Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குகநாதன் மீதான தாக்குதலின் சூத்திரதாரி கைது என்பது வெறும் கண்துடைப்பு (காணொளி)

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உதயன் செய்தி ஆசிரியர் குகநாதன் மீதான தாக்குதல் தொடர்பில் குற்றவாளி கைது செய்யப்பட்டிருப்பதாக போலிப் பிரச்சாரம் செய்கின்றனர். இது ஒரு கேலியான விடயம்.

இவ்வளவு நாட்களாக குற்றவாளியை பிடிக்காமல் நாம் யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டம் செய்யப் போகின்றோம் என்றவுடன் கைது செய்யப்பட்டிருப்பதாக ஒரு கண்துடைப்பு நாடகம் ஒன்றை அரங்கேற்றியிருக்கின்றனர் என ஊடகவியலாளர்கள் குற்றஞ்சுமத்தியுள்ளனர்.

தென்னிலங்கையைச் சேர்ந்த ஏழு ஊடக அமைப்புக்களும், அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகவியளாளர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களான ஈ.சரவணபவன், க.சுரேஸ்பிரேமச்சந்தின், சி.சிறிதரன், ம.வியஜகலா, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.கே. சிவாஜிலிங்கம், எஸ். கஜேந்திரன் மற்றும் பெருமளவான மக்களும் இப் பேரணியில் கலந்து கொண்டனர்.பதாதைகளைத் தாங்கியும் பல்வேறு கண்டனக் கோசங்களுடனும் இந்த ஆர்ப்பாட்டப் பேரணி 2மணித்தியாலயங்கள் நடைபெற்றது.

இதில் ஊடகத்தறைக்கு எதிரான அடக்குமுறைகளை ஒழிப்போம் ஊடக ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்போம் தேர்தலில் தோற்றவர்களா மண்டையை பிளந்தார்கள் ஊடக சுதந்திரத்தைப் பாதுகாக்க ஒன்று படுவோம் என பல கோசங்களைத் தாங்கியவாறு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சுகந்திர ஊடக ஒன்றியத்தின் அமைப்பாளர் சுனில் ஜெயசேகர கூறுகையில் :

குகநாதன் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதளிகள் ஊடகவியலாளர்களை எழுத விடமாட்டோம் என்ற அச்சுறுத்தலுக்காகவே இத் தாக்குதல்களை நடாத்தினர். இந்தாக்குதலை நடாத்திய குண்டர்களுக்கு ஒன்றைச் சொல்ல விரும்புகின்றோம். எந்த விதமான தாக்குதல்களை நடாத்தினாலும் நாம் எழுதுவதை தடுக்கமுடியாது. எங்கள் ஊடக சுதந்திரங்கள் வெற்றி பெறும் வரை இது போன்ற போராட்டங்கள் தொடரும். ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதே தவிர கொலை மற்றும் தாக்குதலைக் கண்டித்து சரியானதொரு நடவடிக்கைகளையும் அரசோ அல்லது பொலிஸாரோ இதுவரை எடுக்கவில்லை. தெற்கு சுதந்திரம் வேறு வடக்கு சுதந்திரம் வேறு அல்ல. எல்லோருக்கும் சுதந்திரம் வேண்டும். இது உதயன் மீது நடாத்தப்பட்ட முதலாவது தாக்குதல் அல்ல முதல் தாக்குதல் 2006ஆம் ஆண்டு நடாத்தப்பட்டது. இது இரண்டாவது தாக்குதல் முயற்சியாகும். உடகவியலாளர்கள் மக்களுக்கு தகவல்களைக் கொடுக்கிறார்கள் மட்டுமே. மக்களைப் பற்றியும் அவர்களது பிரச்சினைகள் பற்றியும் எழுதியதுடன் இரும்புச்சப்பாத்துக்களைப் பற்றியும் குகநாதனும் கானமயில்நாதனும் எழுதியுள்ளார்கள். எந்த அச்சுறுத்தலுக்கோ சாவுக்கோ எமக்குப் பயம் எதுவும் கிடையாது எப்படித்தாக்கினாலும் எழுதுவோம் என அவர் தெரிவித்தார்.

உழைக்கும் பத்திரிகையாளர் ஒன்றியத்தின் செயலாளர் ஞானசிறி கொத்தியாகொட உரையாற்றுகையில் :

உதயன் பத்திரிகையாளர்கள் 5 பேர் கொல்லப்பட்டதோடு குகநாதனும் தாக்கப்பட்டனர். இதற்கு எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கவில்லை. குகநாதனை அடித்த குண்டர்களை பிடிக்கமுடியாத பொலிஸிற்கு வீதித்தடை போங்க என்று எங்களுக்கு சொல்ல யார் இவர்கள் குகநாதன் ஒரு அப்பாவி அவரை எதற்கு தாக்க வேண்டும் வடக்கு மற்றும் தெற்கில் 36 ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டுள்ளனர் மற்றும் நிறுவனங்கள் எரிக்கபப்பட்டது. ஆனாலும் யாரையும் பொலிஸ் பிடிக்கவில்லை. குகநாதன் தாக்குதலுக்கு தொடர்பான ஒருவரை கைது செய்துள்ளதாக அரசாங்கம் சொல்வது கேலிக் கூத்தாக உள்ளது. அதுவும் ஆர்ப்பாட்டம் செய்யப்போகின்றோம் என அறிவித்ததன் பின்னரே கைது செய்தோம் என அறிவித்துள்ளது. இதை நம்பமாட்டோம் முதலும் ஒருவர் கைது செய்யப்பட்டு பின்னர் பூரண ஆதாரம் இல்லை என்று கூறி விடுதலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்க விடயம் .என அவர் தெரிவித்தார்.

