங்கத்திற்கு மாற்று நடவடிக்கைகள் தெரியாது.

ஊழியர் சேமலாப நிதியத்தை போலவே பல்வேறு நிறுவனங்களை சேர்ந்த ஊழியர்களின் நம்பிக்கை நிதி தனிப்பட்ட கணக்கு வழக்குகளில் பேணப்படுகின்றது. அவ்வாறான 172 நிதியம் இருக்கின்றது அவையாவற்றின் கணக்கு வழக்குகள் தனியார் வங்கிகளிலேயே பேணப்படுகின்றன.

அந்த நிதியத்தின் 40 வீதத்தை அரச வங்கிகளுக்கோ அல்லது திறைச்சேரி பிணைமுறிகளுக்கோ முதலீடு செய்து அதன் மூலமாகவேனும் கொஞ்சம் நிதியை திரட்டிக்கொள்ளும் வகையில் நிதிப்பிரச்சினையில் இருக்கின்ற அரசாங்கம் இந்த சட்டமூலத்தை வேறுவகையில் கொண்டுவருவதற்கு இடமிருப்பதனை அறிவுறுத்துகின்றோம்.

இந்த சட்டமூலத்தில் ஏதாவதொன்றை சுற்றி புதிதாக ஐஸ் பூசி மீண்டும் கொண்டு வரவேண்டாம் என்று கேட்டுக்கொள்கின்றோம். அவ்வாறு கொண்டுவந்தால் அதனையும் தோற்கடிக்க செய்வோம். என்பதனையும் தனியார் துறை ஊழியர்கள் பயன் பெறும் வகையில் ஓய்வூதிய திட்டத்தை கொண்டுவருமாறும் அரசாங்கத்திற்கு வலியுறுத்தி கூறிக்கொள்வதற்கு விரும்புகின்றோம் என்றார்.

http://akkinikkunchu.com/new/

Edited by சிறிலிங்கம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.