Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

குகநாதன் மீதான தாக்குதலைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

Featured Replies

யாழ் உதயன் செய்தி ஆசிரியர் குகநாதன் மீதான தாக்குதலைக் கண்டித்து, யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

யாழ் உதயன் நாளேட்டின் செய்தி ஆசிரியர் குகநாதன் மீது வழக்கறிஞர் ஒருவரின் அறிவுறுத்தலின் பேரில் தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கண்டறிந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தார்கள்.

கொழும்பு களுபோவில மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக நேற்று அறிவிக்கப்பட்டது. யாழ். கள்ளியங்காடு பிரதேசத்தைச் சேர்ந்த சின்னவன் என்று அழைக்கப்படும் ரட்ணசிங்கம் ரட்ணகுமார் என்பவர் கைது செய்யப்பட்டார்.

வழக்கறிஞர் ஒருவர் குகநாதன் மீது தாக்குதல் நடத்துமாறு கேட்டுக் கொண்டாரென விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளதாக அறிவிக்கப்படுகிறது. அந்த வழக்கறிஞர் விரைவில் கைது செய்யப்படுவாரென கொழும்பு ஏடொன்று தெரிவிக்கிறது. சந்தேக நபருக்காக பல தடவைகள் வழக்கறிஞர் முன்னிலையாகினாரெனவும், இந்த நிலையில், பணம் வாங்காது குகநாதன் மீது தாக்குதல் நடத்த சந்தேக நபர் முன்வந்தாரெனவும் தெரிவிக்கப்படுகிறது.

main_8965.JPG

http://thamilfm.com/thamilfm/NewClients/NewsDetail.aspx?ID=8965

  • தொடங்கியவர்

யாழ். நகரில் தென்னிலங்கை ஊடகவியலாளர் போராட்டம்

யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் உதயன் பத்திரிகையின் செய்தியாசிரியர் ஞானசுந்தரம் குகநாதன் மீதான தாக்குதலைக் கண்டித்து ஏழு ஊடக அமைப்புக்கள் யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியிருக்கின்றன.

கொழும்பில் இருந்து வந்திருந்த பெரும் எண்ணிக்கையான தமிழ், சிங்கள ஊடகவியளாளர்கள்

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கெண்டார்கள். யாழ்ப்பாணத்தில் தமிழ், சிங்கள ஊடகவியாலாளர்கள் முதன் முறையாக இத்தகைய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

குகநாதன் மீது தாக்குதல் நடத்தியவரைக் கண்டுபிடித்து நீதியின் முன் நிறுத்த வேண்டும் என்றும் கடந்த 11 ஆண்டுகளில் இலங்கையில் ஊடகவியலாளர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் சம்பந்தப்பட்ட எவரும் கைது செய்யப்பட்டு நீதியின் முன் நிறுத்தப்படவில்லை என்பதைச் சுட்டிக்காட்டி நாட்டில் ஊடக சுதந்திரத்தை உறுதிப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்த ஆர்ப்பாட்டத்தின் போது கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

யுத்த காலத்தின் போது வடபகுதியில் ஊடக சுதந்திரம் பல்வேறு நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்திருந்தது. யுத்தத்தின் பின்னரும் அதே நெருக்கடிகள் அங்கு தொடர்வது கவலைக்குரியது என ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட தெற்காசிய சுதந்திர ஊடக அமைப்பின் முக்கியஸ்தரான லக்ஷ்மன் குணசேகர சுட்டி க்காட்டினார்.

ஊடகத்தின் மீது தொடர்கின்ற இந்த ஒடுக்குமுறைகள் குறித்து அதிர்ச்சியடைவதாகவும் வடக்கில் ஊடகங்களும், பொதுமக்களும் சுதந்திரமின்றி இருக்கும் வரை நாட்டில் உண்மையான தேசிய ஒற்றுமை ஏற்பட வாய்ப்பில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

யாழ் பஸ்நிலையத்தில் இடம்பெற்ற இந்த ஆரப்பாட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் மற்றும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஜேவிபி மற்றும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஆகியோரும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

வீதியை மறித்து நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தின் போது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதையடுத்து பொலிசார் ஆர்ப்பாட்டக்காரர்களை வாகனங்களுக்கு வழிவிட்டு விலகிச் செல்லுமாறு கோரியபோது, பொலிசாருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரனுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது.

இருந்த போதிலும் அசம்பாவிதங்கள் எதுவும் நிகழவில்லை. ஆர்ப்பாட்டத்தின் முடிவில் கண்டன ஊர்வலம் ஒன்றும் நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

http://www.bbc.co.uk/tamil/sri_lanka/2011/08/110816_uthayanattackprotest.shtml

பேராசிரியர் கூலும் ... ஓர் சட்டத்தரணி புலத்தில் இருந்து சென்று குத்தி டக்லஸுடன் சேர்ந்து பல ஆட்டங்கள் போடுவதாக ... குறிப்பிட்டிருக்கிறார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.