தர்மசிறி லங்காபேலி தெரிவிக்கையில் :

ஏழு ஊடக அமைப்புக்களும் வந்து மகிந்த ராஜபக்சவிற்கு கூறுவது என்னவென்றால் இத் தாக்குதல்களை நடாத்தியோரை கண்டுபிடித்து நிதி மன்றத்தில் ஆஜராக்குங்கள் என்பதே .கடந்த கால வரலாற்றிலும் இவ்வாறான சம்பவங்களுக்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை எங்களை அடித்தோ கைகால்களை உடைத்தோ எங்களை நிறுத்த முடியாது. இலங்கை பூராகவும் அராஜகத்திற்கு எதிராகப் போராடுவோம். என்றார்.

சவ்மா சிறிலங்கா அமைப்பின் சார்பில் லக்ஸ்மன் குணசேகர தெரிவிக்கையில் :

இந்த நாட்டில் யுத்தம் ஏற்படக் காரணம் ஜனநாயகம் இல்லாதது தான் சுதந்திரத்தில் முதலில் இல்லாதிருப்பது ஜனநாயகம் தான் எமக்கு ஜனநாயகம் இல்லை சாதாரண மக்களுக்கு தமது வாழ்க்கையினைக் கொண்டுபோவது பிரச்சினை என அவர் தெரிவித்தார் .

தமிழ் மீடியா போரத்தின் சார்பில் நிக்‌ஷன் தெரிவிக்கையில் நாம் பொலிஸ் இராணுவத்தினரின் அனுமதியைப் பெற வேண்டிய தேவையில்லை .உண்மையான குற்றவாளியைக் கண்டு பிடித்து நடவடிக்கை எடுக்கும் வரை எங்கு போயும் ஊடக சுதந்திரத்திற்காக எமது போராட்டம் நடாத்துவதற்கு நாம் தயாராக உள்ளோம் என்றார்.

தொடர்ந்து தெற்காசிய ஊடக சங்க தலைவர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் உரையாற்றினார்கள்.

இவ்வளவு நாட்களாக குற்றவாளியை பிடிக்காமல் நாம் யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டம் செய்யப் போகின்றோம் என்றவுடன் கைது செய்யப்பட்டிருப்பதாக ஒரு கண்துடைப்பு நாடகம் ஒன்றை அரங்கேற்றியிருக்கின்றனர் என ஊடகவியலாளர்கள் குற்றஞ்சுமத்தியுள்ளனர்.

தென்னிலங்கையைச் சேர்ந்த ஏழு ஊடக அமைப்புக்களும், அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகவியளாளர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களான ஈ.சரவணபவன், க.சுரேஸ்பிரேமச்சந்தின், சி.சிறிதரன், ம.வியஜகலா, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.கே. சிவாஜிலிங்கம், எஸ். கஜேந்திரன் மற்றும் பெருமளவான மக்களும் இப் பேரணியில் கலந்து கொண்டனர்.பதாதைகளைத் தாங்கியும் பல்வேறு கண்டனக் கோசங்களுடனும் இந்த ஆர்ப்பாட்டப் பேரணி 2மணித்தியாலயங்கள் நடைபெற்றது.

இதில் ஊடகத்தறைக்கு எதிரான அடக்குமுறைகளை ஒழிப்போம் ஊடக ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்போம் தேர்தலில் தோற்றவர்களா மண்டையை பிளந்தார்கள் ஊடக சுதந்திரத்தைப் பாதுகாக்க ஒன்று படுவோம் என பல கோசங்களைத் தாங்கியவாறு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சுகந்திர ஊடக ஒன்றியத்தின் அமைப்பாளர் சுனில் ஜெயசேகர கூறுகையில் :

