Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

65 உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல் இன்று :

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

65 உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல் இன்று :

23 ஜூலை 2011

வாக்களிப்பு நிலையங்களுக்கு அருகில் வெறுமனே நடமாடி திரியவேண்டாம் - தேர்தல் ஆணையாளர்

65 உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல் இன்று :

65 உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல் இன்று நடைபெறுகிறது. இன்று காலை 7 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. 2 ஆயிரத்து 226 வாக்களிப்பு நிலையங்களில் இந்த வாக்கெடுப்பு நடத்தப்பட்டு வருவதாக தேர்தல் செயலகம் தெரிவித்துள்ளது.

20 அரசியல் கட்சிகள், 72 சுயேட்சைக்குழுக்களை சேர்ந்த 5 ஆயிரத்து 688 வேட்பாளர்கள் இந்த தேர்தலில் போட்டியிடுகின்றனர். இவர்களில் 875 பிரதிநிதிகள் தெரிவுசெய்யப்பட உள்ளனர்.ஒரு மாநகர சபை, 9 நகர சபைகள், 55பிரதேச சபைகளுக்கு தேர்தல் நடத்தப்படுகிறது.

தேர்தலில் வாக்களிக்க 26 லட்;சத்து, 30 ஆயிரத்து 985 பேர் தகுதி பெற்றுள்ளனர். 18 ஆயிரம் அதிகாரிகள் தேர்தல் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

வாக்களிப்பு நிலையங்களுக்கு அருகில் வெறுமனே நடமாடி திரியவேண்டாம் - தேர்தல் ஆணையாளர்

தேர்தலில் வாக்களித்த பின்னர், வாக்களிப்பு நிலையங்களுக்கு அருகில் வெறுமனே நடமாடி திரியவேண்டாம் என தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய சகல வாக்காளர்களிடமும் கோரிக்கை விடுத்துள்ளார். அதிகாலையில் வாக்களிப்பு நிலையங்களுக்கு சென்று வாக்களிக்குமாறும் அவர் மக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

வாக்களிக்க செல்லும் போது, தேசிய அடையாள அட்டை அல்லது அடையாளத்தை உறுதிப்படுத்தும் ஆவணங்களுக்கு செல்ல வேண்டும் எனவும் அடையாள அட்டைகள் இல்லாதவர்கள் வாக்களிக்க முடியாது எனவும் அவர் கூறியுள்ளார். தபால் மூலம் கிடைத்துள்ள வாக்காளர் அட்டைகளை எடுத்துச் செல்வது வாக்களிப்பதற்கு வசதியாக இருக்கும் எனவும் இது அதிகாரிகள் தமது பணிகளை மேற்கொள்ள இலகுவாக இருக்கும் எனவும் தேசப்பிரிய மேலும் கூறியுள்ளார்.

தீவக பகுதிகளுக்கு வாக்குப்பெட்டிகளை கடும் பாதுகாப்புக்கு மத்தியில் அனுப்பி வைக்க நடவடிக்கை :

யாழ்ப்பாணத்தில் உள்ள தீவக பகுதிகளுக்கு வாக்குப்பெட்டிகள் மற்றும் அதிகாரிகளை கடும் பாதுகாப்புக்கு மத்தியில் அனுப்பி வைக்க யாழ் அரச அதிபர் இமெல்டா சுகுமார் நடவடிக்கை எடுத்திருந்தார். விமானப்படையின் வானூர்திகள் மற்றும் படகுகள் இதற்காக பயன்படுத்தப்பட்டதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் மாத்திரம் தேர்தல் பாதுகாப்பு கடமைகளில் ஆயிரத்து 132 காவற்துறையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அத்துடன் காவற்துறையினரின் ரோந்து பணிகளளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தேர்தலை முன்னிட்டு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

வாக்களிப்பு நிலையங்களுக்கு அருகில் குழப்பங்களை விளைக்க முயற்சித்தால் கடும் நடவடிக்கை - காமினி நவரத்ன:

வாக்களிப்பு நிலையங்களுக்கு அருகில் எவரும் குழப்பங்களை விளைக்க முயற்சித்தால், அவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் பணிகளுக்கான காவற்துறை பொறுப்பதிகாரி சிரேஷ்ட பிரதிக்காவற்துறை மா அதிபர் காமினி நவரத்ன தெரிவித்துள்ளார். தேர்தல் நடைபெறும் பிரதேசங்களில் 25ஆயிரம் காவற்துறையினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

