Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊடக ஜாம்பவான் தோழர் உயர்திரு வித்தியாதரன் அவர்களுக்கு ஓர் பகிரங்க மடல் – எங்கள் சரித்திரம் முள்ளிவாய்க்காலோடு முடிந்துபோய்விட்டது என்று நீங்களும் மாறி விட்டீர்களா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஊடக ஜாம்பவான் தோழர் உயர்திரு வித்தியாதரன் அவர்களுக்கு ஓர் பகிரங்க மடல் – எங்கள் சரித்திரம் முள்ளிவாய்க்காலோடு முடிந்துபோய்விட்டது என்று நீங்களும் மாறி விட்டீர்களா?

பிரசுரித்தவர்: admin July 11, 2011

வணக்கம்,

உங்கள் பிள்ளைகளின் அரங்கேற்ற அழைப்பிதழ் கிடைத்தது. மிக்க மகிழ்ச்சி.

பண்ணும் பரதமும் பண்பாடு மாறாமல் மண் மணம் கமள உங்கள் பிள்ளைகளை வளர்ப்பது குறித்து பாராட்டுகள். ஆனாலும் எனக்கு ஓர் ஆச்சரியம் – என் கண்களையே என்னால் நம்ப முடியவில்லை.

தமிழ்த் தேசியம் பேசித்திரிந்த ஒருவரின் நிகழ்வுக்கு, அப்பட்டமாக தமிழ்த் தேசியத்தைக் குழி தோண்டிப் புதைத்த ஒருவர் சிறப்பு விருந்தினராம்….

நம்ப முடியவில்லை.

உங்கள் “உதயனை”யும், நீங்கள் பக்கம் பக்கமாய் எழுதித்தள்ளிய எழுத்துக்களையும் பார்த்துத்தான் நாங்கள் அவரை எடை போட்டோம்.

கம்பன் புகழ்பாடுவதாக சொல்லிக்கொண்டு தங்கள் வயிறு வளர்த்த கதையும், கொழும்பில் சுக போகங்களை அனுபவித்துத்துக்கொண்டு, தமிழர் அவலங்களைப்பற்றிக் கிஞ்சித்தும் பார்க்காத கம்பவாருதி இ.ஜெயராஜ் அவர்களை நாங்களாக நினைத்தாலும் அவருக்கு இடம் கொடுக்க எங்கள் மனங்கள் அடம் பிடிக்கின்றன.

நீங்கள் இவ்வளவு விரைவாக உங்கள் சுயத்தை வெளிபடுத்துவீர்கள் என்று நாங்கள் துளி கூட நம்பவில்லை. “உங்கள் பின் நின்று ஏதோ ஒரு சக்தி உங்களை இயக்குகிறது” என்று பலரும் சொன்ன போது நான் நம்பவில்லை. இப்போது நம்பித்தான் ஆகவேண்டும் போல இருக்கின்றது.

தமிழ்த்தேசியமும், தமிழர் தலைமையும் பற்றி நீங்கள் கொணடிருந்ததாகக் கூறிய கருத்துக்களும், எங்களுக்கு அவற்றை நீங்கள் ஊட்டிய விதமும் இன்னமும் எங்களுக்குள் இருக்கின்றன.

விடுதலைப் புலிகளின் காலத்தில் தமிழ்த் தேசியத்துக்கெதிராகக் கொழும்பில் கூடாரமடித்துச் செயற்பட்டு, இப்போது தமிழினத்துரோகி டக்ளஸ் தேவானந்தாவுக்கு ஐந்து இலட்சம் ரூபாவுக்காகத் “தமிழினத்தின் தலைவர்” பதவியை விற்று வயிறு வளர்த்துக்கொண்டிருக்கும் ஜெயரஜ் அல்லவா உங்கள் வீட்டு நிகழ்வூக்குப் சிறப்பு விருந்தினர்.

அழைப்பிதழைப் பார்த்ததும் ஆடிப்போய்விட்டேன். தேசியத்துக்கெதிரான ஒருவரை

– தேசியம் பேசிக்கொண்டு திரிந்த நீங்கள் அழைத்திருப்பது எனக்கு

ஆச்சரியம். அதைவிட ஆச்சரியம் என்னவென்றால் உங்கள் பத்திரிகையில் நார் நாராய்க் கிழித்த டக்ளசைத் தூக்கி வைத்து ஆடுகின்ற ஜெயராஜை நீங்கள் கூப்பிடுகிறீர்கள். இது தான் உங்கள் தேசிய வாதமா? நிகழ்வுக்கு தமிழினத் துரோகி டக்ளஸ் வந்தாலும் இனி ஆச்சரியப்படுவதற்கில்லை.

மூச்சுக்கு முந்நூறு தடவை நீங்கள் முணுமுணுத்துத்திரிந்த தழிழுணர்வும், தேசியமும் காலத்துக்குக் காலம் மாற்றிக்கொள்ளும் மேலாடைகள் அல்லவே?

எப்பொழுதோ சொன்னார்கள் உங்கள் குணத்தை, ஆனால் இப்பொழுதும் கூட நம்ப முடியவில்லை. கொக்குவிலில் குலதீபனோடும் பலாலியில் பலகல்லவோடும் நீங்கள் கூடிக் கதைத்ததை “பாம்புக்குத் தலையையும், மீனுக்கு வாலையும் காட்டுவதாக….. நாங்கள் நம்பவில்லை.

அம்மானின் படத்தையும் அண்ணனின் படத்தையும் உங்கள் பிழைப்புக்காய் “உதயனி”ல் போட்டதை பொட்டிட்டுக் காட்டிய போதும் உங்களை உயர்வாகவே கருதினோம்.

ஐந்து இலட்சத்துக்காய் அடிவருடியாய் மாறி விட்ட வாருதியின் பட்டியலில் நீங்களும் …… ஐந்துக்கும் பத்துக்கும் விலைபோய் விட்டீர்களா? மர்மம் புரியவில்லை.

எனக்கு மட்டுமல்ல எவருக்குமே தெரியவில்லை.

எங்கள் சரித்திரம் முள்ளிவாய்க்காலோடு முடிந்துபோய்விட்டது என்று நீங்களும் மாறி விட்டீர்களா?

புரியாத புதிரோடு…..

அன்புடன்

ஆதங்கன்

http://mykathiravan.com/ta-news/?p=11752

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தீவிரமாக தேசியம் பேசிய சிலர் இப்போது இந்த வித்தியாதரன் போல்தான் உள்ளனர் அதில் புலம் பெயன்தோர் சிலர் தாய் நாட்டை விட்டு புலம்பெயர்ந்து 20 வது 30 வருடங்களாக தாயகம் செல்லாதவர்கள் இப்பது (மே 18 2009 ) இன் பின்பு பலதடவை ஸ்ரீலங்கா போய்வருகின்றனர் இதில் இருந்து உங்களுக்கு இவர்கள் இந்த போராட்டத்துக்கு எவளவு பெரிய தூரோகம் இழைத்திருப்பார்கள் என்பது புரியும்.

கம்பன் கழகக் கொள்ளைக்காரன் ஜெயராஜுக்கும், வித்தியாதரனுக்கும் சில வருடங்களாக எஜமானர்களாக இருக்கும் பயங்கரவாதக் கும்பல் ஒன்றுதான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.