Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அதிகாரப்பகிர்வு குறித்த 12 அம்ச யோசனைத் திட்டமொன்று ஒப்படைக்கப்படவுள்ளது

Featured Replies

அதிகாரப்பகிர்வு: தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் 12 அம்ச யோசனை ஒப்படைப்பு

கொழும்பு , செவ்வாய், 28 ஜூன் 2011( 14:51 IST )

அதிகாரப்பகிர்வு குறித்த 12 அம்ச யோசனைத் திட்டமொன்றை தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் இலங்கை அரசு ஒப்படைக்கப்படவுள்ளது

இலங்கை அரசாங்கத்திற்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையே அதிகாரப் பகிர்வு குறித்த ஆலோசனைக் கூட்டம் நாளை நடைபெற உள்ளது.

அப்போது தேசிய இனப்பிரச்சனைக்கு தீர்வாக,வட மாகாணத்தில் அமல்படுத்தக் கூடிய வகையிலான 12 அம்ச யோசனைத் திட்டமொன்றை அரசாங்கம் ஒப்படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 23 ஆம் தேதியன்று இலங்கை அரசாங்கத்திற்கும், கூட்டமைப்பினருக்கும் இடையே நடைபெற்ற சந்திப்பின் போது, தமிழ தேசிய கூட்டமைப்பினர் 51 அம்ச யோசனைத் திட்டமொன்றை முன்வைத்ததாகக் குறிப்பிடப்படுகிறது.

இதற்கு பதிலளிக்கும் வகையில் அரசாங்கம் 12 அம்ச யோசனைத் திட்டமொன்றை முன்வைக்க உள்ளதாகவும், காணி மற்றும் காவல்துறை அதிகாரங்கள் பற்றிய அரசாங்கத்தின் நிலைப்பாடு இந்த யோசனைத் திட்டத்தின் மூலம் வெளிப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் கொழும்பிலிருந்து வெளியாகும் சிங்கள பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

http://tamil.webdunia.com/newsworld/news/international/1106/28/1110628037_1.htm

  • தொடங்கியவர்

இன்று இல்லையயன்றால் வெகுகாலத்துக்கு தீர்வு ஒன்று ஏற்படுவதற்குச் சாத்தியமில்லை; இந்திய அரசியல் விமர்சகர் கருத்து

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் தமிழருக்கு ஏற்றுக்கொள்ளக் கூடியதான ஒர் அரசியல் தீர்வினை வழங்க முடியாவிட்டால் அல்லது அவ்வாறு வழங்குவதற்கு அவர் விரும்பாமல் இருப்பாரானால் இன்னும் சில பத்தாண்டுகளுக்கு அவர் இடத்துக்கு வரக்கூடிய எந்த ஒரு தலைவராலும் அதனை செய்யமுடியாது.

அந்தத் திசையில் எவருமே முன் முயற்சி செய்வார்கள் என்று கூற முடியாது. கோட்பாட்டு ரீதியில் இலங்கைத் தமிழர், மலையகத் தமிழர் மற்றும் முஸ்லிம்கள் ஆகிய மூன்று பிரிவுகளை எடுத்துக் கொண்டாலும் இது பொருந்தும். அவர்களில் ஒருவர் ஜனாதிபதி அல்லது பிரதம மந்திரி பதவியில் இருந்தாலும் அதே நிலைதான். இவ்வாறு கருத்து வெளியிட்டிருக்கின்றார் இலங்கை அரசியல் நிலமைகள் பற்றிய இந்திய ஆய்வாளரான என்.சத்தியமூர்த்தி.

கொழும்பு ஆங்கிலப்பத்திரிகை ஒன்றில் அவர் எழுதியுள்ள கட்டுரையில் இன் னும் தெரிவித்திருப்பதாவது:

ஐனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் மற்றும் எதிர்க்கட்சியான ஐ.தே.க, சிறிலங்கா முஸ்லிம் காங் கிரஸ், மலையக தமிழ்க் கட்சிகள் யாவும் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் மீது வேறெந்த தமிழ்ப் பிரதிநிதித்துவ கட்சி களின் மீதும் இல்லாத வகையில் நம் பிக்கை வைத்திருக்கின்றன.

