Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தீர்வா திருகுதாளமா..

Featured Replies

தீர்வா திருகுதாளமா..

alai-mahi-flash.jpg

போர்க்குற்ற விளையாட்டை மீன்பிடி விளையாட்டாக மாற்றுவதில் சிறீலங்காவும், இந்தியாவும் முனைப்பாக ஈடுபட்டிருக்கின்றன..

கடந்த அரை நூற்றாண்டு காலமாக தீர்வுத்திட்டத்தை அறிமுகம் செய்வதும் – பின் ஏமாற்றுவதும் – தமிழரின் காதில் பூ வைப்பதும் – சிங்கள இனவாத அரசு நடாத்திய அரதப் பழைய கூத்துகளாகும்.

இப்போது கொஞ்சம் வித்தியாசமான தீர்வுத்திட்டம் பற்றி சிங்கள அரசு பேச ஆரம்பித்திருக்கிறது. ஆறு மாதங்கள் பொறுங்கள் அரிசி கொத கொதவென வேகிவிடும் என்று கூறுகிறார் பக்கா கில்லாடியான பசில் ராஜபக்ஷ.

ஏனிந்த ஆறு மாதங்கள்…

சனல் – 4ம் போர்க்குற்றமும் சிறீலங்கா அரசை விரட்டிக் கொண்டிருக்கின்றது. அரசியல் கடலில் போர்க்குற்ற மீன் மகிந்த அன் கம்பனியை விழுங்கிவிடப்போகும் நிலையே யதார்த்தமாக இருக்கிறது.

இந்த நிலையில்…

இந்தியாவிடம் போய் முடியாமல் சீனாவிடம் போய் இப்போது புதியதொரு மீனை வாங்கி வந்துள்ளார்கள்.

போர்க்குற்ற மீனைப் பிடிப்பதாயின் இன்னொரு மீனை அனுப்புவது அவசியம்.

அதுதான் போலியான தீர்வுத்திட்டத்தை தயாரித்து ஆறு மாதங்களில் அனைத்தும் நடாத்துகிறேன் பார் என்ற புதிய நாடகத்தை ஆரம்பித்துவிட்டது சிங்கள அரசு.

ஆனால் ஒரு சிறிய வித்தியாசம்…

இதுவரை காலமும் தமிழரை விழுங்கிய தீர்வுத்திட்ட மீன் இப்போது மேலை நாடுகளை விழுங்கப் புறப்பட்டுள்ளது. போர்க்குற்ற மீனை சாப்பிட இப்படியொரு மீனை ஏவுவதைவிட சிறீலங்காவிடம் வேறு வழி எதுவும் கிடையாது.

இந்தியாவில் அன்றொருநாள்…

தண்டவாளம் அமைக்க நிலத்தை கிண்டியபோது அதற்குள்ளால் வெளியே வந்த முனிவர் ஒருவர் பாரதப் போர் முடிந்துவிட்டதா என்று கேட்டாராம். அதுபோலத்தான் போர் முடிந்து இரண்டு வருடங்கள் ஓடிவிட்டது தெரியாமல் எம்மை கட்டாயப்படுத்தாதீர்கள் என்கிறார் அமைச்சர் பீரீஸ்.

இவருக்கும் பொந்தால் வெளிவந்த பாரதப்போர் முனிவருக்கும் என்ன வித்தியாசம்…?

அன்ரன் பாலசிங்கத்துடன் பேசியதை அமல் செய்தாலே போதுமே.. பீரீஸ் அதை மறந்து பல காலமாகிவிட்டது. அதுதான் பாரதப் போர் முடிந்துவிட்டதா என்று முனிவர் பாணியில் வேடிக்கைக் கேள்வி கேட்டிருக்கிறார்.

அவர் மட்டுமா..?

போர் நடந்ததை ஏகாந்தமாக மறந்து தமிழருக்கு தீர்வே இல்லை என்கிறார் கோத்தபாய ராஜபக்ஷ..

நிதர்சனங்கள் இப்படிப் போக….. குத்தி முறிந்து தமிழருக்கு எதற்குத் தீர்வுத்திட்டம்…?

ஆம்.. காரணமிருக்கிறது..!!

போர்க் குற்றத்தை விழுங்கத்தான் இந்தத் தீர்வுத்திட்டம்…

mahi-flash4.jpg

அப்படியானால் எதற்காக ஆறு மாதங்கள் கேட்கிறார் பசில்..

