Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர் வாழ்நிலை எதை நோக்கிச் செல்லும் ?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் வாழ்நிலை எதை நோக்கிச் செல்லும் ?

ஈழவாணி

இலங்கையில் போர் முடிவடைந்து இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்ட போதும், தமிழர்களின் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான ஆக்கபூர்வமான நகர்வு இலங்கை அரசால் மேற்கொள்ளப்பட்டதாக தெரியவில்லை இறுதிப்போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக. போர் முடிந்ததும் அரசியல் தீர்வு ஒன்று காணப்படும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உத்தரவாதம் அளித்திருந்த போதும், இதுவரை அது எதுவும் நடந்ததாகத் தெரியவில்லை. போரினால் இடம்பெயர்ந்து துன்பப்படும் தமிழர்கள் அனைவரையும் புனர்வாழ்வுக்கு உட்படுத்துவதற்கு வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் அரசு துரித கதியில் மேற்கொள்ள வேண்டும், அவ்வாறு நடக்காத பட்சத்தில் அவர்களை நோக்கிய நிலை மிகப் பரிதாபகரமே.

யுத்தம்நடந்து முடிந்துவிட்ட இந்த இரண்டாண்டுகளின் பின்னரான தமிழர் சமூகங்களின் நிலை மிகப் பாரதூரமான இழிநிலை நோக்கிச்சென்றுகொண்டிருக்கிறது. இனியெரு ஆரோக்கியமான தமிழ் சமுகம், அறிவார்ந்த தமிழ் சமூகம், உணர்வார்ந்த தமிழ் சமுகம் உருவாகக் கூடாது என்பதில் அரசு மிகச் சாதுர்யமாகக் காய்நகர்த்திச் செல்கிறது. இதன் ஆரம்பக் கட்டங்களே பட்டினிச்சீரழிப்பு.

வன்னிப் பகுதியில் மீளக் குடியமர்ந்த மக்களுக்கு வழங்கப்பட்டு வந்த உலர் உணவு நிவாரணம் இடைநிறுத்தப்பட்டுள்ளது. இந்த இடைநிறுத்தம் காரணமாக வறுமைக் கோட்டுக்குள் வாழும் மக்கள் போஷாக்கின்மையையும் பட்டினிச் சாவையும் எதிர்நோக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். மீளக் குடியமர்வு என்ற பெயரில் அநாதரவாக விடப்பட்டுள்ள நிலைமையே தமக்கு ஏற்பட்டுள்ளதாகவும், தொழில் முயற்சிகள் திட்டமிட்டு மறுக்கப்பட்டு வருவதாகவும் அங்கு அவதிப்படும் மக்கள் ஆதங்கப்படுகிறார்கள். விடுதலைப் புலிகளது நிர்வாகத்தின் கீழ் வன்னி இருந்த காலப்பகுதியில் அவர்களது நிர்வாகக் கட்டமைப்பில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பணியாற்றியிருந்தனர் எண்ணாயிரம் முதல் பத்தாயிரம்வரை ஊதியத்தை பெற்றுக்கொண்டிருந்தபோதும் திருப்திகரமானதாக வாழ்வு இருந்திருந்ததாகவும் தற்போது போராளிகளது குடும்பங்கள் மற்றும் மாவீரர் குடும்பங்களென அனைத்து தரப்புகளும் இவ்வாறான உதவித் தொகையுடனேயே வாழ்ந்து வந்திருந்தன. அவை அனைத்தும் இப்போது அநாதரவாக கைவிடப்பட்டிருக்கின்றன. புதிதாக தொழில் முயற்சிகள் ஏது மற்றிருப்பதால் தொழில் வாய்ப்புகளை தேடிக் கொள்ள பலரும் போராட வேண்டியிருக்கிறது. எவருமே திரும்பிப் பார்க்கிறார்கள் இல்லை. அபிவிருத்திகள் ஏதாவது நடந்தால் தானே வேலை வாய்ப்புகள் கிடைக்கும். வருவாய்க்கு வழி இல்லை. ஆனால், சாராயக் கடைகளும் தவறணைகளும் தாராளமாக திறக்கப்பட்டு வருவதாகவும் தெரியப்படுகிறது. ஏற்கனவே மக்களை விரோதமாகப் பார்க்கும் படைத் தரப்பினரின் பார்வை, நடந்து முடிந்த உள்ளூராட்சி தேர்தலின் பின்னர் இன்னும் மோசமாகியுள்ளது. கட்டட வேலைக்கான மணல் அள்ளக்கூட கூட்டமைப்பினரை கேட்குமாறு நையாண்டி செய்வதாக மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். அங்குலத்திற்கு அங்குலம் சோதனைச் சாவடிகளும், காவலரண்களுமென மக்கள் அவதானிக்கப்பட்ட வண்ணமேயிருக்கின்றனர். நெருக்குவாரங்கள் மத்தியிலும் மீண்டெழவே அம்மக்கள் பாடுபடுகின்றனர். மரணங்கள், காணாமல் போதல்கள் மத்தியிலும் மீண்டெழுவதற்கான நம்பிக்கையோடே மீண்டும் மீண்டும் முயல்கின்றார்கள்.