இன்றைய தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர்களை ஒர் அதிகாரப் பகிர்வுப் பொதி குறித்து திருப்தி கொள்ளச்செய்ய முடியாமல் போகுமானால் எதிர்வு கூறக் கூடிய காலத்தில் அவர்களை எவராலும் ஓர் அரசியல் தீர்வை ஏற்றுக் கொள்ளும் படியாக அது போர்க்களத்துக்கு முன்னர் தமிழ் அரசியல் துறை, சமூகம் மற்றும் தமிழீழ விடுதலைப்புலிகள் ஆகிய தரப்பினரால் முன்மொழியப்பட்ட நிலைமைக்கு நெருங்கிவராத நிலை யில் சாத்தியமாக மாட்டாது. இவ்வாறான ஒரு ஸ்தம்பித உறவு நிலையானது இரண்டு சமூகங்களுக்கு மட்டுமல்ல முழுநாட்டுக்குமே ஏன் அதுக்கு மேலும் கூட நாசகரமாக முடியும்.

எனவே இரு சமூகங்களும் ஒன்றை ஒன்று நம்புவதற்கு ஆரம்பிப்பது அவசியமாகின்றது. மற்றத்தரப்பினரும் மிக நெருக்குதலான அரசியல் கஷ்டங்களை எதிர்நோக்குகின்றார்கள். அதுவும் அவர்களின் அரசியல் பெருமையில் மூழ்கியுள்ள பிரிவினரிடம் இருந்து என்பதை உணரவேண்டும்.அரசும், தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் தாங்கள் மரபுரீதியில் பெற்றுக்கொண் டுள்ள குணாம்சங்களில் குறைபாடுகள் இருக்கலாம் என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். அது ஒரே இரவில் மறைந்து விடமாட்டாது.அரசு சதிபுரிகிறது என்று கூறாவிட் டாலும் நேர்மை இல்லாது நடந்து கொள் கிறது என்று குற்றம் சாட்டுகின்ற அதேநேரம், சிங்கள அரசியல்துறையும், சமூகமும் தமிழ்தேசிய கூட்டமைப்பின் நேர்மை மற்றும் ஆழ்ந்த மனோநிலை களை மேல்மட்டத்தில் எடுத்துக் கொள்ள மாட்டார்கள் என்பதை தமிழ் தேசிய கூட் டமைப்பும் அதன் ஆதரவாளர்களும் உணரவேண்டும். இதுவும் கூட இரட்டை வழிப்பாதையாக இருத்தல் வேண்டும்.

ஈழப்போர்4 மூலமாக இராணுவம் தமிழ் மக்களைப் புலிகளின் பிடியில் இருந்து விடுவித்துவிட்டது. அதனால் அவர்கள் நன்றி உடையவர்களாக இருக்க வேண்டும் என்ற பிரசாரத்தில் அரசாங்கமும் தொடர்ந்து நம்பிக்கை வைத் திருக்க முடியாது. களநிலைமைகள் சிக்கலாகவும் குழப்பகரமாகவும் காணப் படுகின்றன. அப்படியான கருத்துகளை முன் வைத்து அதில் தொடர்ந்து தங்கி இருக்க முடியாது. போர்க்குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் உடல் ரீதியானவை மட்டுமல்ல உளரீதியான வையே அதிகம். அதில் அரசியலும் சம்பந்தப்பட்டிருக்கிறது. அந்த வகையில் அவர்களை வென்றெடுக்க போதுமான அளவில் எதுவும் செய்யப்படவில்லை. இவ்வாறு அக்கட்டுரையில் அவர் தெரிவித்துள்ளார்.

http://onlineuthayan.com/News_More.php?id=40155371528271860

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.