Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அரசியல் தீர்வை வலியுறுத்தி சர்வதேச ரீதியில் போராட்டம்!

Featured Replies

தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை வலியுறுத்தி சர்வதேச ரீதியில் போராட்டம்!

- விக்கிரமபாகு கருணாரட்ன அறிவிப்பு

சிறிலங்கா அரசாங்கத்துக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளதைக் கண்டித்தும், தமிழ் மக்களுக்கு உடனடியாக அரசியல் தீர்வை வழங்க வேண்டும் என வலியுறுத்தியும் தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் போராட்டங்களை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளதாக புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரட்ன தெரிவித்துள்ளார்.

இலங்கையின் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணும் பொருட்டு சிறிலங்கா அரசாங்கத்துக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் பத்தாம் சுற்றுப் பேச்சுவார்த்தை கடந்த 4ஆம் திகதி இடம்பெற்றது. இதன்போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மூன்று கோரிக்கைகளை முன்வைத்து இரண்டு வாரங்களுக்குள் பதில் அளிக்குமாறு சிறிலங்கா அரசாங்கத்துக்கு காலக்கெடு விதித்துள்ளது.

இது தொடர்பில் சிறிலங்கா அரசாங்கத்திடம் இருந்து சாதகமான பதில் கிடைக்கும் வரை பேச்சுவார்தைகளில் ஈடுபடமாட்டோம் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

இது குறித்து கருத்துத் தெரிவிக்கையிலேயே விக்கிரமபாகு கருணாரட்ன இவ்வாறு கூறியுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

'அரசாங்கம் தமிழ் மக்களைத் தொடர்ந்து ஏமாற்றி வருகின்றது. இலங்கையின் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு தொடர்பில் அதனிடம் உண்மையான தீர்வுத் திட்டம் ஒன்று இல்லாததன் காரணமாகவே, ஏதாவது காரணத்தைக் கூறி பேச்சுவார்த்தைகளை இழுத்தடிக்கின்றது.

ஆனால், முதன்முறையாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் காலக்கெடு விதித்துள்ளனர். இக்காலக்கெடுவுக்கு அரசாங்கம் சாதகமான பதிலை அளிக்காத பட்சத்தில் பேச்சுவார்த்தை முறிவடையும் சாத்தியம் உள்ளது. ஆனால், அரசாங்கத்தின் கருத்துகளைப் பார்க்கும்போது பேச்சுவார்த்தை முறிவடைந்துவிட்டது என்றே எண்ணத் தோன்றுகின்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தனி ஈழம் கோரவில்லை. அவர்கள் வடக்கு, கிழக்கு இணைந்த சுயநிர்ணய ஆட்சியையே தமிழ் மக்கள் சார்பில் கேட்கின்றனர். அது அரசமைப்பிலும் உள்ளது. இவ்வாறானதொரு நிலையில் அரசாங்கம் ஏன் தமிழ் மக்களுக்கான உரிமைகளை வழங்க மறுக்கின்றது?

இலங்கையில் தமிழ் மக்கள் பேச்சுவார்த்தைகளின் மூலம் தமது உரிமைகளை வென்றெடுக்க முடியாத நிலையே உள்ளது. அரசாங்கத்தின் செயற்பாடுகளும் அதனையே எடுத்துக் காட்டுகின்றன. எனவே, பொறுமையாக இருந்து விடயத்தைச் சாதிக்க முடியாது.

உள்நாட்டில் மக்கள் புரட்சியை ஏற்படுத்தினால் தான் தீர்வுத் திட்ட விடயத்தில் சர்வதேசம் தலையிடும். இல்லையேல், தமிழ் மக்கள் அமைதியாக உள்ளனர் என நினைத்துக் கொண்டு சர்வதேசமும் மௌனம் காக்கத் தொடங்கிவிடும்.

இதன் காரணமாகவே நாம் தேசிய, சர்வதேச ரீதியில் அரசாஙற்கத்துக்கு எதிராக போராட்டங்களை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளோம்' என விக்கிரமபாகு கருணாரட்ன மேலும் தெரிவித்துள்ளார்.

http://ponguthamil.com/news/contentnews.asp?sectionid=1&contentid={31BB8F2A-BF8F-4246-9BF9-123368D522AD}

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Sri Lankan power-sharing talks near collapse as ethnic Tamil party demands gov’t response

www.washingtonpost.com

COLOMBO, Sri Lanka — Talks aimed at power sharing after Sri Lanka’s civil war appeared near collapse Friday, with an ethnic minority Tamil party demanding that the government explain its position within two weeks but the government saying it is unable to do so.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.