38ஆண்டுகால போரில் 90,000 பெண்கள் விதவைகள் ஆக்கப்பட்டுள்ளனர். 40 ஆயிரம் பேர் உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டவர்களாய் இருக்கின்றனர். ஒவ்வொரு குடும்பத்திலும் ஏதாவது ஒரு உயிரிழப்பு அல்லது ஒருவர் உடல் உறுப்பு பாதிக்கப்பட்டவராய் இருக்கின்றனர். முகாம்களில் அடைத்து வைக்கப்பட்ட எல்லோரும் முழுமையாக மீள் குடியேற்றம் செய்யப்படவில்லை. இன்னும் சில பெரிய முகாம்கள் பாதுகாப்பு படையினரின் கட்டுப்பாட்டிலேயே இருக்கின்றன. மீள் குடியேற்றம் செய்யப்பட்ட குடும்பங்களுக்கு வீடுகட்டுவதற்கு பொருளாதார உதவி ஏதும் செய்யாமல் வெறும் நிலத்தை மட்டும் கொடுத்திருக்கிறார்கள். வெறும் நிலத்தை மட்டும் வைத்துக்கொண்டு எல்லாம் இழந்த மக்களால் என்ன செய்ய முடியும்? .அடிப்படை வசதிகளான வீடு, குடிதண்ணீர், மின்சாரம், கழிப்பறை வசதி, மருத்துவ வசதி, சாலை வசதி போன்றவை கூட செய்து கொடுக்கப்படாத நிலைமைகளே இன்னும் பெரும்பான்மையாக உள்ளது. 17 வயது முதல் 28 வயது வரை இளம் விதவைகள் 12,000 பேர்கள் உள்ளனர். இந்தப் பெண்கள் பல்வேறு பிரச்சனைகளுக்கு ஆளாகின்றனர். இவர்கள் ராணுவம், காவல்துறை, உளவுத்துறை மற்றும் அரசு அதிகாரிகளின் பாலியல் வன் கொடுமைக்கு ஆளாக்கப்படுகின்றனர். இதுமட்டுமின்றி 18 வயதிற்கும் குறைவாக உள்ள 6 ஆயிரம் இளம் பெண்கள் திருமணமாவதற்கு முன்பே கருவுற்றிருக்கிற அவலநிலை உருவாகியுள்ளது.

இன்னும் உள்ள இரண்டு அகதிகள் முகாம்களில் 12,000 மக்கள் அகதிகளாக அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். தடுப்பு முகாம்களில் போர் கைதிகள் எவ்வளவு பேர் உள்ளனர் என்றும் தெளிவாகத் தெரியவில்லை. இறுதிக் கட்ட யுத்தத்தில் சிறிலங்கா படையினரிடம் சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கப் போராளிகளுக்குப் புனர்வாழ்வு அளித்து தொழிற் பயிற்சி மற்றும் தொழில்களை வழங்குவதாகக் கூறி வரும் சிறிலங்கா அரசானது இப்போது அந்த முன்னாள் போராளிகளைக் கொண்டு குளங்களையும் குட்டைகளையும் துப்புரவு செய்யும் பணிகளைச் செய்து வருகிறது. இதன் ஓரு கட்டமாக கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரிப் பிரதேசத்திலுள்ள பள்ளிக்குடாவில் தூர்ந்து போய்க் காணப்பட்ட பெரியகுளத்தைத் துப்புரவு செய்யும் பணியில் முன்னாள் போராளிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்தக் குளத்தில் வெடிபொருட்கள் மற்றும் ஆபத்தான பொருட்கள் புதையுண்டு கிடக்கலாம் என்ற அச்சத்தின் காரணமாகப் படையினரையோ அல்லது ஏனையோரையோ துப்புரவுப் பணிகளில் ஈடுபடுத்தாமல் முன்னாள் பேராளிகளே ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இன் நடவடிக்கையின் தொடர்ச்சியாக அவர்களை கொலைக்களத்திற்கு இட்டுக்கொண்டிருப்பதே அரசின் சிறந்த நேக்கமாக இருக்க முடியும்.