இப்போது உலகில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மேலை நாடுகளின் முதுகெலும்மை சுமார் ஆறு மாதங்களில் முறித்துவிடும் என்று சீனா எதிர் பார்க்கிறது. தீர்வு என்ற போலி நாடகத்தில் ஆறு மாதங்களை ஓட்டினால் போர்க்குற்றத்தை போர் அடிக்கும் குற்றச்சாட்டாக்கிவிடலாம் என்றும் சீன மூளை கருத இடமிருக்கிறது. அதுதான் இப்போது ஆறு மாதங்கள் உயிருடன் ஓடக்கூடிய தீர்வுத்திட்ட மீன் வருகிறது..

முன்னைய தீர்வுத்திட்ட மீன்கள் எல்லாம் செத்து கடலில் மிதக்கின்றன..

அது மட்டுமா 550 இந்திய மீனவரின் பிணங்களும் கூடவே மிதக்கின்றன..

அந்தோ பரிதாபம் சிறீலங்கா மட்டுமா..?

சிறீலங்கா போல…

மீனை விழுங்க மீனை ஏவிவிடும் கூத்தாட்டத்தை இப்போது இந்தியாவும்

செய்து போர்க்குற்றத்திற்குள்ளால் வெளிவர முயற்சித்துள்ளது.

பேரறிவாளன் முருகன், சின்னச்சாந்தனை விழுங்கும் தூக்குக் கயிறு என்னும் மீனை ஏவிவிட்டுள்ளது.

எப்போதும்…

கடலில் மீன் பிடிக்கப் போவோர் சின்ன மீனைப் போட்டு பெரிய மீனைப் பிடிப்பார்கள். இவர்களுக்கு நோக்கம் மீன் பிடிப்பது மட்டுமே. ஆனால் தீய நோக்கம் கொண்டவர்கள்தான் பெரிய மீனைப்போட்டு சின்ன மீனைப் பிடிக்க வருவார்கள். அவர்களிடம் மீன் பிடித்து லாபம் பெறுவதைவிட வேறு ஏதோ பெரிய சுயநலம் இருப்பதால்தான் அப்படிச் செய்கிறார்கள்.

போர்க்குற்றத்தை விழுங்க அதைவிட பெரிய மீனை விட்டால்.. என்ன நடக்கும்…?

எதிரிகள் இன்னொரு பெரிய மீனை விட வேண்டிய நெருக்கடி வரும்…

கடைசியில் இலக்கு தவறி குற்றவாளியைப் பிடிப்பதைவிட்டு மீன் பிடிக்கும் விளையாட்டில் அனைவரும் இறங்கிவிடுவார்கள்.

அதனால்தான் சிறீலங்காவும், இந்தியாவும் போர்க்குற்ற விளையாட்டை மீன்பிடி விளையாட்டாக மாற்றுவதில் முனைப்பாக ஈடுபட்டுள்ளன…

இவர்கள் வெற்றி பெறுவார்களா..?.

மீன் பிடிக்கப் போய் சிங்கள கடற்படையால் கொல்லப்பட்ட தமிழக மீனவர்களும்..

வன்னியில் மடிந்த எழை எளிய தமிழ் மக்களும்..

இறந்த பிறகும் ஏமாற்றப்படப் போகிறார்களா…?

இதுதான் இப்போதுள்ள கடைசிக் கேள்வி…!

இறந்த அப்பாவிகள் வடித்த கண்ணீருக்கு ஒரு சக்தி இருக்கிறது…

எத்தனை சதிகளை செய்தாலும் அந்த ஆத்மாக்களிடமிருந்து குற்றவாளிகள் தப்பிவிட முடியாது.

தப்பினால் இயற்கைக்கு ஒரு நியதி இல்லாமல் போய் அதன் ஐந்தொகை குலைந்துவிடும்..

மீன்களே.. இருந்து பாருங்கள்..

காலம் தன் தீர்ப்பை எழுதும்…

மீனுக்கு மீன்விட்ட வீராதி வீரர்கள் எல்லாம் முள்ளாகிக் கிடக்கிறார்கள் புவி முற்றத்தில்.. இப்போது இவர்கள் விடுகிறார்கள் மீன்… பழைய முள்ளுகள்

சிரிப்பது கேட்கிறது..

கருத்துப்படம் : ச.ச.முத்து

கட்டுரை : சாம். இருதயராஜ்

http://www.alaikal.com/news/?p=80376

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.