2 ஆயிரத்து 226 வாக்களிப்பு நிலையங்களில் தலா 5 காவற்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அத்துடன் காவற்துறையினர் வாகனங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர் எனவும் காமினி நவரத்ன குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் வன்முறைகள் தொடர்பாக கிடைத்துள்ள முறைப்பாடுகளுக்கு அமைய 132 பேர் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 97 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதுடன் இவற்றில் 41 முறைப்பாடுகள் சாதாரண சம்பவங்கள் தொடர்பானது எனவும் நவரத்ன மேலும் தெரிவித்துள்ளார். (திவயின 23-07)

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/64531/language/ta-IN/article.aspx

Edited by கறுப்பி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் பிரதேசத்தின் தேர்தல் முடிவுகளுக்காக விழித்திருந்து காத்திருக்கப் போகும் சர்வதேசம்

[saturday, 2011-07-23 09:43:06]

முழு உலகமும் எதிர்பார்க்கும் வடமாகாணத்திலுள்ள 20 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் இன்று நடைபெறுகின்றன. தமிழ் மக்கள் யார் பக்கம் இருக்கின்றனர் என்பது நாளை காலை தெரியவரும். இந்தத் தேர்தல்களில் ஐ.ம.சு. முன்னணிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையே மட்டுமே போட்டி நிலவுகின்றது.

20 மாவட்டங்களிலுள்ள 65 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் நடைபெறுகின்ற போதும், வடக்கின் 20 உள் ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் அனைவரதும் கவனத்தை ஈர்த்துள்ளது.தமிழ் மக்கள் அரசின் பக்கமே இருக்கின்றனர் என்பதை உலகுக்கு எடுத்துக் காட்ட அரசு பகீரதப் பிரயத்தனங்களை மேற்கொண்டு வருகிறது. வடக்கிலுள்ள அனைத்து உள்ளூராட்சி சபைகளையும் எப்படியாவது கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கில் அரசு செயற்பட்டு வருகிறது.

இலங்கைத் தேர்தல் சரித்திரத்தில் முதன் முறையாக யாழ்.மக்களுக்கு வேட்டிகள், பட்டுச்சேலைகள் வழங்கப்பட்டன. அபிவிருத்தி என்ற போர்வையில் அரசு இந்த நடவடிக்கைகளை மேற்கொள்கின்றது. அது மட்டுமின்றி, கிளிநொச்சி மாவட்டத்தில் தாராளமாக உலர் உணவுப் பொதிகளும் வழங்கப்படுகின்றன என்று எதிர்க்கட்சிகள் சரமாரியாக குற்றம் சுமந்துகின்றன. இதேவேளை, இராணுவத்தினரும்அரசுக்கு சார்பாக இந்தத் தேர்தலில் களமிறக்கப்பட்டுள்ளனர் என்று குற்றஞ்சாட்டப்படுகிறது. எதிர்க்கட்சிகளின் தேர்தல் பிரசாரங்களுக்கு இடையூறு விளைவிக்கும் நடவடிக்கைகளிலும் எதிர்க்கட்சி வேட்பாளர்களை அச்சுறுத்தும் நடவடிக்கைகளிலும் ஈடுபடுவதாக தேர்தல்களைக் கண்காணிக்கும் அமைப்புகள் தெரிவிக்கின்றன. கிளிநொச்சியில் நேற்று இராணுவத்தினர் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்காகத் தேர்தல் முகவர்களாக செயற்பட ஆட்களைத் தேடித் திரிந்தனர் என்று கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் நேற்றுத் தெரிவித்தார்.

தேர்தல் பிரசாரத்தில் வரலாற்றில் முதல் முறையாக இராணுவம் ஈடுபட்டதை எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவே நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.தமிழ் மக்கள் அரசின் பக்கம் இருக்கின்றனர் என்பதை உலகுக்கு எடுத்துக்காட்டி தமிழ் மக்கள் மீது தாம் முன்வைக்கும் அரசியல் தீர்வைத் திணிப்பதற்கு இந்தத் தேர்தலைப் பயன்படுத்த அரசு முனைகின்றது என புத்திஜீவிகள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.இருபது மாவட்டங்களிலுள்ள 65 உள்ளூராட்சி சபைகளுக்குத் தேர்தல்கள் நடைபெறும் போதும் ஜனாதிபதி, பிரதமர் உட்பட அமைச்சர்கள் பட்டாளம் யாழ்., கிளிநொச்சி மாவட்டங்களில் முகாமிட்டு, தேர்தல் பிரசாரங்களை மேற்கொண்டமை இதன் முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டுகின்றது. யாழ்., கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களைத் தவிர ஏனைய மாவட்டங்களில் ஜனாதிபதி பிரசாரக் கூட்டங்களில் கலந்துகொள்ளவில்லை என்பதையும் புத்திஜீவிகள் சுட்டிக் காட்டுகின்றனர்.

http://www.seithy.com/breifNews.php?newsID=46977&category=TamilNews&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.