தமிழர்கள் பகுதியில் சிங்களக் குடியேற்றங்கள் நடைப்பெற்று வருகின்றன. இந்து கோயில்கள், வழிபாட்டுத் தலங்களை அழித்துவிட்டு புத்த சிலைகளை நிறுவி பௌத்த மதக் கொடியைப் பறக்கவிட்டுள்ளனர்.

தமிழர்கள் வாழுகின்ற பகுதிகளான வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார், திரிகோணமலை, மட்டக்களப்பு, யாழ்பாணம் ஆகிய பகுதிகளில் மிக அதிகமாக கேட்பார்களற்று இந்துக்கோயில் குளங்களை பௌத்தங்களாக்க தீவிர செயற்பாடுகளும் இடம்பெற்ற வண்ணமேயிருக்கின்றன.

திருகோணமலை நகரிலிருந்து வடக்கே 42 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள திரியாய் என்ற தமிழ்க்கிராமத்தில் உள் பௌத்த விகாரை ஒன்றுக்கு புனித நகராக்கும் திட்டம் என்ற பெயரில் 3000 ஏக்கர் காணியை ஒதுக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது. மொத்தமாக 3069 ஏக்கர் 2 றூட் 15 பெர்ச்சஸ் காணி இதற்கென அடையாளம் காணப்பட்டுள்ளது. திரியாயில் உள்ள பௌத்த விகாரையின் பெயர் கிரிஹந்துசேயா ஆகும். இவ்விகாரைக்கு தெற்கு பகுதியிலிருந்து பௌத்தர்கள் யாத்திரை வந்து விட்டு திரும்பிச் செல்வது வழக்கமாகும். திரியாயில் பௌத்த சிங்களவர்கள் குடியிருக்கவில்லை. புனித பிரதேசம் என்ற பெயரில் காணிகளை ஒதுக்கி அதில் தெற்கிலிருந்து சிங்களவர்களை கொண்டு வந்து குடியேற்றுவதே அரசாங்கத்தின் நோக்கமாகும்

மன்னார் மாவட்டத்திலுள்ள பிரபலம் மிக்க திருக்கேதீச்சர ஆலயத்திலிருந்து 50 மீற்றர் தொலைவில் மகாதோட்ட ராஜமகா விகாரை என்ற பெயரில் பௌத்த விகாரை ஒன்று கட்டப்பட்டுள்ளது. திருக்கேதீச்சரத்தின் புராதன பெயர் மாதோட்டம் ஆகும்" இதன் நோக்கம் தமிழ்ப் பிரதேசமாகிய மன்னாரிலும் பௌத்தத்தை புரதானமாகக் காட்டுவதாகக் கூட இருக்கலாம் (இந்த மாதோட்டம் இராவணன் காலத்திற்கு முற்பட்ட பழமைவாய்ந்த ஈழத்து ஈச்சரங்களில் ஒன்றாகும்.)

இலங்கையின் வடபுலத்தில் உள்ள தமிழர் பகுதிகளின் ஊடாகப் பயணிக்கும் எவரும் அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் சில மாற்றங்களைப் பார்த்து அதிர்ந்து போவார்கள். தமிழர்களின் பாரம்பரிய தேசமாகவும் தமிழர்களின் கலாசாரங்களை வெளிப்படுத்தி நின்றதுமான இந்தப் பகுதிகள் தற்போது சிங்களமயமாக்கப்பட்டு சிங்கள பௌத்த வாசம் வீசிக்கொண்டிருப்பதையிட்டு.