குகநாதன் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதளிகள் ஊடகவியலாளர்களை எழுத விடமாட்டோம் என்ற அச்சுறுத்தலுக்காகவே இத் தாக்குதல்களை நடாத்தினர். இந்தாக்குதலை நடாத்திய குண்டர்களுக்கு ஒன்றைச் சொல்ல விரும்புகின்றோம். எந்த விதமான தாக்குதல்களை நடாத்தினாலும் நாம் எழுதுவதை தடுக்கமுடியாது. எங்கள் ஊடக சுதந்திரங்கள் வெற்றி பெறும் வரை இது போன்ற போராட்டங்கள் தொடரும். ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதே தவிர கொலை மற்றும் தாக்குதலைக் கண்டித்து சரியானதொரு நடவடிக்கைகளையும் அரசோ அல்லது பொலிஸாரோ இதுவரை எடுக்கவில்லை. தெற்கு சுதந்திரம் வேறு வடக்கு சுதந்திரம் வேறு அல்ல. எல்லோருக்கும் சுதந்திரம் வேண்டும். இது உதயன் மீது நடாத்தப்பட்ட முதலாவது தாக்குதல் அல்ல முதல் தாக்குதல் 2006ஆம் ஆண்டு நடாத்தப்பட்டது. இது இரண்டாவது தாக்குதல் முயற்சியாகும். உடகவியலாளர்கள் மக்களுக்கு தகவல்களைக் கொடுக்கிறார்கள் மட்டுமே. மக்களைப் பற்றியும் அவர்களது பிரச்சினைகள் பற்றியும் எழுதியதுடன் இரும்புச்சப்பாத்துக்களைப் பற்றியும் குகநாதனும் கானமயில்நாதனும் எழுதியுள்ளார்கள். எந்த அச்சுறுத்தலுக்கோ சாவுக்கோ எமக்குப் பயம் எதுவும் கிடையாது எப்படித்தாக்கினாலும் எழுதுவோம் என அவர் தெரிவித்தார்.

உழைக்கும் பத்திரிகையாளர் ஒன்றியத்தின் செயலாளர் ஞானசிறி கொத்தியாகொட உரையாற்றுகையில் :

உதயன் பத்திரிகையாளர்கள் 5 பேர் கொல்லப்பட்டதோடு குகநாதனும் தாக்கப்பட்டனர். இதற்கு எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கவில்லை. குகநாதனை அடித்த குண்டர்களை பிடிக்கமுடியாத பொலிஸிற்கு வீதித்தடை போங்க என்று எங்களுக்கு சொல்ல யார் இவர்கள் குகநாதன் ஒரு அப்பாவி அவரை எதற்கு தாக்க வேண்டும் வடக்கு மற்றும் தெற்கில் 36 ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டுள்ளனர் மற்றும் நிறுவனங்கள் எரிக்கபப்பட்டது. ஆனாலும் யாரையும் பொலிஸ் பிடிக்கவில்லை. குகநாதன் தாக்குதலுக்கு தொடர்பான ஒருவரை கைது செய்துள்ளதாக அரசாங்கம் சொல்வது கேலிக் கூத்தாக உள்ளது. அதுவும் ஆர்ப்பாட்டம் செய்யப்போகின்றோம் என அறிவித்ததன் பின்னரே கைது செய்தோம் என அறிவித்துள்ளது. இதை நம்பமாட்டோம் முதலும் ஒருவர் கைது செய்யப்பட்டு பின்னர் பூரண ஆதாரம் இல்லை என்று கூறி விடுதலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்க விடயம் .என அவர் தெரிவித்தார்.

தர்மசிறி லங்காபேலி தெரிவிக்கையில் :

ஏழு ஊடக அமைப்புக்களும் வந்து மகிந்த ராஜபக்சவிற்கு கூறுவது என்னவென்றால் இத் தாக்குதல்களை நடாத்தியோரை கண்டுபிடித்து நிதி மன்றத்தில் ஆஜராக்குங்கள் என்பதே .கடந்த கால வரலாற்றிலும் இவ்வாறான சம்பவங்களுக்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை எங்களை அடித்தோ கைகால்களை உடைத்தோ எங்களை நிறுத்த முடியாது. இலங்கை பூராகவும் அராஜகத்திற்கு எதிராகப் போராடுவோம். என்றார்.

சவ்மா சிறிலங்கா அமைப்பின் சார்பில் லக்ஸ்மன் குணசேகர தெரிவிக்கையில் :

இந்த நாட்டில் யுத்தம் ஏற்படக் காரணம் ஜனநாயகம் இல்லாதது தான் சுதந்திரத்தில் முதலில் இல்லாதிருப்பது ஜனநாயகம் தான் எமக்கு ஜனநாயகம் இல்லை சாதாரண மக்களுக்கு தமது வாழ்க்கையினைக் கொண்டுபோவது பிரச்சினை என அவர் தெரிவித்தார் .

தமிழ் மீடியா போரத்தின் சார்பில் நிக்‌ஷன் தெரிவிக்கையில் நாம் பொலிஸ் இராணுவத்தினரின் அனுமதியைப் பெற வேண்டிய தேவையில்லை .உண்மையான குற்றவாளியைக் கண்டு பிடித்து நடவடிக்கை எடுக்கும் வரை எங்கு போயும் ஊடக சுதந்திரத்திற்காக எமது போராட்டம் நடாத்துவதற்கு நாம் தயாராக உள்ளோம் என்றார்.

தொடர்ந்து தெற்காசிய ஊடக சங்க தலைவர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் உரையாற்றினார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.