Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அமைதியான அரசியல் தீர்வு விஸ்தரிப்பதற்கு முன்னர் நாடுகடத்துவதை நிறுத்தவேண்டும் – செ. கஜேந்திரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஜூன் 12, 2011

இலங்கயில் இருந்து உயிர் அச்சம் காரணமாக நாட்டை விட்டு வெளியேறி பிரித்தானியாவிலே தஞ்சம் அடைந்து இருந்த ஈழத்தமிழர்களில் 300 பேர் வரை திருப்பி அனுப்பப் போவதாக நாம் அறிந்தோம் இணையத்தளங்கள் ஊடாகவும் ஏனைய தளங்கள் ஊடாகவும் இந்த செய்தியை அறியக்கூடியதாக இருந்தது. இந்த தகவல் மிகவும் கவலைக் குரிய விடையமாக இருக்கிறது. இலங்கைத் தீவில் தம்மை பாதுகாப்பதற்காகவே பல ஆயிரம் கணக்கான மக்கள் இந்த மண்ணை விட்டு வெளியேறியுள்ளனர்.

அவ்வாறு வெளியேறியவர்கள் மிக கடுமையான கஸ்டங்களுக்கு பின்னரே தங்களுக்கு பாதுகாப்பு என்று கருதக் கூடிய இடங்களிலே அகதிகளாக தஞ்சம் புகுந்துள்ள நிலமையிலே இலங்கையில் நிரந்தரமான அரசியல் தீர்வு முன்வைக்கப்பட்டு ஒரு நிரந்தர அமைதி உருவாவதற்கு முன்னதாக அந்த மக்களை திருப்பி அனுப்பப்படுவது என்பது அந்த மக்களை மீண்டும் கொலையாளிகளின் கைகளிலே ஒப்படைக்கின்ற செயற்பாடாகத் தான் நாம் இதைக் கருதுகிறோம் தமிழீழ விடுதலைப் புலிகளை தமிழ் மக்கள் சரியாக புரிந்து கொண்டிருந்த பொழுதிலும்; சர்வதேச சமுகம் பிரித்தானியா உட்பட சர்வதேச நாடுகள் அவர்கள் தொடர்பாக ஒரு பிழையான கனிப்பீட்டோடு அவர்களை அனுப்புவதற்கு இதே அளவிலே இலங்கை அரசும் முழுமையாக ஒத்துழைக்கிறார்கள்.

அவ்வாறு அவர்களின் ஒத்தழைப்பு வழியாக இறுதி யுத்தத்திலே 60,000, 70,000 மக்கள் படுகொலை செய்யப்பட்டதோடு இன்னும் ஒரு லட்சம் பேர் வரையில் என்ன நடந்ததென்பதே தெரியாத நிலமை இருக்கின்றது. பல கோடி பெருமதியான சொத்துக்கள் அழிக்கப்பட்டு இருக்கின்றது. அந்தப் போர் முடிவடைந்த பின்னர் கூட கடத்தல்களும் கொலைகளும் சித்திரவதைகளும் என்பது தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. அவசர காலச்சட்டம் இன்னும் நடைமுறையில் இருக்கின்றது. முழுமையான இராணுவ ஆட்சி சர்வாதிகார ஆட்சி நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றது துப்பாக்கி முனைகளில் தான் தமிழர்களின் வாழ்வு ஒவ்வொரு நாளும் கழிந்து கொண்டு இருக்கின்றது.

இத்தகைய நிலைமையிலே போருக்கு ஆதரவு கொடுத்தவர்கள் ஆக குறைந்த மனித உரிமை மீறல்களை கூட உறுதிபடுத்தாமல் பாதுகாப்பான ஐனநாயக சூழலை உருவாக்காமல் எந்த உத்தரவாதமும் இல்லாத நிலைமையிலே நிரந்தரமான ஒரு அரசியல் தீர்வு முன்வைப்பதற்கு முன்னதாக உயிர் பாதுகாப்புக்காக நாட்டை விட்டு வெளியேறியவர்களை திருப்பி அனுப்புவது என்பது வேதனையான விடையம் இந்த முடிவை பிரித்தானியா அரசாங்கம் உடனடியாக மாற்றிக் கொள்ள வேண்டும்.

300 பேரும் திருப்பி அனுப்பப்படுவார்களாக இருந்தால் நிட்சயமாக இந்த மண்ணில் சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்படுவதில் இருந்து தடுக்க முடியாத நிலைமை ஒன்று ஏற்படும். நிட்சயமாக அவர்கள் கொல்லப்படுவதற்கும் சிறையில் அடைக்கப்படுவதற்கான ஆபத்தான நிலமை ஒன்று இருக்கின்றது இதை பிரித்தானியா அரசாங்கம் நன்றாக புரிந்து கொள்ளவேண்டும்.

ஐனநாயக ரீதியாக மனிதாபிமான கண்ணோட்டத்தோடு இலங்கை தீவில் இருந்து பல கஸ்டங்களின் மத்தியில் இருந்து வெளியேறி உயிர் பாதுகாப்பிற்காக தங்களுடைய மனித தஞ்சம் கோரியவர்களுடைய நலன்கருதிகளை அவர்கள் காரணியத்தோடு மீள் பரீசிலனை செய்ய வேண்டும் என்பது தமிழ் தேசிய மக்கள் முன்னணியினருடைய உருக்கமான வேண்டுகோலாக இருக்கின்றது. அவர் ஈழம் பிரஸ் இணைத்தளத்திற்கு கருத்து தெரிவிக்கையில்.

அவர்களை இங்கு திருப்பி அனுப்புவதற்கு முயற்சி செய்வதற்கு முன்னதாக இலங்கை தீவில் தமிழ் மக்களுடைய தீர்வுகளை அங்கீகரிக்கப்பட்ட அடிப்படையில் நிரந்தரமான அரசியல் தீர்வை விஸ்தரித்து விட்டு அதற்கு பின்னர் அவர்கள் தங்களுடைய இந்த விடையங்களை பற்றி சிந்திப்பது தான் பொருத்தமாக இருக்கும் என்று கூறிக்கொள்ள விரும்புகிறேன் என்று தெரிவித்தார்.

செ. கஜேந்திரன்

செயலாளர்,

தமிழ் தேசிய மக்கள் முன்னணி

சங்கதி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.