சிங்கள இராணுவத்தினர் தங்கியிருக்கும் முகாம்களும் தமிழர் பிரதேசங்களில் அதிகம் காணப்படுகின்றன. இந்தப் பிரதேசங்களில் உள்ள இராணுவத்தினர் மட்டுமே பௌத்த மதத்தைச் சேர்ந்தவர்களாவர். ஆனால் கடந்த ஒரு சில ஆண்டுகளில் மட்டும் இந்தப் பிரதேசங்களில் 2500 புத்தர் சிலைகள் உருவாக்கப்பட்டுள்ளன.

மேலும் யால்ப்பாணத்தில் பல புதிய பழக்கங்கள் ஏற்பட்டு மிளிர்ந்து கொண்டிருக்கிறது. இளைஞர் யுவதிகளுக்கான லொட்ச் றூம் வசதிகள், பாடசாலை மாணவர்களும் இங்கு செல்பவர்களில் அதிகமான உள்ளடக்கமாம். இதற்காக பிரத்தியோகமாக அழகான சிங்கள வாலிபர்களை பிறான்டட் ஆடைகளை அணிவித்து ஆம்கட் அழகர்களாக வீதிகளில் சுற்ற வைக்கப் பட்டிருக்கிறதாம். இதுவும் ஒரு புதிய கலாச்சாரமாக உருப் பெற்றுக் கொண்டிருக்கிறது அங்கு.

யாழ் குடாநாட்டில் மாணவர்களை இலக்காகக் கொண்டு மினித் தியேட்டர்களில் ஆபாசக்காட்சிகள் காட்டப்படுகின்றன. யாழ்ப்பாணத்தைப் பொறுத்தவரையில் மினிசினிமாத் தியேட்டர்களுக்கென்று தனி வரலாறே உண்டு. 90களில் யுத்தம் நடைபெற்றுக்கொண்டிருந்த வேளைகளில் தொலைக்காட்சிப் பெட்டியை வைத்து டெக்கில் ஜெனரேட்டர் மூலம் படம் காட்டுகின்ற கொட்டகைகள் யாழ்ப்பாணத்தில் இருந்தன. இவை மினிசினிமாக்கள் என்று அழைக்கப்பட்டன. அக்காலப்பகுதிகளில் பெரும்பாலான சினிமா படங்களும் தமிழீழ விடுதலைப் புலிகளால் தயாரிக்கப்பட்ட குறும்படங்களும் போர் எழுச்சிப் படங்களும் காண்பிக்கப்பட்டு வந்தன.

அங்கு காட்டப்படுகின்ற சினிமாப் படங்களில் கூட புலிகளின் திரைப்படத் தணிக்கைக் குழுவினரால் ஆபாசக் காட்சிகள் வசனங்கள் என்பன வெட்டப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டு வந்தன. யாழில் திரையரங்குகள் இருந்தாலும் மினிசினிமாக்களும் வேறு நோக்கத்திற்காக பயன்படுத்தப்பட்டுவருவது யாழ் மக்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியிருந்தது. ஆனால் தற்போது மினித்தியேட்டர்களில் ஆபாச மினிசினிமாக்கள் காட்டப்பட்டு வருகின்றமை புதிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. அண்மையில் யாழ்ப்பாணத்தில் நகரப்பகுதியில் இரு மினிகள் தொடர்ந்து இயங்கிவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதில் ஒன்றுதான் கஸ்தூரியார் வீதியில் ராஜா திரையரங்கிற்கு முன்னால் இயங்கிவந்த மினி சினிமா. இரண்டாவது "செல்வா மினி". இந்த பெயரைத் தெரியாத மாணவர்களே இருக்கமுடியாது. அவ்வளவு பிரபலம் வாய்ந்தது. ஸ்ரான்லி வீதியில் அமைந்திருக்கிறது இந்த சினிமாக் கொட்டகை. இந்த மினியில் வார இறுதி நாட்களில் கூட்டம் அலைமோதும். காரணம் இந்த மினிக்கு அருகாமையில் நான்கு பிரபல தனியார் கல்வி நிலையங்கள் அமைந்துள்ளன. அதிலும் இந்த கல்விநிலையங்கள் பஸ் ஸ்ராண்டிற்கு அருகில் அமைந்திருப்பதால் வெகு தொலைதூரங்களில் இருந்து வரும் மாணவர்கள்தான் இங்கு அதிகம். இவ்வாறு தொலை தூரங்களில் இருந்து கல்வி கற்பதற்காக வரும் மாணவர்களை கவர்ந்திழுத்து பெரு லாபம் ஈட்டிவருகிறார்கள் இவர்கள். "மர்மத்தீவில் மந்திரக் கன்னி, கன்னித்தீவு கன்னிகள், அரண்மனை அழகி, ராத்திரிநேர தேவதைகள்" என்ற விதத்திலேயே படத்தின் தலைப்புகள் அமைந்திருக்கும். ஆனால் உள்ளே ஓடுவது வேறு படம். அதாவது "பிட்டுப்படம்" வாடிக்கையாளர்களை கவர்வதற்காகவே இவ்வாறான தலைப்புகள் வைக்கப்பட்டாலும் பல வேளைகளில் எம்.ஜி.ஆரின் கட் அவுட்டுடன்கூட ஆபாசப்படம் உள்ளே ஓடும். இது தவிர ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமைகளிலும் மாலை 6 மணிக்கு ஆபாசக்காட்சியொன்று பிரத்தியேகமாக வாடிக்கையாளர்களுக்கு மாத்திரம் காட்டப்படுகிறது. வாடிக்கையாளர்கள் தவிர ஏனையவர்களுக்கு இந்த காட்சியில் அனுமதியில்லை.

அது மட்டுமல்லாது இந்த இடத்தில் ஓரினச் சேர்க்கையாளர்கள் கூடுவதாகவும் தெரியவந்துள்ளது. மினியில் ஆபாசப்படம் போகும் போது இங்கு ஓரினச் சேர்க்கையாளர்கள் தமது லீலையில் மெய்மறந்து போயிருப்பர். 13 தொடக்கம் 18, 20 வயதிலுள்ளவர்களே அதிகமாக இங்கு வருகின்றனர். எப்பொழுதும் இவர்களது முதுகில் புத்தகப் பை தொங்கும். மற்றது 45, 50 வயதுக்கு மேற்பட்ட குடும்பஸ்தர்களும் இங்கு வருகை தருவது மட்டுமல்ல ஓரினச்சேர்க்கையிலும் ஈடுபடுபடுகிறார்கள். அதிகமானோர் மதுபோதையில் வருவதைக் காணக்கூடியதாகவிருக்கிறது . இதன் உரிமையாளர் பாஷையூரைச் சேர்ந்தவரெனவும் தமிழ்க் கட்சியொன்றின் செல்வாக்கானவரென்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவைகள் பல அரசியல் கட்சிகளின் இணை அனுசரணையோடு வெற்றிகரமாகப் பரவலாக்கி சீரழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதை எவரும் சாட்டை செய்வதாகத் தெரியவில்லை. இவற்றிற்கெல்லாம் அங்குள்ள தமிழ் கட்சிகளே ஆதரவான அரசியல் நடத்தும்போது எங்கு முறைப்பட முடியும். இந்நிலை நீடிக்கும் பட்சத்தில் இலங்கையில் எஞ்சியிருக்கும் தமிழர் வாழ்நிலை எதை நோக்கிச் செல்லும் என்பது கேள்விக் குறியே.

http://www.uyirmmai.com/uyirosai/Contentdetails.aspx?cid=4660

போரின் பின்னால் எவ்வாறு தாயகம் அரசியல், சமூக அழிப்புக்களுக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றது என இந்த கட்டுரையாளரால் அழகாக கூறப்பட்டுள்ளது. ஒரு குறை, பல சமூக சீரழிவுகளுக்கு பின்னால் உள்ள 'தமிழ்க்கட்சி' எது என வெளிப்படையாக கூறாமை.

இந்த சமூக, அரசியல் குறைகளை எவ்வாறு நிவர்த்தி செய்யலாம் என்பதே பதில் காண முடியாத புதிராக உள்ளது. இல்லை அப்படி ஒரு உறைநிலையில் தமிழர் வைக்கப்பட்டுள்ளனர்.

முன்பு ஒருபோதும் இல்லாதவாறு ஒரு அரசியல் தீர்வை பெறும் சந்தர்ப்பம் இன்று எமதினத்தின் முன் உள்ளது. கைக்கெட்டிய அந்த சந்தர்ப்பத்தை ஒன்றுபட்ட பலத்துடன் அடைவதே ஒரேவழி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.